Saturday 29 June 2013

நல்ல நட்பின் ஒன்பது அம்சங்கள்

“A friend is one that knows you as you are, understands where you have been, accepts what you have become, and still, gently allows you to grow.”
― William Shakespeare
நல்ல நண்பர்களைக் கொண்டவர்களின் வாழ்க்கை நலமாக அமையும். முன்பின் தெரியாதவர்கள் பலருடன் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ள வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நல்ல நடபை இனம் காணுதல் முக்கியமானதாக இருக்கிறது. நல்ல நட்பின் அடையாளங்கள்:

1. சொன்னதைச் செய்தல்: நட்பிற்கு அடிப்படையாக அமைவது நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொள்ள முக்கியமாகத் தேவைப்படுவது சொன்னதைச் செய்தலாகும்.

2. அருகிருந்தால் மகிழ்ச்சி: நல்ல நண்பன் அருகில் இருந்தால் நல்ல உணர்வு எமக்குக் கிடைக்கும்.

3. கவனித்துக் கேட்டல்: நல்ல நண்பர்கள் நாம் கதைக்கும் போது கவனித்துக் கேட்பார்கள்.

4. உயர்வு கண்டு மகிழ்வார்கள்: நல்ல நண்பர்கள் வாழ்க்கையில் நாம் பெறும் வெற்றிகள் உயர்வுகள் கண்டு மகிழ்ச்சியடைவார்கள்.

5. மாற்றிக் கொள்ளுதல்: நல்ல நண்பர்கள் ஒருவருக்காக ஒருவர் தம்மை மாற்றிக் கொள்வார்கள்.

6. இரகசியம் பேணுதல்: நல்ல நண்பர்களிடம் எமது குறைகள் நிறைகளைப்  பகிர்ந்து கொள்ளுவோம். வெளியில் சொல்ல முடியாதவற்றையும் நல்ல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம். இதற்கு இரகசியம் பேணுதல் நல்ல நட்பிற்கு அவசியம்.

7. ஒத்துப் போகும் ரசனைகள்: நல்ல நண்பர்களின் ரசனைகள் ஒத்துப் போகக்கூடியவையாக இருக்கும்.

8 வழிநடத்துதல்: நல்ல நண்பர்கள் ஒருவரை ஒருவர் தவறான வழியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.

9. ஊக்கப்படுத்துதல்: நல்ல நண்பர்கள் ஒருவரை ஒருவர் வாழ்வில் முன்னேற ஊக்கப்படுத்துவார்கள்.

 True friends are like Diamonds... they are real and rare. False friends are like leaves... they are scattered everywhere.

24 sweet hrs make 1 sweet day,
7 sweet days make 1 sweet week,
4 sweet weeks make 1 sweet month,
But 1 sweet friend, Like You , helps to make 1 sweet life.

 If someone asks me what is friendship,
“I would sit next to you,
Pull you all close to me,
Put my arms around you and say proudly,
This is friendship”

நகைச்சுவைகள்:

இரு நண்பர்கள் உல்லாசப் பயணம் சென்ற இடத்தில் ஒரு காட்டுக்குள் நடந்து போய்க் கொண்டிருக்கையில் அவர்களை ஒரு கரடி துரத்தத் தொடங்கியது. இருவரும் ஓடத் தொடங்கினர். ஒரு நண்பன் சொன்னான் எம்மால் கரடியிலும் வேகமாக ஓட முடியாது என்று. அதற்கு மற்றவன் நான் உன்னிலும் வேகமாக ஓடினால் தப்பிக்கலாம் என்று.

A friend asked a gentleman how it is that he never married?
Replied the gentleman, "Well, I guess I just never met the right woman ... I guess I've been looking for the perfect girl."
"Oh, come on now," said the friend, "Surely you have met at least on girl that you wanted to marry."
"Yes, there was one girl .. once. I guess she was the one perfect girl.
The only perfect girl I really ever met. She was just the right everything .. I really mean that she was the perfect girl for me."
"Well, why didn't you marry her," asked the friend.
"She was looking for the perfect man," he said.

என்னிடம் நிறையப் பணம் இருந்தது. இப்போது எல்லாம் போய்விட்டது!!
என்ன நடந்தது?
என் மனைவிக்குத் தெரிந்து விட்டது.

Paul and his best friend were coming out of church one day, and the preacher was standing at the door as he always is to shake hands. He grabbed his friend by the hand and pulled him aside.
The Pastor said to him, "You need to join the Army of the Lord!"
Paul's friend replied, "I'm already in the Army of the Lord, Pastor."
Pastor questioned, "How come I don't see you except at Christmas and Easter?"
He whispered back, "I'm in the secret service.

