Friday 16 August 2013

நாய்களுக்கென்று தனியான தொலைக்காட்சிச் சேவை

நாய்களுக்கென்று தனியான தொலைக்காட்சிச் சேவை அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் நாய்களுக்கென்று சில நிகழ்ச்சிகள் ஒளிபரப்புக்கள் செய்யப்பட்டன. இப்போது DOGTV என்னும் பெயரில் தனியான 24 மணிநேர சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாதாந்தக் கட்டணம் $10.

நாய்களை மகிழ்ச்சிப்படுத்தவும், ஊக்கப் படுத்தவும், நல்ல பழக்கப்படுத்தவும் கூடிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. நாய்கள் பார்க்கக் கூடிய வகையில் விஞ்ஞான ஆய்வுகள் செய்து நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன.

நாய்களுக்கான தொலைக்காட்சிச் சேவை பற்றி University of British Columbia வின் பேராசிரியர் Stanley Coren,  இப்படிச் சொல்கிறார்:
 Dogs have much sharper eyes than we do; dogs will still see that flicker up until about 75Hz. Luckily, newer TVs have much higher refresh rates, so you can grab a TV with a 120Hz, 240Hz, or even higher refresh rate. That's needed for a dog to identify the picture as moving and not as a series of still images. நாய்களின் கண்கள் எமது கண்களிலும் பார்க்கக் கூர்மையானவை. அதற்கேற்ப காட்சிகள் விரைவாக ஒளிப்பதிவு செய்யப்பட வேண்டும். அல்லாவிடில் நாய்களிற்கு தனிப் புகைப்படங்களைப் பார்ப்பது போலிருக்கும்.
 2025இல் தமிழ்நாட்டில் நாய்கள் தொலைக்காட்சி தொடர் நாடகங்களைப்பார்த்து அழலாம்.

விரைவில் பூனைகளுக்கு என்றும் தனியான தொலைக்காட்சிச் சேவை ஆரம்பிக்கப்படவிருக்கிறது. ஏற்கனவே வீடுகளில் ரிமோட் கொன்ரூலுக்காக நாய்கடி பூனைகடிச் சண்டை!

Thursday 15 August 2013

எரியும் எகிப்தும் சரியும் அமெரிக்க ஆதிக்கமும்

2011இற்கு முன்னர் ஆட்சியை மக்களாட்சி மயப்படுத்தும் படி அமெரிக்கா எகிப்திய அதிபர் ஹஸ்னி முபாரக்கை வேண்டியது. அவர் மறுத்தார். அவருக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தனர். மொஹமட் மேர்சி ஆட்சிக்கு வந்தார். அவரை எகிப்தின் எல்லாத் தரப்பினரையும் அரவணைத்துச் செயற்படும்படி அமெரிக்கா வேண்டியது அவர் மறுத்தார். மொஹமட் மேர்சியை பதவியில் இருந்து எகிப்தியப் படைத்துறையினர் அகற்றி ஆட்சிப் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொண்டனர். மோர்சியின் ஆதரவாளர்கள் படைத்துறைக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர். எகிப்தியப் படையினர் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கின்றனர். இப்போது அமெரிக்கா எகிப்தியப் படைத்துறையை கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விட வேண்டாம் என வேண்டுகிறது. படைத்துறை செவிசாய்க்கவில்லை.

