Monday 9 November 2009

Facebook மோகத்தால் பிடிபட்ட திருடன்


அமெரிக்காவில் உள்ள பெனிசிலேவினியா மாநிலத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த திருடன் தந்து விபரீத ஆசையால் பிடிபட்டான்.

திருடச் சென்றவன் அகப்பட்ட இரு விலை உயர்ந்த வைரமோதிரங்களைச் சுருட்டிக் கொண்டான். அத்துடன் நிற்கவில்லை வீட்டில் இருந்த கணனியைக் கண்டதும் அவனுக்கு தனது Facebook பக்கத்தைப் பார்த்தால் என்ன என்ற ஆசை வந்து விட்டது. தனது பாவானயாளர் பெயரையும் கடவுச் சொல்லையும் (user name & password) பதிந்து தனது Facebook பக்கத்திற்கு சென்று அங்கு சில நேரம் செலவிட்டான் ஆனால் முக்கியமான ஒன்றை மறந்துவிட்டான். செல்லும் போது வெளியேறவும் ( lock out) என்பதைச் சொடுக்காமல் சென்றுவிட்டான்.

வீடுவந்து பார்த்தவர்கள் அவனது Facebook பக்கதில் உள்ள சுயதகவல் மூலம் திருடன் பற்றிய தகவல்களை காவல் துறைக்குக் கொடுத்ததால் கவற்துறையினர் அவனை இலகுவாகக் கைது செய்தனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...