Wednesday 4 June 2014

இரசியாவையும் சீனாவையும் பற்றிய விநோதமான தகவல்கள்

சீனாவில் தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலைச் செய்பவர்களைப் பாதுகாக்க என ஒரு தீயணைக்கும் படை உண்டு.  சீனாவின் தற்கொலை விகிதாசாரம் அமெரிக்காவிலும் பார்க்க இரு மடங்கானது.  இரசியாவில் நடக்கும் கொலைகளின் விகிதாசாரம் அமெரிக்காவில் நடக்கும் கொலைகளின் விகிதாசாரத்திலும் பார்க்க இருமடங்கானது. அமெரிக்கர்களிலும் பார்க்க இரசியர்கள் இருமடங்கு மது அருந்துகிறார்கள்.  உலகின் மிக மோசமான அணுக்கதிர் வீச்சு இரசியாவின் கரச்சே ஏரியில் இருக்கின்றது. இரசியர்கள் அமெரிக்கர்களுடன் ஒப்பிடுகையில் ஆறு மடங்கு அதிக தேநீர் அருந்துகிறார்கள்.

உலகின் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொன்ட இரசியாவின் மேற்பரப்பு புளூட்டோ கிரகத்தின் நிலப்பரப்பை ஒத்தது.

சீனர்கள் உணவருந்தும் சுள்ளிகள் (chopsticks) எட்டுக் கோடி சோடிகள் ஆண்டு தோறும் செய்யப்படுகின்றன. உலக நன்னீர் வளத்தின் ஐந்தில் ஒரு பங்கு இரசியாவின் பாய்க்கால் ஏரியில் இருக்கின்றது.

இரசியா அலெஸ்கா பிராந்தியத்தை 1867-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு 7.2 மில்லியன் டொலர்களுக்கு விற்றது. சீனா ஹொங்ஹொங்கை பிரித்தானியாவிற்கு குத்தகைக்குக் கொடுத்து பின்னர் மீளப்பெற்றது.

இரசியாவின் எரிவாயு, நீர் போன்றவை விநியோகிக்கும் குழாய்களின் நீளம் (260,000 கிமீ) பூமியின் சுற்றளவிலும் பார்க்க ஆறு மடங்கு நீளமானது.  பூமியின் சுற்றளவிலும் பார்க்க சீனாவின் தொடரூந்துப் பாதைகள் இருமடங்கிலும் மேலானது. பூமியின் சுற்றளவு 40,075கிமீ, சீனத் தொடரூந்துப் பாதை 93,000கிமீ.

உலகின் அதிகமாகப் பதப்படுத்தப் பட்ட யூரேனிய இருப்பில் அரைவாசி இரசியாவினுடையது. இரசியாவின் இருக்கு 694 தொன்கள். அமெரிக்காவின் இருப்பு 604 தொன்கள்.

சீன மக்கள் தொகை 133 கோடிக்கு மேல். இரசியாவின் மக்கள் தொகை குறைந்து கொண்டே போகின்றது. 2010- ஆண்டு 14.2கோடியாக இருந்த இரசிய மக்கள் தொகை 2050இல் 12.6 ஆக வீழ்ச்சியடையும் என எதிர்பாக்கப்படுகின்றது.

உலக நிலக்கரி உற்பத்தியில் 46 விழுக்காடு சீனாவினுடையது. உலக நிலக்கரிக் கொள்வனவில் சீனாவின் பங்கு 49 விழுக்காடு.

இருபதாம் நூற்றான்டு முழுக்க அமெரிக்கா உற்பத்தி செய்த சீமெந்திலும் பார்க்க அதிக அளவு சீமேந்தை சீனா இரண்டு ஆண்டுகளில் உற்பத்தி செய்கின்றது.

சீனாவின் ஆண்டு ஒற்றிற்கு பத்து இலட்சம் பேர் புகைப்பிடித்தலால் இறக்கின்றனர்.