You Might Be A College Student

If you average 3 hours of sleep a night
If your trash is overflowing and your bank account isn't
If you go to Wal-Mart more than 3 times a week
If you are personally keeping the local pizza place from bankruptcy
If you wake up 10 minutes before class
If you wear the same jeans 13 days in a row -- without washing them
If your breakfast consists of a coke on the way to class
If your social life consists of a date with the library
If it takes a shovel to find the floor of your room
If you carry less than a dollar on your person
If you haven't done laundry in so long you are wearing your swim suit to class
If you celebrate when you find a quarter
If your room is so cold that your toilet freezes over
If you wear a sweat suit for so long that it stands up by itself
If your backpack is giving you Scoliosis
If you get more sleep in class than in your room
If your idea of feeding the poor is buying yourself some Ramen Noodles
If you can sleep through your roommate's blaring stereo
If you live in an area that is smaller than most mobile homes
If you get more e-mail than mail...

Friday 28 June 2013

இந்திய ரூபாவின் சரிவின் காரணங்களும் நன்மைகளும் தீமைகளூம்

பொதுவாக ஒரு நாட்டின் நாணயம் மதிப்பிழக்கும் போது அந்த நாட்டின் மைய வங்கி  நிதிச் சந்தையில் தமது வெளிநாட்டு நாணயக் கையிருப்பை விற்று தமது சொந்த நாணயத்தை வாங்கி தமது நாணயத்தின் மதிப்பைப் பாதுகாக்கும். இந்திய மைய வங்கியான இந்திய ரிசேர் வங்கியின் கையிருப்பில் இப்படி ஒரு நடவடிக்கையைச் செய்யக் கூடிய அளவு வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இல்லை.  இதனால் இந்திய ரூபா கைகொடுப்பாரின்றிச் சரிந்து கொண்டிருக்கின்றது,

இந்திய ரூபாவின் மதிப்பு குறைந்தமைக்கான காரணங்கள்

1. அதிக தங்க இறக்குமதி

கிராமப் புறங்களுக்கு வங்கி வசதிகள் இல்லாமையாலும் சிண்ட் பண்ட்காரர்களால் ஏமாற்றப்பட்டமையாலும் இந்தியக் கிராமப் புற மக்களுக்கு தங்கம் ஒரு சிறந்த முதலீடு. இந்தியப் பொருளாதார வளர்ச்சியால் கிராமப்புறமக்களுக்கு கிடைத்த வருவாயில் சேமித்தவற்றை அவர்கள் தங்கத்தில் முதலிட்டமையால் இந்தியா உலகிலேயே அதிக தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடாக இருக்கிறது. 2013 மே மாதம் இந்தியா 162 தொன் தங்கத்தை இறக்குமதி செய்தது.

2. வெளிநாட்டு முதலீட்டாளரகள் நம்பிக்கை இழந்தமை.
2ஜி அலைக்கற்றை ஊழல் அம்பலமானதும் அதைத் தொடர்ந்து இந்திய அரசு தனது விற்பனையைத் திரும்பப் பெற்று மீள விற்பனை செய்ததும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. ஒன்றில் முதலீட்டாளர்களிடம் இலஞ்சம் பெறாமல் செயற்பட வேண்டும் அல்லது அவர்களிடம் பெற்ற இலஞ்சத்திற்கு உரிய இலாபம் அவர்கள் பெற வழி செய்ய வேண்டும். இந்திய அரசின் இரண்டும் கெட்டான் நிலை வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது. 2012இல் வெளிநாட்டு நேரடி முதலீடு 29 விழுக்காட்டால் குறைந்தது. முதலீடுகள் உள்ளே வரும் போது இந்திய ரூபாவின் மதிப்புக் கூடும். முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை விற்றுக் கொண்டு வெளியேறும் போது ரூபாவின் மதிப்பு குறையும்.

3. தன்வாயால் கெட்ட இந்திய மத்திய வங்கி
2014-ம் ஆண்டு இந்தியப் பாராளமன்றத்திற்கான பொதுத் தேர்தல் வரவிருப்பதால் இந்திய மக்களின் கைகளில் பணத்தை அதிகம் புழங்க விடவேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்திய ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். இந்திய மத்திய வங்கியான ரிசேர்வ் வங்கி இந்திய வட்டி வீதம் குறைக்கப்படலாம் என்ற பொருள் பட அறிக்கை விட்டமை உலக நிதிச் சந்தையில் இந்தியா ரூபாவின் மதிப்பை பாதித்தது,

4. இந்திய முதலாளிகளை வெளிநாடுகளில் கடன பெற அனுமதித்தமை

இந்திய ரிசேர்வ் வங்கி இந்தியப் பெரு முதலாளிகளை 2004இல் இருந்து 220பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாகப் பெற அனுமதித்தது. இது டாலருக்கான கேள்வியை(கிராக்கியை) அதிகரித்து ரூபாவிற்கான கேள்வியைக் குறைத்து ரூபாவின் மதிப்பைக் குறைத்தது.

5. இறக்குமதி அதிகரிப்பு.
இந்தியாவின் எரிபொருள் இறக்குமதி அதிகரித்துக் கொண்டே போகின்றது. இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 43 விழுக்காடு அதிகரித்துள்ளது. கோதுமை அதிகரித்துள்ளது. மோசமான இறக்குமதி -ஏற்றுமதிப் பற்றாக்குறையுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாம் இடம் வகிக்கிறது.

