Saturday 10 October 2015

Torpedo என்னும் கடலடி ஏவுகணைகளை வீசும் இந்தியாவின் புதிய கப்பல்.

இந்தியா torpedo ஏவுகணை ஏவவும் மீட்கவும் கூடிய ஒரு கடற்படைக் கப்பலை முழுக்க முழுக்க உள்ளூரில் உருவாக்கியுள்ளது. 50 மீட்டர் நீளமான இந்தக் கப்பலுக்கு INS Astradharini எனப் பெயரிடப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் உள்ள விசாகப் பட்டனம் துறைமுகத்தில் இருந்து INS Astradharini வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. இது மணித்தியாலத்திற்கு 15 கடல் மைல்கள் என்னும் வேகத்தில் பயணிக்கக் கூடியது.

மேலும் இந்தக் கப்பலில் உள்ள முக்கிய அம்சங்கள்
1. நவீன வலுப்பிறப்பாக்கலும் விநியோகமும் அதாவது power generation and distribution)
2. சிறந்த கடற்பயணம் (improved navigation)
3. நவீன தொடர்பாடல் முறைமையை(modern communication systems.)

தனது படைக்கல உற்பத்தியை உள்நாட்டிலேயே செய்வதை அதிகரிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கும் இந்தியாவிற்கு INS Astradharini கப்பலின் உருவாக்கம் ஒரு மைல்கல்லாகும்

சீனா அண்மைக்காலங்களாக தனது கடல் வலிமையைப் பெருக்கி வருகின்றது. அதைச் சமாளிக்கும் வகையில் இந்தியாவும் தனது கடற்படையை மேம்படுத்தி வருகின்றது.

செப்டம்பர் 27-ம் திகதியில் இருந்து ஒக்டோபர் முதலாம் திகதி வரை இந்தியக் கடற்படையும் பிரித்தானியக் கடற்படையும் இணைந்து இந்து மாக்கடலில் பயிற்ச்சிகளில் ஈடுபட்டன. Royal Navyயில் frigate வகைக் கப்பலான HMS Richmond உடன் இந்தியாவின் (INS) Betwa பயிற்ச்சியில் ஈடுபட்டது.

பொதுவாக மத்திய கிழக்கில் நிலை கொண்டிருக்கும் HMS Richmond இந்தியாவின் கோவாவில் உள்ள துறை முகத்திற்குச் சென்று பயிற்ச்சியில் ஈடுபட்டது. இரு கப்பல்களும் ஒரு போர் சூழலில் சிறந்த தொடர்பாடலையும் ஒருங்கிணைப்பையும் செய்யக் கூடிய வகையில் பயிற்ச்சி அமைந்திருந்தது. இக்கப்பலுடன் பிரித்தானியாவுன் 820 Naval Air Squadron Merlin Mk 2 உழங்கு வானூர்திகளும் பயிற்ச்சியில் இணைந்திருந்தன.

பிரித்தானியாவின் 133நீள  Duke-வகுப்பைச் சேர்ந்த  frigate கப்பலான  HMS Richmond  நீர் மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான போருக்கு என உருவாக்கப்பட்டதாகும். அத்துடன் அது கடல் மேற்பரப்பில் உள்ள கப்பல்களுக்கும் எதிராகவும் போர் செய்யக் கூடியது. சீனா தனது நீர் மூழ்கிக் கப்பல்களைப் பெருமளவில் அதிகரித்து வருகின்றது. அதைச் சமாளிக்க இந்தியாவிற்கு இந்தப் பயிற்ச்சி அவசியமான ஒன்றாகும்.

இந்தியத் தரப்பில் பயிற்ச்சியில் ஈடுபட்ட கப்பலான INS Betwa 2004-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது மத்திய தரைக்கடலிலும் இந்து மாக்கடலிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பல தரப்பட்ட படைக்கலன்களைக் கொண்ட இக்கப்பலில் இரண்டு உழங்கு வானூர்திகளும் உண்டு.

பிரித்தானியா அண்மைக்காலங்களாக இந்தியாவுடன் தனது படைத்துறை ஒத்துழைப்பை அதிகரித்து வருகின்றது.

Friday 9 October 2015

சீனா நிர்மாணித்த தீவுகளுக்கு சவால் விடத் தீர்மானித்த அமெரிக்கா

தென் சீனக் கடலில் உள்ள பவளப் பாறைகளின் மேல் கடற்படுக்கையில் இருந்து மணலை வாரி இறைத்துப் போட்டு நிரவி சீனா பல தீவுகளை உருவாக்கி வருகின்றது. இந்தத் தீவுகளில் விமான ஓடுபாதைகளையும் படைத் தளங்சீனா களையும் நிர்மானிக்கின்றது. சீனா தீவுகளைக் கட்டி எழுப்பும் கடற்பரப்பு பன்னாட்டுக் கடற்பரப்பு என சீனாவின் அயல் நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் வலியுறுத்தி வருகின்றன. சில நாடுகள் இது தமக்கு சொந்தமான பிரதேசம் எனவும் சொல்கின்றன. இத்தீவுகளைச் சுற்றிய 12 கடல் மைல்கள் தனது ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்றது சீனா. இதற்குச் சவால்விடும் வகையில் அந்த 12 கடல் மைல் பரப்பினுள் ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கலன்களை இரண்டு வாரங்களுக்குள் அனுப்பப் போவதாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது.
எரிபொருள் வளம், கனிம வளம், மீன் வளம் கப்பற் போக்கு வரத்து முக்கியத்துவம் ஆகியவற்றைக் கொண்ட தென் சீனக் கடல் இப்போது உலகில் கொதி நிலையில் உள்ள பிராந்தியங்களில் ஒன்றாக உருவாகிவிட்டது. தென் சீனக் கடற்பிராந்தியம் முழுவதும் சீனா தன்னுடையது என்று அடம்பிடிக்கிறது. தென் சீனக் கடற்பிராந்தியத்திலும் கிழக்குச் சீனக் கடற்பிராந்தியத்திலும் உள்ள தீவுகள் தொடர்பாக ஜப்பான், தாய்வான், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், கம்போடியா, இந்தோனேசியாஆகிய நாடுகள் சீனாவுடன் பலமாக முரண்படுகின்றன. தென் சீனக் கடலில் 17.7 பில்லியன் தொன் எரிபொருள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குவைத்தில் உள்ள 13 பில்லியன் தொன்னிலும் அதிகமாகும். சீன அரசு தென் சீனக் கடலின் எரிபொருள் ஆய்விற்க்கு முப்பது பில்லியன் டொலர்களைச் செலவிடத் திட்டமிட்டுள்ளது. தென் சீனக் கடலை சீனா இரண்டாவது பாரசீகக் கடல் என்கின்றது. 

