Saturday 10 August 2013

வாழவந்த தெலுங்கனையும் கன்னடத்தியையும் ஆளவைக்கும் இளிச்சவாய்த்தனம்

விடிவைத் தேடிப் பாதளக் குழிக்குள்
முடிவை நாடிச் செல்வது போல்
ஏதுமில்லா மாகாண சபை
போதுமென்பார் இருக்கையிலே
தமிழிங்கு வாழு மோடி - தோழி
எம் கலையிங்கு தேறு மோடி

சூத்திரத் தமிழன் ஆளக்கூடாது எனச்
சாத்திரம் பேசிச் சதி செய்யும்
ஆத்திர ஆரியர்கள் இங்கிருக்கையில்
தமிழ்தான் வளருமோடி தோழி
எம் கலைதான் மிளிருமோடி

பெருவிளக்காயிருந்து பெருந்தியாகம் புரிந்து
எமக்காக அணைந்த மாவீரர்க்கு
ஒரு விளக்கேற்ற ஒற்றுமை இல்லாத போது
தமிழை வளர விடுவாரோடி தோழி
எம் கலையை ஒளிர விடுவாரோடி

வந்தாரை வாழவைப்பது பண்பாடடி
வந்தேறிய தெலுங்கனையும் கன்னடத்தியையும்
ஆளவைத்து அடிமையாய் இருப்பது
இளிச்சவாய்த்தனமடி தோழி கையாலாகக் கூட்டமடி
நம்மை நாம் ஆள வேண்டுமடி
நம் மொழியோடு கலைவளர - தோழி
நம்மை நாமே ஆள வேண்டுமடி

கொத்தணிக் குண்டால் கொத்தாக விழுவோரும்
நாடுவிட்டு நாடு ஓடி நாதியற்று வாழ்வோரும்
ஓடும் படகு கவிழ ஒன்றாக தாழ்வோரும்
மீன் பிடிக்கச் சென்று உயிரிழப்போரும்
மொழியைப் பாதுகாப்பாரோ தோழி
கலையை வளர்ப்பாரோ

புலம் பெயர்ந்து வேறு நிலம் புகுந்து
பலம் மிகுந்த வாழ்க்கை வாழ்வோரும் - அங்கு
மொழியும் கலையும் உயிரிலும் மேலென்போரும்
ஓரிரு தலைமுறையில் எல்லாம் இழப்பாரடி - தோழி
மொழியோடு கலையும் மறப்பாரடி

எமது நிலம் எமக்கன்றி ஏதும் ஆகாதடி -தோழி
யாதும் எமக்கு இங்கு தேறாதடி
தாயகமண்ணில் தேசியம் பேணும் தன்னாட்சியின்றி
அமிழ்தினும் இனிய மொழிதான் எங்கடி - தோழி
எங்கள் பார் போற்றும் கலைதான் எங்கடி

சுவரின்றி ஓரு சித்திரம் வரைதல் முடியுமோடி
தாழ்வாரமில்லாதான் தேவாரம் படுதல் தகுமோடி
ஆதாரம் தர தன்னாட்சி நாடொன்றில்லாமல்
தமிழை யார் வளர்ப்பாரடி - தோழி
எம் கலையை யார் போற்றுவாரடி
நாடொன்று வேண்டுமடி தோழி
எம் மொழியோடு கலை வளர
தமிழீழத் திரு நாடிங்கு வேண்டுமடி

Friday 9 August 2013

அமெரிக்காவை அணுக்குண்டுகளால் தாக்கும் திறனை அதிகரிக்கிறது சீனா

உலகிலேயே அதிக அளவில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சீர்வேக ஏவுகணைகளையும் (ballistic and cruise missiles) உற்பத்தி செய்யும் நாடாக சீனா தற்போது இருக்கிறது என அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவக் கூடிய JL-2 எனப்படும் ஏவுகணைகள் 14,000 கிமீ (8,699மைல்கள்) பாய்ந்து தாக்கக் கூடியவை. அணுக்குண்டுகளை தாக்கிச் செல்லக் கூடிய ஏவுகணைகள் தென் சீனக் கடலில் இருந்தோ அல்லது போஹாய் கடலில் இருந்து வீசினாலே அமெரிக்காவைத் தாக்கக் கூடியவை.

சீனாவின் Type-094 (Jin-Class) அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில்  JL-2 எனப்படும் ballistic missile பொருத்தப்படவுள்ளன. இவை 1,050 முதல்  2,800 வரையிலான கிலோகிராம் எடையுள்ள  குண்டுகளைத் தாங்கிச் செல்லவும் கூடியவை. ஒரு ஏவுகணை இரண்டு முதல் எட்டு வரையிலான குண்டுகளைத் தாங்கிச் செல்லம் திறனுடையவை. இந்த ஏவுகணைகள் அடுத்த ஆண்டில் இருந்து பாவனையில் ஈடுபடுத்தப்படும்.

சீனாவிடம் இப்போது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசக்கூடிய Type-094 (Jin-Class) எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் (nuclear-powered ballistic missile submarines (SSBN))மூன்று இருக்கின்றன. இந்தவகையான மேலும் மூன்று நீர் மூழ்கிக் கப்பல்களை சினா உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

சீனா மட்டுமல்ல ஈரானும் வட கொரியாவும் தமது  நீண்ட தூரம் பாயக் கூடிய ஏவுகணைகளின் பாய்ச்சல் திறன்களை அதிகரித்துக் கொண்டே போகின்றன. இரு நாடுகளும் அமெரிக்காவைத் தாக்கக் கூடிய வல்லமை பெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

உலகிலேயே வலிமை மிக்கதாகக் கருதப்படும் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பற் படையைச் சமாளிக்க சீனா தனது நீர்மூழ்கிக் கப்பல்களை எண்ணிக்கை ரீதியிலும் தர ரீதியிலும் அதிகரித்து வருகிறது. சீனா 13,000கிலோமீட்டர் பாயக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கினால் அவற்றின் மூலம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனைத் தாக்க சீனாவால் முடியும். ஆனால் 8000கிலோ மீட்டர் பாயக் கூடிய ஏவுகணைகளையே பல தொழில்நுட்பப் பிரச்சனைகள் தோல்வியில் முடிந்த சோதனைகள் ஆகியவற்றின் மத்தியிலேயே உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம்.

