
வாழ்வுச் சந்தையில்
உணர்வுகளை விற்றோம்
போட்டிப் போதையில்
உறவுகளை மறந்தோம்
சீதனச் சிற்றன்னையால்
பெண்களை Cinderella ஆக்கினோம்
வீட்டுக்குள் நாய்கள் வரலாம்
மனிதர்களை அனுமதியோம்
வாழ்க்கைப் பாதையின்
வழக்கங்களை மாற்றோம்
சிந்தனைக் கர்ப்பத்தில்
சிதைத்தோம் புதுமைக் கருக்களை.
No comments:
Post a Comment