2011இல்  எகிப்திய மத்தியதர வர்க்கத்தினர் அப்போதைய ஆட்சியாளர் புரட்சி செய்தபோது அமெரிக்கா தனக்கு வேண்டப்பட்டவரான ஹஸ்னி முபாரக்கை பதவியில் தொடர விரும்பாமல் அவரை பதவியில் இருந்து விலகும்படி வற்புறுத்தியது. அமெரிக்கா தனது கைப்பொம்மையான எகிப்தியப் படைத்துறை புரட்சியாளர்களுடன் ஒத்துப் போவதை விரும்பியது. இதனால் புரட்சி இரத்தக் களரியின்றி 18 நாட்களில் ஹஸ்னி முபராக்கை ஆட்சியில் இருந்து விலக்கியது. ஆனால் தொடர்ந்து நடந்த தேர்தலில் நன்கு கட்டமைக்கப்பட்ட இசுலாமிய சகோதரத்துவ அமைப்பால் உருவாக்கப்பட்ட சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி வெற்றி பெற்று மொஹமட் மோர்சி ஆட்சிக்கு வந்தார். ஒரு இசுலாமிய மதவாத ஆட்சி எகிப்த்தில் உருவானது. இது அமெரிக்கா விரும்பாத ஒன்றாக இருந்தாலும் அமெரிக்காவின் புவிசார் கேந்திரோபாய நலன்களுக்குப் பாதகமில்லாமல் மொஹமட் மேர்சி தன்னை மாற்றிக் கொண்டார். கட்டுப்பாடற்ற வர்த்தகத்தை ஏற்றுக் கொண்டார். இதனால் மோர்சி ஈரான் நீட்டிய நட்புக்கரத்தை ஏற்க மறுத்தார். இஸ்ரேலுடனான எகிப்திய வர்த்தகத்தை அதிகரித்தார். மோர்சி ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்க ஆதரவுடன் எகிப்து இஸ்ரேலுடன் செய்யப்பட்ட காம்ப் டேவி ஒப்பந்தம் இரத்துச் செய்யபடுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் மோர்சி அப்படிச் செய்யவில்லை. சிரியக் கிளர்ச்சியில் அமெரிக்காவிற்கு ஏற்றபடி நடந்து கொண்டார். இப்படி மோர்சி அமெரிக்கவின் விருப்பங்களுக்கு ஏற்ப நடந்து கொண்டபடியால் அவர் உள்நாட்டில் செய்யப்படவேண்டிய சீர் திருத்தங்களைச் செய்யாமல் இசுலாமியச் சட்டங்களை அமூல் படுத்தத் தொடங்கினார். அத்துடன் தனது கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். எகிப்தில் புரட்சி செய்தவர்கள் ஹஸ்னி முபாரக் ஆட்சியில் நிலவிய ஊழல், வேலையில்லாப் பிரச்சனை, பொருளாதார மேம்பாடு, உல்லாசப்பயணத் துறை அபிவிருத்தி போன்றவற்றில் புதிய அரசு கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மோர்சி தன்னைப் பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார். அவசர அவசரமாக ஒரு அசமைப்பு யாப்பை உருவாக்கினார். படைத்துறைக்கும் அதில் அதிக அதிகாரங்களை வழங்கினார். தன்னை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியாதவராக்கினார். அவரது அரசமைப்பிற்கு தாராண்மைவாதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியிருந்தது. அரசமைப்பு யாப்பிற்கான வாக்கெடுப்பில் 32விழுக்காடு வாக்காளர்கள் மட்டுமே பங்கு பற்றினர். அதில் 67 விழுக்காட்டினரின் ஆதரவு கிடைத்திருந்தது. மோர்சி இசுலாமிய அடிப்படைவாதிகளுடன் தனது உறவைப் பலப்படுத்தினார். அரச உயர் பதவிகளில் இசுலாமியத் தீவிரவாதிகளை அமர்த்தினார். பெணகளுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தார். இவற்றை எல்லாம அமெரிக்கா கண்டுகொள்ளாத மாதிரி இருந்தது. மோர்சியை எப்படித் தன்வழிக்குக் கொண்டுவருவது என்பதில் அமெரிக்கா கவனமாக இருந்தது. மோர்சி பதவியேற்றதில் இருந்து பெண் உரிமைவாதிகள் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். வேறும் பல அதிருப்தியாளர்கள் மோர்சிக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்கள் அடிக்கடி நடந்த படியே இருந்தன. மோர்சி பதவி ஏற்று ஓராண்டு நிறைவில் மோர்சியின் ஆட்சி தமது அடிப்படைப் பிரச்சனைகள் எதிலுமே கவனம் செலுத்தவில்லை என்பதால் ஆத்திரமடைந்த பல இலட்சக கணக்கான மக்கள் 2011இல் செய்தது போல் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டு இரவு பகலாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எகிப்திய மக்களின் தற்போதைய முக்கிய பிரச்சனை நாட்டில் மோசமடைந்துள்ள பொருளாதாரமாகும். எகிப்தில் முதல் முதலாக மக்களாட்சி முறைப்படி நடந்த தேர்தலில் தேர்ந்து எடுக்கப்பட்ட மொஹமட் மேர்சி அவரது பதவி ஏற்று ஓராண்டு நிறைவு நாளான ஜூன் 30-ம் திகதி மக்கள் பல இலட்சக் கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து எகிப்தியப் படைத்துறை அவரைப் ஜூலை 3-ம் திகதி பதவியில் இருந்து விலக்கி நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும் இரத்துச் செயத்துடன். புதிய அதிபராக உச்ச நீதிமன்ற நீதிபதி அட்லி மன்சூரையும் புதிய தலைமை அமைச்சராக நோபல் பரிசு வென்ற அல் பராடியையும் படைத்துறையுனர் நியமித்தனர்.