உலகக் கடற் போக்கு வரத்தில் 30 விழுக்காடு செல்லும் தென்சீனக் கடற்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வளர்வதை பல நாடுகள் விரும்பவில்ல்லை. தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகளை மேடுறுத்தி சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் P8-A Poseidon என்னும் வேவு விமானம் சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றது. அமெரிக்காவின் விமானத்திற்கு சீனக் கடற்படையினர் எட்டுத் தடவைகள் எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பினர். ஸ்பிராட்லி தீவுக் கூட்டங்களில் உள்ள பியரி குரொஸ் என்னும் பவளப்பாறையை மேடாக்கி சீனா உருவாக்கிய தீவின் மேல் இச் சம்பவம் நடந்தது.

பியரி குரோஸில் சீனா அமைத்த தீவில் 3000 மீட்டர் நீளமான விமான ஓடுபாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுபாதை 2015-ம் ஆண்டின் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அங்கு சீனக் கடற்படையினர் பெருமளவில் இருந்ததாக சி.என்.என் தொலைக்காட்ச்சிச் சேவையினர் தெரிவித்தனர். ஸ்பார்ட்லித் தீவுகளில் சீனா உருவாக்கும் தீவுகள் அத் தீவுகளுக்கு உரிமை கொண்டாடும் பிலிப்பைன்ஸ், வியட்னாம், மலேசியா, தாய்வான். புரூனே ஆகிய நாடுகளைக் கலக்கமடைய வைத்துள்ளது. இந்த நாடுகளுக்கு நம்பிக்கை கொடுக்கவும் தென் சீனக் கடலினூடாக உலகக் கப்பற் போக்கு வரத்துக்குள் சுந்ததிரமாக நடமாடுவதை உறுதி செய்யவும் தான் முயற்ச்சிப்பதாக அமெரிக்கா சொல்கின்றது.

சீனாவின் ஒன்பது புள்ளிக் கோடு
1947-ம் ஆண்டில் இருந்த சீன ஆட்சியாளர்கள் தென் சீனக் கடலில் தங்கள் ஆதிக்கத்தை ஒரு 11துண்டுக் கோடுகள் வரைபடத்தின் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர் 1949இல் சீனாவில் ஆட்சிக்கு வந்த பொதுவுடமை ஆட்சியாளரான சூ என் லாய் ஒரு 9 துண்டுக் கோடுகள் மூலம் தென் சீனக் கடலில் தமது ஆதிக்கத்தை வரையறை செய்தார். இதன்படி பரசெல்ஸ் தீவுகளும் ஸ்பிராட்லி தீவுகளும் தன்னுடையவை என்றது சீனா. பரசெல்ஸ் தீவுகள் தம்முடையவை என வியட்னாமும் தாய்வானும் சொல்கின்றன. பரசெல்ஸ் தீவுகளில் சில தமது நாடுகளுக்கு அண்மையில் இருப்பதால் அவை தம்முடையவை என்கின்றன இந்தோனேசியாவும் பிலிப்பைன்ஸும் புரூனியும், மலேசியாவும். தாய்வானும் சீனாவும் ஸ்பிராட்லி தீவுகளையும், பரசெல்ஸ் தீவுகளையும் தம்மிடம் ஜப்பான் கையளிக்க வேண்டும் என்கின்றன. தாய்வான் 1947இல் செய்யப்பட்ட 11 துண்டுக் கோடுகள் வரைபடத்தை ஒட்டி நிற்கிறது. சீனாவினதும் தாய்வானினதுக் கோரிக்கைகளிற்கு எந்த ஒரு பன்னாட்டு உடன்படிக்கையும் அடிப்படையாக அமையாவில்லை என வியட்னாம் வாதாடுகிறது. முழுத் தாய்வானும் தன்னுடையது என்று சீனா சொல்வதால் மேலும் சிக்கல்கள் இருக்கின்றன. சீனா தனது ஒன்பது புள்ளிக் கோட்டின் மூலம் தென் சீனக் கடலின் 90 விழுக்காடு பரப்பளவிற்கு உரிமை கொண்டாடுகின்றது.


