Tuesday 3 November 2015

உலகப் பொருளாதாரத்தை வளர்முக நாடுகள் முன்னேற்றுமா?

2007-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் உலகப் பொருளாதாரத்தை மீளவும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வளர்ச்சியடைந்த நாடுகள் வளர்முக நாடுகள் பக்கம் தம் பார்வையைத் திருப்பின. அப்போது பொருளாதார வீழ்ச்சியில் இருந்து வளர்முக நாடுகளான சீனாவும் இந்தியாவும் விரைவில் தம்மைச் சுதாகரித்துக் கொண்டன. பிரேசில், இரசியா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பும் துருக்கி, இந்தோனேசியா, மெக்சிக்கோ, நைஜீரியா போன்ற நாடுகளும் வளர்ச்சிப் பாதையில் இயங்கி உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு உந்து வலுவைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் 2015-ம் ஆண்டு நிலைமை வேறுவிதமாக இருக்கின்றது. ஐக்கிய அமெரிக்காவும் சில மேற்கு உலக நாடுகளும் தமது பொருளாதாரங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கின்றன. ஆனால் வளர்முக நாடுகள் தமது வளர்ச்சி வேகத்தை இழந்து கொண்டிருக்கின்றன.



2015-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் 3.5 விழுக்காடு வளரும் என 2015 ஏப்ரலில் எதிர்வு கூறிய பன்னாட்டு நாணய நிதியம் அதை ஒக்டோபரில் 3.1 எனக் குறைத்துள்ளது.

ஏற்றுமதியும் முதலீடும்
2007-ம் ஆண்டின் பின்னர் எல்லா நாடுகளும் ஏற்றுமதி மூலம் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து விடுபட முயன்றன. எல்லோரும் ஏற்றுமதி செய்வதாயின் யார் இறக்குமதி செய்வது? இந்த ஏற்றுமதிப் போட்டியால் இன்றுவரை பல நாடுகள் பொருளாதார வளர்ச்சி குன்றிப் போய் இருக்கின்றன. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் 19 முன்னணி வளர்முக நாடுகளில் இருந்து தொண்ணூறு கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகள் வெளியேறியுள்ளன. மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 9700மில்லியன் டொலர்கள் பெறுமதியான பங்குகளை 2015-ம் ஆண்டில் விற்றுள்ளனர். ஆசியாவிலேயே அதிக அளவு முதலீட்டு வெளியேற்றம் இந்த மூன்று நாடுகளில்தான் நிகழ்ந்துள்ளது. இந்த ஆண்டு மலேசியாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இருபது விழுக்காட்டால் வீழ்ச்சியடைந்தது. அதன் ரிங்கிட் நாணயத்தின் பெறுமதியும் அமெரிக்க டொலருக்கு எதிராக இருபது விழுக்காடு வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால் மலேசிய ஆட்சியாளர்கள் தங்களிடம் இன்னும் 100பில்லியன் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இருப்பதாகவும் தமது நாட்டின் வெளியகக் கடன்பளு மொத்தத் தேசிய உற்பத்தியின் 70 விழுக்காடு மட்டுமே என்கின்றனர். அத்துடன் தமது நாட்டின் கடன்படு திறனை எந்த ஒரு நிறுவனமும் குறைத்து மதிப்பிடவில்லை என்கின்றனர். தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட இந்தோனேசியாவின் கடன்பளு மொத்தத் தேசிய உற்பத்தியின் 32 விழுக்காடு மட்டுமே. அத்துடன் அது 112பில்லியன் வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பைக் கொண்டுள்ளது. இந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிலிப்பைன்ஸின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு சிறந்த நிலையில் இருக்கின்றது. வெளிநாடுகளில் பண்புரியும் பிலிப்பைன்ஸ் குடிமக்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தால் அதன் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு சிறந்த முறையில் இருக்கின்றது.  மலேசியாவில் அரசியல் சூழ் நிலையும் உகந்ததாக இல்லை. மலேசியத் தலைமை அமைச்சரின் கணக்கில் 700மில்லியன் அமெரிக்க டொலர்கள்ள் வைப்பிலிடப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீனாவுடனான வர்த்தகத்தை அதிக அளவு கொண்ட மலேசியாவின் பொருளாதாரத்தை சீனப் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தமை மட்டுமல்ல எரிபொருள் விலை வீழ்ச்சியும் பெரிதாகப் பாதித்துள்ளது. மலேசியாவின் ஏற்றுமதி வருமானத்தில் 40 விழுக்காடு எரிபொருள் ஏற்றுமதியில் இருந்தே கிடைக்கின்றது.