அமெரிக்கா தனது நாடு மற்ற நாடுகளில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளில் இருந்து பாதுகாக்க ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதன் முதற்கட்ட பொறிமுறை இஸ்ரேலில் காசாவில் இருந்து ஹமாஸ் போராளி அமைப்பு ஏவிய ஈரானிய ஏவுகணைகளுக்கு எதிராக 2012இல் சோதித்துப் பார்க்கப்பட்டது. இவை முற்றாக வெற்றியளிக்கவில்லை. இத் திட்டம் மேலும் மேபடுத்தப் பட வேண்டும் என சில அமெரிக்கப் படைத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர். ஆனால் சிலர் இது செலவு மிகுந்தது எனவும் முழுமையான பாதுகாப்பைத் தரவல்லன அல்ல எனவும் சிலர் வாதாடுகிறார்கள். எதிரி நாட்டில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட முயலும் பட்சத்தில் அவற்றை எதிரி நாட்டிலேயே வைத்து வெடிக்கச் செய்யும் பொறிமுறையையும் உருவாக்கும் திட்டம் அமெரிக்காவிடம் இருக்கிறது.  அதிபர் பராக் ஒபாமா ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறார்.

அமெரிக்காவிற்கே இந்தளவு ஆபத்தென்றால் அயல்நாடான இந்தியாவின் நிலை?

Thursday 8 August 2013

நகைச்சுவைக்கதை: நரகத்தில் குயலலிதாவும் குருணாநிதியும்

3ஜீராசா ஒரு விபத்தில் காலமாகி நரகத்திற்குப் போனார். அங்கு அவருக்கு ஊழல் புரிந்தமைக்காக தண்டனையாக ஒரு மிகவும் பருமனான ஐம்பது வயதுப் பெண்ணுடன் இல்லறம் நடத்த வேண்டும் என்றும் அப்பெண்ணை "எல்லா வகையிலும்" மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டது.

மிகுந்த சிரமத்துடன் தனது நாட்களைக் கழித்துக் கொண்டிருந்த 3ஜீராசா ஒரு நாள் நரகத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றபோது குருணாநிதியைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அவரது மகிழ்ச்சி நீடிக்கவில்லை. குருணாநிதி 3ஜீராசாவிற்குக் கிடைத்த பெண்ணிலும் பார்க்க வயதில் கூடியவரும் அதிக பருமனானவரும் அதிக அசிங்கமானவருமான ஒரு பெண்ணை "எல்லா விதத்திலும்" மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டிருந்தார். கொலைஞர் குருணாநிதி ரெம்பத்தான் நொந்து போய்க் கொண்டிருந்தார். இறக்க முன்னர் புஷ்ப்புவை வைத்துத் தடவிக்கொண்டிருந்த தன் தலைவருக்கா இந்தக் கதி என எண்ணி 3ஜீராசா ரெம்ப வருத்தப்பட்டார். ஆனால் இருவரும் ஒன்றாக நரகத்தில் ஏதாவது அலைக்கற்றை ஏலம் விடலாமா என அடிக்கடி கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தனர். ஒரு நாள் அலைக்கற்றை பற்றி கலந்து உரையாடிக் கொண்டு நடைபவனியாகச் சென்று கொண்டிருந்த போது. குயலலிதா மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதை அவர்கள் கண்டு பொறாமையும் ஆத்திரமும் அடைந்தனர். அவருடன் சரிசாந் ரெம்பக் கவலையுடன் காணப்பட்டார். 3ஜீராசாவும் குருணாநிதியும் மிகவும் ஆத்திரப்பட்டு நாங்கள் ஊழலுக்கு இலக்கணம் மட்டும் தான் வகுத்தோம் ஆனால் குயலலிதா ஊழலுக்கு இலக்கணம் மட்டுமல்ல இலக்கியமே படைத்தவர். அவர் மட்டும் எப்படித் தண்டிக்கப்படாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார் என நரகத்து அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதற்கு நரகத்து அதிகாரிகள் உங்களை யார் விளையாட்டுத் துறையில் ஊழல் புரிந்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும் பகுதிக்கு போகச் சொன்னது என்று கேட்டு சவுக்கால் இருவரையும் அடி அடியென்று அடித்தனர்.

Wednesday 7 August 2013

அல் கெய்தாவின் மீள் எழுச்சியும் அமெரிக்காவின் அதிர்ச்சியும்

பின் லாடனின் கொலையில் முக்கிய பங்கு வகித்தவரும் சிஐஏயின் முன்னாள் அதிபரும் முன்னாள் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலருமான லியோன் இ பானெற்றா 2011 ஜுலையில் "We are within reach of strategically defeating AL-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல்-கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்துவிட்டோம்" எனப் பாக்கிஸ்த்தானில் வைத்துக் கூறினார்.

2011 மே மாதம் அல் கெய்தாவின் தலைவர் பின் லாடன் கொல்லப்பட்டார் ஆப்கானிஸ்த்தானிலும் யேமனிலும் பல அல் கெய்தாவின் முன்னணித் தலைவர்கள் அமெரிக்காவின் சிஐஏயின் ஆளில்லா விமானங்களால் கொல்லப்பட்டனர். அத்துடன் அல் கெய்தாவினரின் தொடர்பாடல்கள் மிகவும் தடைப்பட்டிருந்தது. அவர்களின் தொடர்பாடல் கருவிகளை வைத்து அவர்களின் இருப்பிடங்களை அறிந்து அமெரிக்கா அவர்களைத் தாக்கி அழித்தது. 