The United Nations Law of the Sea Convention
1982இல் ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட கடல் மரபொழுங்குச் சட்டத்தின்படி  (The United Nations Law of the Sea Convention) தென் சீனக் கடலில் உள்ள 40 தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என வியட்னாமும் மலேசியாவும் இணைந்து ஐநாவிடம் ஒரு மனுவைச் சமர்ப்பித்தன. உடனே சீனாவும் தனது ஒன்பது துண்டுக் கோட்டு வரைபடத்தை இணைத்து ஒரு மனுவை ஐநாவிடம் சமர்ப்பித்தது. சீனாவின் மனுவை எதிர்த்து வியட்னாம் தனது அறிக்கையை ஐநாவிடம் சமர்ப்பித்தது.
தென் சீனக் கடலில் உள்ள பவளப் பாறைகளின் மேல் கடற்படுக்கையில் இருந்து மணலை வாரி இறைத்துப் போட்டு நிரவி சீனா பல தீவுகளை உருவாக்கி வருகின்றது. இந்தத் தீவுகளில் விமான ஓடுபாதைகளையும் படைத் தளங்களையும் சீனா நிர்மானிக்கின்றது. சீனா தீவுகளைக் கட்டி எழுப்பும் கடற்பரப்பு பன்னாட்டுக் கடற்பரப்பு என சீனாவின் அயல் நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் வலியுறுத்தி வருகின்றன. இத்தீவுகளைச் சுற்றிய 12 கடல் மைல்கள் தனது ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்றது சீனா. இதற்குச் சவால்விடும் வகையில் அந்த 12 கடல் மைல் பரப்பினுள் ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கலன்களை இரண்டு வாரங்களுக்குள் அனுப்பப் போவதாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது.

எரிபொருள் வளம், கனிம வளம், மீன் வளம் கப்பற் போக்கு வரத்து முக்கியத்துவம் ஆகியவற்றைக் கொண்ட தென் சீனக் கடல் இப்போது உலகில் கொதி நிலையில் உள்ள பிராந்தியங்களில் ஒன்றாக உருவாகிவிட்டது. தென் சீனக் கடற்பிராந்தியம் முழுவதும் சீனா தன்னுடையது என்று அடம்பிடிக்கிறது. தென் சீனக் கடற்பிராந்தியத்திலும் கிழக்குச் சீனக் கடற்பிராந்தியத்திலும் உள்ள தீவுகள் தொடர்பாக ஜப்பான், தாய்வான், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், கம்போடியா, இந்தோனேசியாஆகிய நாடுகள் சீனாவுடன் பலமாக முரண்படுகின்றன.

உலகக் கடற் போக்கு வரத்தில் 30 விழுக்காடு செல்லும் தென்சீனக் கடற்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வளர்வதை பல நாடுகள் விரும்பவில்ல்லை. தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகளை மேடுறுத்தி சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் P8-A Poseidon என்னும் வேவு விமானம் சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றது. அமெரிக்காவின் விமானத்திற்கு சீனக் கடற்படையினர் எட்டுத் தடவைகள் எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பினர். ஸ்பிராட்லி தீவுக் கூட்டங்களில் உள்ள பியரி குரொஸ் என்னும் பவளப்பாறையை மேடாக்கி சீனா உருவாக்கிய தீவின் மேல் இச் சம்பவம் நடந்தது.

பியரி குரோஸில் சீனா அமைத்த தீவில் 3000 மீட்டர் நீளமான விமான ஓடுபாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுபாதை 2015-ம் ஆண்டின் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அங்கு சீனக் கடற்படையினர் பெருமளவில் இருந்ததாக சி.என்.என் தொலைக்காட்ச்சிச் சேவையினர் தெரிவித்தனர். ஸ்பார்ட்லித் தீவுகளில் சீனா உருவாக்கும் தீவுகள் அத் தீவுகளுக்கு உரிமை கொண்டாடும் பிலிப்பைன்ஸ், வியட்னாம், மலேசியா, தாய்வான். புரூனே ஆகிய நாடுகளைக் கலக்கமடைய வைத்துள்ளது. இந்த நாடுகளுக்கு நம்பிக்கை கொடுக்கவும் தென் சீனக் கடலினூடாக உலகக் கப்பற் போக்கு வரத்துக்குள் சுந்ததிரமாக நடமாடுவதை உறுதி செய்யவும் தான் முயற்ச்சிப்பதாக அமெரிக்கா சொல்கின்றது.

சீனாவின் ஒன்பது புள்ளிக் கோடு
1947-ம் ஆண்டில் இருந்த சீன ஆட்சியாளர்கள் தென் சீனக் கடலில் தங்கள் ஆதிக்கத்தை ஒரு 11துண்டுக் கோடுகள் வரைபடத்தின் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர் 1949இல் சீனாவில் ஆட்சிக்கு வந்த பொதுவுடமை ஆட்சியாளரான சூ என் லாய் ஒரு 9 துண்டுக் கோடுகள் மூலம் தென் சீனக் கடலில் தமது ஆதிக்கத்தை வரையறை செய்தார். இதன்படி பரசெல்ஸ் தீவுகளும் ஸ்பிராட்லி தீவுகளும் தன்னுடையவை என்றது சீனா. பரசெல்ஸ் தீவுகள் தம்முடையவை என வியட்னாமும் தாய்வானும் சொல்கின்றன. பரசெல்ஸ் தீவுகளில் சில தமது நாடுகளுக்கு அண்மையில் இருப்பதால் அவை தம்முடையவை என்கின்றன இந்தோனேசியாவும் பிலிப்பைன்ஸும் புரூனியும், மலேசியாவும். தாய்வானும் சீனாவும் ஸ்பிராட்லி தீவுகளையும், பரசெல்ஸ் தீவுகளையும் தம்மிடம் ஜப்பான் கையளிக்க வேண்டும் என்கின்றன. தாய்வான் 1947இல் செய்யப்பட்ட 11 துண்டுக் கோடுகள் வரைபடத்தை ஒட்டி நிற்கிறது. சீனாவினதும் தாய்வானினதுக் கோரிக்கைகளிற்கு எந்த ஒரு பன்னாட்டு உடன்படிக்கையும் அடிப்படையாக அமையாவில்லை என வியட்னாம் வாதாடுகிறது. முழுத் தாய்வானும் தன்னுடையது என்று சீனா சொல்வதால் மேலும் சிக்கல்கள் இருக்கின்றன. சீனா தனது ஒன்பது புள்ளிக் கோட்டின் மூலம் தென் சீனக் கடலின் 90 விழுக்காடு பரப்பளவிற்கு உரிமை கொண்டாடுகின்றது.