சீனாவின் இயற்கை எரிவாயு இருப்பு 109.3 ட்ரில்லியன் சதுர அடிகள். இரசியாவின் இயற்கை எரிவாயு இருப்பு 1,163ட்ரில்லியன்கள். இரசியாவிடம் 87 பில்லியன் பீப்பாய் எண்ணெய் வளம் உண்டு. இரசியாவின் 75 ஆண்டுகள் கொள்வனவை அது நிறைவேற்றக் கூடியது.

மொஸ்கோ நகரத் தொடரூந்தில்  நாளொன்றிற்குப் பயணிக்கும் மக்கள் தொகை இலண்டனினதும் நியூயோர்க்கினதும் இணைந்த மொத்தத் தொகையிலும் பார்க்க அதிகமானதாகும்.

சீனர்கள் ஆண்டுக்கு 42.5 பில்லியன் பைகள் திடீர் நூடில்ஸ் உண்கிறார்கள்.

சீனர்கள் ஆண்டு ஒன்றிற்கு உண்ணும் பன்றி இறைச்சியை அடுக்கினால் அது 5,200 ஈஃபில் கோபுரம் அளவு உயரத்திற்குப் போகும். உலகப் பன்றிகளில் அரைப்பங்கு சீனாவில் இருக்கின்றன. சீனாவில் பன்றி இறைச்சி விலை அதிகரிக்காமல் பாதுகாக்க அரசு பன்றி இறைச்சிக் கையிருப்பை வைத்துள்ளது.

திருமணமாகாமல் இறக்கும் ஆண்களின் உடலத்திற்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கு சீனாவில் உண்டு.  இறந்து போன பெண்களின் உடலிற்கும் ஆணின் உடலிற்கும் திருமணம் செய்யப்படும். இதற்காக பெண்களின் இறந்த உடலைத் திருடி விற்பனை செய்வதும் உண்டு.

அப்பிள் நிறுவனத்தின் விற்பனை நிலையங்களை முழுக்க முழுக்கப் போலியாக உருவாக்கி முழுக்க்க முழுக்கப் போலியான அப்பிள் உற்பத்திப் பொருட்களை சீனாவில் விற்பார்கள்.

சீனாவில் உல்லாச பயணிகளுக்கு என ஒரு சட்டம் உண்டு.

சீனாவின் இருபது முன்னணிச் செல்வந்தர்களின் சொத்து ஹங்கேரி நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்திக்கு இணையானது.   இரசியர்களின் முன்னணி செல்வந்தர்களின் மொத்தச் சொத்து பாக்கிஸ்த்தானின் மொத்தத் தேசிய உற்பத்தியிலும் அதிகமானதாகும்.

சவுதி அரேபியாவின் மக்கள் தொகையிலும் பார்க்க அதிக அளவு அதாவது மூன்று கோடி மக்கள் சீனாவில் குகைகளில் வாழ்கின்றார்கள்.

சீனாவின் டரங் மாவாட்டத்தில் ஆண்டு ஒன்றிற்கு எட்டு பில்லியன் சோடி காலுறைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.  
சீனச் செல்வந்தர்கள் தம்மைப் போல் உருவம் கொண்டவர்களை தமக்காக சிறைத் தண்டனை அனுபவிக்கச் செய்வார்கள்.

சீன உலக மக்கள் தொகையின் காற்பங்கினருக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்கின்றது.

சீன மக்களின் மொத்தக் கொள்வனவு 2010‍ம் ஆன்டு 2.03 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது இது 2010இல் மூன்று மடங்காக அதிகரித்து 6.18 ட்ரில்லியன்க்களாகும்.

சீனா முழுவதும் ஒரே நேரப் பிராந்தியமாகும். இரசியாவில் ஒன்பது நேரப்பிராந்தியங்கள் இருக்கின்றன.

