Saturday 20 April 2013

இந்தியாவில் இருந்து இலங்கைக்குப் போன பெண்களும் விலை போன பெண்களும்

தமிழீழ மக்களின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பல பெண்கள் இலங்கைக்குச் சென்றுள்ளனர். ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், தமிழின உணர்வாளர்கள் எனப் பலதரப்பட்ட பெண்களும் அங்கு சென்றுள்ளனர். சிலர் தமிழர்களின் துயர்களை தாமும் அனுபவித்து அம்பலப்படுத்தினர். சிலர் அரச "விருந்துகளை" அனுபவித்து பரிசில்களும் பெற்றுள்ளனர். சிலர் உயிரைப் பணயம் வைத்துச் சென்று அங்கு நடக்கும் உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளனர்.

அனிதா பிரதாப் என்ற ஊடகவியலாளர் முதலில் தன் உயிரைப் பணயம் வைத்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர்களுடன் தங்கியிருந்து அவர்களின் நற்பண்புகளை வெளிக்கொணர்ந்தார்.  கவிஞர் தாமரை உட்பட வேறு சில தமிழைன உணர்வாளர்களும் இரகசியமாக தமிழீழம் சென்று வந்துள்ளனர்.

நிருபாம ராவ்
இலங்கைக்கு இந்தியாவில் இருந்து வந்த பெண்களில் இவர் முக்கியமான இந்திய அத்காரியாவார். இவர் இலங்கைக்கான இந்தியத் தூதுவராகவும் இருந்தவர். அப்போது தமிழர்களுக்கு எதிராக தீவிரமாகச் செயற்பட்டவர். பின்னர் பதவி உயர்வு பெற்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளரான பின்னர் இவர் இலங்கைக்குச் செய்த பயணங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதுபற்றிக் காண இங்கு சொடுக்கவும்: இலங்கையில் நிருபாமா ராவோடை ராவுகள்

 கருணாநிதியின் மகள் கனிமொழி
கருணாநிதியின் மகள் கனிமொழி இலங்கை சென்று ராஜ்பக்சவின் முன் பல்லிளித்துக் கொண்டு நின்றதைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. அதுபற்றி நிறையப்பேர் எழுதிவிட்டார்கள். ஆனால் கனிமொழியும் ராஜபக்சவும் ஒன்றாக நிற்கும் படத்தைப்பார்த்தால் எனக்கு நினைவிற்கு வருபவர் முன்னாள் தமிழக முதல்வர் ராஜகோபாலாச்சாரியார்தான். இலங்கையின் பிரதம மந்திரியாக இருந்த சிறிமாவோ பண்டார நாயக்க இந்தியாவிற்கு பயணம் ஒன்றினை மேற்கொண்டபோது அவருடன் இணைந்து புகைப் படம் எடுத்துக் கொள்ள அப்போதைய முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரி மறுத்துவிட்டார். பின்னர் அது பற்றி அவரிடம் வினவியபோது "அந்த அம்ம தமிழர்கள் விஷ்யத்தில் நல்லமாதிரியாக நடந்து கொள்வதில்லை" என்றார். இத்தனைக்கும் சிறிமாவோ பண்டாரநாயக்கா தமிழர்களைக் கொன்று குவித்ததில்லை.

சுஸ்மா சுவராஜ்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த முதலாவது தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால் ஆத்திரமடைந்த இலங்கையை சமாதானப்படுத்த இந்தியா தனது எதிர்க்கட்சிப்பாராளமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை சுஸ்மா சுவராஜ் தலைமையில் அனுப்பியது. அதை இந்தியக் கைக்கூலி ஊடகங்கள் தமிழர் துயர்பற்றி அறிய அனுப்பிய குழு எனப் பரப்புரை செய்தன. முடிவில் சுஸ்மா மஹிந்தவிடம் இருந்து ஒரு வைரமாலையைப் பரிசாகப் பெற்றுக் கொண்டார் எனக் கூறப்படுகிறது. இதுபற்றிய முந்தைய பதிவைக் பார்க்க இங்கு சொடுக்கவும். சுஸ்மாவைச் செல்லாக் காசாக்கிய ஜெயலலிதா

2009இல் போர் முடிந்த பின்னர் ஒரு தமிழ் இளம் பெண் ஊடகவியலாளர் தன் உயிரைப் பணயம் வைத்து இலங்கை சென்று பல அட்டூழியங்களை அம்பலப்படுத்தினார்.  அவரது பெயர் நினைவில் இல்லை.