ஆனால் இப்போது அல் கெய்தாவின் தாக்குதல்களுக்குப் பயந்து அமெரிக்கா ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் உள்ள தனது 19 இராசதந்திர நிலையங்களை மூடிவிட்டது. தனது குடிமக்களை வட ஆபிரிக்க நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பயணம் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளும் தமது பல தூதுவரகங்களை மூடியுள்ளன. அல் கெய்தாவின் இரு தலைவர்களான ஐமன் அல் ஜவாஹிரியும் நாசர் அல் வுஹவ்ஷியும் செய்த தொடர்பாடலை ஒற்றுக் கேட்ட அமெரிக்க உளவாளிகள் அல் கெய்தா அமைப்பு வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருப்பதாக 04/08/2013 ஞாயிற்றுக் கிழமை அறிவித்தனர். நடத்த விருக்கும் தாக்குதல்கள் 2001 செப்டம்பர் 11-ம் திகதி நடாத்திய இரட்டைக் கோபுரத் தாக்குதல் போல் மோசமானதாக இருக்கும் என அமெரிக்க உளவுத் துறை அறிவித்தது. இந்தத் தாக்குதல் நடக்கும் இடம் போன்ற முக்கியமான தகவல்களை அமெரிக்க உளவுத் துறையால் பெறமுடியாத அளவிற்கு அவர்கள் மறைமுக வார்த்தைகள் பாவித்திருந்தனர். இப்போது அல் கெய்தா தோற்கடிக்கப்படவில்லை அதன் தாக்குதல் உத்திகள்தான் தோற்கடிக்கப்பட்டன என்கின்றனர் அல் கெய்தாவைத் தொடர்ந்து அவதானிக்கும் படைத்துறை விமர்சகர்கள். அமெரிக்க உளவுத் துறையின் அறிவிற்பிற்கு சில தினங்களுக்கு முன்னர் ஈராக்கிலும் பாக்கிஸ்த்தானிலும் பல அல் கெய்தாப் போராளிகள் சிறைகளை உடைத்துக் கொண்டு வெளியேறிவிட்டனர்.

புதிய மனித வெடி குண்டுகள்
அல் கெய்தாவினர் ஒரு புதிய வெடிகுண்டுகளை உருவாக்கியுள்ளனர் என்கிறது அமெரிக்க உளவுத் துறை. அக் குண்டுகள் ஈரமான வெடிக்கக் கூடிய பதார்த்தத்தில் தோய்த்து எடுக்கப்படும். அந்த ஆடை உலர்ந்தவுடன் அந்தப் பதார்த்தம் வெடிக்கும். இந்த வகைக் குண்டுகள் விமான நிலையங்களில் தற்போது உள்ள ஒளி வருடிகளால்(Scanners) கண்டறிய முடியாதவையாகும். இக்குண்டுகளை அல் கெய்தாவின் இப்ராஹிம் அல் அசிரி என்னும் நிபுணர் உருவாக்கியுள்ளார்.

அல் கெய்தா மீள் எழுச்சி பெற்றது எப்படி?
2011 செப்டம்பரில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவின் மிகத்தீவிரமான கண்காணிப்பில் அல் கெய்தா கொண்டுவரப்பட்ட பின்னர் அல் கெய்தாவால் எந்தவித இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகளையும் பாவிக்க முடியாமல் போனது. அவற்றை வைத்து அவர்களின் இருப்பிடங்களை அறியும் தொழில் நுட்பம் அமெரிக்காவிடம் இருந்தது. இதனால் அல் கெய்தாவின் தலைமைக்குத் தொடர்பாடல் பிரச்சனை இருந்தது. எப்போதும் கொரில்லா இயக்கத்தின் முக்கிய பிரச்சனையே தொடர்பாடல்தான். இதனால் அல் கெய்தா ஒரு புதிய உத்தியைக் கையாண்டது.  பின் லாடன் இருக்கும் போதே அவர் தனது இயக்கத்தை ஒரு franchise(தன்னிச்சைக்கிளை) இயக்கமாக மாற்றிவிட்டார்.  அதன் படி அல் கெய்தாவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தமது நடவடிக்கைகளை தமது எண்ணப்படி மேலிடத்தின் கட்டளைக்குக் காத்திராமல் செய்ய முடியும். முக்கியமான தன்னிச்சைக் குழுக்கள்:
1. ஈராக்கில் அல் கெய்தா -Al Qaeda in Iraq (AQI),
2. அரபுக் குடாநாட்டில் அல் கெய்தா- இது யேமலின் செயற்படுகிறது.  -the Yemen-based AL Qaeda in the Arabian Peninsula (AQAP),
3. இசுலாமிய மக்ரெப்பில் அல் கெய்தாAL Qaeda in the Islamic Maghreb (AQIM)
ஆகியவை தற்போது முக்கியமாகச் செயற்படும் அல் கெய்தாவின் கிளை அமைப்புக்களாகும்.

