Tuesday 2 June 2015

இஸ்ரேலின் புதிய சூப்பர் டோராப் படகுகள்

இலங்கையைச் சூழவுள்ள கடலில் பெரிதும் பாவிக்கப்பட்ட இஸ்ரேலின் டோராப் படகுகள் மேம்படுத்தப் பட்டு இப்போது Super Dvora MKIII என்னும் பெயரில் புதிதாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இஸ்ரேலின் டோராப் படகுகளுக்குக் கிடைத்த கசப்பான அனுபவமும் கருத்திக் கொண்டு புதிய டோராப் படகுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பிரதானமாக ரோந்து நடவடிக்கைக்கு உருவாக்கப் பட்ட டோராப் படகுகள் தாக்குதல்களையும் செய்யக் கூடியவை.

 Super Dvora MKIII படகுகள் கடற்தாக்குதல், கடல் கடந்த ரோந்து நடவடிக்கை, கடற்சட்ட அமூலாக்கம், கடற்கண்காணிப்பு, கடல் வேவு, கட்டளையும் கட்டுப்பாடும் ஆகிய படைத்துறை நடவடிக்கைகளுக்கும் தேடலும் விடுவித்தலும் மனிதாபிமான உதவி புரிதல் போன்ற குடிசார் நடவடிக்கைகளுக்கும் பயன்படக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இரண்டு டீசல் இயந்திரங்களால் Water jet எனப்படும் நீர்த்தாரை மூல இயங்கும்  Super Dvora MKIII படகுகள் ஐம்பது கடல்மைல்கள் வேகத்தில் பயணிக்கக் கூடியவை. அத்துடன் 1250 கடல் மைல்கள் தொடர்ந்து பயணிக்கக் கூடியவை.

27.4 மீட்டர் நீளமும் 5.7 மீட்டர் அகலமும் கொண்ட Super Dvora MKIII படகுகள் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. பலவிதமான படைக்கலன்களைப் பொருத்தக் கூடியவகையிலும் வருங்காலத்தில்  கண்டு பிடித்து  உற்பத்தி செய்யப்படும் படைக்கலன்களைப் பொருத்தக் கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 12 பேர் தங்கக் கூடிய இருப்பிடம் குளிரூட்டப்பட்ட பணிமனை, மற்றும் பொழுது போக்குக் கூடங்கள், வசதியான நடைபாதை ஆகியவற்றையும் கொண்டுள்ளன.

இரவிலும் பகலிலும் சுடக்கூடிய a Rafael Typhoon stabilised 25mm cannon  என்னும் துப்பாக்கி Super Dvora MKIII படகுகளில் பொருத்தப் பட்டுள்ளன. அத்துடன் தேவை ஏற்படில் தொலைதூர மற்றும் குறுந்தூர ஏவுகணைச் செலுத்திகளும் தரையில் இருந்து தரைக்கு ஏவும் Hellfire surface-to-surface missilesகளும் இதில் பொருத்தப்படலாம்.

வேவுபார்க்கும் நவீன இலத்திரனியல் கருவிகளும்  anti-missile early warning radarஉம் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...