இப்போது வட இந்தியப் பெரு முதலாளிகள் தாம் இலங்கையில் செய்த முதலீடுகளிற்கான பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையை மூடி மறைக்கப் பல சதி செய்கிறார்கள். வரும் இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் வாக்கு வேட்டையை மனதில் கொண்டு அரசியல் கட்சிகள் தமிழர்களுக்கு சாதகமாக நடந்தால் அது இலங்கை இந்திய உறவைப் பாதித்து தமது முதலீடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என இலங்கையில் முதலீடு செய்த இந்திய முதலாளிகள் அஞ்சுகிறார்கள். இதன் பிரதிபலிப்பை வட இந்திய ஊடகங்களில் இப்போது பார்க்கலாம். தமிழக மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது, தமிழக சட்டசபையில் ஈழம் தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்ப்பது, ஜெனிவாவில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை கண்டிப்பது, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்கள் தமிழ்நாட்டில் விளையாடுவதைத் தடுத்தைக் கண்டிப்பது என பல வட இந்திய ஊடகங்கள் சதி செய்யும் வேளையில் டெஹெல்க்கா(Tehelka) இணையத்தளத்தில் ரேவதி லால்(Laul) என்ற ஊடகர் இலங்கைக்கு ஓர் உல்லாசப் பிரயாணியைப்போல் சென்று தமிழர்களின் அவலங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

The War May Be Over But The Idea Lives On என்னும் தலைப்பில் ரேவதி லால் அம்மையார் தனது இலங்கைப் பயண அனுபவத்தை விளக்கியிள்ளார். இலங்கையைப் பற்றி வெளிநாட்டில் யாராவது குறைசொன்னால் இலங்கை ஆட்சியாளர்கள் இங்கு வந்து பார்த்தால் தெரியும். வந்து பாருங்கள் நாம் செய்யும் நற்பணிகளையும் அபிவிருத்திகளையும் என்று சொல்வார்கள். இந்து ராம் போன்ற தட்சணைக்கு அலைபவர்கள் இலங்கைக்கு அரச விருந்தினர்களாகச் சென்று ராஜபக்ச ஆட்சியைப் புகழ்வது உண்டு. ஆனால் ரேவதி லால் இலங்கையில் நடக்கும் அட்டூழியங்கள் பலவற்றை துல்லியமாக அறிந்து அம்பலப்படுத்தியுள்ளார். இலங்கையில் நடக்கும் அட்டூழியங்களை யாரும் முழுமையாகவோ அல்லது சரியாகவோ கண்டறிய முடியாது. ரேவதி லால் அம்பலப்படுத்தியது ஒரு சிறு பகுதிதான்.

இலங்கையில் இருக்கும் தமிழர்கள் புனர்வாழ்வையும் பொருளாதாரத்தையும் பற்றி மட்டும்தான் கவலைப்படுகிறார்கள். அவர்கள் உரிமைப் போராட்டத்தைப்பற்றிக் கவலைப்படுவதில்லை வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மட்டுமே உரிமைப் போராட்டம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று பல கைக்கூலிகள் கூச்சலிடும் வேளையில் ரேவதி லால் தனது கட்டுரையை "The idea of a separate Tamil nation is not dead in Sri Lanka." என்னும் வாசகத்துடன் ஆரம்பிக்கிறார். இன்னொரு பார்ப்பன நாயான சோவின் துக்ளக் பத்திரிகையின் ஊடகர் இலங்கைக்குச் சென்று அங்கு ராஜபக்சவின் அடிவருடிகளைப் பேட்டி கண்டு அவர்கள் எல்லாரும் தமிழ்நாட்டில் மாணவர்கள் செய்யும் போராட்டத்தை எதிர்ப்பதாகப் பேட்டி கண்டு எழுதினார்கள். ஆனால் ரேவதி லாலிடம் எவரும் தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.