இந்திய ரூபாவின் மதிப்பிறக்கத்தில் உள்ள நன்மைகள்:


1. ஏற்றுமதி அதிகரிக்கும்
ரூபாவின் மதிப்பிறக்கத்தால் இந்தியப் பொருட்களை வெளிநாட்டவர்கள் மலிவான விலைக்கு வாங்கலாம். இது இந்திய ஏற்றுமதியை அதிகரிக்கும்.
2. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நன்மையடையும்
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப வேலைகளைச் செய்யும் நிறுவங்கள் ரூபாவின் மதிப்பிறக்கத்தால் நன்மையடையும்,
3. உல்லாசப் பயணிகள் வருகை அதிகரிக்கலாம்
வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவிற்குப் பயணம் செய்யும் போது மலிவான ரூபாவால் அவர்களின் செலவீனங்கள் இந்தியாவில் குறைவானதாக இருக்கும்.
4. வெளிநாட்டு முதலீடுகள் மீண்டும் வரலாம்
இந்திய ரூபா ஆகக் குறைந்த மதிப்பை அடையும் போது இந்தியாவில் வெளிநாட்டவர்கள் முதலீடு செய்ய விரும்புபவர். பின்னர் இந்திய ரூபாவின் மதிப்பு அதிகரிக்கும் போது அவர்கள் தமது முதலீட்டை விற்று இலாபமீட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
5. வெளிநாடுகளில் வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சொத்துக்களை வாங்குவார்கள்
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் சொத்துக்களை வாங்க விருப்பம் காட்டுவார்கள். இந்திய ரூபா மதிப்பிறக்கமடைந்திருக்கும் போது இந்தியச் சொத்துக்கள் அவர்களுக்கு மலிவானதாக இருக்கும்.
6. ரூபா உரிய மதிப்பை பெறுகிறது.  இந்திய ரூபாவின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக அதிக மதிப்பைக் கொண்டிருந்தது. இந்த மதிப்பிறக்கத்தால் ரூபா உரிய மதிப்பை அடையும் என்கின்றனர் சிலர்.
7. மிகப்பெரிய நன்மை ராகுல் காந்தி அடுத்த தலைமை அமைச்சராக வரும் வாய்ப்புக்கள் குறைவு.


இந்திய ரூபாவின் மதிப்பிறக்கத்தில் உள்ள தீமைகள்:

1. எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கும். இதனால் பல உற்பத்திப் பொருட்களின் விலைகள், பயணச் செலவுகள் அதிகரிக்கும். இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். பொதுவாக விலைவாசி அதிகரிக்கலாம்.
2. இறக்குமதித் துறை பாதிப்படையும். இறக்குமதி செய்த பொருட்களை வர்த்தகம் செய்வோர், முலப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து உற்பத்தி செய்வோர் தமது இலாபத்தை இழக்க வேண்டி வரும்.
3. வெளிநாட்டில் படிப்பை மேற்கொள்வோரும் இனிப் படிக்க விரும்புவோரும் அதிக செலவைச் சந்திக்க வேண்டி இருக்கும்.
4. இந்தியாவின் வெளிநாட்டுக் கடன்களுக்கு இந்திய அரசும் இந்தியப் பெரு முதலாளிகளும் அதிக வட்டியைக் கொடுக்க வேண்டி இருக்கும்.
5. இந்திய விமானப் போக்குவரத்துத் துறை பெரும் சுமையைச் சுமக்க வேண்டி வரும்.

பிந்திக் கிடைந்த செய்திகளின் படி அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபா சற்று மதிப்பேற்றம் பெற்றுள்ளது.

Thursday 27 June 2013

சீனாமீதான உலகத்தின் அச்சம் குறைகிறது.

உலகத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா விரைவில் அமெரிக்காவிடமிருந்து முதலாவது நிலையைக் கைப்பற்றிவிடும் என்றும் இனி வரும் காலங்களில் சீனா உலகப்பந்தில் ஆதிக்கம் செலுத்தப் போகிறது என்றும் பல எதிர்வுகள் கூறப்பட்டன. சீனாவும் தென் சீனக்கடல், கிழக்குச் சீனக்கடல், இந்தியாவின் அருணாசலப் பிரதேசம், கஷ்மீர் பிரதேசம் போன்றவை தன்னுடையது என்று அழுத்திக் கூறிவந்தது.

சீனா தனது படைத் துறைச் செலவையும் விண்வெளி ஆய்வுச் செலவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தச் செலவீன அதிகரிப்பு சீன விரிவாக்கற் கொள்கையை உறுதி செய்வதாகக் கருதப்பட்டது. கனிம வளம் மிக்க ஆபிரிக்க நாடுகளையும் எரி பொருள் வளமிக்க மத்திய கிழக்கு நாடுகளையும் சீனா தன்பக்கம் இழுக்க முயற்ச்சிக்கிறது.