Tuesday 3 June 2014

உலகெங்கும் உள்ள மக்களின் படங்களைத் திருடும் அமெரிக்க உளவுத் துறை

ஐக்கிய அமெரிக்காவின் NSA எனப்படும் தேசிய பாதுகாப்பு முகவரகம் உலகெங்கும் உள்ள மக்களின் கோடானு கோடிக்கணக்கான படங்களைத் திருடுவதாக அமெரிக்க ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள் ஆகியவற்றால் அனுப்பப்படும் படங்களையும் சமூகவலயத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் படங்களையும், காணொளி கூட்டங்கள், காணொளி மாநாடுகள் ஆகியவற்றில் பரிமாறப்படும் படங்களையும் உலகெங்கும் உள்ள அமெரிக்க உளவாளிகள் திருடுவதாக நியூயோர்க் ரைம்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது..

உருவப் படங்களை வைத்து ஆட்களை கணனி மூலம் இனம் காணும் தொழில் நுட்பம் (facial recognition technology) கடந்த சில ஆண்டுகளாக பெரு வளர்ச்சியடைந்து வருகின்றது. இதைப் பயன் படுத்தி அமெரிக்காவின் NSA எனப்படும் தேசிய பாதுகாப்பு முகவரகம் தனக்குத் தேவையானவர்களின் தகவல்களைச் சேகரிக்கின்றது. இதற்காகக நாளொன்றிற்கு பல இலட்சக் கணக்கான படங்கள் திருடப்படுகின்றன.படங்களை வைத்து ஆட்களை இனம் காணும் தொழில்நுட்பத்தை மேலும் விருத்தி செய்ய அமெரிக்க அரசும் தனியார் நிறுவனங்களும் பெரும் செலவு செய்து வருகின்றன. தற்போது உள்ள தொழில்நுட்பம் low-resolution images எனப்படும் குறைந்த தரப் படங்களை இனம் காண்பதில் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றது. அத்துடன் வேறு பட்ட கோணங்களில் இருந்து எடுக்கப்படும் படங்களிலும் தற்போது இனம் காணுதலில் சிரமம் உள்ளது. 2011-ம் ஆண்டு ஒசாமா பின் லாடனின் படத்தை வைத்து ஆட்களை கணனி மூலம் இனம் காணும் தொழில் நுட்பம் (facial recognition technology) இல் பரீட்சித்த போது அது தாடிவைத்த பில் லாடன் போல் தோற்ற முள்ளவர்களைக் காட்டியதாம். இதன் பின்னர் இந்தத் தொழில்நுட்பம் பெரு வளார்ச்சி கண்டுள்ளது

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவரகம் கூகிள், மைக்குறோஸோப்ற், அப்பிள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பல இணையவெளித் திருட்டுக்களையும் ஊடுருவல்களையும் மேற்கொள்வதாக அதன் முகவராகப் பணியாற்றிய எட்வேர்ட் J ஸ்நோடன் 2011-ம் ஆண்டு அம்பலப்படுத்தி இருந்தார்.

அமெரிக்காவின் சட்டப்படி அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவரகம் அமெரிக்க அரசின் வண்டிச் செலுத்துனர் அனுமதிப் பத்திரம், கடவுட்சீட்டு போன்றவற்றிற்காக மற்ற அமெரிக்க அரச நிறுவனங்கள் வைத்திருக்கும் ஒளிப்படங்களை தனது தேவைக்காகப் பெறமுடியாது

அமெரிக்க உள்துறை பெரிய கூட்டங்களில் எடுக்கப்பட்ட படங்களில் உள்ளவர்களை இனம் காணும் தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.  இந்தத் தொழில்நுட்பம் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் செய்மதிகளூடாக எடுக்கப்படும் படங்களை வைத்து அமெரிக்கா தனக்கு வேண்டியவர்களை பிடிக்கலாம். இலங்கையின் இறுதிப் போரின் போது இழைக்கப் பட்ட போர்க்குற்றங்களின் ஆதாரங்கள் போர் முனையில் இருந்து படப்பதிவுகளாகவும் காணொளிப்பதிவுகளாகவும் கொழும்பிற்கு அனுப்பட்டபோது அதை அமெரிக்க உளவுத்துறையும் பெற்றிருக்க வாய்ப்புண்டு.    சரணடையவந்தவர்களைச் சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்ட தொலைபேசி உத்தரவுகள் கூட அமெரிக்காவிடம் இருக்கிறது.   நியூ யோர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர்  ரயன் குட்மன் அமெரிக்க உளவுத் துறை இவற்றைப் பகிரங்கப்படுத்தி போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Monday 2 June 2014

