Saturday 27 April 2013

செங்கோடு தாண்டிய சிரியாவும் சிந்திக்கும் அமெரிக்காவும்

சிரியாவின் ஆட்சியாளர்களின் படையினர் வேதிப்படைக்கலன்களை (chemical weapons) தமது உள்நாட்டுப் போரில் பாவித்தால் அது செங்கோடு தாண்டியது போலாகும் என்று அமெரிக்கா 2011இல் சிரிய அதிபர் அல் அசாத்தை எச்சரிந்து இருந்தது. இப்போது அல் அசாத் ஆதரவுப் படையினர் வேதிப்படைக்கலன்கள் பாவித்தமைக்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்கா ஏன் தாமதிக்கிறது?

அமெரிக்கத் தயக்கம் ஏன்?
அமெரிக்க அதிபர் தேர்தலின் பின்னரும் சிரியாவில் ஒரு படைத்துறைத் தலையீட்டைச் செய்யவும் சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் வழங்கவும் அமெரிக்கா காட்டும் தயக்கம் அதனது மத்திய கிழக்கு நட்பு நாடுகளையும் ஐரோப்பிய நட்பு நாடுகளையும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. துருக்கி, கட்டார், சவுதி அரேபியா ஆகிய அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகள் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் சற்று அதிருப்தியடைந்துள்ளன. அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனும் உளவுத்துறையான சிஐஏயும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களிற்கு படைக்கலன்களை வழங்க விடுத்த வேண்டுகோளை அமெரிக்க நிர்வாகமான வெள்ளை மாளிகை மறுத்து விட்டது. பராக் ஒபாமாவின் நிர்வாகம் படைத்துறையிலான தலையீட்டிற்கும் படைக்கலன்கள் வழங்குவதற்கும் காட்டும் தயக்கத்தின் முக்கிய காரணங்கள்:

1. பஷார் அல் அசாத்தின் பின்னர் வரும் ஆட்சியாளர்கள் இசுலாமிய அடிப்படைவாதிகளாக இருக்க மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
2. சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கும் படைக்கலன்கள் அவர்களுக்குள் ஊடுருவியிருக்கும் அல் கெய்தா போன்ற தீவிரவாத அமைப்பினரின் கைகளுக்குப் போவதுடன் அவற்றை இயக்கும் பயிற்ச்சியையும் அவர்களுக்கு வழங்கிவிடும். இதில் முக்கிய இடம் பெறுவது விமான எதிர்ப்பு ஏவுகணைகள்.
3. சீனா, இரசியா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு தமது தீவிர ஆதரவைக் காட்டுகின்றன. இரசியாவும் சீனாவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சிரியாவிற்கு எதிராகக் கொண்டுவந்த இரு தீர்மானங்களை இரத்துச் செய்து விட்டன. தனது ஒரே ஒரு படைத்தளம் உள்ள நாடான சிரியாவில் இரசியா மிகப் புதிய தர விமான எதிர்ப்பு முறைமையை நிறுவியதுடன் தனது நிபுணர்களையும் அங்கு சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. இது சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிரான விமானத் தாக்குதல்களை கடினமாக்கியுள்ளது.
4. சிரியாவில் அமெரிக்காவின் நடவடிக்கையையும் இசுலாமிய மார்க்கத்திற்கு எதிரான ஒரு அமெரிக்கச் செயற்பாடாக இசுலாமியத் தீவிரவாத இயக்கங்கள் பரப்புரை செய்யலாம்.
5. ஜோர்ஜ் புஷ் நிர்வாகம் விட்ட தவறுகளை குறிப்பாக ஈராக்கில் போர் தொடுத்தமை, தானது நிர்வாகம் செய்யக் கூடாது என்பதில் ஒபாமா கவனமாக இருக்கிறார். 

சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலங்கள் வழங்குவதிலும் சிரியாவில் தலையிடுவதிலும் அமெரிக்க நிர்வாகம், படைத்துறை, உளவுத்துறை ஆகியவற்றிடையே உள்ள முரண்பாடு போல ஐரோப்பிய நாடுகளிடையும் முரண்பாடு இருக்கிறது. சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவுவதில் பிரான்சும் பிரித்தானியாவும் தீவிரம் காட்டுகின்றன. ஆனால் ஜெர்மனியும் ஸ்கண்டினேவிய நாடுகளும் தயக்கம் காட்டுகின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் விரைவில் இது பற்றிக் கூடி முடிவெடுக்க இருக்கின்றனர். இவர்கள் ஒரு மனதாக முடிவெடுக்காவிடில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தனித்தனியாக தமது முடிவுகளை எடுத்து சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவலாம்.