அச்சப்பட்ட ஒஸ்ரேலியர்கள்
சீன விரிவாக்கத்தையிட்டு அதிக அச்சப்பட்ட மக்களாக ஒஸ்ரேலியர்கள் காணப்பட்டனர்.ஆனால் தற்போது சீனா தொடர்பான அச்சம் ஒஸ்ரேலியர்கள் மத்தியில் குறைந்து வருவதாக அங்கு செய்யப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. பிபிசியின் உலகச் சேவை பல நாடுகளில் எடுத்த கருத்துக் கணிப்புக்களின் படியும் சீனா தொடர்பான அச்சம் மக்களிடையே குறைந்து வருகின்றது. உலக ஆதிக்கம் செலுத்தக் கூடிய 25 நாடுகளின் பட்டியலில் சென்ற ஆண்டு 5வதாக இருந்த சீனா இந்த ஆண்டு 9வதாக இறங்கிவிட்டது. சீனா உலகத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்பதில் சீனர்கள் குறைந்த நம்பிக்கை உடையவர்களாகக்  காணப்படுகின்றனர். பெரும்பான்மையான சீனர்கள் தமது நாடு உலகத்தில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பவில்லை.

சீனாவிற்கு எதிராகத் திரளும் நாடுகளும் தனித்த சீனாவும்.
ஒஸ்ரேலியா, ஜப்பான், வியட்னாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் இணைவதில் அக்கறை காட்டுகின்றன. ஒஸ்ரேலிய மக்களிடை அமெரிக்காவுடனான நட்பை வளர்க்க வேண்டும் என்ற விருப்பம் அதிகரித்து வருகிறது. ஜப்பானிய மக்களிடை சீனாவிற்கு கிழக்குச் சீனக் கடலில் எந்த வித விட்டுக் கொடுப்பையும் மேற்கொள்ளாமல் சீனாவை அடக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்து வருகிறது. ஜப்பானியர்கள் தமது அரசியல் யாப்பைத் திருத்தி தாம் ஒரு படைத்துறை வல்லரசாக உருவாக வேண்டும் என்கிற விருப்பம் அதிகரித்து வருகிறது. ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து சீனாவை அடக்க வேண்டும் என நம்புகிறது. ஜப்பானின் தற்போதைய ஆட்சியாளர்கள் இந்தியாவுடன் தமது நட்பை வளர்த்து சீனாவை அடக்க வேண்டும் எனக் கருதுகின்றனர். சீனாவை உலகின் மிகவும் தனித்த வல்லரசு என பன்னாட்டு அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். மற்ற வல்லரசு நாடுகளுக்கு பல நட்பு நாடுகள் உண்டு. அமெரிக்கா, பிரித்தானிய, பிரான்ஸ் ஆகிய மூன்று வல்லரசு நாடுகளும் தமக்கிடையே ஒரு நட்பையும் பல ஒத்துழைப்புக்களையும் பேணி வருகின்றன. சீனாவின் ஒரே நட்பு நாடான வட கொரியாவும் சீனாவை சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்கிறது.

சீனப் பொருளாதார வளர்ச்சிப் பூச்சாண்டி
சீனாவின் பொருளாதாரம் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் என்பதை பல அரசியல் மற்றும் பொருளியல் விமர்சகர்கள் சந்தேகத்துடனேயே அணுகுகின்றனர். சினாவின் புள்ளிவிபரங்களில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. சீனா தனது பொருளாதார உற்பத்தியில் தேவையற்றவனவற்றையும் இணைக்கிறது. இந்தத் தேவையற்ற துறைகளை விட்டுவிட்டுப் பார்த்தால் சீனப் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறியதே என்கின்றனர் அவர்கள்.

சீன உள்ளக முரண்பாடு
சீன மக்களிடையே எடுத்த கருத்துக் கணிப்பின் படி சின அரச கட்டமைபில் 25%இனர் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் 36%மான சீனர்கள் சீனா அரசும் பொருளாதாரமும் அமெரிக்காவைப் போல் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். சீனக் கலாச்சாரம், அன்பு, இயற்கைக்குத் தலைவணங்கல், குடுப்ப பாசம், இல்லாதவர்களுக்கு உதவுதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் சீன அரச செயற்பாடுகள் இவற்றிற்கு முரணானாந்தாகவே இருக்கிறது. இந்த உள்ளக முரண்பாட்டை சீன ஆட்சியாளர்கள் முதலில் சரிப்படுத்த வேண்டும் அதன் பின்னரே சீன விரிவாக்கமோ அல்லது உலக ஆதிக்கமோ சாத்தியமாகும்.

Wednesday 26 June 2013

சீனாவில் கடன் நெருக்கடியா கடன் நொறுக்கலா? - Credit Crisis or Credit Crunch?

சீனாவின் பங்குச் சந்தை 25/6/2013 செவ்வாய்க் கிழமை கடந்த நாலரை ஆண்டுகளில் மோசமான தாழ் நிலைக்கு வீழ்ச்சியடைந்தது. 2013 பெப்ரவரி சீனப் பங்குச் சுட்டெண் இருந்த நிலையில் இருந்து 20% விழுக்காடு சீனப் பங்குச் சந்தையில் நிகழ்ந்துள்ளது. சீனாவில் ஒரு கடன் நெருக்கடி வரலாம் என்ற அச்சத்தின் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. சீன பங்கு விலைகள் விழ்ச்சியடைவதைத் தடுக்க சீன மத்திய வங்கியான மக்கள் வங்கி தீவிரமாக நிதிச்சந்தையில் இறங்கிச் செயற்பட்டது.

