Wednesday 16 December 2009

இந்தியாவிற்கு எதிராக களமிறங்கும் பாக்கிஸ்த்தான்


சரத் பொன்சேக்கா இந்தியாவிற்கு எதிரானவர் பக்கிஸ்த்தான், சீனா, ரசியா போன்ற நாடுகளுடன் நல்ல நட்புறவைப் பேண விரும்புபவர் என்று இந்திய வெளியுறவுத் துறையினர் நம்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேக்கா இராணுவத்தில் அதிக செல்வாக்குப் பெறுவதை இந்தியா விரும்பாமல் அவர் ஒரு இராணுவ சதிப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றார் என்று ஒரு பொய்க் கதையை இந்தியா கட்டவிழ்த்து விட்டு அவரை இராணுவத் தளபதி பதவியில் இருந்து அகற்றியது என்று பாக்கிஸ்த்தானியப் பத்திரிகையான த நேஷன் தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை இராணுவத்தின் புதிய தளபதி சரத் பொன்சேக்காவுடன் ஆலோசிக்காமல் நியமிக்கப் பட்டதாகவும் அப் பத்திரிகை தெரிவிக்கிறது. போரில் இலங்கை வெற்றி பெற்று அங்கு சுமூக நிலை திரும்புவதை இந்தியா விரும்பவில்லை எனவும் அது இலங்கை மீதான இந்தியப் பிடியைத் தளர்த்தும் எனவும் த நேஷன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

த நேஷன் மேலும் தெரிவிக்கும் முக்கிய கருத்துக்கள்
பாக்கிஸ்த்தானின் நஞ்சுத் தன்மையான பத்திரிகை இரு உண்மைகளை இந்தியாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கிறபோது வெளிக் கொண்டுவந்துள்ளது:
India was also displeased with Sri Lankan leadership for the killing of large number of Tamils during the war and for not fully implementing the 13th amendment that meant grant of autonomy to Tamils in the North and East..

If he loses, still India would be happy, as New Delhi is largely responsible for Tamil’s ethnic cleansing, a top government official in Colombo said, requesting that his name not be mentioned stating that the issue is very sensitive and confidential.

இலங்கையில் பல தமிழர்கள் கொல்லப் பட்டதையும் இலங்கையில் நடந்தது ஒரு இனச் சுத்தீகரிப்பு என்பதையும் பாக்கிஸ்த்தானியப் பத்திரிகை வெளிக் கொணர்ந்துள்ளது.

பாக்கிஸ்த்தானியப் பத்திரிகை சரத் பொன்சேக்காவிற்கு எதிராக இந்தியா செயற்பட்டது என்று செய்தியை பரப்புவதன் மூலம் அவரது செல்வாக்கை சிங்கள மக்கள் மத்தியில் உயர்த்தலாம் என்று நம்புகிறது. அந்த வகையில் அமெரிக்கா சீனா இந்தியாவுடன் இப்போது பாக்கிஸ்த்தானும் இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில் இறங்கியுள்ளது.
இதேவேளை இந்தியாவிற்கும் ராஜபக்சே குடும்பத்திற்கு இடையில் உள்ள உறவு திருப்திகரமாக இல்லை. சீனா ஒருபோதும் இலங்கைத் தேர்தலில் நேரடியாகத் தலையிடுவதில்லை. எவர் வென்றாலும் அவருடன் நல்ல உறவை பேணுவதே சீனாவின் நோக்கம். அது சிங்களவர்களிடையே பலதரப்பினரிடமும் நல்ல உறவைப் பேணுகிறது. தேர்தலிலும் அதையே செய்கிறது. பலதரப்பிற்கும் சீனா உதவி செய்வதாக நம்பப்படுகிறது. தேர்தலின் பின்னர் இந்தியாவின் இலங்கை மீதான பிடி முற்றாகவே இல்லாமல் போகும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...