14/05/2013 புதன்கிழமையில் இருந்து எகிப்தியப் படையினர் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்து தமக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் மோர்சியின் ஆதரவாளர்களுக்கு எதிராக கொடூரமான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். பல பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். ஸ்கை நியூஸின் படப்பிடிப்பாளர் மைக் டீனும் அமீரகத்தின் பத்திரிகையாளர் ஹபீபா அல் அசீஸும் கொல்லப்பட்டனர். பல ஊடகவியலாளர்கள் கைது செய்யபப்ட்டனர். பத்திர்கையாளர்களின் மடிக்கணனிகள் பறிக்கப்பட்டு அதன் கடவுட்சொற்களை அடித்து மிரட்டி வாங்கினர் எகிப்தியக் காவற்துறையினர். எகிப்தின் வரலாற்றில் என்றும் இப்படி ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டதில்லை.

இதுவரை(15/08/2013- GMT - 12.00) 525 கிளர்ச்சிக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 3,700இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். எகிப்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. படைத்தரப்பில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிளர்ச்சிக்காரர்கள் பல கிருத்தவ தேவாலயங்களைத் தாக்கியதாகச் சொல்லப்ப்டுகிறது.
எல் பராடி பதவி விலகினார்
படைத்துறையினரால் பதவிக்கு அமர்த்தப்பட்ட எகிப்திய துணை அதிபர் எல் பராடி படைத்துறையினரின் அடக்கு முறைக்கு ஆட்சேபம் தெரிவித்துப் பதவி விலகினார். இறைவனின் முன்னிலையில் ஒரு துளி இரத்தம் கூடச் சிந்தப்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்தார்.

மோர்சிக்கு எதிரானவர்கள் படைத்துறைக்கு ஆதரவு
மோர்சிக்கு எதிரான கட்சிகளின் கூட்டமைப்பான National Salvation Front என்னும் தேசிய விடுதலை முன்னணி படைத்துறையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மதத்தின் பெயரைச் சொல்லி எகிப்திய அரசியலை திசை திருப்புவதற்காக வீதிகளில் அமர்ந்து கிளர்ச்சி செய்பவர்களை அடக்கியமைக்காக இன்று எகிப்து தலை நிமிர்ந்து நிற்கிறது என அவர்களது அறிக்கை தெரிவிக்கிறது.

சூயஸ் கால்வாயால் எகிப்து புவிசார் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு நாடாகும். அது தமது எதிரிகளின் கைகளுக்குப் போவதை அமெரிக்கா ஒரு போதும் விரும்பாது. அமெரிக்கா எகிப்து கொந்தளிக்கத் தொடங்கியவுடன் தனது படைகளை இத்தாலியில் குவித்தது. பின்னர் அமெரிக்கா தனது கடற்படையின் ஈரூடகப் பிரிவினரில் பலரை மத்திய கிழக்கை நோக்கி நகர்த்தியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

எகிப்தில் பெரும் கிளர்ச்சியும் அதற்கு எதிரான மோசமான அடக்கு முறையும் நடந்து கொண்டிருக்கையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது விடுமுறையை கோல்ஃப் திடல் ஒன்றில் கழித்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்கா காத்திரமான நடவடிக்கை ஏதும் எடுக்காமல் வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறது என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.

வட ஆபிரிக்காவிலேயே அமெரிகாவின் செல்வாக்கு அதிகம் உள்ள நாடாக எகிப்து கருதப்பட்டது. அமெரிக்கா எகிபதியப் படைத்துறைக்கு ஆண்டொன்றிற்கு 1.6 முதல் 2 பில்லியன் டாலர்களை உதவியாக வழங்குகிறது. இந்தத் தொகை 1986இல் இருந்து வழங்கப்படுகிறது. 1986இல் இரண்டு பில்லியன் டாலர்கள் பெரும் தொகைதான் ஆனால் இப்போது அதன் பெறுமதி மூன்றில் ஒரு பங்கு மட்டுமே.  அதிலும் பெரும் பகுதி அமெரிக்காவில் இருந்து படைக்கலன்களை இறக்குமதி செய்யச் செலவளிக்கப்பட வேண்டும். 250மில்லியன் டாலர்கள் மட்டுமே படைத்துறையினருக்குச் செல்கிறது. இசுலாமிய சகோதரத்து அமைப்பைப் பிடிக்காத நாடுகளான சவுதி அரேபியாவும் குவைத்தும் மொஹமட் மேர்சி பதவ்வியில் இருந்து விலக்கபட்டவுடன் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களை எகிப்திற்கு உதவியாக வழங்கின. இதனால் எகிப்த்தியப் படைத்துறைக்கு அமெரிக்காவின் உதவி தேவையற்ற ஒன்றாக மாறி விட்டது எனச் சொல்லப்படுகிறது. சிலர் அமெரிக்காவின் செல்வாக்கு எகிப்தில் சரிந்து விட்டது எனச் சொல்கின்றனர்.  ஆனால் உண்மை நிலை வேறு.

