Saturday 10 October 2015

Torpedo என்னும் கடலடி ஏவுகணைகளை வீசும் இந்தியாவின் புதிய கப்பல்.

இந்தியா torpedo ஏவுகணை ஏவவும் மீட்கவும் கூடிய ஒரு கடற்படைக் கப்பலை முழுக்க முழுக்க உள்ளூரில் உருவாக்கியுள்ளது. 50 மீட்டர் நீளமான இந்தக் கப்பலுக்கு INS Astradharini எனப் பெயரிடப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் உள்ள விசாகப் பட்டனம் துறைமுகத்தில் இருந்து INS Astradharini வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. இது மணித்தியாலத்திற்கு 15 கடல் மைல்கள் என்னும் வேகத்தில் பயணிக்கக் கூடியது.

மேலும் இந்தக் கப்பலில் உள்ள முக்கிய அம்சங்கள்
1. நவீன வலுப்பிறப்பாக்கலும் விநியோகமும் அதாவது power generation and distribution)
2. சிறந்த கடற்பயணம் (improved navigation)
3. நவீன தொடர்பாடல் முறைமையை(modern communication systems.)

தனது படைக்கல உற்பத்தியை உள்நாட்டிலேயே செய்வதை அதிகரிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கும் இந்தியாவிற்கு INS Astradharini கப்பலின் உருவாக்கம் ஒரு மைல்கல்லாகும்

சீனா அண்மைக்காலங்களாக தனது கடல் வலிமையைப் பெருக்கி வருகின்றது. அதைச் சமாளிக்கும் வகையில் இந்தியாவும் தனது கடற்படையை மேம்படுத்தி வருகின்றது.

செப்டம்பர் 27-ம் திகதியில் இருந்து ஒக்டோபர் முதலாம் திகதி வரை இந்தியக் கடற்படையும் பிரித்தானியக் கடற்படையும் இணைந்து இந்து மாக்கடலில் பயிற்ச்சிகளில் ஈடுபட்டன. Royal Navyயில் frigate வகைக் கப்பலான HMS Richmond உடன் இந்தியாவின் (INS) Betwa பயிற்ச்சியில் ஈடுபட்டது.

பொதுவாக மத்திய கிழக்கில் நிலை கொண்டிருக்கும் HMS Richmond இந்தியாவின் கோவாவில் உள்ள துறை முகத்திற்குச் சென்று பயிற்ச்சியில் ஈடுபட்டது. இரு கப்பல்களும் ஒரு போர் சூழலில் சிறந்த தொடர்பாடலையும் ஒருங்கிணைப்பையும் செய்யக் கூடிய வகையில் பயிற்ச்சி அமைந்திருந்தது. இக்கப்பலுடன் பிரித்தானியாவுன் 820 Naval Air Squadron Merlin Mk 2 உழங்கு வானூர்திகளும் பயிற்ச்சியில் இணைந்திருந்தன.

பிரித்தானியாவின் 133நீள  Duke-வகுப்பைச் சேர்ந்த  frigate கப்பலான  HMS Richmond  நீர் மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான போருக்கு என உருவாக்கப்பட்டதாகும். அத்துடன் அது கடல் மேற்பரப்பில் உள்ள கப்பல்களுக்கும் எதிராகவும் போர் செய்யக் கூடியது. சீனா தனது நீர் மூழ்கிக் கப்பல்களைப் பெருமளவில் அதிகரித்து வருகின்றது. அதைச் சமாளிக்க இந்தியாவிற்கு இந்தப் பயிற்ச்சி அவசியமான ஒன்றாகும்.

இந்தியத் தரப்பில் பயிற்ச்சியில் ஈடுபட்ட கப்பலான INS Betwa 2004-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது மத்திய தரைக்கடலிலும் இந்து மாக்கடலிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பல தரப்பட்ட படைக்கலன்களைக் கொண்ட இக்கப்பலில் இரண்டு உழங்கு வானூர்திகளும் உண்டு.

பிரித்தானியா அண்மைக்காலங்களாக இந்தியாவுடன் தனது படைத்துறை ஒத்துழைப்பை அதிகரித்து வருகின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...