இந்தோனிசியாவில் வெளிநாட்டு நாணயம்
இந்தோனிசியாவில் வெளிநாட்டு நாணயங்களில் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துச் சென்றன.  இது ஆண்டு ஒன்றிற்கு 73 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது. மொத்தத் தேசிய உற்பத்தி 900 பில்லியன் டொலர்களைக் கொண்ட இந்தோனிசியாவிற்கு இது ஒரு அதிகமான தொகையாகும். பல முதலீட்டாளர்கள் அடிக்கடி பெறுமதி மாறும் இந்தோனேசிய நாணயமான ருப்பியாவில் தமது நாணய இருப்பை வைத்திருக்காமல் வெளிநாட்டு நாணயங்களில் வைத்திருக்க விரும்பியதால் இந்த நிலைமை ஏற்பட்டது. இதனால் இந்தோனேசியாவின் நாணய மதிப்பும் வீழ்ச்சி கண்டது. 2014-இந்தோனேசியாவின் பொருளாதாரம் அதற்கு முன்னைய ஐந்து ஆண்டுகளில் மிக்கக் குறைவான வளர்ச்சியைக் கண்டது. ருப்பியா நாணயத்தின் மதிப்பு கடந்த 17 ஆண்டுகளில் மோசமான தாழ்நிலைக்கு வீழ்ச்சியடைந்தது. இந்தோனேசிய மைய வங்கி அது ஏற்றுமதிக்கு உதவும் என நம்பியது. ஆனால் நிலக்கரியையும் சமையல் எண்ணெய்யையும் ஏற்றுமதி செய்வதில் அதிக ஏற்றுமதி வருமானம் ஈட்டும் இந்தோனெச்சியாவிற்கு உலக எரிபொருள் விலை வீழ்ச்சியும் பண்டங்களின் விலை வீழ்ச்சியும் மோசமான விளைவுகளைக் கொடுத்தன.

விலைகள் அதிகரிக்கவில்லை என்றதும் கவலைதான் 
 உலகில் பல நாடுகள் போதிய பணவீக்கம் இன்றி அல்லது எதிர்மறையான பணவீக்கத்தால் அவதிப் படுகின்றன. 2016-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் பணவீக்கம் 1.5விழுக்காடாகவும் 2017-ம் ஆண்டு 1.8விழுக்காடாகவும் இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இரண்டு விழுக்காட்டிலும் சற்றுக் குறைவான ஒரு பணவீக்கத்தையே ஐரோப்பிய ஒன்றிய நிபுணர்கள் விரும்புகின்றார்கள். பொருளாதாரத்தில் பணப் புளக்கத்தை அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றிய மைய வங்கி 1.2 ரில்லியன் டொலர்கள் பெறுமதியான தனது கடன் முறிகளை வாங்க இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் மற்ற வளார்ச்சியடைந்த நாடுகளும் தமது பொருளாதாரத்தை வளர்முக நாடுகளிற்கான ஏற்றுமதி மூலம் சீர் செய்யலாம் என 2010-ம் ஆண்டு நம்பியிருந்தன. 2015-ம் ஆண்டு அவர்களின் நம்ப்பிக்கை ஈடேறவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சீனா
சீனப் பொருளாதாரம் சீன மக்களின் அதிக சேமிப்பாலும் சீன அரசின் மிகையான முதலீட்டாலும் கிராமப்புறத்து மக்கள் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து  உற்பத்தித் திறன்மிக்க துறைகளில் வேலைகள் பெற்றதலும், மேம்படுத்தப் பட்ட தொழில்நுட்பத்தாலும் வளர்ந்து கொண்டிருந்தது. பொருளாதாரம் பெரிதும் ஏற்றுமதியில் தங்கியிருந்தது. 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் நெருக்கடியைச் சந்தித்ததால் சீனாவின் ஏற்றுமதி வீழ்ச்சியடையத் தொடங்கியது. 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீன அரச நிறுவனங்களின் இலாபம் 24.7 விழுக்காடு வீழ்ச்சியடைந்ததாக சீன அரசு அறிவித்திருந்தது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்ததால் உலகச் சந்தையில் சீனா தனது உற்பத்திக்காக வாங்கும் மூலப்பொருளகளின் விலை குறைந்தது. சீனாவிற்கு மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வருமானம் குறைந்தது. இதனால் இந்த நாடுகளின் கொள்வனவு குறைந்தன. இதனால் வளர்ச்சி அடைந்த நாடுகளின் ஏற்றுமதி குறைந்தது. அவற்றின் வருமானம் குறைந்ததால் வளர்முக நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகள் செய்யும் ஏற்றுமதி குறைகின்றது. இப்படி ஒரு சுழற்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

