Friday 13 September 2013

இரு பயங்கரவாத நிகழ்வுகளின் நினைவு கூரல்



அமெரிக்கா தனது நியோர்க் நகரின் இரட்டைக் கோபுரத்தில் நடந்த தாக்குதலின் நினைவு நாளை செப்டம்பர் 11-ம் திகதி கொண்டாடியதை உலகெங்கும் பலர் அறிந்திருந்தனர். அது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் எனச் சொல்லி உலக ஒழுங்கையே தலைகீழாக மாற்றி உலகெங்கும் உள்ள விடுதலை இயக்கங்களைப் பயங்கரவாத இயங்கங்களாக முத்திரை குத்தி ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பல அப்பாவிகளை கொன்று குவித்தது அமெரிக்கா.

இன்றும் பயங்கரவாத ஒழிப்பு என்னும் போர்வையில் பல அப்பாவிகள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு தென் அமெரிக்க நாடான சிலி அமெரிக்காவின் அரச பயங்கரவாதத்தால் நிகழ்ந்த இரத்தக் களரியின் நாற்பதாம் ஆண்டு நினைவை யாரும் அறியாமல் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தது. அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அமைதியாக நினைவு கூரப்பட்டது. அமெரிக்கா சிலியில் செய்த பயங்கரவாத நடவடிக்கையை நினைவு கூர்ந்தோர் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசித் தாக்குதல்கள் செய்யப்பட்டன.

ஒரு மாக்ஸிச வாதியான சல்வடோர் அலண்டே மக்களாட்சி முறைமைப்படி நடந்த தேர்தலின் மூலம் வெற்றி பெற்று சிலி நாட்டின் அதிபரானார். அவர் நாட்டை சோஸலிசப் பாதையில் இட்டுச் செல்லும் முகமாக அமெரிக்காவிற்கு சொந்தமான செப்பு உலோக நிறுவனங்களை நாட்டுடைமையாக்கினார். சிலியின் பொருளாதாரத்தைச் சுரண்டிக் கொண்டிருந்த அமெரிக்கர்கள் ஆத்திரம் அடைந்தனர். சிலியின் விவசாய விளைச்சல்களை அமெரிக்க உளவுதுறையான சிஐஏ தனது சதிமூலம் அழித்தது. நாட்டின் பொருளாதாரத்தை சிஐஏ திட்டமிட்டுச் சீரழித்தது. இதைத் தொடர்ந்து சிலியின் படைத்துறையினர் சதிப் புரட்சி மூலம் ஒகஸ்டோ பினோசேயின் தலைமையில் அலெண்டேயின் பணிமனையை முற்றுகையிட்டது. பலர் பலியானார்கள். அலெண்டே தற்கொலை செய்து கொண்டார். ஆட்சியைக் கைப்பற்றிய கொடியவனான ஒகஸ்டோ பினோசே 17 ஆண்டுகள் கொடிய அடக்குமுறையுடன் ஆட்சி புரிந்தான். சிலியின் பொருளாதாரத்தை தாராளமயப்படுத்தி அமெரிக்க சுரண்டலுக்கு மீண்டும் வழி வகுத்தான்.   ஸ்பானிய நீதிமன்றம் 1998இல் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு தண்டனை வழங்கி ஒகஸ்டோ பினோசேயைக் கைது செய்ய உத்தரவிட்டது. இலண்டனில் கைது செய்யப்பட்ட பினோசே பின்னர் சிலிக்கு நாடுகடத்தப்பட்டு முதலாளித்துவ நாடுகளின் சதியால் தண்டனையில் இருந்து தப்பிக் கொண்டான்.  1973-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகது உயிர் நீத்த சல்வடோர் அலெண்டேயின் 40வது நினைவு நாளைக் கொண்டாடியதை பல ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்து இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. 

Thursday 12 September 2013

எகிப்துடன் மோதித் தவிக்கும் ஹமாஸ் இயக்கம்


இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பில் இருந்து உருவாகிய ஹமாஸ் அமைப்பு 2006-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து காசா பிரதேசத்தை ஆண்டு  வருகிறது. அரபு வசந்தம் ஹமாஸ் இயக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  சிரியாவில் கிளர்ச்சி தொடங்கியவுடன் சிரிய அரசுக்கு ஆதரவு வழங்காமையினால் ஹமாஸ் அமைப்பு சிரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டது.