கவனமாகக் காய் நகர்த்தும் அசாத்
சிரிய அதிபர் மருத்துவர் அசாத் தனது காய்களைக் கவனமாக நகர்த்துகிறார். முதலில் முக்கியத்துவமற்ற பிரதேசங்களை கிளர்ச்சிக்காரர்களுக்கு விட்டுக் கொடுத்தார். அவற்றை நிர்வகிப்பதிலும் பாதுகாப்பதிலும் யாரின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது என்ற முரண்பாட்டிலும் கிளர்ச்சிக்காரர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. பின்னர் அசாத் தனது வேதிப்படைகலன்கள் (chemical weapons)கவனமாகவும் மிகவும் குறைந்த அளவிலும் பாவிக்கிறார். மோதும் இருதரப்பினரும் தமது கட்டுப்பாடுப் பிரதேசங்களுக்குள் ஊடகர்களை அனுமதிப்பதில்லை. ஆரம்பத்தில் கிளர்ச்சிக்காரர்கள் ஆனால் தாம் கைப்பற்றிய சிரியப் படையினரைக் கொடுமைப்படுத்துவது, தம்மிடம் அகப்பட்ட ஆளும் அலவைற் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்களைக் சித்திரவதை செய்வது, கிருத்தவர்களைக் கொடுமைப்படுத்துவது, கிருத்தவத் தேவாலயங்களை அழிப்பது போன்றவை அம்பலமானதும் அவர்கள் தமது பிரதேசத்தில் ஊடகர்களை அனுமதிப்பதில்லை.வேதிப்படைக்கலன்கள் பாவித்ததை உறுதி செய்ய பாவித்த இடத்தில் இருந்து மண்ணை நம்பிக்கையானவர்கள் மூலம் பெற்று சோதித்துப் பார்க்க வேண்டும்.

அசாத் வேதிப்படைக்கலன்கள் (chemical weapons) பாவிப்பதாக இஸ்ரேல் செய்தி வெளியிட்டது, அது உறுதி செய்யப்படவேண்டும் என்றது அமெரிக்கா. பின்னர் பிரித்தானியாவும் பிரான்சும் அசாத் வேதிப்படைக்கலன்களைப் பாவிப்பதாக தெரிவித்தன. மீண்டும் அமெரிக்கா அது உறுதி செய்யப்படவேண்டும் என்றது. சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்துவிட்டவுடன் ஜோர்தானிற்கு அமெரிக்கா தனது வேதிப்படைக்கலன்கள் (chemical weapons) தொடர்பான நிபுணர்களை அனுப்பி வைத்தது.  இப்படிப்பட்ட அமெரிக்காவிற்கு சிரியாவில் வேதிப்படைக்கலன்கள் (chemical weapons) பாவிக்கப்படுவதை முதலில் அறிவித்திருக்க வேண்டும். இறுதியில் சரின் வாயுக் குண்டுகள் இரண்டு இடங்களில் பாவிக்கப் பட்டதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்றது அமெரிக்கா. ஆனால் தமக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள்தான் வேதிப்படைக்கலன்கள் பாவித்ததாக சிரிய ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அமெரிக்க நிர்வாகம் வேதிப்படைக்கலன்கள் பாவித்தமைக்கான ஆதாரங்கள் மேலும் தேவைப்படுவதாகச் சொல்கிறது. சிரிய ஆட்சியாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பாவித்தமைக்கு இன்னும் ஒரு காரணம் இருக்கலாம். அசாத் தான் வேதிப்படைக்கலன்கள் பாவித்தால் அதை எப்படி மேற்கு நாடுகள் கண்டறியும் என்பதையும் அதற்கு அவை எப்படி பதில் நடவடிக்கை எடுக்கும் என்பதையும் சோதித்துப் பார்க்கவே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஒரு தாக்குதலை மேற்கொண்டார்.

தயக்கத்தின் பின்னர் தீவிரம்
தயக்கம் காட்டி வந்த அமெரிக்கா ஜோர்தானிய அதிபரை வாஷிங்டனுக்கு அழைத்திருப்பது அது ஒரு தீவிர நடவடிக்கையை நோக்கி நகர்கிறது என்பதையே காட்டுகிறது. 

Friday 26 April 2013

இந்திய விமானம் தாங்கிக் கப்பல் விக்கிரமாதித்தயா

அம்புலிமாமா சஞ்சிகையின் பிரபல பாத்திரமான விக்கிரமாதித்தன் பெயர் கொண்ட இந்தியாவின் விமானம் தாங்கிக் கப்பலான INS Vikramaditya பலதடவை முருக்க மரம் ஏறி இப்போது இரசியாவின் Sevmash shipyardஇல் இறுதி வேலைகளை எதிர் கொண்டிருக்கிறது. இரசியாவின் விமானம் தாங்கிக் கப்பலான Admiral Gorshkov வை புதுப்பித்து பல நவீன போர் படைகலன்கள் தொடர்பாடற் கருவிகளையும் பொருத்தி விக்கிரமாதித்தயா உருவாகிக் கொண்டிருக்கிறது.