சரித்திரப் பின்னணி
1951-ம் ஆண்டு 48 நாடுகள் சன் பிரான்சிஸ்கோ நகரில் கூடி இரண்டாம் உலகப்போரை அதிகாரபூர்வமாக முடிவுற்கு கொண்டு வரும் சன் பிரான்சிஸ்கோ உடன் படிக்கையில் கையொப்பமிட்டன.  மாநாட்டில் கலந்து கொண்ட சோவியத் ஒன்றியம், போலந்து, செக்கோஸ்லாவாக்கியா ஆகிய நாடுகள் கையொப்பமிட்டன. மாவோ சே துங் பெரும் உள்ளூர்ப் போரில் ஈடுபட்டிருந்தபடியால் சீனா கலந்து கொள்ளவில்லை. மாநாடு ஜப்பானிற்கு பாதகமானது என்று சொல்லி இந்தியா கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஜப்பான் கலந்து கொண்டு கையொப்பமிட்டது. சன் பிரன்சிஸ்க்கோ உடன்படிக்கையின் படி ஜப்பானின் ஆதிக்கத்தில் இருந்து கொரியா, தாய்வான்,  பேஸ்கடோர்ஸ், ஹாங்காங், அண்டார்டிக்கா, ஸ்பிரட்லி தீவுகள், கியூரில் தீவுகள் ஆகியவை உத்தியோக பூர்வமாக விடுவிக்கப்பட்டன. தென் சீனக் கடலில் உள்ள தீவுகள் யாருக்கு சொந்தம் என்று சன் பிரான்சிஸ்கோ உடன்படிக்கையில் வரையறை செய்யவில்லை. அப்பகுதியில்  பொனின் தீவுகளும் ஒக்கினாவா அமானி, மியக்கோ யேயாமா ஆகியவற்றை உள்ளடக்கிய ரியாக்கு தீவுகளும் (Bonin Islands and the Ryukyu Islands, which included Okinawa and the Amami, Miyako and Yaeyama Islands groups) அமெரிக்காவின் நம்பிக்கைப் பொறுப்பில் விடப்பட்டன.



 பசுபிக் மாக்கடலின் இரு புறமும் உள்ள 12 நாடுகள் இணைந்து  பசுபிக்தாண்டிய கூட்டாண்மையை Trans Pacific Partnership (TPP ) உருவாக்கும் ஒப்பந்தம் கைச்சாத்திட்டன.  ஐக்கிய அமெரிக்கா ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த தென் சீனக் கடல் ஒரு ஆபத்து நிறைந்த ஆரம்பப் புள்ளியாகும்.   சீனாவிற்கு எதிரான  பொருளாதார, பூகோள அரசியல், மற்றும் கேந்திரோபாய நகர்வுகளின் முக்கிய பகுதியே இந்தக் கூட்டாண்மை உருவாக்கமாகும்.

 ஐக்கிய அமெரிக்கா ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த தென் சீனக் கடல் ஒரு ஆபத்து நிறைந்த ஆரம்பப் புள்ளியாகும்.  சீனா உருவாக்கிய தீவுகளுக்கு அண்மையாக அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை அனுப்ப வேண்டும் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தார். Trans Pacific Partnership உடன்படிக்கை கைச் சாத்திட்ட பின்னரே வெள்ளை மாளிகை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. அஸ்டன் கார்ட்டர் அமெரிக்கப் படைகள் பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமைய உலகின் எப்பாகத்திற்கும் செல்லும் என்றார். ஒஸ்ரேலியாவில் நடந்த கடற்பயணம் தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்காவின்  பசுப்பிராந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் Scott Swift சில நாடுகள் பன்னாட்டுச் சட்டத்திற்கு அமையாமல் செயற்படுகின்றன என்றார். அந்த நாடுகள் கடற்போக்கு வரத்திற்கு கண்டபடி கட்டுப்பாடுகளும் எச்சரிக்கைகளும் விடுக்கின்றன எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அமேரிக்காவிற்கு சவால் விடக் கூடிய வகையில் வட துருவத்தில் உள்ள அமெரிக்காவிற்குச் சொந்தமான அலாஸ்க்காவிற்கு பராக் ஒபாமா வடதுருவ நாடுகளின் கூட்டத்திற்குச் சென்ற போது சீனா தனது ஐந்து கடற்கப்பல்களை அலாஸ்க்காவை ஒட்டிய கடற்பிராந்தியத்திற்கு அனுப்பி இருந்தது.

சீனாவின் எதிர்வினை
தான் நிர்மாணிக்கும் தீவுகள் தொடர்பாக அமெரிக்காவுடன் ஏற்கனவே பல பேச்சு வார்த்தைகள் நடத்திவிட்டோம் என்கின்றது சீனா. அமெரிக்கா தனது தீவுகளுக்கு அண்மையாக தனது கடற்படைக் கப்பல்களை அனுப்புவது தொடர்பாக தனது ஆட்சேபனையை ஏற்கனவே அமெரிக்காவிற்கு சீனா தெரிவித்து விட்டது. சீனாவும் தனது கடற்படைக்கப்பல்கலை தனது தீவுகளுக்கு அனுப்பும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.  சுதந்திரக் கடற்பயணம் என்னும் பெயரில் தனது கடல் எல்லைக்குள்
 

