Sunday 4 October 2009

தமிழின உணர்வாளர்களுக்கு ஒரு சவால்


சென்னையில் உள்ள உதவி இலங்கைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியின் கூற்றுக்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள் கடுமையாகச் சாடி அவரை வெளியேற்றும் படி குரலெழுப்பியுள்ளனர்.

"இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக யார் நுழைந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை இலங்கை கடற்படை எடுத்து வருகிறது என்று உண்மைக்குப் புறம்பாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அவிழ்த்து விட்டுள்ளார்.

சர்வதேச சட்டங்கள் எதையும் துளியும் மதிக்காமல் இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொலை செய்யப்பட்ட நிலையில் சிங்கள அரசு இப்பொழுது கோயபல்ஸ் பிரசாரத்தில் இறங்கியுள்ளது.

மேலும் கச்சத்தீவு பிரச்சனையிலும் உண்மைக்குப் புறம்பாகப் பேசியுள்ளார்.

இவ்வாறு உண்மைக்குப் புறம்பாகவும் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க முயற்சி நடைபெறும் வேளையில் அவர்களை அவமதிக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் பேசித் திரியும் இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும். என தெரிவித்துள்ளார்.

இப்போது வ. கிருஷ்ணமூர்த்தி ஒரு பல்டியும் அடித்துள்ளார். அது வன்னி வதை முகாம்கள் மிருகக் காட்சிச் சாலைகள் அல்ல என்பதை மட்டுமே!

கடல் எல்லையைத் தாண்டியவர்கள் மீது நடவைக்கை எடுக்கலாம். கைது செய்யலாம். தடுத்துவைக்கலாம். சுட்டுக் கொல்லலாமா? இது போர்நடக்கும் இரு நாட்டுகளுக்கு இடையில் மட்டுமே நடக்கும். அதுவும் படையினர் எனச் சந்தேகிக்கப் படும் இடத்தில் மட்டுமே. தாக்கி நிவாணப் படுத்துவது பாக்கு நீரிணையில் மட்டுமே நடக்கும். தமிழனுக்கு எதிராக சிங்களவனால் மட்டுமே இதைச் செய்யமுடியும். இதை நியாயப்படுத்தும் வடிவேல் கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக தமிழின உணர்வாளர்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா? உங்கள் கோரிக்கைகளை மைய அரசு ஏற்குமா? எத்தனையோ முறை போர்நிறுத்தம் இலங்கையில் வேண்டி என்வோ எல்லாம் செய்தீர்கள். நடந்ததா?

தமிழின உணர்வாளர்களுக்கு விடுக்கப் படும் சவால்: வடிவேல் கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக உங்கள் மைய அரசால் ஏதாவது நடவடிக்கை எடுக்கும்படி உங்களால் ஏதாவது செய்ய முடியுமா?

5 comments:

Anonymous said...

Tamil nattu tamilan oru mayiraium pidungga mudiyathu.muthalil odrumaiyai kathu kolungada appuram VADIVELU KRISHNAMURTHY mayirai pidunggalam.

tamilan. malaysia

Anonymous said...

Tamil nattu tamilan oru mayiraium pidungga mudiyathu.muthalil odrumaiyai kathu kolungada appuram VADIVELU KRISHNAMURTHY mayirai pidunggalam.

tamilan. malaysia

ttpian said...

நமது குடுமியை இத்தாலி குடும்பத்திடம் அடகு வைத்துவிட்டு,நம்மால்,ஒரு அசைவையும் செய்ய முடியுமா?

Anonymous said...

malaysia tamilargal mattum ethai pidinggi vittomnnu intha arpattam???
Antha otrumai muthalil malaysia tamilargalidamum irukkannu paarunga....

Anonymous said...

Total waste....

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...