Saturday 18 October 2014

இந்தியாவின் வழிகாட்டல் ஏவுகணைகள் (Cruise Missiles)

இந்தியா அச்சமில்லை என்று பொருள்படும் நிர்பய் என்னும் வழிகாட்டல் (Cruise Missiles) ஏவுகணைகளை 2014-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17-ம் திகதி வெற்றீகரமாக ஏவிப் பரிசோதித்துள்ளது. எதிரியின் கதுவிகளுக்கு அதாவது ரடார்களுக்குப் புலப்படாமல் மிகவும் தாழ்வான உயரத்தில் பறக்க்கக் கூடிய நிர்பய் ஏவுகணைகள் ஆயிரம் கிலோ எடையுடையவை. அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லவல்லவை. இந்தியாவின் முப்படைகளும் இவற்றைப் பாவிக்கப் போகின்றன.

2013-ம் ஆண்டு  இந்த ஏவுகணையைப் பரீட்சித்தது தோல்வியில் முடிவடைந்தது. இப்போது நிர்பய் வெற்றிகரமாகப் பரீட்சிக்கப்பட்டதால் இந்தியாவும் வழிகாட்டல் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் ஒரு நாடாக மாறிவிட்டது. மற்ற நாடுகளிலும் பார்க்க இந்தியா மிகவும் சிக்கனமாக வழிகாட்டல் ஏவுகணைகளை உற்பத்தி செய்கின்றது. முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு நிர்பய் உருவாக்கப் பட்டுள்ளது.

ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டருக்குச் சற்று அதிகமான குறுக்களவும் கொண்ட நிர்பய் ஏவுகணைகள் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு கிலோ மீட்டர்கள் தொலைவிற்குப் பாயக் கூடியவை. இவை ஒலியிலும் வேகம் குறைவாகவே பயணிக்கும். இவற்றில் இறக்கைகளும் வாற்புறம் செதில்களும் இருக்கும். நிர்பய் ஏவுகணைகள் சூட்டிகை  ஏவுகணைகள் எனப்படுகின்றது அதாவது smart ஏவுகணைகள். இவை Fire and forget என்னும் முறைமைப் படி செயற்படக்கூடியன. அதாவது இதை ஏவிவிட்டால் தானாகவே இலக்கை நோக்கிப் பயணிப்பதுடன் தேவை ஏற்படும் போது இலைக்கை நோக்கி திசையை நிலைமைக்கு ஏற்ப மாற்றுக் கொண்டு பறக்கும். ஒரு விமானத்தைப் போல் இலக்கைச் சுற்றிப் பறந்து சரியான இடத்தைத் தெரிவு செய்து அதில் விழுந்து வெடிக்கும். அத்துடன் எல்லாவிதக் கால நிலைகளிலும் செயற்படக்கூடியவை.

நிர்பய் ஏவுகணைகள் அமெரிக்காவின் Tomahawk  ஏவுகணைகளுக்கும் பாக்கிஸ்த்தானின் பாபர் ஏவுகணைகளுக்கும் இந்தியாவின் பதிலடியாகும்.

Monday 13 October 2014

செல்வி ஜெயலலிதா வெளியில் வருவதற்குச் செய்ய வேன்டியவை என்ன?

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு முதலமைச்சர் பதவில் இருக்கும் போது நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டு, பதவியும் பறிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவராக செல்வி ஜெயலலிதா இருக்கிறார். அவர் இதில் இருந்து வெளியில் வர முடியுமா என்ற கேள்விக்கு விடை தேடும் போது  சாதியவாதத்தைக் கருத்தில் கொள்ளாமல் ஆய்வு செய்ய முடியாது. தமிழ்நாட்டு அரசியலில் சாதியவாதம் அப்படிப்பின்னிப் பிணைந்துள்ளது. மூதறிஞர் என திராவிட முன்னேற்றக் கழகத்தினரே போற்றிய ராஜகோபாலாச்சாரியாருக்குப் பின்னர் பார்ப்பனர்களின் அரசியலை முன்னெடுத்துச் செல்ல பார்ப்பனர்களால் அரசியலுக்குக் கொன்டுவரப்பட்டவர் செல்வி ஜெயலலிதா. துக்ளக் பத்திரிகையில் செல்வி ஜெயலலைதாவை ஓர் அரசியல் தொடர்கட்டுரை எழுதவைத்து அவரது அரசியல் நுழைவை ஆரம்பித்து வைத்தவர் சோ ராமசாமியாகும். முதலில் இந்திரா காங்கிரசிலும் பின்னர் எம் ஜீ இராமச்சந்திரனின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இணைந்து கொனடவர் செல்வி ஜெயலலிதா.

தோழியர் பிரிய வேண்டும்
அவர் தற்போது மாட்டியுள்ள சிக்கல்களில் இருந்து வெளியில் வருவதற்கு செய்ய வேன்டியவற்றில் முதலாவது சசிகலா குடும்பத்தினருடன் தனது தொடர்பைப் துண்டித்தல். செல்வி ஜெயலலிதாவிற்கும் பார்ப்பனர்களுக்கும் இடையில் உள்ள உறவிற்குத் தடையாக இருப்பவர்கள் சசிகலாவும் அவரது குடும்பத்தினருமே. இவர்களை பார்ப்பனர்கள் மன்னார்குடி மாஃபியா என அழைப்பர்.