ஹமாஸ் இயக்கம் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாக செயற்படுகிறது என்பதால் ஈரான் ஹமாஸ் இயக்கத்திற்கான நிதி உதவியை நிறுத்தி விட்டது. ஆனால் படைக்கல உதவிகளை நிறுத்தவில்லை. ஈரானின் ஆதரவுடன் இயங்கும் ஹிஸ்புல்லா இயக்கம் சிரிய அதிபர் அசாத்தின் படைகளுடன் இணைந்து கிளர்ச்சிக் காரர்களுக்கு எதிராகப் போராடுகிறது. எகிப்தியப் படைத்துறையினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் எப்போதும் நல்ல உறவு இருந்ததில்லை.

எகிப்திய ஆட்சி மாற்றங்களும் ஹமாஸ் இயக்கமும்
எகிப்தில் முஹமட் மேர்சி தலைமையில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் நீதிக்கும் சமாதானத்திற்குமான கட்சி ஆட்சியைக் கைப்பற்றியவுடன் ஹமாஸ் இயக்கத்தினர் பெரு மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் மேர்சியின் ஆட்சி கலைக்கபட்டு படைத்துறையினர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காசாப் பிரதேசத்தில் எகிப்தியப் படையினருக்கு எதிராக பல பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. சினாய் பகுதியில் இருக்கும் ஹமாஸ் இயக்க ஆதரவாளர்கள் எகிப்தியப் படையினருக்கு எதிராக தாக்குதல்களும் நடாத்தினர். ஹமாஸ் இயக்கத்தின் மத போதகர்கள் எகிப்தியப் படைத் துறையினருக்கு எதிராக பலத்த பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இது எகிப்தியப் படைத்துறையினரை கடும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது.
 
நூற்றுக் கணக்கான சுரங்கைப் பாதைகள்
காசா நிலப்பரப்பிற்கான வழங்கற் பாதை எகிப்திய எல்லையில் உள்ள நூற்றுக் கணக்கான சுரங்கைப் பாதைகளினூடாக நடக்கிறது. சில கணிப்புக்கள் 1200 வரையிலான சுரங்கப் பாதை இருப்பதாகச் சொல்கிறன. இதனூடாக எரிபொருள் படைக்கலன்கள் உணவு எனப் பலவகையானவை எடுத்துச் செல்லப்படுகின்றன.  ஈரானில் இருந்து ஹமாஸ் இயக்கப் போராளிகளுக்கு ஏவுகணைகள் உட்படப் பல படைக்கலன்கள் இந்த சுரங்கப்பாதைகளூடாக கிடைக்கின்றன.  ஹமாஸ் இயக்கம் இந்தச் சுரங்கப்பாதையால் ஆண்டு ஒன்றிற்கு ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகவும் பெறுகின்றது. ஹமாஸ் இயக்கத்தினர் எகிப்தில் இசுலாமிய சகோதரத்து அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்டமையால் ஆத்திரமடைந்த எகிப்தியப் படைத்துறையினர் காசாவிற்கான நிலக்கீழ் சுரங்கப்பாதைகளைச் சிதைத்தும் மூடியும் வருகின்றனர். இதனால் காசாப் பிரதேசத்தில் பொருடகளின் விலைகள் அதிகரித்ததுடன் மின்வெட்டும் கடுமையாக அமூல் செய்யப்படுகிறது. விழித்துக் கொண்ட ஹமாஸ் அமைப்பின் தலைமை தனது உறுப்பினர்களுக்கும் மத போதகர்களுக்கும் எகிப்தின் படைத்துறையினருக்கு எதிரான பரப்புரைகளை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.

Wednesday 11 September 2013

சரியாகாத இரசியாவின் முன்மொழிவும் கரியாகும் சிரிய மக்களும்

சிரியாவிற்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா காங்கிரஸ் (Congress) எனப்படும் அமெரிக்கப் பாராளமன்றத்தின் இரு அவைகளான மக்கள் பிரதிநிதிகள் சபையினதும் மூதவையினதும் (Senate) ஆதரவை வேண்டி மிகக் கடுமையான பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் இரசியா சிரியப் பிரச்சனைக்கு தனது முன்மொழிவை வைத்தது.