இவற்றில் 2012இல் அதிக முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக அரபுக்குடாநாட்டு அல் கெய்தா(AQAP) செயற்பட்டது. அமெரிக்க ஆளில்லா விமானங்களும் இவர்களை இல்க்கு வைத்தே அதிக தாக்குதல்களை மேற்கொண்டன.   2013இன் ஆரம்பத்தை இசுலாமிய மக்ரெப்பில் அல் கெய்தாAL Qaeda in the Islamic Maghreb (AQIM) அல்ஜீரிய பணயக் கைதிகள் மூலம் தனதாக்கிக் கொண்டது. மேற்கு நாடுகளையும் அதன் நண்பர்களையும் அது 2013 ஜனவரி மூன்றாம் வாரம் கலங்கடித்துவிட்டது. Maghreb என்பது வட மேற்கு ஆபிரிக்காக் கண்டத்தைக் குறிக்கும். இதில் எகிப்து, லிபியா, மொரொக்கோ, அல்ஜீரியா துனிசியா, மாலி ஆகியவை அடங்கும். அல்ஜீரியப் பணயக் கைதிகள் விவகாரம் அல் கெய்தா மீளவும் எழுச்சியடைந்து விட்டதா என்ற கேள்வியை எழுப்பினாலும் காத்திரமான அல் கெய்தாவின் செயற்பாடு மாலியின் வட பிராந்தியம் முழுவதையும் அல் கெய்தா இயக்கம் துவாரெக் இனக்குழும விடுதலை இயக்கமான அன்சார் டைனுடன் இணைந்து கைப்பற்றியதுடன் வெளிப்பட்டது. மாலியின் வட பிராந்தியம் முழுவதையும் அல் கெய்தா அன்சார் டைன் இயக்கத்துடன் இணைந்து கைப்பற்றியதுடன் மேலும் தெற்கு நோக்கி துரித கதியுடன் முன்னேறத் தொடங்கியது. பின்னர் பிரான்ஸ் தனது படைகளை மாலிக்கு அனுப்பி அல் கெய்தாவிடம் இருந்து பல பகுதிகளை மீட்டது. பிரான்ஸ் மாலியில் தாக்கி பின்னர் அல்ஜீரியாவில் இயற்கை வாயுத் தொழிற்சாலையில் 132 வெளிநாட்டவர் உட்பட 600 பேர் பணயக் கைதிகளா அல் கெய்தாவினால் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் ஆச்சரியம் கொடுக்கும் அம்சம் அல் கெய்தாவின் புனித போராளிகள் இயற்கை வாயுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்கள் என்பதே.

ஈராகில் ஜபத் அல் நஸ்ரா
ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக தீவிரவாதத் தாக்குதலை நடாத்திய அல் கெய்தா இயக்கத்தின் ஒரு அங்கமான ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர் ஈராக்கில் இருந்து சிரியா சென்று அங்குள்ள கிளர்ச்சிக் காரர்களுடன் இணைந்து போராடுகின்றனர். இவர்கள் பல தற்கொலைத் தாக்குதல்களையும் நடாத்தியுள்ளனர். 2009இல் ஈராகில் உள்ள அல் கெய்தாவினரை முற்றாக அழித்து விட்டதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால் அமெரிக்கா ஈராக்கில் இருந்து வெளியேறிய பின்னர் அல் கெய்தா அங்கு ஜபத் அல் நஸ்ரா என்னும் பெயரில் மீள வளர்ந்து கொண்டிருக்கிறது.

திறந்து விட்ட பாக்கிஸ்த்தான்
பாக்கிஸ்த்தானிய அரசு பல அல் கெய்தா சந்தேக நபர்களை அண்மையில் சிறையில் இருந்து விடுவித்திருந்தது. அதில் முக்கிய மாக அல் கெய்தாவின் நிபுணரும் தற்கொலைத் தாக்குதல் பயிற்ச்சியாளருமான  முஹம்மட் நயீம் நூர் கானை விடுவித்தது வாசிங்டனையும் இலண்டனையும் ஆத்திரத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. இவர் கைது செய்யப்பட்ட போது இவரின் மடிக்கணனியில் பிரித்தானியாவின் முக்கிய விமான நிலையமான ஹீத்ரூவைத் தாக்கும் திட்டம் அகப்பட்டது.

அல் கெய்தாவின் விளை நிலமாகும் எகிப்து
அரபு வசந்தமும் அதனால் மூன்று ஆட்சியாளர்கள் சடுதியாக பதவியில் இருந்து அகற்றப்பட்டமை அல் கெய்தாவை மிகவும் அதிச்சிக்குள்ளாக்கியிருந்தது. குறிப்பாக எகிப்தில் அமெரிக்காவிற்கு வேண்டியவரான ஹஸ்னி முபராக்கை மக்கள் தம் எழுச்சியின் மூலம் பதவியில் இருந்து விரட்டியது அவர்கள் எதிர்பாராத ஒன்று. அரபு நாடு ஒன்றில் தங்கள் பங்களிப்பு எதுவுமின்றி பெரும் அரசியல் நிகழ்வு நடந்ததை அவர்களை அதிர வைத்தது. ஆனால் இப்போது இசுலாமிய மதவாத அமைப்பான இசுலாமிய சகோதரத்துவ அமைப்பும் அமெரிக்க சார்பு எகிப்தியப் படைத்துறையும் மோதுவதை அல் கெய்தா மிகவும் மகிழ்ச்சியுடன் அவதானிக்கின்றனர். எகிப்தியப் படைத்துறை இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் மீது வன்முறையை தொடரத் தொடர அவர்கள் தம்மைப் போல் மிகவும் தீவிரவாதிகளாக மாறித் தம்முடன் இணைவார்கள் என நம்புகிறது. இசுலாமிய சகோதரத்து அமைப்பைப் பார்த்து வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் பார்க்க புனிதப் போரின் மூலம் ஆட்சியை கைப்பற்றுங்கள் என்கிறது அல் கெய்தா.எகிப்தில் இப்போது பலர் அல் கெய்தாவில் இணையத் தொடங்கி விட்டார்கள்.

சிரியாவை ஆட்டிப்படைக்கும் அல் கெய்தா
சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களில் அமெரிக்க சார்புடையவர்களுக்கு தேவையான படைக்கலன்களை அமெரிக்கா வழங்கவில்லை. ஆனால் அமெரிக்காவிற்கு எதிரான கொள்கையுடைய கிளர்ச்சிக்காரர்களிடம் சிறந்த படைக்கலன்களும் போதிய பணமும் புளக்கத்தில் இருக்கின்றன. இதனால் பல கிளர்ச்சிக்காரர்கள் அமெரிக்காவில் அதிருப்தியடைந்து அல் கெய்தாவினருடன் இணைந்தனர்.