அமெரிக்காவை படைத்துறையினரும் அவருக்கு ஆதரவாக நிற்கும் தேசிய விடுதலை முன்னணியினரும் தமக்கு எதிராக அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை எடுப்பதாக நம்புகின்றனர். மொஹமட் மேர்சியும் அவரது இசுலாமிய சகோதரத்துவ அமைப்பும் அவருக்கு ஆதரவு வழங்கு மத தீவிரவாதிகளும் அமெரிக்கா படைத் துறையினருக்கு ஆதரவாக நடப்பதாக நினைக்கின்றனர். இதை அமெரிகாவும் அறியும். எகிப்தில் தான் தலையிட்டால் அது அல் கெய்தா போன்ற தீவிரவாதிகளுக்கு பெரும் பிரச்சார வாய்ப்பாக அமையும் என்பதை அமெரிக்கா அறியும். இதனால் தான் தலையிடாமல் இருப்பது போல் காட்டிக் கொண்டும் எகிப்தில் நடக்கும் வன்முறைகளைத் தான் கண்டிப்பது போல காட்டிக் கொண்டும் இருக்கிறது. உண்மையில் அமெரிக்காவின் ஆதரவுடனும் வேண்டுதலின் பேரிலும் சவுதி அரேபியாவும் குவைத்தும் எகிப்தியப் படைத்துறையினருக்கு உதவி செய்கின்றன.

Wednesday 14 August 2013

அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானை சீனாவில் தலையில் கட்டப் பார்க்கிறது.

சீன அரச நிறுவனமான China Metallurgical Group Corp ஆப்கானிஸ்த்தான் அரசுடன் மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஆப்கானிஸ்த்தானில் செப்பு உலோகத்தை அகழ்வு செய்யும் ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. காபுலுக்கு தென் கிழக்கே உள்ள லோகர் மாகாண தரிசு நிலத்தில் இந்த அகழ்வு மேற்கொள்ளப்படவிருக்கிறது. இந்த லோகர் மாகாணத்தில் தலிபான் இயக்கத்தினரின் பலமாக உள்ளனர். இருந்தும் சீனா இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.

லோகர் மாகாணத்தில் இருந்து பாக்கிஸ்த்தானிற்கு ஒரு தொடரூந்துப் பாதையையும் சீனா அமைக்கவிருக்கிறது. ஆப்கான் வரலாற்றிலேயே அதிக பெறுமதியான வெளிநாட்டு முதலீடு இதுவாகும். ஆப்கானிஸ்த்தானில் நூறு பில்லியன் டாலர்களுக்கு மேற்பட்ட பெறுமதியான கனிம வளங்களும் எரிபொருள் வளங்களும் இருப்பதாக நம்பப்படுகிறது. இதைப் பார்த்து நாக்கைத் தொங்கப் போடும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். சீனா அமைதியாக இருந்து தலிபானினிடம் நற்பெயர் வாங்கியுள்ளது. அமெரிக்கா அமெரிக்கா தனது 672பில்லியன் டாலர்களைச் செலவளித்தும் 2,200 அமெரிக்க உயிர்களைப் பலிகொடுத்தும் செய்ய முடியாத பொருளாதாரச் சுரண்டலை சீனா இழப்பீடு எதுவுமின்றி செய்கின்றது. உண்மையில் ஆப்கானிஸ்த்தானில் சீனச் சுரண்டலை அமெரிக்கா விரும்புகிறதா அல்லது அமெரிக்கா ஆப்கான் பொறிக்குள் சீனாவை விழுத்துகிறதா என்பது இப்போது உள்ள பெரும் கேள்வி. அமெரிக்காவும் மற்ற நேட்டோப் படைகளும் ஆப்கானில் இருந்து வெளியேறிய பின்னர் அங்கு பெரும் பொருளாதார நெருக்கடியும் மோசமான உள்நாட்டுக் கலவரமும் வெடிக்கலாம். சீனாவைப் பொருளாதார இலாபங்களைக் காட்டி ஆப்கானிற்குள் இழுக்க அமெரிக்கா முயல்கிறது.