ரேவதி லால் அம்பலப்படுத்துபவை (http://tehelka.com/the-war-may-be-over-but-the-idea-lives-on-2/?singlepage=1):
  • போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் வன்னிமண் ஒரு காயப்பட்ட பூமியாகக் காட்சியளிக்கிறது.
  • தமிழர் நிலங்களில் படையினரின் இருப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 
  • போர் நடந்த இடத்தில் தமிழர்களின் மௌனம் காதை அடைக்கிறது. அவர்களுடன் கதைக்க முடியாமல் இருக்கிறது. - The silence of the Tamils is deafening as you reach the last mile of the war. It is impossible to speak with them. As we step out of our van, we are ordered out of the area by two men in military uniform. They follow us on their bike for some distance.
  • தமிழர்பகுதிகளில் ஊடகவியலாளர்கள் வரவேற்கப்படுவதில்லை.
  •  1950களில் இருந்து செய்துவரும் தமிழர்களை அவர்களது வளமிக்க நிலங்களில் இருந்தும் மீன்வளமிக்க கடல்களில் இருந்தும் வெளியேற்றுவது இப்போது தொடங்கியுள்ளது. a return to State policies from the 1950s that systematically and deliberately excluded them from cultivable farmland and prime fishing waters. The exclusion that sparked the Tamil resistance and war in the first place is back with a bang.
  • தமிழர்களை மீன்பிடிப்பததைத் தடைசெய்துவிட்டு சிங்களவர்களை மீன்பிடிக்கச் செய்துள்ளனர். இதனால் தமிழர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
  • தமிழர்களின் விவசாய நிலங்களில் இருந்து அவர்களை வெளியேற்றிவிட்டு அங்கு சிங்களவர்களைக் குடியேற்றி விவசாயம் செய்ய வைக்கப்பட்டுள்ளனர். 
  • ஆப்கானிஸ்த்தனிலும் பார்க்க தமிழர் பூமியில் படையினர்களின் இருப்பு விகிதம் 4 மடங்கு அதிகமாக உள்ளது.  A report in the Economic and Political Weekly on 14 July 2012 claimed the ratio of army to civilians in these parts is as high as 1:5. If that’s true, it’s at least four times more than the troops on ground in Afghanistan where a war is still on.
  • போரின் பின்னர் விவசாயிகளின் வருமானம் பெரிதளவு குறைந்துள்ளது. A farming community that, at the time of fleeing their land in 1984, made the equivalent of LKR 50,000 a month now earns not more than LKR 2,000, which for a war-inflated economy is barely subsistence level.
  • தமிழர்கள் மீண்டும் எழுச்சி பெறாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டுதான் மீள் குடியேற்றம் நடைபெறுகிறது. an NGO working with displaced people explains what “resettled” really means. Farmers who once had one-acre plots are “resettled” on pint-sized slices of land measuring 0.125 acres. “It’s part of a State sponsored design to resettle Tamils at below subsistence levels so they can never regroup and fight,” the NGO explains.
  • முன்னாள் போராளிகளும் அவர்களிற்கு உதவி செய்தவர்களும் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். 
  • தமிழர்களுக்கு நடக்கும் அட்டூழியங்களைப் பற்றிப் பார்க்கும் போது ஒரு பெரிய படத்தை தவறவிடுகிறோம். அது இனக்கொலை. கே குருபரன் என்ற சட்டவியலாளர் இலங்கையில் நடக்கு இனக்கொலை பற்றி விளக்கியுள்ளார். Looking at these stories of torture as merely a humanitarian crisis, however, is to miss the big picture. It makes activist lawyer K Guruparan very angry. “A simple human rights discourse doesn’t help,” he explains. It merely forces people to weigh one set of atrocities against another — those by the Sri Lankan Army in 2009 against those carried out over the past 30 years by the LTTE, which had one of the deadliest guerrilla armies and suicide squads in contemporary history. “Without the history of Tamil oppression and the ongoing structural genocide, the story of the Tamils has almost no meaning,” says Guruparan. “You have to look at the longstanding process of disenfranchisement from which the LTTE emerged.” (பிற்குறிப்பு: குருபரன் இப்போதும் உயிருடன் இருக்கிறாரா?)
  • ஐநா மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐநா நிபுணர் குழு அறிக்கையை மறந்துவிட்டது. (பிற்குறிப்பு: இல்லையம்மா அவர்கள் மறைக்கிறார்கள்)  however, on 19 March this year, when the UNHRC drafted a resolution on Sri Lanka, it seemed to have developed amnesia about this report. The resolution was gentle in its censure of the government for what happened in 2009 and even praised it for the work done since — “welcoming and acknowledging the progress made by the government of Sri Lanka in rebuilding infrastructure, demining, and resettling the majority of internally displaced persons”.
  • காணாமற்போனோரின் உறவினர்களின் துயர் எல்லாவற்றிலும் பெரிதாகவும் முகம்கொடுக்க முடியாததாகவும் இருக்கிறது. 
  • தமிழர்களுக்கு உதவும் கத்தோலிக்கக் குருமார்கள் மிரட்டப்படுகிறார்கள். (பிற்குறிப்பு - இலங்கையில் இந்துக் குருமார்கள் இருக்கிறார்களா?)
  • போரின்போது காயப்பட்ட சிறுவர்களை மிதிவண்டியில் பலமைல் தூரம் சிகிச்சைக்காக எடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது. In one such attack in August 2007, 13 schoolchildren were killed and many others injured. There were no vehicles to take them to hospitals. Indrakumar remembers lifting two bleeding kids onto his bike to take them to the nearest hospital 16 km away. He was riding as fast as he could when he saw the head of one of the kids roll off. Neither survived.
  • என்ன நடக்கப் போகிறதோ என்று கஜேந்திரன் பொன்னம்பலம் பயப்படுகிறார். தாமெல்லாம் சிங்கள பௌத்தர்களாக மாற்றப்பட்டு விடுமோ என அவர் அஞ்சுகிறார். 
ரேவதி லாலின் கட்டுரையைப் பார்த்தவுடன் தெரிகிறது இலங்கை சென்ற பல ஊடகர்கள் எப்படி விலை போயிருக்கிறார்கள் என்று.

