Tuesday 17 November 2015

அமெரிக்க கடற் படை உருவாக்கும் வான்வழி அடுத்த தலைமுறை குமையி (next generation jammer)

அமெரிக்க வான் படையினரும் Raytheon என்னும் தொழில் நுட்ப நிறுவனமும் இணைந்து இலத்திரனியல் போர் முறையின் முக்கிய அம்சமாக அடுத்த தலைமுறை  குமையியை (next generation jammer) உருவாக்குவதற்கான முதற்படி வடிவமைப்பு வேலைகளை வெற்றிகரமாக முடித்துள்ளன. இது ஒரு  வான்வழி இலத்திரனியம் தாக்குதல் முறைமையாகும் ( airborne electronic attack system)

இரு வகையான குமையிகள் உள்ளன. முதலாவது பொறிமுறைக் குமையிகள்(mehcanical jammers) இரண்டாவது இலத்திரனியல் குமையிகள் (elctronic jammers). பொறிமுறைக் குமையிகள். 

பொறிமுறைக் குமையிகள் எதிரியின் கதுவிகளை(Radars) பிழையான வகையில் செயற்படச் செய்யும்.

இலத்திரனியற் குமையிகள் எதிரியின் கதுவிகளிற்கு(Radars) செறிவான வலுமிக்க சமிக்ஞைகளை அனுப்பி அவற்றைச் செயலிழக்கச் செய்யும்.

அடுத்த தலைமுறை இலத்திரனிய்ற் குமையிகள் எதிரி விமானங்களுக்கு ஒரு போலியான விமானத்தை உணரவைக்கும் (creating "ghost" aircraft)   


Forbes இல் வெளிவந்த கருத்தின்படி The Next Generation Jammer advances the day when all of the frequencies on the spectrum currently used for communication and sensing will be subject to management and manipulation by U.S. warfighters. If ever there was an example of high-leverage innovation in military technology, this is it.  

Sunday 15 November 2015

பிரெஞ்சுத் தலைநகரில் நடந்த தாக்குதலின் பின்னணியும் பின் விளைவுகளும்.

பிரான்ஸின் விமானம் தாங்கிக் கப்பல் Charles de Gaulle சில நாட்களில் மத்திய தரைக்கடலுக்குச் சென்று ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபடும் என்ற வேளையில் பரிஸில் ஆறு இடங்களில் நடந்த தாக்குதல்கள் உலகத்தை உலுப்பியுள்ளது. ஐரோப்பாவில் ஐந்து கோடி இஸ்லாமியர்கள் வாழ்கின்றார்கள். இது ஐரோப்பாவில் இஸ்லாமியர்கள் வெற்றி பெறுவதற்கு அல்லா வழிசெய்வார் என்பதைக் காட்டுகின்றது என்முன்னாள் லிபிய அதிபர் மும்மர் கடாஃபி சொன்னது நினைவிற்கு வருகின்றது.

 சிரியாவின் வடக்கிலும் கிழக்கிலும் மற்றும் ஈராக்கின் மேற்கிலும் வடக்கிலும் உள்ள நகங்களில் செயற்பட்டு வந்த ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எல் என்றும் அழைக்கப்பட்டு வந்த இஸ்லாமிய அரசு அமைப்பு தனது செயற்பாட்டை உலகெங்கும் விரிவு படுத்தப் போகின்றதா என்ற அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல பாகங்களிலும் இருந்து 30,000 போராளிகளைத் திரட்டிய ஐ எஸ் அமைப்பு சிரியாவிலும் ஈராக்கிலும் பின்னடைவுகளைச் சந்திக்கும் போது தனது போராளிகளை உலகெங்கும் அனுப்பித் தாக்குதல் செய்ய முடியும்.

ஒட்டுக்கேட்பவர்களை ஏமாற்றினார்கள்
பல்வேறு உளவுத் துறையினர் தம்மை ஒட்டுக் கேட்பார்கள் என்பதை உணர்ந்த ஐ எஸ் தாக்குதலாளிகள் தமது தொடர்பாடல்களை சோனியின் PlayStation 4 ஊடாக தமது தாக்குதல் திட்டங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். தமக்கு எதிரான உளவாளிகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கு அவர்கள் புதுப் புது முறைகளைக்  கையாள்கின்றார்கள்.