எரிபொருள் பாவனையைப் பொறுத்த வரை சீனா உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாகும். சீனாவின் இருப்பிற்கு தடையற்ற எரி பொருள் வழங்கல் முக்கிய மாகும். சீனா தனக்கான எரிபொருள் வழங்கு பாதையை பல மாற்றீடு வழிகள் மூலம் பூர்த்தி செய்ய முயற்ச்சிக்கிறது. மலாக்கா நீரிணை, ஹோமஸ் நீரிணை, செங்கடல் ஆகிய கடற்பிராந்தியங்களில் வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகங்கள் தடை செய்யப் படலாம். இதற்கு மாற்றீடாக சீனா மியன்மார்(பர்மா) ஊடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகம் செய்யும் வழியைத் திறக்க முயல்கிறது. அடுத்த மாற்றீடாக பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தில் இருந்து பாக்கிஸ்த்தானூடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த பாக்கிஸ்தானூடான விநியோகத்தில் இன்னும் ஒரு மாற்றீடாக ஆப்கானிஸ்தானூடான இன்னும் ஓர் எரிபொருள் விநியோகப் பாதையை சீனா உருவாக்க விரும்புகிறது.  ஆப்கானிஸ்த்தானின் அமு தர்யா பள்ளத்தாக்கில் எரிபொருள் ஆய்வுப் பணியையும் சீனாவின் China National Petroleum Corp நிறுவனம் செய்கிறது.  ஆப்கான் சந்தைகளிலும் தெருவோரக் கடைகளிலும் சீனத் தயாரிப்புகள் ஏற்கனவே குவிந்து விட்டன. சீனா பொருளாதார ரீதியில் ஆப்கானைச் சுரண்டுவதை அமெரிக்கா விரும்புகிறது. சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அது அமெரிக்காவிற்கும் நன்மையாகும். சீனா அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சந்தையாகும். இதனால் சீனப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அமெரிக்காவின் உற்பத்தித் துறை, விவசாயத் துறை, சேவைத் துறை ஆகியவற்றின் சீனாவிற்கான ஏற்றுமதி அதிகரிக்கும்.

ஆப்கானிய காவற்துறையினருக்கு தனது நாட்டில் பயிற்ச்சியளிக்க சீனா ஒப்புக் கொண்டுள்ளது.

அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானை 2001இல் ஆக்கிரமித்த போது அங்கு காணி விலைகளும் கட்டிட விலைகளும் அதிகரித்தன. அதிக வேலை வாய்ப்புக்கள் உருவானது. இப்போது கட்டிட விலைகள் சரியத் தொடங்கி விட்டன. வேலையின்மை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இது ஆப்கான் பொருளாதரத்திற்கு உகந்தது அல்ல. இதை சீன முதலீட்டால் சரிக்கட்டலாம் என அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நம்புகின்றன.

சீனா தான் முதலீடு செய்யும் நாடுகளில் தனது தொழிலாளர்களைக் கொண்டு போய் குவிப்பது வழக்கம். ஆப்கானிலும் சீனா அதையே செய்கிறது. சில இடங்களில் சீனத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. தனது தொழிலாளர்களைப் பாதுகாக்க சீனா தனது படைகளை ஆப்கானுக்கு அனுப்ப வேண்டி இருக்கும். சீனாவின் முதலீடுகள் திடமற்ற நிலையில் இருக்கும்  ஆப்கானில் அதிகரித்தால் அவற்றைப் பாதுகாக்க சீனா படையினரை அங்கு அனுப்ப வேண்டும். தலிபானுடன் நல்ல உறவை சீனா வளர்க்க வேண்டும் அல்லது தலிபான்களுடன் மோத வேண்டும். தலிபானும் அல் கெய்தாவும் சீனாவில் வாழும் இசுலாமியர்களிடையே ஏற்கனவே தீவிரவாதத்தைப் பரப்பி வருகின்றன.