புதுத் தேர்தல், புது அதிபர் கலங்குது உக்ரேன்

1991-ம் ஆண்டு    சோவியத் ஒன்றியம்   வீழ்ச்சி அடைந்த பின்னர்   அதில் ஓர் உறுப்பு நாடாக இருந்த உக்ரேன்   தனி நாடாகியது.   அப்போது  சோவியத் ஒன்றியத்தின் மூன்றில் ஒரு பங்கு அணுக் குண்டுகள் உக்ரேன் நாட்டின் வசமாகியது.   இதானால் உக்ரேன் உலகிலேயே ஐக்கிய அமெரிக்காவிற்கும்   இரசியாவிற்கும் அடுத்த படியாக மூன்றாவது பெரிய   அணுக்குண்டு  நாடாக உருவெடுத்தது.    தன் வசமான அணுக்குண்டுகளை உக்ரேன் வைத்திருக்க விரும்பியது.   ஆனால் ஐக்கிய அமெரிக்காவும் இரசியாவும் அதை விரும்பவில்லை.   அரசியல் உறுதிப்பாடு உத்தரவாதமில்லாத ஒரு புதிய நாட்டிடம்   அதிக அளவிலான அணுக்குண்டுகள் இருப்பது   எங்கு போய் முடியும் என்ற அச்சம் பல நாடுகளிடம்  அப்போது இருந்தது. உக்ரேனின் முதல் அதிபர் லியோனிட் கிரவ்சக் (Leonid Kravchuk)  தமது நாட்டில் உள்ள அணுக்குண்டுகளை இரசியாவிடம் ஒப்படைத்து அவற்றை அழிப்பதற்கு  நிபந்தனை அடிப்படையில் ஒப்புக்கொண்டார்.    அவர் கேட்ட நிபந்தனை  பியூடப்பெஸ்ற் குறிப்பாணை அதாவது The Budapest Memorandum என்னும் பெயரில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.   அதன்படி உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டை  இரசியா, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள்  உறுதி செய்வதாக ஒத்துக் கொண்டன. 

உக்ரேன்  தன்னிடம்  இருந்த விமானங்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் உட்படப் பல படைக்கலன்களை "விற்றுத் தின்ன" வேண்டிய நிலையும் அப்போது இருந்தது.  உக்ரேன் நாடு உருவான நாளில் இருந்து கிட்டத்தட்ட வக்குரோத்து நிலையில்தான அதன் பொருளாதாரம் ஓடிக்கொண்டிருக்கின்றது.

சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம்
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர்    தனது ஆதிக்க நிலப்பரப்பை    இரசியா விரிவாக்கவே விரும்பியது.   அதன் முதல் முயற்ச்சியாக     இரசியாவும், உக்ரேனும், பெலரசும் இணைந்து     சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பை 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கின.    பின்னர் இதில் ஆர்மினியா, அஜர்பைஜான், கஜகஸ்த்தான், கிர்க்கிஸ்த்தான், மோல்டோவா,   தேர்க்மெனிஸ்த்தான்,   தஜிகிஸ்த்தான்,   உஸ்பெக்கிஸ்த்தான்    ஆகிய நாடுகள் இணைந்தன.   1993-ம் ஆண்டு ஜோர்ஜியாவும் இணைந்து கொண்டது.     பின்னர் உக்ரேன், ஜோர்ஜியா, தேர்க்மெனிஸ்த்தான் ஆகிய நாடுகளில்   நடந்த ஆட்சி மாற்றத்தால்   அவை இந்த இரசியா தலைமையிலான சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறின.    சுதந்திர நாடுகளின் பொதுநலவாய நாடுகளிடையே   ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட    இரசியா முயற்ச்சித்த போதும் அதற்கு சில நாடுகள் ஒத்துக் கொள்ள மறுத்தன.    2013-ம் ஆண்டு  உக்ரேன், இரசியா, மோல்டோவா, ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஒரு பொது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டன.