சீன மக்கள் வங்கி கடன் பிரச்சனையில் இருக்கும் நிதி நிறுவனங்களுக்கு போதிய நிதி உதவி தான் வழங்குவதாகவும் கடன் பிரச்சனை வாராமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உறுதியளித்தமையைத் தொடர்ந்து பங்குச் சந்தை சாந்தியடைந்தது. சீன மத்திய வங்கியான மக்கள் வங்கி  8.2பில்லியன் டாலர்களை சீன வங்கிகளுக்கான நிவாரண நிதியாக ஒதுக்குவதாக அறிவித்தது.

2008இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சினப் பொருளாதரத்தின் கடன்பளு  $9.0 trillion இல் இருந்து  $23.0 trillion இற்கு அதிகரித்தது.  நாட்டின் பொருளாதார் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் (GDP) இது 40%இல் இருந்து 200% ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் கடன் பிரச்சனையைப் பற்றி அறிவதற்கு முன்னர் சொத்துக் குமிழி, அரசவட்டி-வங்கிகளிடை வட்டி வித்தியாசம் போன்றவற்றைப்பற்றி சற்றுப் பார்க்க வேண்டும்

சொத்துக் குமிழி(Property Bubble)
ஒரு நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தியடையும் போது அங்கு வீடு, பணிமனைக் கட்டிடம் போன்ற சொத்துக்களின் விலைகள் உயரும். விலை உயரும் போது குறுகிய கால இலாபம் ஈட்டும் வியாபாரிகள் சொத்துக்களை வாங்கி விற்கத் தொடங்குவார்கள். இவர்கள் சொத்துக்களை வாங்க வரும்போது அவற்றின் விலைகளில் சடுதியான அதிகரிப்பு ஏற்படும். இதனால் சொத்துக்களை வாங்க முடியாத நிலை ஏற்படும். இதன் போது பொருளாதாரத்தின் வளர்ச்சி குன்றத் தொடங்க. சொத்து விலைகள் சடுதியாகக் குறைந்து முன்பிருந்த விலைகளிலும் பார்க்க குறைவான விலைக்கு குறையும். இப்படி சொத்து விலை அதிகம் அதிகரித்து பின்னர் மோசமாக வீழ்ச்சியடைவதை சொத்துக் குமிழி என்பர்((Property Bubble))

சொத்துக் குமிழியும்(Property Bubble)  கடன் நெருக்கடியும்
சொத்துக்கள் விலை அதிகரித்த நிலையில் அவற்றை வாங்குவதற்கு ஈட்டுக் கடன் கொடுத்த வங்கிகள் பின்னர் அச்சொத்துகளின் விலை பெரும் சரிவை அடையும் போது தமது ஈட்டுக்கடனை மிளப் பெறமுடியாத வங்கிகள் கடன் நெருக்கடிக்கு உள்ளாகும். இந்த நிலை அமெரிக்கா, ஸ்பெயின், கிரேக்கம் போன்ற நாடுகளில் நடந்தன. அமெரிக்காவின் நான்காவது பெரிய முதலீட்டு வங்கியான லீமன் பிரதர்ஸ் திவாலானது இந்தச் சொத்துக் குமிழியால்தான். சொத்துக் குமிழியால் பல வங்கிகள் நிதி நெருக்கு உள்ளாகியும் திவாலாகியும் போகும் போது கடன் நெருக்கடி ஏற்படும்.


அரச கடன் வட்டிக்கும் வங்கிகளிடைக் கடன் வட்டிக்கும் இடையிலான வித்தியாசம்.
அரச கடன் வட்டிக்கும் வங்கிகளிடைக் கடன் வட்டிக்கும் இடையிலான வித்தியாசம் கடன் நெருக்கடிக்கான ஒரு சுட்டியாகக் கருதப்படுகிறது. ஒரு அரசு தனது குறுங்காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தை தானே நிர்ணயிக்கும். வங்கைகள் தமக்கிடையிலான கடன் பரிமாற்றத்திற்கு என்று ஒரு வட்டி வீதத்தை வைத்திருக்கும். LIBOR எனப்படும் London Inter Bank Offer Rate உலக நிதிச் சந்தையில் ஒரு பிரபல வட்டி வீதமாகும். அமெரிக்க அரசின் குறுங்கால கடன் வட்டி வீதத்திற்கும் வங்கிகளிடையான கடன் வட்டி வீதத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசம் TED spread எனப்படும். லீமன் பிரதர்ஸ் முதலீட்டு வங்கி முறிவடையும் போது இந்த TED spread மிக அதிகரித்துக் காணப்பட்டது. அமெரிக்காவின் TED spreadஐப் போல் சீனாவில் China O/N Repo rate இருக்கிறது. இந்த China O/N Repo rate 20-06-2013இலன்று மிக உயர்வாகக் காணப்பட்டது.

