Tuesday 14 April 2009

காட்சிகள், காணொளிகள் - இலண்டன் உண்ணா விரதம் மேலும் பல மாணவர்கள் உண்ணா விரதத்தில் குதிப்பர்.























இலண்டனில் தொடர்ட்ர்ந்தும் தமிழர்கள் பாராளமன்ற சதுக்கத்தில் போராடி வருகின்றனர். நேற்று மாலை ஒரு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சனிக்கிழமை (11-04-2009 ) நடந்த வரலாறு காணாத மாபெரும் பேரணியுடன் ஓய்ந்துவிடுமென்று பலரும் நினைத்திருந்த போதிலும் பல்கலைக் கழக மாணவர்கள் இதில் சளைக்காது ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டமும் தொடர்கிறது.


பரமேஸ்வரன் சுப்பிரமணியம்

உண்ணாவிரதமிருக்கும் மாணவன் பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உடல் நிலை மோசமடைவதால் நகரக் காவலர் அவரை எந்நேரமும் அவர் விருப்பத்திற்கு மாறாக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லலாம். அப்படி எடுத்துச் செல்லப் படும் பட்சத்தில் பல மாணவர்கள் உண்ணா விரதப் போராட்டதில் குதிக்கத் தயாராகிறார்கள்.


பாராளமன்ற சதுக்கத்தில் உள்ள புற்றரை தொடர் போராட்டத்தால் பழுதடைந்து விடுமென்று இலண்டன் நகர அதிகார சபையினர் மக்களை நடையோரத்தில் மட்டுமே அனுமதித்தனர்.





No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...