சீனாவால் பாக்கிஸ்த்தானை கட்டுப்படுத்த முடியும்.
சீனாவால் பாக்கிஸ்த்தானின் இசுலாமியப் போராளிக் குழுக்களுக்கான உதவிகளை நிறுத்த முடியும் என அமெரிக்கா நம்புகிறது. பாக்கிஸ்த்தான் தனது மோசமடையும் பொருளாதாரத்தை சீர் செய்ய சீனாவில் பெரிதும் தங்கியுள்ளது. தலிபான் போராளிகளோ அல் கெய்தாப் போராளிகளோ சீனாவிற்கு எதிராக கிளம்பும் பட்சத்தில் சீனாவால் பாக்கிஸ்த்தானில் இருந்து அவர்களை விரட்டியடிக்கவோ அடக்கி கைது செய்யப்பண்ணவோ முடியும் என அமெரிக்கா நம்புகிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக சீன ஆப்கானில் தனது காய்களை மிகவும் திட்டமிட்டும் நிதானமாகவும் நகர்த்துகிறது.

அமெரிக்கா ஆப்கானை ஆக்கிரமித்தது தலிபானகளையும் அல் கெய்தாவையும் கொல்வதற்கு. சீனா ஆப்கானில் தலையிடுவது ஆப்கானைப் பொருளாதார ரீதியில் சுரண்டுவதற்கு.  தனது நாட்டிலும் இசுலாமியர்கள் இருப்பதால் சீனா இசுலாமிய தீவிரவாதம் உலகில் ஓங்கினால் அது தனது நாட்டிற்கும் ஆபத்து என்பதை உணரும்.

Tuesday 13 August 2013

இந்தியாவின் விமானம் தாங்கிக் கப்பல் விக்ராந்த் சீனாவை மிரட்டுமா?

இந்தியா தனது விமானம் தாங்கிக் கப்பலான விக்ராந்தை 12-8-2013 திங்கட் கிழமை கடலில் இறக்கி ஓடவிட்டுள்ளது. இது ஒரு முழுமையான போர்க்கப்பலாகச் செயற்பட இன்னும் சில ஆண்டுகள் எடுக்கலாம். 2016 கட்டுமான வேலைகள் பூர்த்தியாகும். 2018இல் போர் புரியக் கூடியதாகும்.

அரிகாந்த் என்னும் உள் நாட்டில் உருவாகிய நீர்மூழ்கிக் கப்பலை வெள்ளோட்டம் விட்ட இரண்டு நாட்களில் விக்ராந்த் கடலில் மிதக்க விடப்பட்டுள்ளது.

12-8-2013 திங்கட் கிழமை இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் எலிசபெத் அண்டனி தேங்காய் உடைத்து விக்ராந்தை கொச்சி துறைமுகத்தில் இருந்து கடலில் ஓடவிட்டார்.  இது உள்ளூர்த் தாயரிப்பு எனச் சொல்லப்பட்ட போதும் இரசியாவின் பழுதடைந்த ஒரு போர்க்கப்பலை வாங்கியே இந்தியா பல திருத்த வேலைகளைச் செய்து விக்ராந்தை உருவாக்கியது. 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கிய விக்ராந்த் 37,000 தொன்கள் எடையும் 260 மீட்டரும் கொண்டது. ஆரம்பத்தில் 500மில்லியன் டொலர்கள் செலவில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ரைம்ஸ் ஒஃப் இண்டியா விக்ராந்த் 2020இல்தான் போருக்குத் தயாராகும் என்கிறது.

சீன விமானம்தாங்கி லயோனிங்

சீனா 2012 செப்டம்பரில் தனது விமானம் தாங்கிக் கப்பலை முதலில் ஓடவிட்டது. இது உக்ரேய்ன் நாட்டில் இருந்து வாங்கிய விமானம் தாங்கிக் கப்பலை புதுப்பித்ததாகும். இதனால் இந்தியா அமெரிக்க்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வரிசையில் உள் நாட்டில் விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கும் ஒரு நாடாக இணைந்துள்ளது என சொல்லிக் கொள்கிறது. ஆனால் இரசியா நிறைய தொழில்நுட்ப உதவிகளைச் செய்திருக்கிறது.

சில இந்திய ஆய்வாளர்கள் இந்தியக் கடற்படை சீனக் கடற்படையிலும் வலியது என்கின்றனர். ஆனால் ஒரு தீபகற்பம் என்ற வகையில் இந்திய மிக நீண்ட கடல் எல்லையைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளது. அரபுக் கடல், இந்து மாகடல், வங்கக் கடல் ஆகியவற்றை இந்தியா கண்காணிக்க வேண்டிய நிலையில் உள்ளது. 