ஜேர்மனியும் இரசியாவும்
மேற்கு ஐரோப்பிய நாடுகள்  ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பெயரில்    தமது நிலப்பரப்பையும்  பொருளாதார வலயத்தையும்   விரிவாக்கிக் கொண்டு    முன்னாள் சோவியத் நாடுகளையும்    இரசிய ஆதிக்க வலய நாடுகளையும் தம்முடன் இணைக்க      இரசியாவிற்கு    தான் ஓரம் கட்டப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் பற்றிக்கொண்டது.     அத்துடன் முன்பு இரசியாவுடன் வார்சோ ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பில்    இணைந்திருந்த நாடுகளான     போலாந்து, ஹங்கேரி, ருமேனியா, செக் குடியரசு, குரேசியா ஆகிய நாடுகளும்    முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான எஸ்தோனிய, லத்வியா, லித்துவேனியா ஆகியவையும் ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைந்ததும்    இரசியாவைச் சிந்திக்க வைத்தது. பதிலடியாக தானும் யூரோ ஏசிய பொருளாதார சமூகத்தை உருவாக்கியது.   ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கத்தை    இரசியா ஒரு ஜேர்மனிய ஆக்கிரமிப்பாகவே கருதியது.   ஐரோப்பாவில் ஒரு முக்கிய நாடாகிய உக்ரேனை யார் பக்கம் இழுப்பது என்ற போட்டி   இதை ஒட்டி ஆரம்பமானது.    உக்ரேன் தனது யூரோ ஆசிய பொருளாதர சமூகத்தில் இணைய வேண்டும்  என இரசியா  உக்ரேனை நிர்ப்பந்தித்தது.