ரேவதி லாலின் கட்டுரையில் இலங்கையில் தமிழர்களுக்கு பிரித்தானியா தனது குடியேற்ற ஆட்சியின் போது அதிக சலுகைகள் வழங்கியது எனக் குறிப்பிட்டதை தமிழ்நெற் இணையத்தளம் மறுத்துள்ளது.  பிரித்தானியா ஆட்சியில் இருந்து சுதந்திரம் வேண்டும் என சிங்களவர்களுக்கு முதல் தமிழர்கள்தான் போராடினர். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசு அமைப்பு மகாத்மா காந்தியை இலங்கைக்கு அழைத்து தமிழர்கள் மத்தியில் சுதந்திர வேட்கையை பரப்பியது. எமது சுய நிர்ணய உரிமையைப் பறித்து சிங்களவர்களைடம் கொடுத்தது பிரித்தானிய அரசுதான். இது போன்ற கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்து தமிழ்நெற் பிரித்தானியக் குடியேற்ற அரசு தமிழர்களுக்குச் சாதகமாக நடந்து என்பதை மறுக்கிறது.
அதை வாசிக்க: http://tamilnet.com/art.html?catid=79&artid=36240

Friday 19 April 2013

கடவுள் தேவையில்லை என்கிறார் பிரபல விஞ்ஞனி Stephen Hawking

பிரபஞ்சத்தை உருவாக்கிய பாரிய வெடிப்பின்(Big Bang) போது கடவுள் தேவைப்பட்டிருக்கவில்லை என்கிறார் உலகிலேயே மிகப்பிரபலமான theoretical physicist Stephen Hawking. அமெரிக்காவில் நடந்த ஒரு விஞ்ஞானிகள் மாநாட்டிலேயே பிரித்தானிய விஞ்ஞானியான Stephen Hawking இதனைத் தெரிவித்தார்.

பிரபஞ்சத்தின் ஆரம்பத்தை  Quantum theoryயும் theory of relativityயும் தான் பிரபஞ்சத்தின் தொடக்கத்தை தீர்மானித்தன அங்கு கடவுள் தேவைப்பட்டிருக்கவில்லை என்கிறார் Stephen Hawking

Caltec எனப்படும் The California Institute of Technologyஇல் Stephen Hawking இன் உரையைக் கேட்க ஒரு rock starஐப் பார்க்க அவரது ரசிகர்கள் திரள்வதைப் போலப் பிரபல விஞ்ஞானிகள் 12 மணித்தியாலங்கள் வரிசையில் நின்று நுழைபுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டனர்.