இரசியாவின் முன்மொழிவில் இரு முக்கிய அம்சங்கள் இருந்தன: முதலாவது சிரியா தனது வேதியியல் படைக்கலன்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பது, இரண்டாவது அப்படைக்கலன்களை பகுதிகளாகப்பிரித்து செயற்படாமல் பண்ணுவது.  இரசிய வெளிநாட்டமைச்சர் சேர்கி லவ்ரொவின் (Sergei Lavrov) இந்த முன்மொழிவை சீனாவும் ஆதரித்தது. சிரிய வெளிநாட்டமைச்சர் வலிட் அல் மௌலம் (Walid al-Moualem) இரசிய முன்மொழிவிற்கு ஒத்துக் கொண்டார். தாம் தமது வேதியியல் படைக்கலன்களை இரசியாவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கும் காட்டுவதற்குத் தயார் என்றார் சிரிய வெளிநாட்டமைச்சர்.

இரசியாவின் முன்மொழிவை அமெரிக்கா முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. வேதியியல் படைக்கலன்களை சிரியா ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பதும் அவற்றை பிரித்து செயலிழக்கச் செய்வதும் ஒரு கால அட்டவணையில் அடிப்படையிலேயே நடக்க வேண்டும் என்றது. இது சிரிய அதிபருக்கு ஒரு கால அவகாசத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்றது. சிரியாமீதான மட்டுப்படுத்தப்பட்ட தக்குதலுக்கு அமெரிக்கப் பாராளமன்றத்தின் ஒப்புதல் பெறும் முயற்ச்சி தொடரும் என்கிறார் பராக் ஒபாமா. இதைத் தொடர்ந்து இரசியாவின் முன்மொழிவின் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானத்தை தான் கொண்டுவரப்போவதாக அறிவித்தது. பிரெஞ்சு ஒரு கால அட்டவணையுடன் கூடிய கடுமையான தீர்மானத்தை கொண்டுவர முயன்றது.  அதில் சிரியா வேதியியல் படைக்கல ஒழிப்பிற்கான பன்னாட்டு உடன்படிக்கையில் கையொப்பமிட வேண்டும் எனவும் நிர்பந்திக்கும் வாசகம் இடம்பெறுவதை பிரான்ஸ் வலியுறுத்தியது.                                                                                                                                                                             இது தொடர்பாக பிரெஞ்சு வெளியுறவுத் துறை அமைச்சர் லொரெண்ட் ஃபபியஸ் (Laurent Fabius) இரசிய வெளிநாட்டமைச்சர் சேர்கி லவ்ரொவினுடன் தொடர்பு கொண்டு உரையாடினார். அவர்கள் இருவருக்கும் இடையில் கடுமையான வேறுபாடுகள் காணப்பட்டது.  பிரான்ஸ் ஒரு கடுமையான தீர்மானத்தைக் கொண்டுவர முயல்கிறது. இரசியா சிரியாமீது தாக்குதல் நடத்தப்படமாட்டாது என்ற உறுதி மொழியை அமெரிக்காவிடமும் அதன் நட்பு நாடுகளிடமும் இருநநது பெற முயல்கிறது. இரசியா பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதை விரும்பவில்லை. பதிலாக சிரிய அதிபரின் வேதியியல் படைக்கலன்கள் தொடர்பாக ஒரு உறுதி மொழி போதும் என இரசியா கருதுகிறது.

