Sunday 17 January 2010

சிவாஜிலிங்கத்தின் சாயம் வெளுக்கிறது.


சிவாஜிலிங்கம் இலங்கைக் குடியரசுத் தேர்தலில் போட்டியிடும் ஒரு சுயாதீன வேட்பாளர். அவர் இன்னொரு வேட்பாளர் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்னவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவிக்கிறார். உலக வரலாற்றில் இரு வேட்பாளர்கள் இணைந்து ஒருவருக்கு ஒருவர் எதிராகப் போட்டியிடுவது இது முதல் தடவையாக இருக்கலாம். இரு பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்சவும் சரத் பொன்சேக்கவும் தமிழின விரோதிகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது என்று தனது கட்சி உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக தமிழ்மக்களுடன் எந்தவித சந்திப்பையோ கலந்துரையாடல்களையே மேற் கொள்ளாமல்போட்டியில் குதித்தவர் சிவாஜிலிங்கம். இவர் இந்தியாவின் தூண்டுதலின் பேரால் தமிழர்களின் வாக்கு சரத் பொன்சேக்காவைற்கு சார்பாக திரும்பாமல் இருக்க தேர்தலில் போட்டியிடுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப் பட்டுள்ளது.

இப்போது சிவாஜிலிங்கம் அவர்கள் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்: "வடக்கு கிழக்கில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்கு ஒப்படைக்க ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்துள்ளார்".

இப்படிச் செய்யப் போவதாக சரத் பொன்சேக்காவோ அவருடன் ஒரு உடன் பாட்டிற்கு வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ தெரிவிக்கவில்லை. சிவாஜிலிங்கம் கூறுவது உண்மையாயின் இருதரப்பும் திரைமறைவில் இப்படி ஒரு உடன்பாட்டிற்கு வந்திருக்கலாம். இத் தகவல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் என்றவகையில் சிவாஜிலிங்கத்திற்கு தெரிய வந்திருக்கலாம். அதை ஏன் சிவாஜிலிங்கம் பகிரங்கப் படுத்துகிறார்? இதைப் பகிரங்கப் படுத்துவதன் மூலம் சிவாஜிலிங்கத்துக்கு தமிழர்களும் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்னவிற்கு சிங்களவர்களும் வாக்களிப்பார்களா?

மஹிந்த ராஜபக்சவிற்கு இப்போதைய பசி சரத் பொன்சேக்கா தமிழர்களுக்கு ஏதோ வழங்கப்போகிறார் என்ற செய்தியே. அதை வைத்து அவர் இனவாத நஞ்சைக் கக்கி சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று விடலாம். இந்தப் பசிக்கு சிவாஜிலிங்கம் தீனி போடுகிறார்.

சிவாஜிலிங்கம் இன்னும் பல தீனிகளை மஹிந்தவிற்கு போடுவார் என நாம் எதிர்பார்க்கலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...