லிபியாவில் வளரும் அல் கெய்தா
லிபியாவில் தளபதி மும்மர் கடாஃபியை பதவியில் இருந்து விரட்டிக் கொன்ற பின்னர் பல இனக் குழுமங்களுக்கு இடையிலான மோதல்கள் வலுவடைந்துள்ளன. இதனால் பலர் அல் கெய்தாவில் இணைகின்றனர்.

துனிசியாவில் மீண்டும் கலவரம்
அரபு வசந்தத்தின் முன்னோடிகளான துனிசிய மக்கள் இப்போது மீண்டும் கிளர்ந்து எழுந்து உள்ளனர். புரட்சியைத் தொடர்ந்து அங்கு மதவாத அரசு ஆட்சிக்கு வந்ததது அது ஒரு ஆண்டுக்குக்குள் புதிய அரசமைப்பை உருவாக்கி அதன் படி தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் ஓர் ஆண்டு முடிந்து எட்டு மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது துனிசிய அரசு.அங்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். அங்கும் அல் கெய்தா தனது உறுப்பினர்களை அதிகரிக்கிறது.

நீலக் கண் அல் கெய்தா
சிரியாவில் அல் கெய்தாவில் போராடும் ஐரோப்பிய இளைஞர்கள் இருவரைப் பேட்டி கண்ட அமெரிக்க ஊடகம் ஒன்று நீலக் கண் அல் கெய்தா என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளிவிட்டிருந்தது. அதில் பல ஐரோப்பாவில் பிறந்த இசுலாமியர்கள் தமது நாட்டில் இருந்து சிரியா சென்று அல் கெய்தாவில் இணைந்து போராடுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடரும் தீவிரவாதத் தாக்குதல்கள்
அரபு வசந்தம் ஏற்பட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிகளும் பாக்கிஸ்த்தானில் ஆளில்லாப் போர்விமானத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டமையும் அல் கெய்தாவின் வளர்ச்சிக்கு உரமூட்டுகின்றன. இனிவரும் சில ஆண்டுகளில் பல தீவிரவாதத் தாக்குதல்கள் உலகின் பல மூலைகளில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

Tuesday 6 August 2013

பொருளாதாரத்தையும் 13-ம் திருத்தத்தையும் வைத்து ராஜ்பக்சேக்களின் செல்வாக்கிற்கு எதிரான சதி

இலங்கையில் 2009இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைக்கலன்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் ராஜபக்சேக்களின் அரசியல் செல்வாக்கு அசைக்க முடியாதவாறு உறுதியாக்கப்பட்டுவிட்டது. அது மட்டுமல்ல இலங்கையில் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பன்னாட்டு மட்டத்தில் ராஜபக்சேக்களுக்குக் கொடுக்கப்படும் அழுத்தமும் அதை அவர்கள் உறுதியுடன் எதிர்த்து நிற்பதும் சிங்களவர்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

இலங்கையின் விலைவாசி அதிகரிப்பு, வேலையில்லாப் பிரச்சனை போன்றவற்றை வைத்து அரசுக்கு எதிரான ஒரு பெரும் கிளர்ச்சிக்கு யாரும் தூபமிட முடியாத நிலை இலங்கையில் இருக்கிறது. ஆனால் Standard & Poor எனப்படும் நாடுகளின் கடன்படுதிறனை ஆய்வு செய்து நிரைப்படுத்தும் நிறுவனம் இலங்கைப் பொருளாதாரத்தைப் பற்றி இப்படிக் கூறுகிறது:
  • The stable outlook reflects our view that the country has strong prospects for per capita real GDP growth over the next few years and the government's fiscal profile is improving; at the same time, Sri Lanka's external liquidity is vulnerable and it has high fiscal and external debt.
 நட்டின் தனி நபருக்கான மொத்த உற்பத்தி இனிவரும் சில் ஆண்டுகளிற்கு வளர்ச்சியடைவதற்கான  வாய்ப்புக்கள் பலமாக இருக்கின்றன என்பதை நிலையான காட்சி எதிரொலிக்கிறது. அதன் கணக்குப்படி இலங்கைப் பொருளாதாரம் இனி வரும் ஆண்டுகளில் நிலையாக இருக்கும் என்பதால் பொருளாதாரம் வளர்ச்சியடையும். எப்படி நிலையாக இருக்கும் என்பதை இப்படிக்கூறுகிறார்கள்:

  • We affirmed the ratings to reflect our view that Sri Lanka has weak external liquidity, moderately high and increasing external debt, and a weighty government debt and interest burden. In addition, some of the country's political institutions lack extensive checks and balances.

இதில் முக்கியமானவை:
1. பலவீனமான வெளி நீர்மை: குறுகியகால வெளிநாட்டு நிதிக்கையிருப்பு பலவீனமானதாக இருக்கும்.
2. சற்று அதிகமானதும் அதிகரித்துச் செல்கின்றதுமான வெள்நாட்டுக்கடன்.
3. கனமான அரச கடன் பளுவும் வட்டிப் பளுவும்
4. அரச நிறுவனங்கள் சிலவற்றில் தனிநபர் ஆதிக்கத்திற்கும் திறமையின்மைக்கும் எதிரான கட்டுப்பாடுகள் குறைவாக இருக்கின்றன.