அமெரிக்கா தமது நாட்டின் மீது தாக்குதல் நடாத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் தனது நண்பர்கள் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் எச்சரித்தார். அதற்குப் பதிலடி கொடுத்த பராக் ஒபாமா சிரிய அதிபர் பதில் தாக்குதல் செய்தால் அது அவரினதும் அவரது நண்பர்களினதும் உயிர்களுக்கு ஆபத்தாக முடியும் என்றார். அவரது வாசகம் இப்படி அமைந்தது: “Neither Assad nor his allies have any interest in escalation that would lead to his demise,” . இரசியாவின் முன்மொழிவு பராக் ஒபாமாவிற்கு அவரது சிரியாமீதான தாக்குதல் திட்டத்திற்கு உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆதரவு திரட்டும் முயற்ச்சிக்கு போதிய கால அவகாசத்தை வழங்கியுள்ளது. அதே வேளை சிரிய அரசுக்கும் தம்மிடம் இருக்கும்

மொத்தத்தில் யாரும் சிரிய மக்களின் உயிர்கள் பலியாகிக் கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வேதியியல்(இரசாயன) படைக்கலன்களால் 1400 சிரியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் மரபுவழிப் படைக்கலன்களால் ஒரு இலட்சத்திற்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். இப்போது போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்தும் முயற்ச்சியில் யாரும் ஈடுபடவில்லை. போர் இன்னும் நீண்டகாலம் தொடரும் போல் தெரிகிறது. உயிரழந்தவர்களின் உண்மையான தொகை இரண்டு இலட்சம் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர் வேதியியல் படைக்கலன்களை மட்டும் அழித்து சிரியாவில் அமைதி ஏற்படுத்த முடியாது.

சிரியா தொடர்பான் முந்தைய பதிவுகளைக்காண இங்கு சொடுக்கவும்: சிரியா

Tuesday 10 September 2013

நகைச்சுவை: வக்கீலாத்தில் ஒரு வசூல்ராஜா

அவர் ஒரு மிகப் பிரபலமான சட்டவாளர். அவரது ஆண்டு வருமானம் பல இலட்சங்களைத் தாண்டும். ஆனால் அவரிடம் நன்கொடை வாங்க பல தரும ஸ்தாபனங்கள் பகிரதப் பிரயத்தனம் செய்து தோல் விகண்டன.

ஒரு அறக்கட்டளையைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் எப்படியாவது நன்கொடை வாங்கியே தீருவேன் என்று அவர் வீடு சென்றார்.  அவரிடம் நன்கொடை பற்றியும் அதன் அவசியம் பற்றியும் அதனால் நன்மையடையப் போகும் அனாதைப் பிள்ளைகள் பற்றியும் அதனால் அவருக்கு கிடைக்கும் புண்ணியம் பற்றியும் நீண்ட நேரமாக எடுத்து சொன்னார்.  சொன்ன பின் சட்டவாளரிடம் நீங்கள் ஆண்டு ஒன்றிற்கு இலட்சக்கணக்கில் வருமானம் பெறுகிறீர்கள் என அறிகிறோம். உங்கள்...... அவரை இடைமறித்த சட்டவாளர் எனது அம்மா இரண்டு காலும் வழங்காமல் நடக்க முடியாமல் தவிப்பது உனக்குத் தெரியாமா என்றார். அதற்கு அவர் இல்லை ஐயா என்றார் வியப்புடன். பின்னர் எனது தம்பி புற்று நோய் வந்து தவித்துக் கொண்டிருக்கிறான் அது உனக்குத் தெரியுமா எனக் கேட்டார். இல்லை ஐயா என்றார் நன் கொடை வாங்க வந்தவர்.  பின்னர் சட்டவாளர் எனது அக்காவின் கணவன் அமைதிப் படையில் இலங்கை போய் இரண்டு காலகளையும் இழந்து விட்டு வந்திருக்கிறான். அவர்களுக்கு 4 பிள்ளைகள் உனக்குத் தெரியுமா என்றார். நன் கொடை வந்தவருக்கு ரெம்ப கவலையாகி விட்டது. இது ஒன்றும் எனக்குத் தெரியாது என்றார் மனவருத்தத்துடன். இன்னும் கேள் என்ற சட்டவாளர், எனது தங்கையின் கணவன் விபத்தில் கொல்லப்பட்டு விட்டான். எனது தங்கைக்கு மூன்று பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். அது உனக்குத் தெரியுமா என்றார். இப்போது நன்கொடை வாங்க வந்தவருக்கு கண் கலங்கி விட்டது. இந்தா பாரப்பா இவர்களுக்கு ஐந்து காசு கூடக் கொடுக்காத நான் உனக்கு நன்கொடை தருவேன் என்று எதிர்பார்க்கிறாயா என்றார். நன்கொடை வாங்க வந்தவர் எடுத்தார் ஓட்டம்!!

xxxxxxx


இந்திய ரூபா போல் என் கண்ணில் விழுந்தாள்
இந்தியாவில் ஊழல் போல் உளமெங்கும் நிறைந்தாள்.
விலைவாசி போல் நான் உயர்ந்தேன் வானில்.