இரசியக் கடற்படையில் 1987இல் இணைந்து கொண்ட Admiral Gorshkov பனிப்போர் முடிவிற்கு வந்த பின்னர் பெரும் பராமரிப்புச் செலவைத் தவிர்ப்பதற்காக 1996இல் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டது என இரசியா சொன்னது. ஆனால் ஒரு தீவிபத்தில் சேதமடைந்த Admiral Gorshkov ஒரு கரையில் இருந்து துருப்பிடித்துக் கொண்டிருந்தது. இதில் இந்தியக் கடற்படையினர் தமது கண்ணை வைத்தனர். நீண்டகால பேச்சு வார்த்தைகளின் பின்னர் 2004-ம் ஆண்டு Admiral Gorshkov வை இரசியா புதுப்பித்து இந்தியாவிற்கு விற்பதாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. Admiral Gorshkov வை இரசியா இந்தியாவிற்கு இலவசமாக வழங்கும் என்றும் புதுப்பித்தற் செலவாக 800 மில்லியன் அமெரிக்க டாலர்களும் பொருத்தும் படைக்கலன்களுக்கும் போர் விமானங்களுக்கும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களும் இந்தியாவிடமிருந்து இரசியா அறவிடுவதாகவும் ஒப்பந்தம் கூறியது. 12 ஒற்றை இருக்கை மிக்-29 விமானங்களும், 4 இரட்டை இருக்கை மிக்-29 விமானங்களும் விக்கிரமாதித்தியாவில் இருக்கும்.


விக்கிரமாதித்தியாவின் முக்கிய அம்சங்கள்
எடை    45,400 tons full load
நீளம்:     283.1 m
அகலம்:     51.0 m
ஆழம்:     10.2 m
உந்துவலு:     4 shaft geared steam turbines, 140,000 hp
வேகம்:     32 knots
வீச்சு:     13500 miles at 18 knots
சுடுகலன்கள்:     8 CADS-N-1 Kashtan CIWS guns
விமானங்கள்:     16 Mikoyan MiG-29K
உழங்குவானூர்திகள்:Ka-28 helicopters ASW,  Ka-31 helicopters AEW, HAL Dhruv ஆகியவற்றில் பத்து.
விமானம் இறங்கும் இடம்: 273m flight deck

விக்கிரமாதித்தயாவின் மிகப்பெரும் பலம் அதன் கதுவித் (Radar) திறனாகும்.

முருக்க மரம் ஏறிய விக்கிரமாதித்தயா.
2008-ம் ஆண்டு கட்டி விக்கிரமாதித்தயா முடிக்கப்படுவதாக இரசியா உறுதி அளித்திருந்தது. இந்தியாவின் விராட் விமானம் தாங்கிக் கப்பலுக்கு ஓய்வு கொடுத்து அந்த இடத்தில் விக்கிரமாதித்தயா சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக இருந்தது. ஆனால் 2008இல் விக்கிரமாதித்தயா தாயாரில்லை. தயாராக்க மேலும் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வேண்டும் என இரசியா அடம் பிடித்தது. இந்தியக் கணக்காய்வாளர்கள் விக்கிரமாதித்தன் வெள்ளை யானையாகிவிட்டான் என்றனர். இந்தியக் கடற்படையினர் எதையும் கருத்தில் கொள்ளாமல் மொத்தச் செல்வாக 2.35 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு முடிக்க ஒத்துக் கொண்டனர். 2012இல் விக்கிரமாதித்தயா தயாராகிவிடும் என இரசியா 2009இல் சொன்னது. பின்னர் இரசியா முடிவடையும் திகதி பற்றி எதுவும் சொல்லவில்லை என்றது.

2008-ம் ஆண்டு நீரில் இறங்கிய விக்கிரமாதித்தயா சரிவரச் செயற்படவில்லை. மீண்டும் காய்ந்த தளத்திற்கு (Dry Dock) திரும்பியது. 2012இலும் இதே கதைதான்.