Monday 5 October 2015

மத்திய கிழக்கில் அகலக் கால் பதிக்கும் இரசியா

இரசியா மத்திய கிழக்கில் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தனது உளவு நடவடிக்கைகளுக்கான தலைமையகத்தை ஈராக்கில் அமைத்துள்ளது. தகவல் நிலையம் என்னும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இத் தலைமையகம் இரசியா, ஈரான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் படைகளுக்கிடையில் உளவுத் தகவல்களைத் திரட்டுவதையும், பகுப்பாய்வு செய்வதையும் பரிமாறிக் கொள்வதையும்  ஒன்றிணைக்கும் என இரசிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதற்கான தலைமைப் பொறுப்பை இந்த நான்கு நாடுகளின் பிரதிநிதிகளில் ஒருவர் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை சுழற்ச்சி முறையில் ஏற்றுக் கொள்வார். புட்டீனின் நகர்வுகள் அவரது புவிசார் அரசியல் வித்துவத்துவமா அல்லது உள்நாட்டுப் பிரச்சனை திசைதிருப்பும் முயற்ச்சியா என்பதில் அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

ஹிஸ்புல்லாவும் வரவேற்பு
இரசியாவின் அதிரடி நகர்வுகளை லெபலானிய சியா முஸ்லிம் அமைப்பான ஹிஸ்புல்லாவும் வரவேற்றுள்ளது. ஈரானிய ஆதரவு அமைப்பானா ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பு ஐ எஸ் அமைப்பைத் தோற்கடிக்கத் தவறிவிட்டது என்று கூறிய அவர் அமெரிக்காவின் நோக்கங்களில் தனக்கு ஐயம் இருப்பதாகவும் தெரிவித்தார். அண்மைக்காலங்களாக ஹிஸ்புல்லா அமைப்பினர் 4+1 என்னும் பெயரில் இரசியா, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நான்கு நாடுகளும் தமது அமைப்பும் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்து வந்தனர்.  அந்தக் கூட்டமைப்பின் முதற்பணி சிரியாவின் அல் அசாத் ஆட்சிக்கு ஆதரவாகப் போராட படையினரை அனுப்புவதாக இருக்க வேண்டும் எனவும் ஹிஸ்புல்லாவின் ஊடகங்கள் பரப்புரை செய்து கொண்டிருந்தன.

ஈரானும் மறுக்கிறது இரசியாவும் மறுக்கிறது
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பங்கு பற்றச் சென்ற ஈரானிய அதிபர் ஹஸன் ரௌஹானி இரசியா, ஈரான், சிரியா, ஈராக் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு உருவாக்கப் பட்டிருப்பதை மறுத்துள்ளார். இரசிய அரசுறவியலாளர்களும் மத்திய கிழக்கில் தமது நாடு ஒரு தீவிர ஈடுபாடு செலுத்த விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர். ஈராக்கில் எமக்கென்று ஒரு பணி இல்லை, நாம் ஈராக்கில் தலையிடப்போவதில்லை என்கின்றனர். அவர்கள். அத்துடன் மத்திய கிழக்கில் இரசியாவினதும் ஈரானினதும் நிலைப்பாடுகள் வித்தியாசமானவை இரண்டும் நெருங்கி இணைந்து அங்கு செயற்பட வாய்ப்பில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஈரானிய சிறப்புப் படையான கட்ஸ் படையின் (Quds Force) தளபதி ஹஸ்ஸெம் சொலைமானி 2015 ஓகஸ்ட் மாதம் இரசிய சென்று பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் பயணத் தடையையும் மீறி இவர் இரசியா சென்றிருந்தார். சிரிய விவகாரத்தில் இரசியாவிற்கும் ஈரானிற்கும் தொடர்புகள் இருப்பதை மறுக்க முடியாது. ஈராக்கியத் தலைமை அமைச்சர் ஹைதர் அல் அபாதி 2015 மே மாதம் மொஸ்க்கோ சென்று இரசியாவுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியிருந்தார்.

சுருங்கும் அசாத்தின் ஆதிக்கப் பரப்பு

மூன்று இலட்சம் பேருக்கு மேல் கொல்லப்பட்டும் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் இடப்பெயர்வுக்கும் உள்ளாகி இருக்கும் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நான்கில் ஒரு பங்கு நிலப்பரப்பு மட்டும் இருக்கின்றது. சிரியப் பிரச்சனையால் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பெரிய அளவில் தஞ்சம் கோருவோரின் பிரச்சனைக்கு முகம் கொடுக்கின்றன. இவை யாவற்றிற்கும் பராக் ஒபாமாவின் பிழையான வெளியுறவுக் கொள்கையும் அவர் சிரிய விவகாரத்தைக் கையாண்ட விதமும் தான் என விள்டிமீர் புட்டீன் ஐக்கிய நாடுகள் சபையில் வைத்துத் தெரிவித்தார். இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஈராக்கின் மீதான சட்ட விரோதப் படையெடுப்பே உருவாக்கியது என்பதையும் புட்டீன் தெரிவிக்கத் தவறவில்லை. மேற்கு ஐரோப்பிய நாடுகள் இரசியாவின் உதவியின்றி ஐ எஸ் என்னும் பேயை ஒழிக்க முடியாது எனக் கருதுகின்றன என வரும் செய்திகளும் பராக் ஒபாமாவிற்கும் அமெரிக்காவிற்கும்பேரிடியாகும். ஜேர்மனியும் இத்தாலியும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான இரசியாவின் படை நடவடிக்கைகளை இரகசியமாக வரவேற்றுள்ளன.