சீனாவா இந்தியாவா?
இந்தியா தனது நீண்ட கடற்பரப்பை பாதுகாக்க வேண்டிய நிலையிலும் சீனா தனது ஏற்றுமதி சார் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை வலிமையை அதிகரிக்கின்றன. சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல் லயோனிங் 55,000தொன் எடையும் விக்ராந்த் 37,000 தொன் எடையும் கொண்டது. அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள் 100,000தொன்களிலும் அதிகமானது. சினாவின் லயோனிங்கில் 24  விமானங்களும் 26 உழங்கு வானூரிதிகளும் தாங்கிச் செல்லக் கூடியது. இந்தியாவின் விக்ராந்த் மொத்தம் முப்பது வானூர்திகளைத் தாங்கக் கூடியது.

விக்ராந்தில் ஒரு சோடி இரட்டைக் குழல் 40மில்லி மீட்டர் துப்பாக்கிகளும் 16-cell Barak SAM system விமான எதிர்ப்பு முறைமையும் இருக்கின்றன. லயோனிங்கில் சீனத் தயாரிப்பு விமான எதிர்ப்பு முறைமையான  TY-90 இருக்கிறது.

இந்தியாவிற்கு கோவாவை மீட்ட போர், பங்களா தேசத்தை பிரித்த போர் ஆகியவற்றில் கடற்போர் அனுபவத்தைப் பெற்றுள்ளது. பங்களா தேசத்துடனான போரில் மதராஸ் படையணி முதலில் சிட்ட கொங் துறைமுகத்தைக் கைப்பற்றியது. அத்துடன் தமிழர்களை அழிக்கப் போன இந்திய அமைதிப்படை நடவடிக்கையில் கடல் வழியாகப் பெரும் படை நகர்வு செய்த அனுபவம் உண்டு. ஆனால் சீனாவிற்கு கடற் போர் அனுபவம் இல்லை. இந்தியா சீனாவையும் பாக்கிஸ்த்தானையும் சமாளிக்க வேண்டிய கட்டத்தில் உள்ளது. சீனா இந்தியா வெகு நாட்களாக எதிரி நாடாகக் கொண்டுள்ளது. ஆனால் சீனா தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் தனது ஆதிக்கத்தை நிலைப்படுத்தும் முனைப்பின் இறங்கியதில் இருந்து வியட்னாம், பிலிப்பைன்ஸ், இந்தோனோசியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் முரண்படும் நிலையில் உள்ளது. தென் கொரியக் கடற்படை ஆசியாவிலேயே வலிமை மிக்க கடற்படை என படைத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகிலேயே அதிக அளவில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சீர்வேக ஏவுகணைகளையும் (ballistic and cruise missiles) உற்பத்தி செய்யும் நாடாக சீனா தற்போது இருக்கிறது என அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவக் கூடிய JL-2 எனப்படும் ஏவுகணைகள் 14,000 கிமீ (8,699மைல்கள்) பாய்ந்து தாக்கக் கூடியவை. சீனா தனது படைத்துறையில் செலுத்தும் கவனம் பல நாடுகளை மிரள வைத்துள்ளது.  விமானம் தாங்கிக் கப்பல்கள் வைத்திருக்கும் நாடுகள்:-

இந்தியாவின் கடற்படை வலிமையையும் அனுபவத்தையும் சீனா இலேசாக எடுத்துக் கொள்வதில்லை. இந்தியாவைச் சமாளிக்க இலங்கையிலும் சிசிஸிலும் தனது துறைமுகங்களை அமைத்துள்ளது. இவை தற்போது வர்த்தகத் துறைமுகங்களாக இருந்தாலும் தேவை ஏற்படின் கடைற்படைத் தளங்களாக மாற்றப் படக் கூடியன. இவற்றுடன் முத்து மாலை என்னும் பெயரில் பாக்கிஸ்தானில் குவாடர், பங்களாதேசத்தில் சிட்டகொங், பர்மாவில் சிட்வே ஆகிய துறைமுகங்களை அபிவிருத்தி செய்து தனதாக்கிக் கொண்டுள்ளது. இந்தியக் கடற்படை வலிமை மிக்கதானால் இந்தியாவால் மலாக்க நீரிணையில் வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தை தடுக்க முடியும். 


