Wednesday 31 March 2010

கத்திக்குள் கணனித் தகவல்கள் - கொலை செய்தாலும் பெறமுடியாது.


பல சிறு கருவிகளை உள்ளடக்கிய Swiss Army knife 1897-ம் ஆண்டு முதல் உலகெங்கும் பாவிக்கப்படுகிறது. பல வடிவமைப்பில் பலதரப்பட்ட பயன்பாடுகளுடன் பல விலைகளில் சுவிஸ் ஆமிக் கத்தி கிடைகிறது.

எண்மிய(Digital) காலத்திற்கு ஏற்ப நவீன கத்தி.
நவீன கணனிக் காலத்திற்கு ஏற்ப சுவிஸ் ஆமிக் கத்தி தன்னை மாற்றி அமைத்துள்ளது. இப்போது சுவிஸ் ஆமிக் கத்தி நினைவுத் தண்டையும் (memory stick) தன்னுடன் இணைத்துள்ளது. அதில் கணனித் தகவல்கள் கோப்புக்கள் பதிவு செய்து வைக்கலாம். அது சாதாரணமானதுதானே என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் சுவிஸ் ஆமிக் கத்தி தாயாரிப்பாளர்கள் தங்களது நினைவுத் தண்டு (memory stick) சாதாரணமானது அல்ல என்று கூறுகிறார்கள். தங்கள் நினைவுத் தண்டு (memory stick) கடவுச் சொல் இல்லாமல் உள் நுழைய முடியாதது.

கைவிரல் ரேகையைப் பயன்படுத்தும் தொழில் நுட்பம்

கைரேகையை இனம் காணும் தொழில் நுட்பம் பாவிக்கப் படுகிறது இந்த கணனிக்கால சுவிஸ் ஆமிக் கத்தி.

யாராவது கள்ளத்தனமாக உள் நுழைய முற்பட்டால் சுவிஸ் ஆமிக் கத்தியின் நினைவுத் தண்டு (memory stick) தன்னைத் தானே அழித்துக் கொள்ளுமாம். The latest version of the pocket knife, launched on Thursday, contains a memory stick that can store computer files and documents. But realising its customers are more conscientious than most, its maker has developed technology which it claims is “unhackable”, even self-destructing if it detects an attempt to break into an owner’s personal files.

விக்ரொறினொக்ஸ் என்னும் சுவிஸ் ஆமிக் கத்தி தயாரிப்பாளர்கள் யாராவது கள்ளத்தனமாக இருநாட்களில் உள் நுழைந்தால் அவருக்கு பெரிய தொகையைப் பரிசாக அளிப்பதாக அறிவித்தது.
Victorinox, the maker of the Swiss Army knife, has offered a “six figure sum” to anyone who can unlock it successfully. Over the next two days, computer hackers have been invited to the company’s shop in Central London, where the attempts to crack the device can be monitored by the store’s upmarket clientele.

கொலை செய்தும் உடைக்க முடியாது
சுவிஸ் ஆமிக் கத்தியின் நினைவுத் தண்டு (memory stick) வைத்திருப்பவரைக் கொன்று விட்டு அவரின் விரலடையாளத்தை வைத்து திறக்கலாமா என்றால் முடியாது. அது விரலில் உள்ள ரேகையை மட்டுமல்ல அதன் வெப்ப நிலையையும் அதில் உள்ள ஆக்சிஸனையும் இனங்காணும் திறன் கொண்டது. எனவே உயிருடன் உள்ளவரால் மட்டுமே திறக்க முடியும். The technology works in a number of different ways to keep the information safe. It uses encryption technology to encode the information stored. It also contains a fingerprint scanner, so it can only be used by the owner. The scanner also includes a heat and oxygen sensor, which means it can only be activated when a person is alive.

விமானத்திலும் எடுத்துச் செல்லலாம்.
இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின் சுவிஸ் ஆமிக் கத்தியின் விற்பனை மூன்றில் ஒரு பகுதியாகக் குறைந்துவிட்டது. அதற்கு ஏற்ப இந்தக் கத்தியை தடைசெய்யப் பட்ட பகுதிகளைத் தனியாக எடுத்து வைத்துவிட்டு மற்றவற்றை எடுத்துச் செல்லக் கூடியதாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

விலை விபரம்

8GB நூறு பிரித்தானியப் பவுண்கள்.
32GB முன்னூற்றிப் பதினைந்து பிரித்தானியப் பவுண்கள்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...