இரசியாவிற்கும் ஒரு களமுனை தேவை
சிரியாவின் சியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிராந்தியத்தில் உள்ள லதக்கியா விமானப்படைத் தளத்தில் இரசியா தனது படையினரையும் போர் விமானங்களையும் முதலில் தரையிறக்கியது. அமெரிக்காவின் உளவுத்துறைகளில் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இரசியா இந்த நகர்வுகளைச் செய்ததால் இது மேற்கு நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்துடன் இரசியாவின் கடற்படையினரின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் நிலையமாக இருந்த சிரியாவின் டார்டஸ் துறைமுகத்தில் இரசியக் கடற்படைக் கப்பல்கள் சென்று நிலை எடுத்துள்ளன. இரசியாவின் கருங்கடல் கடற்படையணியின் முக்கிய கலமான The Moskva missile-carrying cruiser என்னும் ஏவுகணைதாங்கிக் கப்பலும் நாசகாரிக் கப்பல்களும்  சிரியாவை ஒட்டிய மத்திய தரைக்கடலில் நிலை எடுத்துள்ளன. அமெரிக்காவின் செய்மதிப் படங்களின் படி 28 போர் விமானங்கள் 26 தாக்குதல் உலங்கு வானூர்திகள், பல துருப்புக் காவி வண்டிகள், பல தரையில் இருந்து வானிற்கு ஏவும்கணைகள், பல தாங்கிகள் ஆகியவற்றுடன் இரண்டாயிரம் இரசியப் படையினர் லதக்கியாவில் நிலை கொண்டுள்ளனர். நேட்டோ நாடுகள் பல நாடுகளுக்கு தமது படைகளைப் போர் செய்ய அனுப்பி அவர்களுக்கு களமுனை அனுபவத்தை வழங்குவதுடன் தமது படைக்கலன்களின் பயன்பாட்டையும் பரீட்சிக்கின்றன. இரசியா 1990இல் இருந்து அப்படி ஒரு பரந்த அனுபவம் இன்றி இருக்கின்றன. ஜோர்ஜியாவுடன் நடந்த போரில் வலுவற்ற ஜோர்ஜியாவை அது துரிதமாக அடக்கி விட்டது.அண்மைக்காலங்களாக ஐக்கிய அமெரிக்கா தரைப்படைகளை அனுப்பாமல் வான் தாக்குதல்கள் மூலம் போர் புரியும் திறனையும் அனுபவத்தையும் வளர்த்துள்ளது. அதே அனுபவத்தையும் திறனையும் அமெரிக்கா பெறத் துடிக்கின்றது.

மத்திய கிழக்கில் இடைவெளிகளை நன்கு பயன்படுத்திய இரசியா!

சியா மற்றும் சுனி இஸ்லாமியர்களிற்கு இடையே உள்ள முறுகல் நிலை என்று பார்க்கும் போது  ஐக்கிய அமெரிக்காவின் நட்பு சுனி முஸ்லிம்கள் நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், கட்டார், குவைத் போன்ற நாடுகளுடனேயே சிறப்பாக இருக்கின்றன. சியா முஸ்லிம் நாடான ஈரான் அமெரிக்காவை வெறுக்கும் ஒரு நாடாக இருக்கின்றது. சியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானினதும் ஈராக்கினதும் நட்பை இரசியாவால் இலகுவாகப் பெற முடியும். ஐக்கிய அமெரிக்காவும் துருக்கியும் இணைந்து ஈரானை தம்முடன் ஒரு உடன்பாட்டுக்கு கொண்டு வருமுன்னர் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தனது காய்களை நகர்த்தி விட்டார். மத்திய கிழக்கில் உள்ள அடுத்த இடைவெளி ஐக்கிய அமெரிக்காவும் இரசியாவும் தமது படைகளின் காலடிகள் அங்கு படக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தமையாகும். அமெரிக்காவின் விமானத் தாக்குதல்கள் ஐ எஸ் போராளிகளின் நடமாட்டங்களுக்கு தடையாக அமைந்தன ஆனால் அவர்களின் நடவடிக்கைகளைத் தடுக்கவில்லை. அவர்கள் கால நிலை மாற்றங்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தமது படை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இஸ்ரேலுக்குப் பேரிடி
இரசியா சிரியாவில் தரையில் இருந்து வான் நோக்கி ஏவும் ஏவுகணைகளையும் விமானத்தில் இருந்து விமானத்தை நோக்கி ஏவும் ஏவுகணைகளையும் இறக்கி இருப்பது இஸ்ரேலுக்குப் பேரிடியாகும். 2010-ம் ஆண்டு சிரிய உள் நாட்டுக் குழப்பம் ஆரம்பமானதில் இருந்து இஸ்ரேல் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லாவிற்கு பெரும் படைக்கலன்கள் அனுப்பப் படுவதைத் தடுத்துக் கொண்டிருக்கின்றது. மூன்றிற்கு மேற்பட்ட தடவைகள் இஸ்ரேலிய விமானங்கள் சிரியாவிற்குள் அத்து மீறிப் புகுந்து தாக்குதல்களும் செய்துள்ளன.சிரியா கோலான் குன்றுகளை மீளக் கைப்பற்ற இரசியப் படைகள் உதவுமா என்ற அச்சமும் இஸ்ரேலில் சிலரிடம் தோன்றியுள்ளது. 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாட் போரில் கோலான் குன்றை இஸ்ரேல் சிரியாவிடமிருந்து பிடுங்கிக் கொண்டது. 1981-ம் ஆண்டு இஸ்ரேல் கோலான் குன்றை தன்னுடன் ஒரு தலைப்பட்சமாக இணைத்துக் கொண்டது. இதைப் பன்னாட்டு சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் இருபதினாயிரம் இஸ்ரேலியர்கள் கோலான் குன்றில் குடியேற்றப்பட்டனர். இந்தக் கோலான் குன்றில் இருந்து இஸ்ரேல் மீது எறிகணை மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இலகுவாகச் செய்ய முடியும். இந்தக் குன்றுகள் ஹிஸ்புல்லாவின் வசமானால் அதனால் இஸ்ரேல் பேரழிவை ஏற்படுத்த முடியும்.