இந்தியாவின் விக்கிரமாதித்தியா என்னும் விமானம் தாங்கிக் கப்பல் பற்றிய பதிவைப் பார்க்க இன்கு சொடுக்கவும்: விக்கிரமாதித்தியா


இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் பற்றி பார்க்க இங்கு சொடுக்கவும்: இந்திய நீர்மூழ்கி

சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவிலும் பார்க்க மூன்று மடங்காகும். தரைப்படை, விமானப் படை ஆகியவற்றின் வலிமையும் இந்தியாவிலும் பார்க்க சீனாவினது மூன்று மடங்காகும். வேறு நாடுகளுடன் இணைந்தே இந்தியாவால் சீனாவைச் சமாளிக்க முடியும். அத்துடன் தீபெத்தில் குவிக்கப்பட்டிருக்கும் சீனப்படை இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாகும். கிழக்குச் சீனக் கடலில் உள்ள நாடுகளையும் ஜப்பானையும் தென் கொரியாவையும் இணைந்து ஒரு பாதுகாப்பு கூட்டமைப்பை உருவாக்கினால் அமெரிக்காவின் உதவியுடன் சீனா அடக்கப்படலாம்.

Monday 12 August 2013

ஓம் என்னும் மந்திரம் சொல்லி உச்ச உறவின்பம் பெறும் நடிகை.

ஓம் என்னும் மந்திரத்தை உச்சரித்து தியானம் செய்வதன் மூலம் உச்சக் கட்ட இன்பத்தை பெறலாம என அமெரிக்க நடிகை கரென் லோர் தெரிவித்துள்ளார். இதனால் ஆண்களால் திருப்தியடைந்தவராக தான் மாறியுள்ளாராம்.

இந்தத் தியானத்தை அவர் உச்ச உறவின்பத் தியானம் (Orgasmic meditation) எனக் குறிப்பிடுகிறார்.சுருக்கமாக இதை ஆங்கிலத்தில் OMing என்கின்றனர்.

இந்த வகையான தியானத்தைப் போதிக்கப் பல தியான நிலையங்களும் இருக்கிறதாம்.

51 வயதான அமெரிக்க நடிகை கரென் லோர் ஒரு நாளில் தான் பதினொரு தடவை இந்த மாதிரி உச்ச உறவின்பத்தைப் பெறுகிறாராம். உச்ச உறவின்பம் (Orgasm) பல பாலியல் வல்லுனர்கள் ஆய்வு செய்ததுண்டு. பல பெண்கள் வாழ்நாளில் சில தடவைகள் மட்டுமே இந்த இன்பத்தை பெறுவார்களாம். பத்தில் ஒரு பெண்கள் இதை அனுபவித்ததே இல்லை என்கிறார்கள் பாலியல் ஆய்வாளர்கள்.

In a video of a class, one 'student' called Rachel said she was told at the age of 25 that she could not orgasm but disproved the diagnosis having attended orgasmic meditation classes. Orgasmic meditationஅல்லது OMing இல் இருவர் இருந்து தியானம் செய்து கொண்டு உணர்வுக் கிளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

Metroஎன்னும் இலண்டனில் இருந்து வெளிவரும் இலவச ஆங்கிலப் பத்திரிகையில் 2012-01-02-ம் திகதி இப்படி ஒரு தகவல் வெளியிடப்பட்டிருந்தது:
‘Orgasmic meditation (OM) is a practice done between two people that has no goal, except to feel what is happening in the moment,’ says Daedone. ‘OM is not about climax (yes, orgasm and climax are different). It’s about expanding the most pleasurable part of orgasm.’
With practise, Daedone claims women can enjoy waves of orgasmic pleasure, while the man gets the satisfaction of definitively locating the ‘magic button’ and watching the woman he loves surrender to his touch (and, going by the number of men at the workshop, that’s motivation enough).
But for serious OMers there’s more (here comes the spiritual part). Daedone says that in the fully turned-on woman, the heart, head and vagina form a live circuit, powering everything else in their life.
‘OM becomes positive energy you can divert into any area of your life that you choose,’ she says. ‘From your relationship to your career and your ambitions for the future.’
The OM workshop is just the start of OneTaste’s Turn On campaign around Britain. Couples are welcome but in our group we were far outnumbered by attractive singletons in their twenties and thirties (men and women in equal numbers) with enquiring minds.




இந்த இணைப்பில் உள்ள காணொளி 18 வயதினருக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்:
http://www.youtube.com/watch?v=X7bCke4LyKs

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...