2008இல் லீமன் பிரதர்ஸ் வீழ்ச்சியின் போது அமெரிக்காவில் நடந்தது
இன்று சீனாவில் நடக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் என்றுமே இல்லாத அளவு China O/N Repo rate 13.1% ஆக உயர்ந்தது. இதனால் 20/06/2013 வியாழக்கிழமை சீன நிதிச் சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. சீனப் பொருளாதாரத்தைப் பற்றிய பலத்த சந்தேகம் நிதிச் சந்தையில் ஏற்பட்டது. சீனாவின் இறுக்கமான இரகசிய நிலைப்பாட்டால் நிதிச் சந்தையில் பல வந்ததிகள் பரவத் தொடங்கின. சீனாவில் பெரும் கடன் நெருக்கடி வராமல் இருக்க சீன அரசு வேண்டு மென்றே ஒரு சிறு கடன் நெருக்கடியை உருவாக்குவதாக செய்திகள் அடிபட்டன. சீன அரச வங்கிகள் தமது கடன் நிலுவைகளை உரிய நேரத்தில் செலுத்த முடியாமல் தவிப்பதாகச் செய்திகள் எழுந்தன. ஆனால் அண்மைக்காலங்களாக சீன வங்கிகளில் அதிக கடன்கள் கொடுத்தன என்பதும் சீன வங்கிகள் அதிக கடன் பெற்றன என்பதும் உண்மை. இந்தக் கடனகள் சீனப் பொருளாதாரத்தை வளர்த்தன. ஆனால் கடன் குமிழி வெடிக்கும் நிலை இப்போது ஏற்பட்டு விட்டதா என்பதுதான் இப்போது பெரும் கேள்வியாக இருந்தது. சீனக் கடன் நெருக்கடியைத் தவிர்க்க சீன அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அதன் பொருளாதார வளர்சியின் வேகத்தைக் குறைக்கும் என நிதிச் சந்தையில் எதிர்பார்க்கப்பட்டது.  இதனால் சீனப் பங்குச் சந்தை 25/06/2013இல் பெரும் வீழ்ச்சியைக் கண்டது.

கடன் நெருக்கடியா கடன் நொறுக்கலா? - Credit Crisis or Credit Crunch?

சீன வங்கிகளிடையான கடன் பரிமாற்றங்கள் அண்மைக்காலங்களாகக் குறைந்துள்ளது. அத்துடன் வங்கிகளிடையான கடன்களுக்கன வட்டி வீதம் அதிகரித்துள்ளது. இது சீனப் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பாக்கப்படுகிறது. சீனா ஆண்டொன்றிற்கு இலட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது. அப்படிச் செய்யாவிடில் சீனாவில் பெரும் கிளர்ச்சி ஏற்படும் என சீன ஆட்சியாளர்கள் நன்கு அறிவர். இதற்காக சரியாகத் திட்டமிட்டு கடந்த இருபது ஆண்டுகளாக சீனப் பொருளாதாரத்தை வேகமாக வளரச் செய்தனர். வளர்ச்சி குறையும் போது தம்மிடம் இருக்கும் மூன்று ரில்லியன் அமெரிக்க டாலர்கள் வெளிநாட்டு நாணயக் கையிருப்பைப் பயன்படுத்தி பல நாடுகளுக்கு பொருளதாரக் கடன், உதவி, முதலீடு என்ற பெயர்களில் தமது தொழிலாளர்களை அனுப்பி அங்கு பணி புரிய வைக்கின்றனர். 2008-ம்  ஆண்டு நிகழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தமது பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து வைத்திருக்க சீன ஆட்சியாளர்கள் தமது நாட்டில் வட்டி வீதத்தைக் குறைத்து பணப் புழக்கத்தை அதிகரித்து பொருளாதார நடவடிக்கைகளை அதிகரித்தனர். தற்போது இந்தத் திட்டத்தில் மண் விழுந்துள்ளது.  சீனாவில் தற்போது ஏற்பட்டுள்ளது கடன் நொறுக்கல் மட்டுமே எனக் கூறலாம். ஆனால் இந்தக் கடன் நொறுக்கல் நிச்சயம் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். HSBC வங்கி 2014இல் சீனப் பொருளாதார வளர்ச்சி 8.4%இல் இருந்து 7.4% ஆகக் குறையும் என மதிப்பிட்டுள்ளது. ஜப்பானிய வங்கி ஒன்று இனி வரும் காலங்களில் பல சீன நிதி நிறுவனங்கள் தமது கடன் மீளளைப்பைச் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்கின்றது.  பாதிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியால் பல சீன நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்படலாம். இது தொடர்ந்து நடந்து கொண்டு போக இன்னும் சில ஆண்டுகளில் கடன் நெருக்கடி தோன்ற வாய்ப்புண்டு. ஆனால் சீன ஆட்சியாளர்களையோ கம்யூனிஸ் கட்சியையோ குறைத்து எடை போட முடியாது. சீன ஆட்சியாளர்கள் தமது பொருளாதாரத்தை தமது இரும்புப் பிடிக்குள் வைத்திருக்கிறார்கள். பாதிப்பிற்கு உள்ளாகப் போவது சீனர்கள் மட்டுமல்ல. உலகப் பொருளாதாரமே வளர முடியாமல் தவிக்கலாம்.