Monday 9 September 2013

நவி பிள்ளையை இந்திய உளவுத் துறை தொடர்ந்தது ஏன்?


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக நேரில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும் முகமாக இலங்கை சென்ற போது அவரை இந்திய உளவுத் துறையான ரோ(RAW - Research and Analysis Wing)வைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்ததாக சிங்களப்பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைப் படைத்துறையினரின் உளவுப்பிரிவினரின் அறிக்கை ஒன்றில் இந்திய உளவுத் துறையான ரோ(RAW - Research and Analysis Wing)வைச் சேர்ந்தவர்கள் நவி பிள்ளை அவர்களை யார் யாரெல்லாம் சந்திக்கின்றார்கள் என்பதைப்பற்றியும் நவி பிள்ளை என்ன அறிக்கை விடுகிறார் என்பதைப்பற்றியும் தகவல்கள் திரட்டினார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனல்-4 தொலைக்காட்சி முதல் முதலாக இலங்கையில் கைதிகள் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் பின்புறமாக இருந்து சுட்டுக் கொல்லப்படுவதை காணொளியாக வெளியிட்டவுடன் அப்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணை அறிக்கை இதுவரை வெளிவிடப்படவில்லை. இலங்கைப் போர்க்குற்றத்தில் இந்தியாவிற்கு உள்ள பங்கு பற்றிய காணொளிப் பதிவுகள் ஏதாவது இருக்கிறதா என அஞ்சித்தான் அந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்ததாக அப்போது பேசப்பட்டது.

நவி பிள்ளைக்கு இலங்கைப் போரில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பாக எதாவது தகவல் கிடைக்குமா என்ற அச்சத்தில்தான் நவி பிள்ளையை இந்திய உளவுத்துறை தொடர்ந்ததா என்னும் கேள்விக்கான விடையை 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் "ஐநாவின் பானிற்கான சவால்: போர்க்குற்ற விசாரணையை முறியடிக்க இந்தியாவின் சதி" என்ற தலைப்பில் திரு வீ எஸ் சுப்பிரமணியம் எழுதிய கட்டுரையில் பதில் உண்டு.

அந்தக் கட்டுரையில் சொல்லபப்ட்ட முக்கியமானவை:

எம் கே நாராயணனுக்குப் புதிய பட்டம்
இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் எம் கே நாராயணனை தனது கட்டுரை முழுக்க திரு வீ எஸ் சுப்பிரமணியம் அவர்கள் முள்ளிவாய்க்கால் நாராயணன் என்றே குறிப்பிட்டுள்ளார்.

கொலைக்குழு
Ground Reportஇல் வீ எஸ் சுப்பிரமணியம் எழுதிய கட்டுரையில் கோத்தபாய ராஜபக்ச, சிவ் சங்கர மேனன், எம். கே. நாராயணன், விஜய் நம்பியார் ஆகியோர் 2009இல் நடந்த போரில் இணைந்து செயற்பட்டதாக தெரிவித்திருந்தார்.

வில்லங்கமான வில்லன் விஜய் நம்பியார்
விஜய் நம்பியார் டில்லி தென்மண்டலத்தின் (Delhi’s South Block) ஒரு முகவராக செயற்படுகிறார் என்றும் கட்டுரையில் குறிபிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல விஜய் நம்பியார் இலங்கைக்கு ஐநாவின் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஆலோசனைக் குழுவை எப்படி தவிர்ப்பது என்பது பற்றி ஆலோசனை வழங்கும் சாத்தியமும் உண்டு என்றும் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.

பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்ட ராஜீவ் காந்தி
இந்திய "அமைதிப்படை" இலங்கையில் இருந்த வேளை ராஜீவ் காந்தி (எனப்படும் ராஜீவ் கான்) பிரபாகரனைக் பேச்சு வார்த்தைக்கு வரும்படி அழைத்துக் கொல்ல உத்தரவிட்டதையும் அதை அமைதிப்படைக்குப் பொறுப்பாக இருந்த ஹரிக்கிரத் மறுத்ததையும் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சோனியாவின் பழிவாங்கல்
சோனியாவின் பழிவாங்கல் விடுதலைப்புலிகளை அழிப்பதற்க்கு மேலாக தமிழர் போராட்டத்தை ஒழிப்பது வரை சென்றது என்கிறார் கட்டுரையாளர் டில்லிப் பேராசிரியர் பிரம்மா செல்லனியை மேற்கோள் காட்டி.

பன்னாட்டு நீதி விசாரணை தேவை
கோத்தபாய ராஜபக்ச, சிவ் சங்கர மேனன், எம். கே. நாராயணன், விஜய் நம்பியார் ஆகியோர் அடங்கிய குழு 2009இல் நடந்த கொலைகளில் எப்படிச் சம்பந்தப்பட்டன என்பதை ஒரு பன்னாட்டு நீதி மன்ற விசாரணையால் மட்டுமே கண்டறிய முடியுமென்று தெரிவித்திருந்தார். சுப்பிரமணியம்.

2G அலைக்கற்றை ஊழலும் அடங்கிய திமுகவும்
2007இற்குப் பிறகு 2G அலைக்கற்றை ஊழலை வைத்து காங்கிரஸ் திமுகவை மிரட்டிப் பணிய வைத்துவிட்டதாம். பிரணாப் முகர்ஜீ கருணாநிதியைச் சந்தித்து மிரட்டி தமிழ்நாட்டில் எழும் தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாடுகளை அடக்கும்படி கட்டளையிட்டாராம். (இப்போது தெரிகிறதா கலைஞர் ஆ ஊ என்றால் சீமானை ஏன் கைது செய்தார் என்று? இப்போது தெரிகிறதா கலைஞர் யாரை ஏன் சொக்கத் தங்கம் என்றார் என்று? ஏன் பாரதிராஜாவின் பணிமனை உடைபட்டது என்று? )இந்தச் சந்தர்ப்பத்தை சோனியா திமுக மீது தமிழர் நலன்பேணும் என்ற நம்பிக்கையைத் தகர்க்க சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். (ஐயா தந்தை பெரியார் அவர்களே உங்கள் வாரிசுகளின் சுயமரியாதை என்னாச்சு?)
  • Thus the TN protests that gathered momentum in 2008 quietened. M’kal Narayanan also visited Chennai frequently to make clear to TN CM that Delhi’s pro SL stance even after the Mullivaykal massacres required the TN CM to keep Tamil sentiments calm even though Delhi diplomatically worked to stall the international UNHRC war crimes initiatives in May 2009. M’kal Narayanan and other South Block accomplices have a vested interest in stalling all war crimes initiatives.
2008இற்குப்பிறகு தமிழ்நாட்டு எதிர்ப்பு அடக்கப்பட்டுவிட்டது. முள்ளிவாய்க்கால் நாராயணன் அடிக்கடி சென்னை வந்து முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகும் டில்லியின் சிங்கள் ஆதரவு நிலைப்பாடுடுக்கு எதிராக கிளம்பும் தமிழ்நாட்டுத் தமிழர் உணர்வுகளை அடக்கி வைக்குப் படி பணிப்பார். போர்குற்றத்தில் தமக்கும் பங்கிருப்பதால் நாராயணன் போர்க்குற்ற விசாரணை முடக்க முற்பட்டார்.

போர்க்குற்றத்தில் நம்பியாரும் பங்காளி
வீ எஸ் சுப்பிரமணியம் அவர்களின் முக்கிய பந்திகளில் ஒன்று:
  • Nambiar’s coziness with the Rajapakses resulted in his May 2009 involvement in the plot that led to the massacre of the ‘white flag’ waving resistance leaders - a war crime. The Rajapakses expectation that Nambiar’s membership in the Delhi South Block partnership in SL crimes will give them the leverage to extricate him and his partners from those crimes working from within the UN establishment. SL sees merits in dragging Delhi in, to share culpability for those crimes committed in SL. The Rajapakses expect overt assistance from Nambiar here.
இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தில் நம்பியாருக்கும் பங்கிருப்பதால் அவர் அது தொடர்பான மூடிமறைப்பு வேலைகளில் பங்கு பற்றியே ஆக வேண்டும்.