ஐக்கிய அமெரிக்கா இரண்டு ஆண்டுகளாக ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல்கள் செய்கின்றது இரசியா தாக்குதல் தொடங்கி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை அதற்குள் இரசிய விமானம் எகிப்தில் விழுத்தப்பட்டது எப்படி? இது அமெரிக்காவின் சதியா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சி எஸ் போராளிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் செய்யும் பிரான்ஸின் தலைநகர் பரிஸ் நகரத்தில் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. சிரியாவில் ஐ எஸ் போராளிகளுக்கு எதிரான தாக்குதலை பிரான்ஸ் 2015-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்தது. அம்ஸ்ரேடம் நகரில் இருந்து பரிஸுக்குச் செல்லும் தொடரூந்தில் ஐ எஸ் போராளி என ஐயப் படும் ஒருவர் குண்டு வைத்ததால் அவர்களுக்கு எதிரான தாக்குதலை பிரான்ஸ் ஆரம்பித்தது.

பரிசின் பயங்கர இரவு
9.20 -கால்பந்தாட்ட அரங்கில் தற்கொடைத் தாக்குதல் - ஒருவர் கொலை.
9-25 - உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு - 15 பேர்  கொலை
9-30 - கால் பந்தாட்ட அரங்கில் தற்கொடைத் தாக்குதல் 9 பேர் கொலை.
9-32 - உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொலை,
9-36 - உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் கொலை
9-40 - உணவகம் ஒன்றில் தற்கொடைத் தாக்குதல். காயம் மட்டும்.
9-40 - இசை அரங்கில் துப்பாக்கிச் சூடும் தற்கொடைத் தாக்குதலும் 89பேர் கொலை
9-53 - கால்பந்தட்ட அரங்கில் தற்கொடைத் தாக்குதல் காயம் மட்டுமேஎ

மொத்தமாக இருபது பேர் தாக்குதலில் சம்பத்தப் பட்டுள்ளார்கள் என நம்பப்படுகின்றது. தாக்குதலாளிகள் எவரும் இதுவரை உயிருடன் பிடிபடாதது அவர்களுக்கு வெற்றியே.தாக்குதலில் மூன்று சகோதரர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர் அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார் என நம்பப்படுகின்றது.

பிரெஞ்சு அதிபரை இலக்கு வைத்தனர்.
1988-ம் ஆண்டு ஸ்கொட்லாந்து நகர் Lockerbieஇல் அமெரிக்க விமானம் 258 பயணிகளுடன் குண்டு வெடிப்பால் தகர்க்கப்பட்டது. 2001-ம் ஆண்டு அமெரிக்க நகர் நியூயோர்க்கில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலில் 3000 பேர் கொல்லப்பட்டனர். 2004-ம் ஆண்டு ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நான்கு தொடரூந்துக்களில் ஒரே நேரட்தில் நடந்த குண்டு வெடிப்புக்களில் 191 பேர் கொல்லப்பட்டு 1841பேர் காயப்பட்டனர். 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் இலண்டனில் நான்கு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 42 பேர் கொல்லப்பட்டனர். 2013-ம் ஆண்டு அமெரிக்காவில் பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் மூவர் கொல்லப்பட்டனர். இவை எல்லாவற்றிலும் பார்க்க பரிஸில் நடந்த தாக்குதல் மக்களை அதிக அச்சமடைய வைத்துள்ளது.  பிரெஞ்சு அதிபர் இருந்த உதைபந்தாட்ட மைதானத்தினுள் தாக்குதல் செய்ய எடுத்த முயற்ச்சி தீவிரவாதிகள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர் என எண்ணத் தோன்றுகின்றது. மூன்று தடவைகள் மைதானத்திற்குள் நுழைய முயன்ற தற்கொடையாளர்கள் தடுக்கப்பட்டதால் வாசலில் வைத்தே அவர்கள் தமது பட்டிக் குண்டுகளை வெடிக்க வைத்தனர். மைதானத்தினில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக இருந்த படியால் குண்டு வைப்பவர்களால் உள்ளே செல்ல முடியாமல் போனது. அதனால் அவர்கள் வெளியில் குண்டை வெடிக்க வைத்தனர். இலண்டனில் இருந்து வெளிவரும் Financial Times பத்திரிகையில் 2007-ம் இலண்டலில் செய்யப் பட்ட குண்டுவெடிப்பின் போது இலண்டன் மக்கள் கலவரவடையாமல் இருந்ததாகவும் ஆனால் பரிஸ் மக்கள் கலவரமடைந்துள்ளனர் என்றும் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் பரிஸில் இருந்து எழுதிய கட்டுரையாளர் பரிஸ் ஒரு உன்னதமான நகர் என்றும் தானும் தனது பிள்ளைகளும் அங்கு வாழ்வதை விரும்பியதாகவும் ஆனால் பரிஸ் ஒரு பாதுகாப்பான இடமாக இல்லை எனக் குற்றம் சாட்டுகின்றார். ஆனால் பிரித்தானிய ஊடகங்கள் பிரெஞ்சு மக்கள் மீது சேறு வீசக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை எப்போதும் நன்கு பயன்படுத்திக் கொள்ளும். 1999-செஸ்னியப் போராளிகள் மொஸ்கோவில் செய்த குண்டுத் தாக்குதலை தொடர்ந்து அவர்களைத் தொலைத்துக் கட்டுவேன் என விளடிமீர் புட்டீன் வெகுண்டு எழுந்தார். இரசியர்கள் கலக்கமடையவில்லை.