தோடம்¬பழப் புரட்சி -  Orange Revolution   
 
இரசியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்   இடையிலான இழுபறியில் உக்ரேன் அகப்பட்டுக் கொண்டதன் விளைவாக   உக்ரேனில் ஒரு உள்நாட்டு மோதல் உருவானது.    இரசியா ஆதரவு அரசியல்வாதிகளும் ஐரோப்பிய ஒன்றியவாதிகளும் போட்டி போட்டனர்.     அங்கு ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கு வெளியில் இருந்து தூபமிடப்பட்டது.     2004ஆம் ஆண்டு உக்¬ரேனில் தொடர்ச்¬சி¬யாக நடந்த மக்கள் எழுச்சி    தோடம்¬பழப் புரட்சி என அழைக்¬கப்¬பட்¬டது.     2004ஆம் ஆண்டு உக்¬ரேனில்     மக்¬க¬ளாட்சி முறைப்¬படி தேர்தல் நடந்¬தது.    அதில் விக்டர்   யுவோ¬னோவிச் வென்¬ற¬தாக அறி¬விக்¬கப்¬பட்¬டது.   தேர்¬தலில் முறைகேடு நடந்¬த¬தாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்¬டின. எதிர்க் கட்சிகள் மக்¬களைத் திரட்டிப் பெரும் ஆர்ப்¬பாட்டம் செய்¬தன.   உச்ச நீதிமன்றம் தேர்தல் செல்¬லு¬ப¬டி¬யற்¬றது என்¬றது.   மறு தேர்¬தலில் யூலியா ரைமொ¬ஷென்கோ வெற்றி பெற்றார்.   இவர் அமெரிக்கா சார்பானவராக இருந்தார்.   2005ஆம் ஆண்டு செப்¬டெம்பர் மாதம் அவ¬ரது ஆட்¬சியை குடி¬ய¬ரசுத் தலை¬வ¬ராக இருந்த விக்டர் யுஷென்கோ கலைத்தார்.    இதைத் தொடர்ந்து உக்¬ரேனில் பல அர¬சியல் இழு¬ப¬றிகள், கூட்¬ட¬ணிகள் அரங்¬கே¬றின.    2011ஆம் ஆண்டு முன்னாள் தலைமை அமைச்சர்     யூலியா   ரைமொ¬ஷென்கோ சிறையில் அடைக்¬கப்¬பட்டார்.    இரசியாவிற்கு பலவகையில் உக்ரேன் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும்.    உக்ரேன் இரசியாவின் எதிரிகளிற்கு சார்பான நாடாக மாறினால் இரசியா தனது வல்லரசு என்ற நிலையை இழக்க வேண்டி வரும் என்பது படைத்துறை நிபுணர்களின் கருத்தாகும்.    இரசியா ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யும் எரிவாயுவில் அரைப்பங்கு உக்ரேனூடாகச் செல்லும் குழாய்களூடாக நடை பெறுகின்றன.  அப்போது உக்ரேனின் ஒரு பகுதியாக இருந்த கிறிமியாவில் இருக்கும் இரசியக் கடற்படைத் தளம் மத்திய தரைக் கடலிலும் மத்திய கிழக்கிலும் இரசியா ஆதிக்கம் செலுத்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு  படைத் தளமாகும். கிறிமியாவை ஒட்டிய கடற்படுக்கையில் எரிவாயு வளம் இருப்பதும் இரசியாவை கிறிமியாவைத் தன்னுடன் இணைப்பதற்கு ஒரு காரணியாக அமைந்தது.
கட்சி மாறிய விக்டர்
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனிற்கு ஐம்பது கோடி மக்கள் கொண்ட தனது சந்¬தையைத் திறந்து விடுவது, உக்ரேனியர்கள் விசா நடை¬முறை இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடு¬க¬ளுக்கு செல்ல அனுமதிப்பது, வரிகள் குறைந்த ஏற்றுமதி இப்படிப் பல சலு¬கை¬களை வழங்க முன்¬வந்¬தது.     இதனால் விக்டர் யுவோனோவிச் முதலில்   ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வர்த்தக உடன்படிக்கையைக் கைச்சாத்திட் ஒப்புக்கொண்டார்.     இந்த உடன் படிக்கை உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.    உக்ரேனிற்கு அதன் எரிவாயுப் பாவானையில் அரைப்பங்கை விநியோகிக்கும் இரசியா விக்டர் யுவோனோவிச்சை கட்சி மாற்ற   தனது எரிவாயுவைப் பாவித்தது.     உக்ரேனிற்கு முப்பது விழுக்காடு விலைக்கழிவில் தான் எரிவாயு விநியோக்கிப்பதாக    இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் யுவோனோவிச்சிடம் தெரிவித்தார்.    அவர் வழங்க முன்வந்த  மொத்த பொருளாதார உதவி இருபது பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானதாகும்.

இரசியா பக்கம் சாய்ந்த  உக்ரேனை மீட்க வேண்டும் என      முன்னணியில் இருந்து செயற்பட்ட நாடு போலந்து ஆகும்.   போலந்து, ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து இரசியாவிற்கு எதிராகக் காய்களை நகர்த்தின.    உக்ரேனியப் பாராளமன்றம் இரசியாவிற்கு எதிராகத் திரும்பியது.