புட்டீனின் கேந்திரோபாயமா தந்திரமா

சிரியாவில் சுதந்திர சிரியப் படை என்னும் அமைப்பு அமெரிக்காவின் ஆதரவு பெற்ற அமைப்பாகும். அதற்குப் படைக்கலன்களும் பயிற்ச்சியும் அமெரிக்கா வழங்கி வருகின்றது. அவர்கள் அதிபர் பஷார் அல் அசாத்தின் படையினருக்கு எதிராகவும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகவும் போராடி வருகின்றனர். இந்த அமைப்புக்களுக்கு எதிராக இரசியா தாக்குதல் நடத்தக் கூடும். இது அமெரிக்காவின் சிரியா தொடர்பான அரசுறவியலுக்கு பெரும் இழுக்காக அமையும். வெள்ளை மாளிகையில் சிலர் புட்டீன் தனது இரசியப் பார்வையாளர்களைத் திருப்திப் படுத்த சும்மா "சீன் போடுகின்றார்" எனச் சொல்வதும் உண்டு. 13 விழுக்காடு சியா முஸ்லிம்களையும்74விழுக்காடு சுனி முஸ்லிம்களையும் கொண்ட சிரியாவில் சியா ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் சுனி முஸ்லிம்களின் அமைப்பான ஐ எஸ் இற்கு எதிராகவும் இரசியா களமிறங்கியுள்ளது. அது அமெரிக்காவின் DIPLOMATIC MANEUVER ஐ முற்றாக checkmate செய்துவிட்டபோதிலும் ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் இரசியா இருக்கின்றதா? சவுதி, கட்டார், ஐக்கிய அமீரகம், துருக்கி ஆகியவை அசாத்தை அகற்றுவதில் உறுதியாக நிற்கின்றன. இரசியாவிடம் சிரியாவில் உறுதியாக நிலைகொள்ளக் கூடிய logistic support  வளங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. உலகெங்கும் உள்ள சுனி முஸ்லிம்கல் மட்டுமல்ல இரசியாவில் உள்ள சுனி முஸ்லிம்களின் வெறுப்பை இரசியா சம்பாதிப்பது இரசியாவிற்கு உகந்ததா? புட்டீனின் நகர்வுகள் இரசியாவிற்கும் அவர் தலையிடும் நாடுகளுக்கும் செழிப்பை கொண்டுவருமா? இரசியாவின் நட்பு நாடுகளின் வட்டடத்தை விரிவாக்குமா? இது போன்ற கேள்விகளுக்குச் சரியான விடையைக் காலம் தான் கூறும்.

மேற்கின் குற்றச் சாட்டும் இரசியாவின் பதிலும்
 ஐ எஸ் அமைப்பிற்கு எதிராகத் தாக்குதல் செய்யச் சென்ற இரசியப் படையினர் அதைச் செய்யாமல் மற்ற அமைப்புக்களுக்கு எதிராகத் தாக்குதல் செய்வதாக அமெரிக்கா முதலில் குற்றம் சாட்டியது. இரசியா முதல் தாக்குதல் செய்த இடமான சிரியாவின் ஹொம்ஸ் நகரில் சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடும் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சுந்ததிர சிரியப் படையினரும் இருக்குக்கின்றனர். 2015-ஒக்டோபர் 3-ம் திகதி இரசியப் படையினர் ஐ எஸ் அமைப்பிற்கு எதிராக கடுமையான விமானத் தாக்குதல்களை நடாத்தினர். ரக்கா நகரில் உள்ள ஐ எஸ் அமைப்பின் கட்டுப்பாடு-கட்டளைப் பணியகத்தை தாம் நிர்மூலமாக்கியதாக அவர்கள் தெரிவித்தனர். BETAB-500 எனப்படும் கொங்கிறீட் சுவர்களைத் துளைத்துச் செல்லும் குண்டுகள் Su-34 போர்விமானங்களில் இருந்து வீசப்பட்டன. இதனால் நிலத்தின் கீழ் இருந்த ஐ எஸ்ஸின் படைக்கலக் குதமும் அழிக்கப்பட்டது. சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள ஐ எஸ்ஸின் படைக்கலக் குதமும் இரசியாவின் Su-24M tactical bombers களால் அழிக்கப்பட்டன. இரசியாவின் KAB-500 missilesகள் பரவலாகப் பாவிக்கப்பட்டன. இரசியப் படைத்தளபதி ஐ எஸ் அமைப்பின் போராளிகள் தமது தாக்குதல்களால் பெரும் கலவரமடைந்துள்ளனர் என்றும் பலர் ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பி ஓடுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

குர்திஷ் மக்களுக்கு இரசியா விடுதலை பெற்றுக் கொடுக்குமா?
சிரியாவில் வாழும் குர்திஷ் மக்களின் Democratic Union Party, (or PYD) இரசியப் படைகளின் தாக்குதல்களுக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளது. துருக்கியப் படைகளின் தாக்குதல்களுக்கு அண்மைக்காலங்களாக உள்ளாகி வரும் குர்திஷ் போராளிகளுக்கு இரசியாவின் சிரிய வருகை ஆறுதலாக அமைந்தது. இதுவரைகாலமும் அமெரிக்கப் படைகளுக்குத் தேவையான ஐ எஸ் தொடர்பான உளவுத் தகவல்களை குர்திஷ் போராளிகளே வழங்கி வந்தனர். ஆனால் துருக்கியப் போர் விமானங்கள் குர்திஷ் போராளிகள் மீது தாக்குதல் நடத்திய போது அமெரிக்கா அதைத் தடுக்கவில்லை. குர்திஷ் போராளிகள் இரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற சிரியப் பிரதேசத்தை தனதாக்க துருக்கி அவர்களின் பிரதேசத்தை விமானப் பறப்பற்ற பிரதேசம் ஆக்க முயன்றது. அதற்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்தது. சிரியாவில் குர்திஷ் மக்கள் இராசியாவின் ஆதரவுடன் தன்னாட்சி பெற்றால் அதை வைத்துக் கொண்டு நோட்டோப் படைக் கூட்டமைப்பில் இரண்டாவது பெரிய படையினரைக் கொண்ட நாடான துருக்கிக்கு இரசியா பெரும் தலையிடியைக் கொடுக்கலாம். துருக்கியில் உள்ள குர்திஷ் மக்கள் தமக்கு என ஒரு தனிநாட்டுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாட்டு அரசுகளும் குர்திஷ் மக்களை அழிக்கத் துடிக்கின்றனர்.