என்ன இந்தத் தரவரிசை
இந்த நிலை தொடர்ந்து இருக்கும் என சொல்லும் Standard & Poor இலங்கையின் தரத்தை குறுகிய காலத்திற்கு Bஎனவும் நீண்டகாலத்திற்கு B+ எனவும் தரப்படுத்தியுள்ளது. Standard & Poor உம் வேறு நிறுவனங்களும் நாடுகளினதும் தனியார் நிறுவனங்களினதும் கடன்படுதிறன் நிலையான தன்மை போன்றவற்றை ஆய்வு செய்து தரவரிசைப்படுத்தும். இதில் Standard & Poor ஆனது குறுகிய காலத்தரவரிசையை A-1+, A-1, A-2, A-3, B, C, I எண்ற எழு தரத்தில் இறங்கு வரிசைப்படி தரப்படுத்தும். குறுகிய காலத்தில் இந்த ஏழு வகையில் ஒவ்வென்றையும் மேலும் பல பிரிவுகளாகப் பிரிக்கும். 
இலங்கைக்குக் கிடைத்துள்ள குறுகிய காலத்திற்கான B ஆனது Highly speculative எனப்படும். அதாவது அதிக அளவு ஊகத்திற்குரிய உறுதியில்லா நிலையாகும்.
Standard & Poor நெடுங்காலத்திற்கு Bஐ மேலும் BB+, BB, BB-, B+, B, B- என ஆறுவகைப்படுத்தியுள்ளது. இதில் இலங்கைக்கு நான்காம் இடமான  B+ மட்டுமே கிடைத்துள்ளது. இதன்படி இலங்கைக்குக் கடன் கொடுப்பவர்கள் அல்லது இலங்கையில் முதலீடு செய்பவர்கள் கடுமையான ஆய்வுகள் செய்ய வேண்டும்.

 இன்னும் ஒரு மதிப்பீடு
இன்னும் ஒரு கடன்படுதிறன் மதிப்பீட்டு நிறுவனமான Fitch இலங்கைப் பொருளாதாரம் 7 விழுக்காடு வளரும் என்று சொல்கின்ற அதே வேளை இலங்கையில் வெளிநாட்டு முதலீடு பலவீனமாக இருக்கும் என்று சொல்கிறது. இலங்கையின் பிழையான ஆட்சிமுறைமையை இதற்குக் காரணமாக Fitch சொல்கிறது. Fitchஇன் மதிப்பீட்டால் இலங்கை மைய வங்கியின் ஆளுனர் கவலையடைந்துள்ளார்.

கடன் பட்டுக் கடன் கட்ட வேண்டும்.
இப்படிப்பட்ட நிலையின் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்து இருக்கும் என்பதைக் குறிப்பிட Standard & Poorஆனது stable outlook என்ற பதத்தைப் பாவித்துள்ளது. ஆனால் stable outlook என்ற பதத்திற்கும் Bஇற்கான Highly speculative என்ற கருத்திற்கும் இருக்கும் முரண்பாட்டைக் கருத்தில் கொண்டு இலங்கைப் பொருளாதாரம் இப்போது இருக்கும் மோசமான நிலையில் தொடர்ந்து இருக்கும் எனக் கொள்ளலாம். ஆனால் இலங்கைப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி நிலையிலேயே இருக்கும். ஆனால் அதன் வெளிநாட்டுக்கடனைத் திருப்பிக் கொடுக்கும் திறன் குறைந்திருப்பதால் இலஙகை கடன்பட்டுக் கடன் கட்ட வேண்டிய நிலையில் இருக்கிறது. ராஜபக்சேக்களின் அரசு கடந்த சில ஆண்டுகளாக அரசின் வெளிநாட்டுக் கடன்களை அதிகரித்து வருகின்றது. இதைச் சரிக்கட்ட ராஜபக்சேக்களின் அரசு பன்னாட்டு நாணய நிதியத்திடம் இருந்து 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகக் கேட்டுள்ளது.


ராஜபக்சேக்களின் செல்வாக்கிற்கு முதல் அடி
இலங்கை அரசு பன்னாட்டு நாணய நிதியத்திடம் கேட்கும் கடனுக்கு நிதியம் இம்முறை விதிக்கும் நிபந்தனை இலங்கை அரசு சில அரச நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதாகும்.  அரச கட்டுப்பாடில் உள்ள சீனித் தொழிற்சாலை, லங்கா சலுசல, தேசிய கடுதாசிக் கூட்டுத்தாபனம், சிறிலங்கா மட்பாண்ட கூட்டுத்தாபனம், அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், சிறிலங்கா இறப்பர் ஏற்றுமதி கூட்டுத்தாபனம், சிறிலங்கா விமானச் சேவை போன்றவற்றை தனியாருக்கு விற்பனை செய்யச் சொல்லுவதாகும். இலங்கை அரசின் கடன்பளுவை நீக்க ராஜபக்சேக்கள் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைக்குச் சம்மதித்தே ஆக வேண்டும். அப்படி நடக்கும் நிலையில் இந்த அரச நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் பல இடது சாரி அமைப்புக்களும் ராஜபக்சேக்களுக்கு எதிராக கிளர்ந்து எழுவார்கள். இது ராஜபக்சேக்களின் செல்வாக்கிற்கு விழும் முதற் பேரடியாக அமையும்.