இறுதியில் இரசியா விக்கிரமாத்திதயாவை 2013 நவம்பரில் விநியோகம் செய்வதாக உறுதி அளித்துள்ளது. உலக அயோக்கிய நாடுகளில் ஒன்றான இரசியா சொன்ன திகதிக்குப் பணிகளை முடிக்காமல் செலவை அதிகரித்து அதிக பணத்தை அறவிடும் என்பது உலகறிந்த உண்மை. தன் முயற்ச்சியில் இந்தியா சற்றும் மனம் தளராமல் இருக்கிறது. இரசியாவின் இழுபறியால் இந்தியா ஒரு கட்டத்தில் விமானம் தாங்கிக் கப்பல் ஏதும் இல்லாமல் இருந்தது.

விக்கிரமாதித்தயா கட்டப்படும் Sevmash shipyard இன் அளவு ஒரு பிரச்சனை விக்கிரமாத்தித்தியாவைப் பொறுத்த வரை சிறியதாகும். Sevmash shipyard இன்sluice gate ஆனது விக்கிரமாதித்தயாவின் அகலத்திலும் பார்க்க சில மில்லி மீட்டர்கள் மட்டுமே அகலமானது. விக்கிரமாதித்தயாவின் கட்டுமானத்தைக் கவனிக்கும் இந்திய அதிகாரிகளான Suraj Berryயும்  Kudaravalli Srinivasம் கட்டுமானப் பணி சிறப்பாக நிறைவேற்றப்படுவதாகச் சொல்கின்றனர். 2010இல் இரசியா சென்ற சில அதிகாரிகளும் இதைத்தான் கூறியிருந்தனர். 2013 இறுதியில் இந்தியக் கடற்படையில் விக்கிரமாதித்தயா சேவையில் ஈடுபடுத்தப்படும்.

2011இல் 152 இந்தியக் கடற்படையைச் சேர்ந்த கப்பலோட்டும் தொழில்நுட்பவியலாளர்கள் இரசியா சென்று விக்கிரமாதித்தயாவை ஓட்டும் பயிற்ச்சி பெறுகிறார்கள்.

விக்கிரமாதித்தயாவைப் பற்றி அறிய முற்படுவதும் அம்புலிமாமாக் கதையில் புதையல் தேடிப் போவதைப் போலவே. புதையல் கிடைக்காமல் வேறு ஏதோ எதோ எல்லாம் கிடைக்கும். விக்கிரமாத்திதயாவைப் பற்றி அறிய முற்பட்டால் அதன் விநியோகத் திகதியுலும் மொத்தச் செலவிலும் இரசியா செய்யும் குளறு படிகள்தான் அதிகம் கிடைக்கும். இந்திய அதிகாரிகளுக்கு இரசியா கையூட்டுக் கொடுத்த கதை வேறு உண்டு. நான்கு ஆண்டுகளில் ஒரு பில்லியன் டாலர் செலவில் கட்டி முடிக்க வேண்டிய கப்பல் ஒன்பது ஆண்டுகளில் 2.35பில்லியன் டாலர் செலவில் முடிக்கப்படவிருக்கிறது.

விக்கிரமாதித்தயாவை பிரெஞ்சு விமானம் தாங்கிக் கப்பலுடன் சிலர் ஒப்பிடுவர்: The 43,000t FNS Charles de Gaulle nuclear-powered aircraft carrier is about the same size, with a 40-plane complement leans heavily to fighter jets. In contrast, Carriage ranges given for the refitted Vikramaditya seem to average 12-24 fighters and/or 4-16 of the compact Ka-28/31 helicopters; diagrams seem to suggest total stowage space for a “footprint” of no more than 15-16 MiG-29Ks, with each Kamov helicopter sporting a comparative footprint of about 0.4, and about 10 open footprint spots on deck.

பாக்கிஸ்த்தானிய இணையத் தளம் இந்தியாவின் விக்கிரமாதித்தியாவையும் சீனாவின் லியோனிங்கையும் இப்படி ஒப்பிடுகிறது:
And planned armament of Liaoning are,
- 4 x 18 cell FL-3000N (72 missiles)
- 3 x 30mm Type 1030 CIWS
- 2 x 240mm ASW launchers (10 barrels ea)
- 4 x Decoy/Chaff (24 barrels ea)

While Vikramaditiyas armaments are,
- 3 X 24 SA-N-9 SAM
- 4 X 32 CADS-N-1 SAM/CIWS
- 4 X AK-630 30mm CIWS
-2 X 12 ASW RBU-6000

தனது இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை சீனா உருவாக்க விருக்கிறது. சீனாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் நீண்ட கடல் எல்லையைக் கொண்ட் இந்தியாவிற்கு சீனாவின் முத்து மாலைத் திட்டத்தையும் இலங்கையில் சீனா அமைக்கும் லோட்டஸ் கோபுரத்தையும் சமாளிக்க வலு மிக்க கடற்படை இந்தியாவிற்குத் தேவைப்படுகிறது.

பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய பதிவு: நீர்மூழ்கி

Thursday 25 April 2013

சீனாவின் அடுத்த விமானம் தாங்கிக் கப்பல்

சீனாவின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பல் Liaoning
சீனா தனது இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கவிருக்கிறது என்று சீனக் கடற்படையின் 64வது ஆண்டு விழாவில் உரையாற்றிய இரண்டாம் நிலைத் தளபதி சாங் சூ தெரிவித்துள்ளார். இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பல் முந்தையதிலும் பெரிதாகவும் அதிக விமானங்களைக் கொண்டாதகவும் இருக்கும்.

சீனாவின் படைத்துறை முன்னேற்றங்கள்
உலகிலேயே அதிக அளவு படையினரைக் கொண்ட மக்கள் விடுதலைப் படை எனப்படும் சீனப் படை இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் 2050 ஆண்டு உலகின் மிகப்பெரிய படையாகத் திகழும் நீண்டகாலத் திட்டத்தை ஆரம்பித்தது. அதன்பின்னர் விண்வெளிப்போர் முறை, இணையவெளிப்போர்முறை, உட்படப் பல துறையிலும் வேகமாக முன்னேறிவருகிறது. ஒரு Space Stationஐ அமைத்து அதில் விண்கலங்களை வெற்றிகரமாக இறக்கியது. அமெரிக்காவின் Global Positioning System (GPS)இற்குப் போட்டியாக 15 செய்மதிகளைக் கொண்ட Beidou GPS ஐ உருவாக்கி வருகிறது. உலக நாடுகளில் இரசியாவும் சீனாவும் மட்டுமே அமெரிக்காவின் GPS இல் தங்கியிருக்காத நாடுகளாகும். Global Positioning System (GPS) குடிமக்களுக்கும் படைத்துறையினருக்கும் பயன்படும் ஒரு வழிகாட்டி முறைமையாகும். சீனாவின் Global Positioning System (GPS) அமெரிக்காவிற்கு வர்த்தக ரீதியாகவும் படைத்துறை ரீதியாகவும் சவாலாக அமையும். உலகின் எந்தப் பகுதிக்கும் தனது படையினரை விரைவாக நகர்த்தக் கூடியதாக Y-20 என்னும் பாரிய போர்முனைப் போக்குவரத்து விமானத்தை உருவாக்கியது. ராடார்களுக்கு அகப்படாத stealth fighter விமானத்தின் தனது இரண்டாம் தலைமுறை J31 சீனா உருவாக்கி விட்டது. விண்வெளிப்பயணத்துறையில் பெரும் முன்னேற்றமாக சீனா தனது 120 tonnes rocket engineஐயும் வெற்றீகரமாகப் பரீட்சித்துவிட்டது. சீனா தனது  Z-10 தாக்குதல் உழங்கு வானூர்திகளை பாரிய அளவில்(mass production) உற்பத்திசெய்கிறத

நீர் மூழ்கிக் கப்பல்களில் அதிக கவனம் செலுத்தும் சீனா
சீனா தனது நீர்மூழ்கிக் கப்பல்களின் வலுவைப் பொறுத்த வரை மற்ற நாடுகளை முந்த முயற்ச்சி செய்கிறது. சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் நீர் மட்டத்தின் கீழ் 7000m (22600 feet) சென்று உலக சாதனை படைத்தன. இலங்கையின் மேற்குக் கரையில் தனது  பழைய காலத்தில் மூழ்கிய கப்பல்களை ஆய்வு செய்யவென சீனா இலங்கை அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. அது உண்மையில் இந்தியாவை ஒட்டிய கடற்பரப்பின் ஆழ அகல பரிமாணங்களை அறிந்து அதற்கேற்ப தனது நீர்மூழ்கிகளை வடிவமைக்கும் உத்தியே. இந்தியாவின் எதிர்பைக் கருத்தில் கொண்டு இலங்கை அதற்கு மறுத்து விட்டது. ஆனால் சீனாவால் அந்தத் தகவல்களை வேறு விதமாக இலங்கையில் இருந்து பெறமுடியும்.

சீனாவின் தற்போதைய விமானம் தாங்கிக்கப்பல
சீனாவின் தற்போதைய விமானம் தாங்கிக் கப்பல் Liaoning 50,000 தொன் எடையைக் கொண்டது. அதில் 30 விமானங்கள் இருக்கிறன. அதில் இப்போது சீனாவின் J-15 போர் விமானங்கள் விண்ணெழும்பவும் தரையிறங்கவும் பயிற்ச்சிகள் செய்யப்படுகின்றன.