சவுதி அரேபியாவின் ஏதிர் வினை என்ன?
சுனி முஸ்லிம் நாடான சவுதி அரேபியா சியா முஸ்லிம் நாடான ஈரானின் ஆதரவுடன் சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையகக் கொண்ட சிரியாவில் சியா முஸ்லிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனக்குழுமத்தைச் சேர்ந்த பஷார் அல் அசாத் பதவியில் இருப்பதை கடுமையாக எதிர்க்கின்றது. சவுதி, கட்டார், ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளின் அரபுச் செல்வந்தர்கள் அசாத்திற்கு எதிராகப் போராடும் தீவிரவாதிகளுக்குத் தொடர்ந்தும் நிதி உதவி செய்கின்றனர். இரசியப் படைகளின் சிரிய வருகை அசாத்தின் ஆட்சியைத் தக்க வைப்பதை வளைகுடா ஒன்றிய நாடுகளிற் பெரும்பான்மையாவை விரும்பப் போவதில்லை. இதே நிலையில்தான் எகிப்தும் துருக்கியும் இருக்கின்றன. இந்த நாடுகள் இரசியாவின் அசாத்தின் ஆட்சியை தக்கவைக்கும் முயற்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் என்பதை அடித்துச் சொல்லலாம்.

விமானப் பறப்பற்ற பிரதேசம்
சிரியாவில் ஒரு விமானப் பறப்பற்ற பிரதேசத்தை உருவாக்க வேண்டுமென்பது துருக்கியின் நீண்ட நாள் கோரிக்கை. பிரித்தானியாவின் முன்னாள் படைத்தளபதி சேர் கிரஹாம் லாம்ப் சிரியாவில் ஒரு விமானப் பறப்பற்ற பிரதேசம் அமைக்கப் படவேண்டும் எனக் கருத்து வெளியிட்டுள்ளார். மும்மர் கடாஃபிக்கு எதிரான நேட்டோ நாடுகளின் படை நடவடிக்கை ஒரு விமானப் பறப்பாற்ற பிரதேசம் என்னும் போர்வையில்தான் நடந்தது. அதையே சாட்டாக வைத்துக் கொண்டு கடாஃபியின் முழு வான்படையையும் நேட்டோ அழித்து விட்டது. சிரியாவில் இரசியப் படையினர் நிலை கொண்டிருப்பதால் அப்படி ஒரு விமானப் பறப்பற்ற பிரதேசத்தை அங்கு உருவாக்குவது சாத்தியமற்ற ஒன்றாகி விட்டது, சிரிய மருத்துவர்களைக் கொண்ட சிரியாவிர்கான மருத்துவ நிவாரண அமைப்பு  சேர் கிரஹாம் லாம்பினின் விமானப் பறப்பற்ற பிரதேசம் உருவாக்கும் கருத்தை   வரவேற்றுள்ளது. அதன் மூலம் காயப்பட்டவர்களிற்கு மருத்துவ உதவிகள் வழங்கலாம் என அது கருத்து வெளியிட்டுள்ளது.

இன்னும் ஓர் இடைவெளி

மத்திய கிழக்கில் அரபு வசந்தத்தின் பின்னர் நிலை குலைந்து போய் இருக்கும் ஒரு நாடாக லிபியா இருக்கின்றது. மும்மர் கடாஃபியின் ஆட்சியின் கீழ் இரசியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த லிபியாவில் இரசியாவிற்குப் பழக்கப்பட்ட பல நண்பர்கள் இப்போதும் இருக்கின்றார்கள். அங்கும் ஐ எஸ் அமைப்பு தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றது. ஈரானின் ஆதிக்க நிலப்பரப்பு விரிவாக்கத்தில் லிபியாவிற்கு முக்கிய இடமுண்டு. இந்த இடைவெளியைப் பாவித்து லிபியாவின் தனக்கு சாதகமான ஓர் ஆட்சியாளரை பதவியில் அமர்த்தும் முயற்ச்சியில் இரசியா ஈடு படலாம். அது இரசியாவின் நட்பு வட்டத்தை பரந்ததாக்கும்.

விளடிமீர் புட்டீனும் பராக் ஒபாமாவும்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் ஐக்கிய நாடுகள் சபையின் 70வது ஆண்டு நிறைவை ஒட்டிய பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய போது இருவரினதும் உரைகள் ஒன்றிற்கு ஒன்று கடுமையாக முரண்பட்டதாக இருந்தன. தற்போது இருக்கும் முக்கிய முரண்பாடு பஷார் அல் அசாத் பதவியில் தொடருவதா இல்லையா என்பதாகும். அசாத்துடன் தமக்கு எந்தவித தனிப்பட்ட தொடர்பும் இல்லை என்னும் இரசியா அவரைப் பதவியில் இருந்து வெளியார் அகற்றுவதைத் தான் எதிர்ப்பதாகச் சொல்கின்றது. அசாத்தைப் பதவியில் இருந்து விலக்கியே சிரியாவில் ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அமெரிக்கா சற்று விட்டுக் கொடுத்து தீர்வு காணும் வரை அவர் பதவியில் இருக்கலாம் எனச் சொல்கின்றது. தனது மக்கள் மீது வேதியியல் குண்டுகளையும் பீப்பாய் குண்டுகளையும் வீசிய அசாத் தண்டிக்கப் படவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகின்றது. இந்த இழுபறி சிரியாவில் தொடர்ந்து அவல நிலைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் பல இலட்சம் அப்பாவிகளைப் பற்றி எந்தத் தரப்பினரும் கவலை கொள்ளவில்லை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...