Tuesday 25 June 2013

தலைமைத்துவம்: உங்களுக்கு வேண்டியவற்றைச் செய்விப்பது எப்படி?

வீட்டிலும் சரி பணிமனையிலும் சரி உங்களுக்கு வேண்டியவற்றை மற்றவர்களைக் கொண்டு செய்விக்க வேண்டியது அவசியமாகிறது. உங்கள் சொற்படி மற்றவர்கள் கேட்டு உரிய பணிகளை அவர்களைக் கொண்டு செய்விக்க சில பண்புகள் உங்களுக்கு அவசியமாகின்றன. அப்பண்புகள் சில:

1. செவி கொடுத்தல்: மற்றவர்கள் பேசும்போது காது கொடுத்து அக்கறையுடன் கேளுங்கள். அவர்கள் பேசும் போது நீங்கள் என்ன பேசலாம என்பதில் அக்கறை செலுத்துவதைக் குறைத்து மற்றவர் உங்களுக்கு என்ன சொல்ல வருகிறார் என்பதை சரியாகக் கேட்டு அவர்களின் உள்கிடக்கையை அறிந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் சொல்பவற்றைக் கேட்டல் ஐந்து முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது. 1. கேட்டல், 2. புரிதல்,  3. மதிப்பிடல், 4. நினைவிற் கொள்ளல், 5. பதில் கூறல்/பதில் நடவடிக்கை எடுத்தல். தேவை ஏற்படும் போது நீங்கள் கேட்டவற்றை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செவி மடுப்பது மற்றவர்களுக்கு அவர்களின் முக்கியத்துவத்தையும் அவர்களின் கடமையின் முக்கியத்துவத்தையும் உணர வைக்கும்.

2. மற்றவர்களுக்கு உதவுங்கள்: நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கும் பணியில் உள்ள சிரமங்களைப் புரிந்து அதைச் சமாளிக்க நீங்கள் இட்ட பணியைச் செய்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். உங்களிடமிருந்து தங்களுக்கு உதவி கிடைக்கும் என நம்புபவர்களே உங்கள் தலைமையை ஏற்றுக் கொள்வார்கள்.

3. சொல்லுங்கள் கட்டளையிடாதீர்கள்: செய்ய வேண்டிய பணியின் முக்கியத்துவத்தையும் அதனால் செய்பவரும் நீங்களும் அடையும் நன்மைகளையும் சரியாக பணி கொடுப்பவருக்குப் புரிய வையுங்கள். கட்டளையிட்டால் அவர் யாருக்காகவோ தான் செய்வது போல உணர்வார்.

4. விருப்பங்களை உணர வையுங்கள்: செய்ய வேண்டிய பணியில் உங்களுக்கு உள்ள விருப்பத்தையும், பணி செய்பவர் மீது உங்களுக்கு இருக்கும் விருப்பத்தையும் சொல்லுவதுடன் பணி செய்பவருக்கு பணி மீது விருப்பம் வரச்செய்யுங்கள்.  

5. அடிக்கடி ஆச்சரியத்திற்கு உள்ளாக்குங்கள்: உங்களுக்காக பணிசெய்பவர்களை அடிக்கடி எதிர்பாராத மகிழ்ச்சியைக் கொடுத்து ஆச்சரியப் படுத்துங்கள். கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, மிகை ஊதியம்(போனஸ்), ஊதிய உயர்வு போன்றவற்றை பணியாளர் எதிரபார்பதற்கு முன்னர் கொடுத்து அவரை மகிழ்ச்சியில் திணறடியுங்கள். இது பணியிலும் உங்களிலும் ஒரு பிடிப்பை அவருக்கு ஏற்படுத்தும்.

6. அந்த இரண்டு மந்திரச் சொற்கள்: நன்றி, மன்னிக்கவும் இந்த இரண்டு வார்த்தைகளையும் தேவையான இடங்களில் தாராளமாகப் பயன்படுத்துங்கள். அதுவும் உங்கள் உண்மையான தூய்மையான மன நிலையில் இருந்து இந்த வார்த்தைகளை வெளிப்படுத்துங்கள்.