சீனாவின் அடுத்த விமானம் தாங்கிக் கப்பல் அதனுடன் நீர்மூழ்கிக்கப்பல்கள், ஃபிரிக்கேட் கப்பல்கள், நாசகாரிக் கப்பல்கள், சேவைவழங்கு கப்பல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

Wednesday 24 April 2013

நகச்சுவைக் கதம்பம்


கண்ணா!!! நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்று உனக்கு எத்தனை தடவை சொல்றது?????

ஒருத்தி: எனது கணவர் ஒரு பிரபல பதிவர் (blogger). எந்த நேரமும் கணனியுடனேயே இருப்பார். உடற்பயிற்ச்சி செய்யக் கூட அவருக்கு நேரமில்லை.
மற்றவள்: என்னத்தைப்பற்றி அவர் எழுதுவார்.
ஒருத்தி: நோயற்ற வாழ்வைப்பற்றி 

சிரிப்பது நோய்க்கு மருந்தாகும். காரணமில்லாமல் சிரித்தால் அது மருந்து தேவைப்படும் ஒரு நோயாகும்.

I hate people who steal my ideas, before I think of them.

பணத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லாததால் பலர் ஏழைகளாக இருக்கிறார்கள். 

கவலைப்படும் போது பாட்டுப் பாடினால் கவலை போகும் என்றார்கள். பாடினேன் என் குரலைக் கேட்டு நானே மிகவும் கவலைப்பட்டேன்.

Silence is the best answer of all questions and Smile is the best reaction in all situations. Unfortunately both never help in VIVA & INTERVIEW.

மனச்சாட்சி பாவம் செய்வதைத் தடுப்பதில்லை. செய்த பாவத்திற்கு வருந்த வைக்கும்.

Love your neighbors who do not protect their wi-fi with password. 

கீழே சொல்லப்பட்டிருப்பவை எல்லாம் உண்மை:
மேலே சொல்லப்பட்டிருப்பது பொய்.

பிட் அடிப்பதிலும் பெயில் ஆவது மேல். அரியேர்ஸோடு அலைவதிலும் பிட் அடிப்பது மேல்.

பல டுவிட்டர்களைப் பொறுத்த வரை கணனியுகத்தின் மிகச்சிறந்த கண்டு பிடிப்பு  copy & paste.

வாழ்க்கையின் மோசமான காலம் என்பது ஞாயிற்றுக் கிழமைக்குப் பின்னர் வரும் 5 நாட்கள்.

I always learn from mistakes of others, who took my advice.

அழகி என்ற சொல்லிற்கு வரைவிலக்கணம்: என்னை விரும்பும் பெண்.

கடுப்பேறிய மை லார்ட்
ஒரு கோவிலின் அருகே மதுபானக் கடைதிறந்து நல்ல வியாபாரம் நடந்தது. கோவில் பூசாரிக்கு கடும் கடுப்பு. ஒவ்வொரு நாளும் பூசை செய்யும் போது அந்த மதுபானக் கடை சாம்பலாகப் போகட்டும் என்று வேண்டிக் கொள்வார். ஒரு நாள் மதுபானக் கடை தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிவிட்டது. தனது கடை எரிந்து சாம்பலாகட்டும் என்று பூசாரி பிரார்த்தனை செய்தபடியால்தான் தனது கடை எரிந்து என்று நீதிமன்றத்தில் மதுபானக்கடை முதலாளி வழக்குப் போட்டார். தனது கட்சிகாரரின் பிரார்த்தனையால் மதுபானக் கடை எரியவில்லை. அது ஒரு விபத்து என பூசாரியின் வழக்கறிஞர் நீதி மன்றில் வாதாடினார். கடுப்பேறிய "மை லார்ட்" பூசாரியின் பிரார்த்தனையில் பூசாரிக்கு இல்லாத நம்பிக்கை மதுக் கடைக்காரருக்கு எப்படி வந்தது?" என்றார்.

Tuesday 23 April 2013

வேற்றுலகங்கள் மூன்று கண்டு பிடிக்கப்பட்டன. மனிதர்கள் உண்டா

பூமியில் இருந்து 1200ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி நாம் வாழும் பூமியை ஒத்த கிரகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் விண்வளி ஆய்வு நிறுவனமான நாசாவின் கெப்லர் செய்மதித் தொலைநோக்கி மூலமாக பூமியை ஒத்த ஏழு கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் மூன்றில் உயிரனங்கள் இருப்பதற்குரிய சூழ் நிலை நிலவுகிறது.