பிரான்ஸின் உளவுத்துறையின் வலுவின்மையா?
பல ஊடகங்கள் பிரான்ஸின் உளவுத் துறையின் மீது குற்றம் சாட்டுகின்றன. ஆனால் ஐரோப்பாவிலேயே அதிக அளவு இஸ்லாமியர்கள் பிரான்ஸில் வாழ்கின்றார்கள். பிரித்தானியா ஒரு தீவாக இருப்பதாலும் அமெரிக்கா மேற்காசியாவில் இருந்து தொலைவில் இருப்பதாலும் தீவிரவாதிகளுக்கு அங்கு நுழைவது சிரமம். பிரான்ஸில் தனிநபர்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. இருந்தும் இரசியாவில் இருந்து ஏகே-47 துப்பாக்கிகள் பரிஸிற்குக் கடத்தி வரப்பட்டுள்ளன. ஐரோப்பாவிலேயே அதிக அளவு இஸ்லாமியர்களைக் கொண்ட பிரான்ஸில் இருந்துதான் அதிக அளவு போராளிகள் ஐ எஸ்ஸில் இணைந்து கொண்டனர். பிரான்ஸின் படை முகாம்களில் இருந்து ஐ எஸ் போராளிகள் பல வெடிபொருட்களைத் திருடியுள்ளனர். இதில் 200 வெடிக்கவைக்கும் கருவிகள்(detonators) உள்ளடங்கும்.

சதிக் கோட்பாடு
அமெரிக்க உளவுத்துறை சிஐஏயின் முன்னாள் இயக்குனர் John Brennan, பிரெஞ்சு உளவுத்துறை DGSE இயக்குனர் Bernard Bajolet, பிரித்தானிய உளவுத்துறை MI6 இன் உயரதிகாரி John Sawers , இஸ்ரேலிய உளவுத்துறை DMIஇன் முன்னாள் இயக்குனரும் இஸ்ரேலின் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான, Yaacov Amidror ஆகியோர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் 2015 ஒக்டோபர் 27-ம் திகதி மேற்காசியாவின்(மத்திய கிழக்கின்) எதிர்காலம் தொடர்பாக ஒரு மாநாட்டை நடாத்தினர். இந்த இரகசியக் கூட்டம் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனின் வதிவிடத்தில் நடந்தது. இந்த இரகசியக் கூட்டத்திற்கும் பரிஸ் தாக்குதலுக்கும் தொடர்பிருக்கலாம் என சில சதிக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இனி மேற்காசியாவில் நடக்க விருக்கும் படை நடவடிக்கைகளுக்கும் இந்தக் கூட்டத்திற்கும் பரிஸ் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கின்றது என நம்பப்படுகின்றது.பரிஸ் நகரம் பாதுகாக்கப்படுவதாயின் ஐ எஸ் ஒழித்துக் கட்டப்படவேண்டும் என்ற தலைப்பில் நியூயோர்க் ரைம்ஸ்ஸில் வந்த கட்டுரை நடக்கப் போவதற்குக் கட்டியம் கூறுகின்றது.

குடிகெடுத்த குடியேற்ற ஆட்சியாளர்கள்
முதலாம் உலகப் போரின் பின்னர் பிரான்ஸும் பிரித்தானியாவும் The Sykes–Picot Agreement இன்படி வட ஆபிரிக்க, மேற்காசிய நாடுகளின் எல்லைகளை வகுத்துக் கொண்டன. அதன் முலாவது நோக்கம் உதுமானையப் பேரரசு போல் இனி ஓர் இஸ்லாமியப் பேரரசு உருவாகக் கூடாது. கிறிஸ்த்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட லெபனான் என்ற ஒரு நாடு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. எகிப்து, லிபி்யா போன்ற நாடுகளின் எல்லைகள் நேர் கோடுகளாக இருப்பதற்கு இதுதான் காரணம். இனப் பரம்பலைக் கருத்தில் கொள்ளாமல் தேச எல்லை களை அடிமட்டமும் பென்சிலும் வைத்து பூகோளப்படத்தில் வரைந்தனர். இது அங்கு பல பிரச்சனைகளை உருவாக்கியது. ஐ எஸ் அமைப்பு அந்த எல்லைகளை மீளமைக்க முயல்கின்றது. ஈழத் தமிழர்கள் தமது ஆட்சிய் உரிமையை இழந்தமைக்கு ஐரோப்பியக் குடியேற்ற ஆட்சியாளர்களைக் குற்றம் சுமத்துகின்றோமோ அத்தனைக்கும் மேலாக பிரான்ஸின் மீது குற்றம் சுமத்த பல இஸ்லாமிய இனக் குழுமங்களுக்கு உரிமை உண்டு. சில இஸ்லாமியர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்த கருத்துக்கள்:-