பழி எங்கோ பவம் எங்கோ
சசிகலா குடும்பத்தினர் உடனான தொடர்புகளைத் துண்டிப்பது செல்வி ஜெயலலிதாவிற்கும் பார்ப்பனர்களுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைக்கான தடையை தவிர்ப்பதுடன் செல்வி ஜெயலலிதாமீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை சசிகலா குடும்பத்தினர் தலைகள் மீது சுமத்தவும் வழி வகுக்கும். 1991ம் ஆண்டில் இருந்து 96ம் ஆண்டு வரை போயஸ் தோட்டத்தில் பணிபுரிந்த ஒருவரின் சாட்சியே செல்வி ஜெயலலிதாவிற்கு எதிரான வலுவான சாட்சியாக அமைந்தது. இவரிடம் சசிகலா அடிக்கடி பல ரூபா நோட்டுக்களைக் கொண்டு போய் பல்வேறு வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடும் படி கொடுப்பாராம். சரியான அரசியல் சூழ்நிலையில் இந்தச் சாட்சியை சசிகலா குடும்பத்தினருக்கு எதிராகத் திருப்ப முடியும். 

அக்ரஹாரத்தில் மீண்டும் கள்ளப் பூனை
இரண்டாவதாக செல்வி ஜெயல்லைதா செய்ய வேண்டியது பார்ப்பனர்களுடன் தனது உறவை புதுப்பித்துக் கொள்ள வேன்டும். அதற்கு செல்வி ஜெயலலிதா காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும். செல்வி ஜெயலலிதாவிற்கு பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது அவர் ஜெயேந்திரரை ஒரு தீபாவளி தினத்தன்று கைது செய்து சிறையிலடைத்தமையே. செல்வி ஜெயலலிதாவிற்கு எதிராக கர்நாடக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் வழங்கிய செவ்வியில் சுப்பிரமணியன் சுவாமி செல்வி ஜெயலலிதா ஜெயேந்திரருக்குச் செய்த பாவமே அவரைத் தண்டித்தது எனக் கூறியதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

வழக்கிற்கு வழக்கு
சின்னக் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோவிலின் மேலாளராகப் பணியாற்றி வந்த சங்கரராமன், ஒரு பார்ப்பனர். 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி கோவிலின் வசந்த மண்டபத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் கொலை செய்யப்பட்டார். செல்வி ஜெயலலிதாவிற்கும் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராற்றுக்கு பழிவாங்க செல்வி ஜெயலலிதா இக் கொலையைச் செய்தவர் சங்கராச்சாரி ஜெயேந்திரர் என்று அவரைக் கைது செய்தார் எனக் கருதப்படுகின்றது. செல்வி ஜெயலலிதாவின் மீது விஸ்வ ஹிந்து பரிஸத், சிவசேனா போன்ற பல இந்து அமைப்புக்கல் ஆத்திரம் அடைந்தி

 ஆட்சி மாறினால் சாட்சி மாறும்
ஜெயேந்திரருக்கு எதிரான வழக்கின்போது ஆட்சிகள் மாறும் போது சாட்சிகளும் மாறிக் கொண்டனர். முன்பு கூறிய சாட்சிகள் தவறானவை எனக் கூறி மீள் சாட்சியங்கள் வழங்கினர். இப்படித்தான் ஜெயேந்திரர் தனக்கு எதிரான சங்கர் மடம் கொலை வழக்கில் இருந்து தப்பித்துக் கொண்டார். சங்கர் மடத்தில் கொலை செய்யப்பட்டவரின் மகனே தனது சாட்சியை மாற்றிக் கொண்டனர். இன்றும் சோ ராமசாமி ஜெயலலிதாவின் மேல் மிகுந்த கரிசனையுடன் இருக்கின்றார் என்பது செல்வி ஜெயலலிதாவிற்கு ஒரு வாய்ப்பான நிலையாகும்

அடங்கு மச்சி
மூன்றாவதாக ஜெயலலிதா செய்ய வேண்டியது பாரதிய ஜனதாக் கட்சிக்கு அடங்கிப் போவது. 2014-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத்திற்கான தேர்தலில் செல்வி ஜெயலலிவின் அண்ணா திமுகாவுடன் ஒரு கூட்டணி அமைக்க பாரதிய ஜனதாக் கட்சி பெரிதும் விரும்பியிருந்தது. ஆனால் தமிழ்நாட்டுக்கு நரேந்திர மோடி பயணம் செய்த போது அவரைச் சந்திக்கவே ஜெயலலிதா மறுத்து விட்டார். அவரது சோதிடர்கள் அவர் இந்தியாவின் தலைமை அமைச்சராகுவார் எனச் சொல்லியதை நம்பி செல்வி ஜெயலலிதா அதிக தன்னம்பிக்கையுடன் நடந்து கொண்டார். இந்த தலைமை அமைச்சர் கனவைப் புறந்தள்ளிவிட்டு அவர் பாரதிய ஜனதாக் கட்சியுடன் இணங்கிச் செயற்பட வேண்டும். மாநிலங்களவையில் அவர் இந்த இணக்கப்பாட்டை வெளிப்படுத்தலாம.


மீண்டும் காலை வாரவும்
நான்காவதாக செல்வி ஜெயலலிதா செய்ய வேண்டியது தமிழ்த் தேசியவாதத்தின் விரோதியாக மாற வேண்டும். அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட வேண்டும். இது சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்களைத் திருப்திப்படுத்தும்.

இந்த நான்கையும் செய்தால் செல்வி ஜெயலலிதா தனது தற்போதைய சிக்கலில் இருந்து விடுபடலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...