கோத்தபாயவின் பொறிக்குள் இந்தியா
வீ எஸ் சுப்பிரமணியம் இத்துடன் நிற்கவில்லை எம் கே நாராயணன் இலங்கைப் போரில் இலங்கையோடு இணைந்து செயற்பட்டபடியால் கோத்தபாய ராஜபக்சவின் பொறிக்குள் இந்தியா அகப்பட்டுள்ளது என்கிறார்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தில் இந்தியாவின் சம்பந்தம் தொடர்ப்பன பதிவுகளை கோத்தபாய ராஜபக்ச வைத்துக் கொண்டு அவர் இந்தியாவை மிரட்டுகிறார் என்று கூறப்படுகிறது.

இலங்கையின் பணயக் கைதிகளாக நாராயணனும் நம்பியாரும்.
M’kal Narayanan was similarly entrapped by the Rajapakses in the M’kal massacres with Gothabhaya Rajapakse making explicit his ‘in the loop’ involvement charge. This explains Delhi over appeasing Colombo, post resistance. M’kal Narayanan was acting on the specific orders of his Delhi bosses (Sonia faction in the ruling Congress) for which he used his frequent visits to Colombo in early 2009 for the ‘in the loop’ sessions with the Rajapakses. It is not just coincidence that Nambiar joined M’kal Narayanan for the May 2009 ‘in the loop’ sessions that resulted not only in the white flag massacres but the equally severe Mullivaykkal massacres. By these acts M’kal Naraynan and Nambiar became hostages to the Rajapakse blackmail.


கொழும்பில் நிருபாமா பல்லை இளிப்பது ஏன்?
போர்க்குற்றத்தில் நாராயணனையும் நம்பிராரையும் சம்பந்தப்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே இலங்கையைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்தியா போருக்குப் பின்னர் நடந்து கொள்கிறதா? இப்போது தெரிகிறது படங்களில் நிருபாம ராவ் ஏன் ராஜபக்சமுன் பல்லை இளித்துக் கொண்டு நின்றார் என்று.

2009இல் நடந்த லோக் சபா தேர்தலுக்கு முன் இலங்கைப் போரை முடிக்க வேண்டும் என்று டில்லி அவசரப்பட்டதாம். அதற்கான அழுத்தம் இலங்கைமீது இந்தியாவால் கொடுக்கப்பட்டதாம். அதற்காக இலங்கை பல நடவடிக்கைகளை மேற் கொண்டது. அவை போர்க்குற்றங்களாக கருதப்படக்கூடியவையாம். இலங்கை மீது வரும் போர்க்குற்றச் சாடுக்களை இந்தியா தடுத்தே ஆகவேண்டுமாம். அல்லது இந்தியாவும் போர்க்குற்றத்தில் சம்பத்தப்படுத்தப் படலாமாம். இந்த மாதிரிப் போகிறது கதை. தப்பித் தவறி தேர்தலில் தோல்வியடைந்தால் ராஜீவ் கான் குடும்பத்தின் பாது காப்பு எப்படியாகும் என்ற அச்சமோ?

போரின் இறுதிக்கட்டத்தில் பெரிய மனித அழிவு நிகழ்வதைத் தடுக்க விஜய் நம்பியாரை இலங்கை அனுப்பினார். அவர் சந்தித்தது தனது சகோதரரும் இலங்கையின் படைத்துறைக் கூலி ஆலோசகருமான சதீஸ் நம்பியார், கோத்தபாய, நாராயணன், சிவ்சங்கர மேனன் ஆகியோரச் சந்தித்தமையையும் வீ எஸ் சுப்பிரமணியம் தனது கட்டுரையில் தெரிவிக்கிறார்.

எஸ் சுப்பிரமணியம் அவர்களின் கட்டுரையின் மிக முக்கியமான வாசகம்:
sufficient details are out in the open now that Delhi knowingly partnered in the SL genocide and the massacres.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...