  •  "God is great and thank God for these lone wolf attacks. At least 100 hostages and countless wounded."

  • "Oh God, burn Paris as you burned the Muslims in Mali, Africa, Iraq, Syria, and Palestine."

பல ஐ எஸ் ஆதரவாளர்கள் அடுத்தது பிரித்தானியா என்றுக் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பின் விளைவுகள்
பரிஸில் நவமபர் 30-ம் திகதி முதல் நடக்கவிருக்கும் உலகத்தலைவர்கள் பங்கு கொள்ளும் உலகச் சூழல் தொடர்பான மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். 2016-ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளிடையிலான கால்பந்தாட்டப் போட்டி பிரான்சில் நடக்கவிருக்கின்றது. பரிஸ் தாக்குதலால் முதலில் பாதிக்கப்படுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவுக் கொள்கையே. தாக்குதலாளிகளுள் ஒருவர் சிரியாவில் இருந்து புகலிடத் தஞ்சம் கோருபவராக வந்தவர் என நம்பப்படுகின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தேசியவாதக் கட்சிகளிற்கான ஆதரவு அதிகரிக்கும். நேட்டோவின் உறுப்பு நாடான பிரான்ஸின் மீது நடந்த தாக்குதலை மற்ற 27 நேட்டொ நாடுகளும் தம்மீது நடந்த தாக்குதல் போல் கருதிச் செயற்பட வேண்டும். பிரான்ஸிற்கு அவை இனி முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இது நேட்டோ உடன்படிக்கையின் முக்கிய அம்சம். நேட்டோவின் உறுப்பு நாடான துருக்கி இதுவரை காலமும் ஐ எஸ் போராளிகளுக்கு மறை முகமாக உதவி வந்தது. அதில் இணைவதற்கு போராளிகள் உலகெங்கிலும் இருந்து துருக்கி ஊடாகவே செல்கின்றனர். சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகள் மீது தாக்குதல் செய்ய துருக்கி ஒத்துழைக்கத் தயக்கம் காட்டி வந்தது. இனி அது முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகளின் மீது தாக்குதல் நடத்த பிரித்தானியா தயக்கம் காட்டியது. அதற்கான அனுமதி பிரித்தானியப் பாராளமன்றத்தில் கிடைக்காது என பிரித்தானிய வெளியுறவுத் துறை கணிப்பிட்டது. அதனால் அந்த முன்மொழிவு பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவில்லை. ஏற்கனவே நேட்டோ உடன்படைக்கையைப் பிரித்தானியப் பாராளமன்றம் ஏற்றுக் கொண்டபடியால் பிரித்தனியப் பாராளமன்றத்தின் சம்மதம் பெறாமல் பிரித்தானியாவால் சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகள் மீது தாக்குதல் செய்ய முடியும்.மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது பாதுகாப்புக்கான செலவுகளையும் உளவுச் செலவுகளையும் அதிகாரிக்க வேண்டியிருக்கும். இத்துடன் போர் மூளக்கூடய அபாயமும் அதிகரித்திருப்பதால் உலகப் பொருளாதாரம் பாதிப்படையும். பங்கு விலை வீழ்ச்சி, நாணயங்கள் மதிப்பிழத்தல், தங்கம் விலை ஏறுவது போன்றவை நடக்கலாம்.

ஐ எஸ்ஸின் முடிவின் ஆரம்பமா?
சிரிய அரசு, அமெரிக்கா உட்பட்ட 28 நேட்டோ நாடுகள், இரசியா, ஈரான், ஹிஸ்புல்லா அமைப்பு, குர்திஷ் போராளிகள், யதீஷியர்கள் இப்படி பலதரப்பட்ட எதிரிகள் மத்தியில் ஐ எஸ் போராளிகளால் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்க முடியும்?




Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...