சீனாவும் பில்ம் காட்டப்போகின்றது.
சீனாவின் சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும் வேளையில் சீனாவின் ஒரு புள்ளி விபரம் முன்னேற்றத்தைக் காட்டியது. சீனாவின் திரைப்படத் துறையே அதுவாகும். சீனத் திரைப்படத்துறையின் வருமானம் அமெரிக்காவின் திரைப்படத் துறையின் வருமானத்தை 2020-ம் ஆண்டு முந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை தனது பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்த சீனா முயல்கின்றது. தனது நிபுணர்களை அமெரிக்காவின் ஹொலிவூட்டிற்கு அனுப்பி திரைப்படத்துறையை எப்படி முன்னேற்றலாம் என ஆய்வும் செய்தது.   Demand Institute இன் கணிப்பீட்டின் படி சீனப் பொருளாதாரம் அடுத்த பத்து ஆண்டுகளில் 60 விழுக்காடு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பன்னாட்டு நாணய நிதியத்தின் கருத்துப் படி சீனாவில் நிகழ்ந்த பங்குச் சந்தை விலை வீழ்ச்சியும் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தமையும் சீனப் பொருளாதாரத்திற்குத் தேவையான ஒன்றாகும் என்கின்றது.  சீனாவில் ஒரு பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது எனச் சொல்ல இது தருணம் அல்ல என்கின்றது ப நா நிதியம். சீனாவின் அடுத்த ஐந்தாட்டுத் திட்டம் சீனப் பொருளாதாரம் ஒரு கடுமையான தரையிறக்கத்தைத் தடுப்பதையும் சீன நாணயத்தை உலக நாணயமாக மாற்றுவதையும் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து வைத்திருப்பதையும் நோக்க மாகக் கொண்டிருக்கும். சீனாவின் இந்த 13வது ஐந்தாண்டுத் திட்டம் அதற்கு ஒரு திருப்பு முனையாக அமையும்

சொன்னதைச் செய்யாத மோடி
இந்தியாவின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தனது தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. ஊழல் ஒழிக்கப்படவில்லை, சிவப்பு நாடா தளர்த்தப்படவில்லை. வெளிநாட்டு முதலீடுகளுக்கு உரிய சூழ்நிலை உருவாக்கப்படவில்லை. வீழ்ச்சியடைந்த எரிபொருள் விலை இந்தியப் பொருளாதாரத்திற்கு இன்னும் உந்து வலுவைக் கொடுக்கவில்லை.

பிரேசிலினதும் இரசியாவினதும் பொருளாதாரம் 2015-ம் ஆண்டு சுருங்கும் என்பது உறுதியாகிவிட்டது. இரசியப் பொருளாதாரம் 2016-ம் ஆண்டிலும் சுருக்கமடையும். இரசியா தன்வசமுள்ள வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு மூலம் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றது. பிரச்சனைக் குரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் துருக்கி முதலாம் இடத்தில் இருக்கின்றது. ஆனால் பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் தமது உற்பத்தியைத் துருக்கியில் செய்கின்றன.

ஆபிரிக்கா
சீனாவின் பொருளாதாரத்தால் பாதிக்கப்படாத பிரதேசமாக ஆபிரிக்கா இருக்கின்றது.  சேரா லியோன் மட்டும் விதி விலக்காக இருக்கின்றது. ஆபிரிக்காவின் அமெரிக்கா செய்யும் முதலீட்டிலும் பார்க்க மூன்று மடங்கு முதலீட்டை சீனா செய்கின்றது. ஆனால் பல ஆபிரிக்க நாடுகள் தமது நாட்டின் பாதீட்டைச் சமன் செய்ய முடியாமல் திண்டாடுகின்றன.
2007-ம் ஆண்டு எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்ததால் உலகப் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்ததாகச் சொல்லப்பட்டது. இப்போது எரிபொருள் விலை ஐம்பது விழுக்காட்டிலும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதை வைத்து உலக மக்களின் கொள்வனவுகளோ அல்லது உலக உற்பத்தியோ அதிகரிக்க வில்லை. அது மட்டுமல்ல மைய வங்கிகள் வட்டி விழுக்காட்டை பூச்சியம் வரை குறைத்தல்,  கடன் முறிகளை வாங்கிப் பணப்புளக்கத்தை அதிகரித்தல் என பல நடவடிக்கைகளை எடுத்தும் பொருளாதார வளர்ச்சி இன்னும் எட்டப்படாத ஒன்றாகவே இருக்கின்றது.
பன்னாட்டு நாணய நிதியம் 2015-ம் ஆண்டு வளர்முக நாடுகளின் பொருளாதாரம் 4.2விழுக்காடாக மட்டுமே இருக்கும் என எதிர்வு கூறியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வளர்முக நாடுகள் 7.4 விழுக்காட்டில் வளர்ந்தது.

2050-ம் ஆண்டு வளர்முக நாடுகளின் கொள்வனவு உலகக் கொள்வனவில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கும். அப்போது உலகப் பொருளாதாரம் வளர்முக நாடுகளினுடையதாக

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...