7. உங்கள் தன்னம்பிக்கையும் தீர்மானம் எடுக்கும் திறனும்: உங்கள் தன்னம்பிக்கையும் தீர்மானம் எடுக்கும் திறனும் உங்கள் பால் மற்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த இரண்டு திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

8. திருக்குறளை மறவாதே: இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். இந்தக் குறலில் முக்கியமான சொல் இதனால் என்பதாகும் இந்தத் திருக்குறளுக்கு மூவர் விளக்கமளித்துள்ளனர்:
கலைஞர் உரை: ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
மு.வ உரை: இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும். 
சாலமன் பாப்பையா உரை:இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.
இதனால் என்ற சொல்லிற்கு கலைஞர் உரையில் பொருள் கொடுக்கப்படவில்லை. மு. வரதராசனார் உரையில் இக்கருவியால் எனப்படுகிறது, பாப்பையா உரையில் ஆள்பலம். பொருள் பலம் இரண்டும் சொல்லப்பட்டுள்ளது. பணியை முடிக்கத் தேவையானவை பணி செய்பவருக்கு கொடுக்கப்படவேண்டும்.

Sunday 23 June 2013

போர் முனையில் ஒரு பேனா முனை

எதை நான் இழந்தாலும்
எதிரிக்கு அடங்காத வரை
நான் தோற்காதவனே

எரிகுண்டில் கருகிய கருவறையால்
தீயும் அங்கே களங்கமானது
அவலக் குரல்களில் அலையியக்கங்களால்
காற்றும் அங்கு மாசுபட்டது
சிதறிய உடல்கள் அழுகிப் புதைந்து
நிலமும் அங்கே அழுக்கானது
அலுமினியப் பறவைகளின் கொலைவெறியால்
வானும் அங்கு கறை பட்டது
சிந்திய இரத்தங்கள் கலந்து
நீரும் தூய்மை கெட்டது
மாநிலமும் மாசுபட்டது
மாநிடமும் மாசுபட்டது

நான் ஒரு போராளியின் மனைவி
கணவன் புனர்வாழ்வு முகாமில்
அதனால் வாழ்விழந்தவன்
தேடி அலைவான் படைவீரன்
வார்த்தைகளால் வம்பு செய்வான்
தொண்டர் அமைப்பினன்
தினமும் கதறும் தாய்
விடை சொல்ல முடியாக் கேள்விகள்
தினம் கேட்கும் மகன்
வெறுமை இங்கே கண்ணீரால்
நிரம்பி வழிகிறது


சிரியாவில் குண்டுமழைக்குள் கவிபாடும் சிறுமி



போர் முனையில் போராளியின் கவி வரிகள்


கவி வரிகள் - நான் சிரியாவில் பிறந்தவன்



நகைச்சுவை: காங்கிரசுக் கட்சியில் இணைந்த தற்கொலையாளி

அந்த இளைஞனுக்கு காதலில் தோல்வி! வேலை இல்லாததால் தண்டச் சோறு என்ற பெயர் வேறு. விரக்தியின் எல்லைக்குச் சென்று விட்டான். தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிட்டான் பாவம்!!

தனது உயிரை மாய்த்துக் கொள்ள முன்னர் தன்னை எண்ணிப் பார்த்தான். தன் இனத்தை எண்ணிப் பார்த்தான். தான் தனக்கும் நல்லது செய்யவில்லை, தனது இனத்திற்கும் நல்லது செய்யவில்லை என்பதை எண்ணும் போது தன் மீது அவனுக்கு இருந்த வெறுப்பு மேலும் அதிகரித்து விட்டது. தான் இறக்க முன்னர் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து சத்திய மூர்த்தி பவனுக்குச் சென்று காங்கிரசுக் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தான். சத்திய மூர்த்தி பவனில் இருந்தவர்களுக்கு தமது கட்சியிலும் ஒருவன் வந்து அதுவும் ஒரு உண்மையான தமிழன் வந்து சேர்கிறானே என்று ஆச்சரியம். ஒருவர் அவனைத் தனியே அழைத்துச் செல்ல முற்பட்டார். அவர் சிதம்பரம் குழுவைச் சேர்ந்தவர் என்பதால் மற்றக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் உடனே அவர்கள் மீது பாய்ந்து தாக்கத் தொடங்கினார்கள். அந்த இளைஞன் மிகுந்த சிரமப்பட்டு 7 கதர் வேட்டிகள் கிழிபட்டும், 5 கதர் வேட்டிகள் காற்றில் பறந்த பின்னர் எல்லோரையும் சமாதானப்படுத்தினான். பின்னர் சிதம்பரம் குழுவைச் சேர்ந்தவர் தான் அந்த இளைஞனைத் தனது குழுவில் இணைக்கக் கொண்டு செல்லவில்லை ஏன் காங்கிரசில் இணைகிறாய் என்று கேட்கத்தான் அழைத்துச் செல்ல முயன்றேன் என்றர். அப்போது அந்த இளைஞன் தனது சட்டைப்பையில் இருந்த நஞ்சுப் புட்டியை எடுத்துக் குடித்து விட்டான். எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்க அந்த இளைஞன் தான் இறப்பதற்கு முன்னர் தமிழினத்திற்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என எண்ணினேன். தமிழினத்திற்கு செய்யக்கூடிய ஒரே நன்மை ஒரு காங்கிரசுக்காரனையாவது போட்டுத் தள்ள வேண்டும். அதற்கு நான் எடுத்த முடிவு காங்கிரசில் சேர்ந்து விட்டுத் தற்கொலை செய்வது என்பதே என்றான்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...