Friday 10 April 2015

நகைச்சுவைக் கதை: பாக்கிஸ்த்தானியுடன் படுக்க முடியாது.

மத்திய கிழக்கில் ஒரு யூதன் ஒரு இந்தியன் ஒரு பாக்கிஸ்த்தானி ஆகிய மூவரும் ஒரு வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது இடையில் ஒரு இடத்தில் வண்டி பழுதடைந்து விட்டது. நேரமோ இரவு. அவர்கள் மூவரும் அண்மையில் இருந்த ஒரு வீட்டுக் கதைவைத் தட்டினார்கள்.

அது ஒரு விவசாயின் வீடு அவனும் அவர்களை அன்புடன் உள்ளே அழைத்து உபசரித்து சுவையான உணவுகள் பரிமாறினான். மூவரும் அவன் வீட்டிலேயே இரவு தங்க முடியுமா என அந்த விவசாயியைப் பணிவன்புடன் கேட்டனர். அதற்கு விவசாயி தனது சிறு வீட்டில் இருவர் மட்டும் தங்க முடியும் என்றான். அதற்கு யூதன் எனது இனம் உலகமெல்லா அலைந்து துன்பப்பட்ட இனம் என்னால் எந்த மோசமான இடத்திலும் தங்க முடியும் என்றான். விவசாயி யூதனை தொழுவத்திலும் இந்தியனையும் பாக்கிஸ்த்தானியையும் வீட்டுக்குள் படுக்க ஏற்பாடு செய்தான்.

சில நேரம் கழித்து கதவு தட்டப்பட்டது. வெளியில் நின்ற யூதன் தொழுவத்தில் பன்றி இருக்கிறது எனது மத தத்துவப்படி என்னால் அங்கு நித்திரை கொள்ள முடியாது என்றான். அதற்கு இந்தியன் எமது நாட்டில் மக்கள் தெருவோரத்திலேயே படுத்து உறங்குவார்கள். சிவபெருமானும் திருமாலும் பன்றியாக அவதாரம் எடுத்தவர்கள். அவை கடவுளின் வடிவங்கள். என்னால் அங்கு தங்க முடியும் என்று போய் தான் தொழுவத்தில் தங்கினான்.


சில நேரம் கழித்து கதவு தட்டப்பட்டது. வெளியில் நின்ற இந்தியன் தொழுவத்தில் பசு இருக்கிறது. நான் இன்று குளிக்கவே இல்லை. எனது மத தத்துவப்படி பசு இருக்கும் இடம் புனிதமானது. அங்கு நான் குளிக்காமல் தங்க முடியாது என்றான். அப்போது பாக்கிஸ்த்தானி சரி இப்போது எனது முறை எப்படியும் நான் தொழுவத்தில் சமாளிக்கிறேன் என்று சொல்லி தான் போய்த் தொழுவத்தில் தங்கினான்.

சில நேரம் கழித்து கதவு தட்டப்பட்டது. வெளியில் பசுவும் பன்றியும் மிகவும் பரிதாபகரமான முகத்துடன் நின்றன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...