கெப்லர்-62 என்பது ஐந்து கிரகங்கள் சுற்றிவரும் ஒரு நட்சத்திரம். அந்த ஐந்து கிரகங்களில் ஒன்று கெப்லர்69C எனப் பெயரிடப்பட்டுள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சுக்கிரனும் புதனும் இருக்கின்றன. அதைப் போலவே 69Cஇற்கும் அது சுற்றும் நட்சத்திரத்திற்கும் இடையில் ஒரு கிரகம் சுற்றுகிறது.  ஆனால்ல் கெப்லர் 69C மிகவும் வெப்பமான கிரகமாகக் கருதப்படுகிறது. கெப்லர் 62E, கெப்லர் 62 F ஆகிய இரு கிரகங்களும் கெப்லர்69C இலும் பார்க்க சிறியன.  இவை கெப்லர் 69C இலும் பார்க்கக் குளிர்ச்சியானவை.

அண்ட வெளியில் பல் எமது சூரியன் போல் பல பில்லியன்கள் நட்சத்திரங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் சுற்றி பல கிரகங்கள் இருக்கின்றன. அவற்றில் சாதகமான வெப்பநிலை, ஒட்சிசன்(Oxygen) போன்ற தேவையான வாயுக்கள், நீர், காந்த மண்டலம் ஆகியவை இருந்தால் அங்கு உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சிலி நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறிய உடலின் டி.என்.ஏக்களை ஆய்வு செய்து அது மனித உடல் அல்ல என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது வேற்றுக் கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்தவர்களில் ஒருவரின் உடலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

வேற்றுக் கிரகங்களுக்கு நாம் பயணம் செய்வது சாத்தியமற்ற ஒன்றாக இப்போது இருக்கிறது. ஆனால் அவர்கவிரைவில் வேற்றுலகங்களில் வாழும் மக்களுடன் தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொள்வோமா?

Monday 22 April 2013

இந்தியாவின் கற்பழிப்புகளும் வாக்கு வேட்டை அரசியலும்.

"இந்தியாவில் கற்பழிப்பு ஒரு தொற்றுநோய் போல் வேகமாகப் பரவி வருகிறது." உலகின் எல்லா மூலைகலிலும் உள்ள ஊடகங்களில் இது செய்திகளாகவும் ஆய்வுக் கட்டுரைகளாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. 2013 ஏப்ரம் மாதத்தில் ஒரு வாரத்தில் மட்டும் மூன்று சிறுமிகள் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் கற்பழிப்பைப் பற்றி எழுதுபவர்கள் அதன் கொடூரமான ஆணாதிக்கக் கலாச்சாரத்தையும் கற்பழிப்புக் குற்றம் தொடர்பாக இந்தியக் காவற்துறையினரின் உலகமகா மோசமான அணுகு முறைகளையும் தாமதித்துத் தவறு செய்யும் இந்திய நீதித்துறையையும் தவறாமால் விமர்சிப்பதுண்டு. 2003-ம் ஆண்டு சுவிஸ் இராசதந்திரியாக புது டில்லியில் வேலை செய்த பெண் ஒருத்தி அவரது வண்டியில் வைத்தே நன்கு படித்தவன் போல் சரளமாக ஆங்கிலம் பேசிய ஒரு இந்திய ஆணால் கற்பழிக்கப்பட்டான். கற்பழித்தவன் அப்பெண்ணிற்கு இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றியும் விளக்கிக் கூறினான். இந்தியக் கலாச்சாரத்தில் ஆணாதிக்கம் அப்படிப் பின்னிப் பிணைந்திருக்கிறது. பல இந்துக்களின் கலாச்சார "பைபிளாகிய" மனு தர்மசாஸ்த்திரம் ஆணாதிக்கத்தையும் குறைந்த சாதியினர் மீதான மேல் சாதியினரின் ஆதிக்கத்தியும் ஆதரிக்கிறது. “The Rise and Fall of Hindu Women” என்னும் கட்டுரையில் அம்பேத்கார் Hindu religion through its religious texts, such as the Manusmriti always degraded women. இந்து மதம் தனது மனுதர்ம சாஸ்த்திரம் போன்ற ஏடுகள் மூலம் பெண்களை தரக்குறைவாக்குகிறது என்றார். சதுர்வர்ணய என்ற இன்னொரு பழம் இந்து சாஸ்த்திரம் பெண்ணை தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் போல் நடத்த வேண்டும் என்கிறது. இந்த மாதிரியான குப்பைகக் கருத்துக்களை இப்போதும் ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த இணைப்பில் காணலாம்: http://www.echarcha.com/forum/showthread.php?t=1055