இரசியா குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாளை புட்டீன் கொண்டாடுகையில் உக்ரேயின் பாராளமன்றம் தீவிரமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.   அவற்றில் மிக முக்கியமானது உக்ரேயினின் அதிபர் விக்டர் யனுகோவிச்சை ஒரு மனதான தீர்மானத்தின் மூலம் பதிவியில் இருந்து விலக்கியமையாகும்.   அத்துடன் பாராளமன்றம் அதன் அவைத்தலைவர் ஒலெக்ஸாண்டர் தேர்கினோவை    தற்காலிக அதிபராக்கியது.    விக்டர் யனுகோவிச்    தனது மாளிகையில் இருந்து உழங்கு வானூர்தி மூலம் வெளியேறித் தலைமறைவானார்.      இடைக்கால அதிபராகப் பதவியேற்ற ஒலெக்ஸாண்டர் தேர்கினோவை   ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறைத் தலைமை அதிகாரி கதரின் அஸ்டன் உடனடியாகச் சந்தித்தார். வங்குரோத்து நிலையை அடைந்துள்ள உக்ரேயின்ற்கு பன்னாட்டு நாணய நிதியத்தூடாக உதவி வழங்கப்படும் என மேற்கு நாடுகள் தெரிவித்தன.

தனக்கு ஆதரவாக மாறிய விக்டர் யுனோவோவிச்   பதவியில் இருந்து விலக்கப்பட்டதால் இரசியா ஆத்திரமடைந்தது.    தனது படைகளை உக்ரேனின் வடகிழக்கு எல்லையை நோக்கி நகர்த்தியது. உக்ரேனில் இருக்கும் இரசியர்களைத் தன்பக்கம் இழுத்து. உக்ரேனின் ஒரு மாகாணமான கிறிமியாக் குடாநாட்டில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் தன்னுடன் இணைத்தது. இரசியர்கள் அதிகமாக வாழும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்கள் இரண்டு உக்ரேனில் இருந்து பிரிந்து செல்லப் போவதாக அறிவித்தன.    இரசியாவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக ஐக்கிய அமெரிக்கா இரசியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளைச் செய்தது.     அவை பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தாவிடிலும் பல முதலீடுகள் இரசியாவில் இருந்து வெளியேறி     இரசிய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி கண்டது.

உக்ரேனில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னர்    அங்கு பெரும் குழப்பத்தை இரசியா ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப் பட்டது.   ஆனால் தேர்தல் சுமூகமாக நடந்து இருபது ஆண்டுகளாக சொக்லட் உற்பத்தி செய்துவரும் பெரும் செல்வந்தரான பெட்றே  பொரோஷெங்கோ (Petro Poroshenko) உக்ரேனின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய வேண்டும் எனற கொள்கை உடையவர்.   அதே நேரம் இரசியாவுடன் நல்ல உறவு வேண்டும் எனவும் நினைப்பவர். தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போது உக்ரேனின்  டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் வாழும் இரசியர்கள் அங்கு உள்ள விமான நிலையத்தைக் கைப்பற்றித் தமதாக்கினர். அவர்களில் பலர்  உக்ரேனிய அரச படைகளின் தாக்குதலால் கொல்லப்பட்டனர். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொக்லட் கிங் எனப்படும் பெட்றே  பொரோஷெங்கோ ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைதல், உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பேணுதல், கிறிமியாவை மீளிணைத்தல் என்ற முன்றையும் தனது முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ளார். அதாவது இரசியாவிடமிருந்து வில்லங்கத்தை விலைக்கு வாங்குவேன் என்கின்றார்.

உக்ரேனின் புதிய அரசியும் அதன் அதிபரையும் இரசியா அங்கீகரிக்கவில்லை. விக்டர் யுனோவோவிச்  தான் சட்டபூர்வமான உக்ரேனிய அதிபர் என்ற நிலைப்பாட்டில் இரசியா இப்போதும் இருக்கின்றது. அத்துடன் தனக்குச் சார்பான நாடுகள் உக்ரேனின் புதிய அரசை அங்கீகரிக்க வேண்டாம் எனப் பரப்புரை செய்து வருகின்றது.

இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனிடம் மூன்று திட்டங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.   முதலாவது உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தை தன்னுடன் இணைத்தல்.   இரண்டாவது   மாற்றுத் திட்டமாக உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தை தனி நாடாக்குதல்.    இவை நடந்தால் எஞ்சிய உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் நேட்டோப் படைக் கூட்டமைப்புடனும் இலகுவாக இணைந்து விடும்.    அத்துடன் சிறிய உக்ரேன் தனது எரிவாயுத் தேவையை இரசியாவிடமிருந்து பெறாமல் வேறு வழிகளில் பெற்றுக் கொள்ளலாம்.     அத்துடன் உக்ரேன் பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைந்தால் அதனால்  இரசியர்கள் உந்தப்பட்டு இரசியாவிலும் பொருளாதாரச் சீர் திருத்தம் கோரி ஆர்ப்பாட்டம் நடாத்தலாம். இதனால் புட்டீன் இப்போது தனது மூன்றாம் திட்டத்தை கையில் எடுத்துள்ளார். உக்ரேனில் தொடர்ச்சியாக அங்கு வாழும் இரசியர்களை வைத்து ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடாத்தி உக்ரேனைப் பொருளாதார ரீதியில் தலை எடுக்காமல் செய்வது. இதனால் உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு தேவையற்ற சுமையாக மாற்ற புட்டீன் முனைகின்றதாகத் தெரிகின்றது. புட்டீனின் திட்டத்திற்கு ஏதுவாக ஐரோப்பிய ஒன்றியப் பாராளமன்றத்திற்கு நடந்த தேர்தலில் பல வலதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தப் பாராளமன்ற உறுப்பினர்களில் இவர்கள் மூன்றில் ஒரு பகுதியினரே. இவர்கள் ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கத்தை விரும்பாதவர்கள். புதிய நாடுகளிற்காக செய்யப்படும் பணவிரயத்தை எதிர்ப்பவர்கள். உக்ரேனில் கிளர்ச்சி தொடர்ந்தால் அது உலகச் சந்தையில் எரிவாயுவிலையைச் சரியாமல் இருக்க உதவும். இதனால் இரசியா தொடர்ந்து எரிவாயு ஏற்றுமதி மூலம் பெரும் பணம் சம்பாதிக்கலாம். இதற்கான காப்பீடாக சீனாவிற்கு எரிவாயு விநியோகிக்கும் ஒப்பந்த்த்தை இரசியா செய்துள்ளது.  இந்தியாவிற்கும் இரசியா எரிவாயு விற்பனை செய்யலாம்.

கலங்கப் போகும் உக்ரேன்
செஸ்னியாவில் இரசியாவிற்கு எதிராகப் போராடும் இசுலாமியத் தீவிரவாதிகள் உக்ரேன் சென்று இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராடுவதாகச் சொல்லப்படுகின்றது. உக்ரேனில் 83 இலட்சம் இரசியர்கள் வாழுகின்றனர். பல கிழக்குப் பிராந்திய மாகாணங்களில் அவர்களே பெரும்பான்மையினர்.  இரசியாவால் தனது படையினரை உக்ரேன் நாட்டு வாசிகள் போலச் செயற்பட இரகசியமாக உக்ரேனிற்குள் அனுப்ப முடியும். கிளர்ச்சிக்கரர்களின் கைகளில் புதிய தரப் படைக்கலன்களைக் கொடுக்க முடியும். கிறிமியாவில் அப்படிச் செய்தே ஒரு துளி இரத்தம் கூடச் சிந்தாமல் கிறிமியாவைத் தன்னுடன் இரசியா இணைத்தது. புதிய தேர்தலும் புதிய அதிபரும் இரசியாவை கடுமையாக அதிருப்திப் படுத்தி இருப்பதால் இரசியா உக்ரேனைக் கலங்கடிக்கப்போகிறது என எதிர்பார்க்கலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...