இரண்டாம் அடியாக 13வது திருத்தம்
13வது திருத்தத்தை பெரும்பாலான சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இது நிறைவேற்றப்படும்போது படைக்கலன் ஏந்திய பல தமிழ்போராளிக் குழுக்கள் இலங்கையில் எப்பாகத்திலும் தாக்குதல் நடத்தி பெரும் சேதம் விளைவிக்கக் கூடியவர்களாக இருந்தனர். அநுராதபுரத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் விக்டர் தலைமையில் நடாத்திய தாக்குதல் போல் எங்கும் எந்நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்தில் இலங்கை அரசும் சிங்கள மக்களும் இருந்தனர். இந்தியப் படைகள் எந்நேரமும் இலங்கைக்குள் இறங்கலாம் என்ற நிலை இருந்தது. அப்போதைய இலங்கைக் குடியரசுத் தலைவர் ஜேஆரின் கரத்தில் ஆளும் கட்சி பாராளமன்ற உறுப்பினர்களின் திகதியிடப்படாத பதவி விலகல் கடிதம் இருந்தது. இதனால் 13வது திருத்தம் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. எதிர்த்துக் கிளர்ச்சி செய்த சிங்கள மக்கள் மீது முதல் தடவையாக இலங்கை விமானப்படை தாக்குதல் நடத்தியது. சிங்கள் மக்களுக்கு இருந்த ஆபத்து நிலையை தமிழீழ விடுதலைப் புலிகளை தீரமிக்க சிங்களப்படையின் பல தியாகங்களுக்கு மத்தியில் போரில் வென்று அகற்றிவிட்டனர் என சிங்களவர்கள் நினைக்கின்றனர். அதனால் இப்போது 13வது திருத்தம் தேவை அற்ற ஒன்று. அதை அமூலாக்குவது சிங்களப்படைவீரர்களின் தியாகத்தை காலில் போட்டு மிதிப்பதாகும் என அவர்கள் கருதுகின்றனர். வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடத்துவது அவர்களை ஆத்திரப்படுத்த வைத்துள்ளது. அது மட்டுமல்ல பொறுப்புக் கூறல் என்ற பெயரில் மேற்கு நாடுகள் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் கொடுக்கின்றனர் எனவும் சிங்களவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். ஒரு சிங்களப்படைவீரனாவது தண்டிக்கப்படக் கூடாது என அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கழக்த்தில் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கும், பொதுநலவாய மாநாட்டை மையப்படுத்தி கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கும் ராஜபக்சேக்கள் வளைந்து கொடுத்தால் அது அவர்களின் செல்வாக்கை சரிப்பதாகவே இருக்கும்.

எதிர்க்கட்சிகளின் மிகப்பலவீனமான நிலை ராஜபக்சேக்கள் தேவையான நேரத்தில் தேவையானவரைத் தம்பக்கம் இழுக்கும் திறனில் இருந்து வெளிப்படுகிறது. இலங்கையின் கடனைச் சாட்டாக வைத்துக் கொண்டும் மீளிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கொடுக்கும் அழுத்தங்களை வைத்துக் கொண்டும் ராஜபக்சேக்களின் செல்வாக்கை சரிக்க வட அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் முயல்கின்றன.  இவற்றிற்கு ராஜபக்சேக்கள் வளைந்து கொடுப்பார்களா? அல்லது இவற்றை முறியடிக்க சீனாவிடம் கடன்பட்டு மேலும் சீனாவை நோக்கிச் செல்வார்களா?

Monday 5 August 2013

மனப்பாங்கை மாற்றி வாழ்க்கையில் முன்னேற சில வழிகள்

நாம் எல்லோரும் சில மனபாங்குகளைக் கொண்டுள்ளோம். எமது முயற்ச்சிகளிலும் அதனால் கிடைக்கும் வெற்றிகளிலும் எமது மனப்பாங்குகள் முக்கிய பங்காற்றுகின்றன. நாம் எல்லோரும் பிறக்கும் போது சில போக்குகளுடனும்(tendencies) சில சார்புநிலைகளுடனும்(Orientations) பிறக்கின்றோம். எமது ஆளுமைகளும் மனப்பாங்குகளும் எம்முடன் பழகுபவர்களிடமிருந்தும் எமது அனுபவங்களில் இருந்தும் உருவாகின்றன.

எம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையை நன்கு அவதானித்தால் அவர்களின் மனப்பாங்குகள் அவர்களின் வாழ்க்கையின் வெற்றி தோல்விகளில் ஆற்றிய பங்கை நாம் அறிந்து கொள்ளலாம். எமக்கு உந்து வலுவாக எமது நேர்மறையான மனப்பாங்குகளும் எமக்குத் தடைகளாக எதிர்மறையான மனப்பாங்குகளும் அமைகின்றன.

மனப்பாங்கு என்பது என்ன?
Psychologists define attitudes as a learned tendency to evaluate things in a certain way. This can include evaluations of people, issues, objects or events. Such evaluations are often positive or negative, but they can also be uncertain at times. For example, you might have mixed feelings about a particular person or issue.
மனப்பாங்கு என்பது எம் வாழ்க்கையில் எதிர்கொள்பவற்றை நாம் மதிப்பீடு செய்ய நாம் அறிந்து கொண்ட சார்புநிலையாகும். இவை நாம் சந்திக்கும் மனிதர்கள், பிரச்சனைகள், பொருட்கள், நிகழ்வுகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. அப்படிப்பட்ட மதிப்பீடு நேர்மறையானதாகவும் இருக்கலாம் அல்லது எதிர்மறையானதாகவும் இருக்கலாம் ஆனால் அந்த மதிப்பீடுகள் நேரத்திற்கு நேரம் வித்தியாசமானதாக இருக்கும். உதாரணமாக ஒருவர் பற்றிய உங்களது மதிப்பீடு காலத்திற்கு காலம் மாறுபடலாம்.



மனப்பாங்கு என்பது மூன்று கூறுகளைக் கொண்டது
   1. உணர்வுகளைக் கொண்டபகுதி. (An Emotional Component): ஒருவரோ, ஒரு நிகழ்வ்வோ, ஒரு பொருளோ, ஒரு பிரச்சனையோ உங்களை எப்படி உணரவைக்கிறது என்பது.
 2. அறிவுபூர்வமான பகுதி(A Cognitive Component): ஒருவரோ, ஒரு நிகழ்வ்வோ, ஒரு பொருளோ, ஒரு பிரச்சனையோ பற்றிய உங்களது அறிவு அல்லது நம்பிக்கை.
  3. நடத்தை பற்றிய பகுதி ( A Behavioral Component): ஒருவரோ, ஒரு நிகழ்வ்வோ, ஒரு பொருளோ, ஒரு பிரச்சனையோ உங்கள் நடத்தையை எப்படிப் பாதிக்கிறது என்பது.