இப்போதும் மனுதர்ம சாஸ்த்திரத்தின் அடிப்படையிலேயே இந்திய அரசியல் சட்டம் அமைக்கப்படவேண்டும் என வாதிடுபவர்களும் இந்தியாவில் உண்டு. பல மனுதர்மவாதிகள் கற்பழிப்புகளுக்குப் பெண்களையும் அவர்கள் ஆடைகளையும் நடத்தைகளையும் பகிரங்கமாக காரணமாகக் காட்டி கற்பழிப்புகளுக்கு பெண்களைக் குற்றவாளிகளாக்குகின்றனர்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியக் காமுகர்கள் கணவனுடன் சென்று கொண்டிருந்த சுவிஸ் உல்லாசப்பிரயாணி ஒருத்தியை கும்பலாகக் கற்பழித்தனர். இன்னொரு பிரித்தானிய உல்லாசப் பயணி அவர் தங்கியிருந்த விடுதி முகாமையாளர் கற்பழிக்க முற்பட்ட போது மாடியில் இருந்து குதித்தார். ஒவ்வொரு நாளும் எழுபதிற்கு மேற்பட்ட பெண்கள் இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றார்கள் என்கின்றன செய்திகள். உண்மையான தொகை இதிலும் அதிகமாக இருக்கலாம்.

இந்தியாவில் பெருமளவான பெண்கள் கருவிலேயே கொல்லப்படுகின்றனர். இந்தியாவில் ஆண்டொன்றிற்குப் பிறக்கும் 12 மில்லியன் குழந்தைகளில் ஒரு மில்லியன் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்திற்குள் இறக்கின்றன. இதனால் மக்கள் தொகையில் பெண்களின் விகிதம் குறைந்து கொண்டே போகிறது. இந்தியக் கலாச்சாரப்படி பாவம் செய்த பெற்றோருக்குத்தான் பெண் பிள்ளைகள் பிறக்கின்றன. இந்தியாவில் அண்மைக்காலப் பொருளாதார வளர்ச்சியும் கொள்வனவாளரியலின்(consumerism) வளர்ச்சியும் மக்கள் மத்தியில் பணத்தின் தேவைகளை அதிகரித்துள்ளன. இதனால் சீதனக் கோரிக்கைகளும் அதிகரிக்கின்றன. எந்தச் செல்வக் குடும்பத்தில் பிறந்தாலும் எந்த சாதியில் பிறந்தாலும் ஒரு பெண்ணிற்குச் சீதனம் போதிய அளவு இல்லாவிடில் அவள் வாழ்க்கை இந்தியாவைப் பொறுத்தவரை நரகம்தான்.

புதுடில்லி ஜவகர்லால் பலகலைக்கழக முன்னாள் சமூகவியல் பேராசிரியர் தீபங்கர் குப்தா இந்திய ஆண்பிள்ளைகளின் வளர்க்கபடும் முறை தவறானது என்கிறார். ஆண் என்பவன் அடக்கியாள்பவன் பெண் அடங்கிப் போக வேண்டியவள் என்ற அடிப்படையில் பல இந்தியப் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை வளர்க்கின்றனர் என்கிறார். தீபங்கர் குப்தா. இந்தியாவில் பல பாலியல் குற்றவாளிகள் இந்த ஆணாதிக்க மனோபாவத்தால் தப்ப விடப்படுகின்றனர். இதற்குக் காவற்துறையும் உடன்போகிறது. கற்பழிக்கப்பட்ட பெண்கள் மேலும் பல விதத்தில் பாதிக்கப்படுகின்றனர். உலகிலுள்ள 147 நாடுகளுக்கான ஆண் பெண் சமத்துவப் பட்டியலில் இந்தியா 129வது இடத்தில் இருக்கிறது. சவுதி அரேபியா, பாக்கிஸ்த்தான், பங்களாதேசம் போன்றவற்றிலும் பார்க்க இந்தியப் பெண்கள் மோசமான நிலையில் இருக்கின்றனர்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் திடீரென அதிகரித்தது ஏன்? ஒரு மாநிலத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். அங்கு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்குள் சிலர் ஊடுருவி காவற்துறையினருக்கு ஆத்திரமூட்டும் செயலில் இறங்குகின்றனர். பின்னர் காவற்துறை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடுமையாக நடந்து கொள்கிறது. இதனால் மாநில அரசுக்குக் கெட்ட பெயர் வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுகிறத்து. இந்த ஊடுருவிகள் மாநிலத்தின் ஆளும் கட்சிக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். அண்மைக்காலாங்களா காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருக்கும் புது டில்லியிலும் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் கட்டாயம் இருக்க வேண்டிய உத்தரப் பிரதேசத்திலும் இந்த கற்பழிப்பு-ஆர்ப்பாட்டம்-காவற்துறையினர் மீது தாக்குதல்-காவற்துறைபதிலடி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விரைவில் வரவிருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தலுக்கான வாக்கு வேட்டைக்கு கற்பழிப்பு பயன்படுத்தப்படுகிறதா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...