மனப்பாங்குகள் எப்படி உருவாகின்றன?
மனப்பாங்குகள் எமது அனுபவங்கள், அவதானிப்புக்கள், நாம் சந்திக்கும் மனிதர்கள், எம்மை வளர்ப்பவர்கள், எமக்குப் போதிப்பவர்கள் ஆகிய பல காரணிகளால் உருவாகுகிறது.

எமது மனப்பாங்குகள் சிறுபராயத்தில் இருந்தே உருவாகத் தொடங்குகிறது. பின்னர் அது பல மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்கிறது. உங்கள் மனப்பாங்க்குகளை மாற்ற சில வழிவகைகள்:

1. மாற்ற வேண்டிய மனப்பாங்குகளை அறிந்து கொள்ளுங்கள்.
முதலில் நோய் என்ன என்று அறிந்தால்தான் அதற்கான வைத்தியம் செய்ய முடியும். உங்கள் வாழ்க்கையில் வெற்றிக்குத் தடையாக இருக்கும் மனப்பாங்குகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு நெருக்கமானவர்களின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு அவரின் வெற்றி தோல்விகளையும் உங்களது வெற்றி தோல்விகளையும் ஒப்பிடுங்கள். அவரின் வெற்றிகளுக்கு காரணமான மனப்பாங்குகள் என்ன என்ன என்பதையும் அவரின் தோல்விக்களுக்கு காரணமான மனப்பாங்குகள் என்ன என்ன என்பதையும் அறியுங்கள். இதன் மூலம் உங்களிடம் இருக்கும் உங்களுக்குப் பாதகமான மனப்பாங்குகளை அறிந்து கொள்ளலாம்.

2. உங்களுக்கு முன்மாதிரியானவர்களை(Role Models)  தெரிவு செய்து கொள்ளுங்கள்
உங்களது மாற்றப்பட வேண்டிய அல்லது உருவாக்கப்பட வேண்டிய மனப்பாங்குகள் இருப்பவர்களை இனம் கண்டு அவர்களை உங்கள் வாழ்கையின் முன்மாதிரியாக ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களின் வாழ்க்கை பற்றி நன்கு அறிந்து அவர்கள் செய்வதைப் போல நீங்களும் செய்யுங்கள்.

3. உங்கள் மனப்பாங்கு மாற்றம் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் மனப்பாங்கு மாற்றத்தால் நீங்கள் அடையும் நிலையைக் கற்பனை செய்து பார்த்து அந்த நிலையில் உங்களை நீங்களே உங்கள் மனத்திரையில் அமர்த்திக் கொள்ளுங்கள். அதில் கிடைக்கும் திருப்தி உங்கள் மனப்பாங்கை மாற்ற உந்து வலுவாக அமையும்.

4. சரியான நண்பர்களைத் தேர்ந்து எடுத்த்க் கொள்ளுங்கள்
மாற்றப்பட வேண்டிய மனப்பாங்க்கிற்கு உகந்த நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அந்த மனப்பாங்கிற்கு விரோதமான நடத்தை கொள்கை உடையவர்களுடன் பழகுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

5. உங்கள் மனப்பாங்கை மாற்றலாம் என நம்பிக்கை கொள்ளுங்கள்
எமக்கும் எமது வெற்றிக்கும் இடையில் பெரும்பாலும் இருப்பது எம்மிடமுள்ள தன்னம்பிக்கை இன்மையே. தன்னம்பிக்கை வளர்பதற்குரிய நூல்களைப் படியுங்கள். அதற்கான பயிற்ச்சிப்பட்டறைகளில் பங்கு கொள்ளுங்கள். தியானம் யோகா போன்றவை உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்க பெரிதும் உதவும்.

6. உங்கள் இலக்குகளைப் படிப்படியாக நிர்ணயம் செய்து அவற்றை அடையுங்கள்
உங்களின் மனப்பாங்கை மாற்றச் செய்ய வேண்டியவற்றை பல இலக்குகளாகப் பிரியுங்கள். ஒவ்வொரு இலக்கையும் நீங்கள் அடையும் போது உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.

7. உங்கள் வாழ்க்கையின் கடந்த கால வெற்றி நிகழ்வுகளை உங்கள் மனத்திரையில் மீண்டு ஓட விடுங்கள்
கடந்த காலத்தில் நீங்கள் அடைந்த சிறு வெற்றிகளுக்கான காரணங்களையும் அதற்கான மனப்பாங்குகளையும் நீங்கள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அந்த மனப்பாங்கை மீண்டும் உருவாக்க அல்லது மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்.

8. இசையால் உங்களை நீங்களே வசமாக்குங்கள்
நீங்கள் கவலைப்படும் போது கவலையான பாடலகளைக் கேட்காமல் உங்களை ஊக்குவிக்கும் பாடல்களையும் இசையையும் கேளுங்கள். உங்கள் மனப்பாங்குகளை மாற்றக் கூடிய பாடல்கள் நிறை உள்ளன. அதே வேளை உங்களுக்கு தோல்வி மனப்பான்மையை நிரந்தரமாக உங்கள் மனதில் பதிக்கும் பாடல்களும் உண்டு. அப்படிப்பட்ட பாடல்களை கேட்கக் கூடாது.

9. உங்கள் தவறான மனப்பாங்குகள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய் பாதிப்புகளை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கையின் வெற்றி தோல்விகளை நன்கு அலசி ஆராய்வதன் மூலம் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் வாழ்க்கையிஅ நன்கு அறிந்து கொள்வதன் மூலம் தவறான மனப்பாங்குகள் எப்படி தோல்வியை நோக்கி இட்டுச் செல்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.



உசாத்துணை:
Life Hack, Underground Success, Wiki How, about.com

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...