“It has been a glorious time to be alive and doing research in theoretical physics. Our picture of the universe has changed a great deal in the last 50 years and I’m happy if I have made a small contribution. The fact that we human beings, who are ourselves mere collections of fundamental particles of nature, have been able to come this close to an understanding of the laws governing us and our universe is a great triumph.” கடந்த 50 ஆண்டுகளாக பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவு பெரிதும் மாறியுள்ளது. இதற்கு நானும் பங்களிப்புச் செய்துள்ளதில் பெருமையடைகிறேன். இயற்கையில் உள்ள துணிக்கைகளே மானிடர்களாகிய எம்மிலும் இருக்கின்றன. (அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உண்டு). பிரபஞ்சத்தை இயக்கும் விதிகள் பற்றிய அறிவதை அண்மித்துள்ளது பெரும் வெற்றியே.

புத்தக விற்பனையில் சாதனை படைத்த A brief history of time என்னும் நூலை எழுதிய Stephen Hawking motor-neurone disease  நோயால் பீடிக்கப்பட்டு தனது உடலில் எந்தப் பாகத்தையும் அசைக்க முடியாதவர், வாய் பேசமுடியாதவர். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஆவார். இப்போது இவருக்கு வயது 71. கடந்த 50 ஆண்டுகளாக motor-neurone diseaseஆல் அவதியுற்ற போதும் கற்றுத் தேர்ந்து பெரும் விஞ்ஞானி ஆகியவர். கணனித் தொகுதியின் உதவியுடன் இப்போது பேசுகிறார் நடமாடுகிறார்.

பிரபஞ்சத்திற்கு ஒரு ஆரம்பம் இருந்ததென்றால் அதற்கு முன் என்ன நடந்தது? அதற்கு முன்னர் கடவுள் என்ன செய்துகொண்டிருந்தார்? இப்படிப்பட்ட கேள்விகளைக்கேட்பவர்களை அனுப்புவதற்கு நரகத்தைத் தயார்படுத்கிக்கொண்டிருந்தாரா?
உலகம் தட்டையானது என மக்கள் நம்பியிருந்த காலத்தில் உலகத்தின் விளிம்பிற்கு அப்பால் என்ன இருக்கிறது என்ற கேள்வி இருந்தது. இந்த மாதிரியான கேள்விகள் தேவையற்றது என்கிறார் Hawking. உலகம் உருண்டையான என்பது உலகின் விளிம்பில் என்ன இருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலாக அமைந்தது.
நேரம் எங்கு தொடங்கிய எங்கு முடிந்தது என்ற கேள்விக்கும் இதுதான் பதில்.

He suggested that the idea of time running in only one direction 'like a model railway track' was misconceived and that combining of general relativity and quantum theory can allow time to act just like another direction in space.

'This means one can get rid of the problem of time having a beginning, in a similar way in which we got rid of the edge of the world,' he said.
நேரத்தின் தொடக்கம் என்பது தென் துருவத்தைப் போன்றது. நேரம் என்பது அட்சரக்கோடுகளின் பாகைகள் போன்றது. தென் துருவத்திற்கு தெற்கே என்ன இருக்கிறது என்ற கேள்வியில் அர்த்தமில்லை. அது போலவே பிரபஞ்சம் தொடங்க முன் என்ன என்ற கேள்வியும் அர்த்தமற்றது.
Hawking asked his audience to imagine the beginning of the Universe is like the South Pole, with the role of time being played by degrees of latitude.

Just as asking what is south of the South Pole makes no sense, he argued, to asking what happened before the beginning of the Universe would become a meaningless question.

பிரபஞ்சத்தின் ஆரம்பம் விஞ்ஞான விதிகளின்படியே நிகழ்ந்தன. கொதிக்கும் நீரில் குமிழிகள் போல் பிரபஞ்சம் உருவானது. அது விரிவடைந்து கொண்டே செல்கிறது.
Moreover, conceiving of the Universe in this way also removes 'age-old objections' to the idea that the Universe had a beginning; that it would be a place where the normal laws of physics could not hold. Instead, Hawking claimed, the beginning of the Universe could be governed by laws of science, which justifies a picture he and fellow physicist Jim Hartle developed as like the formation of bubbles of steam in boiling water. which grow to such a size that they are safe from collapsing. They will correspond to universes that would start off expanding at an ever increasing rate' like the expanding Universe we live in, he said.

Quantum theory could best understand how the state of the Universe at the initial point of its formation gave rise to the Universe we live in today 13.5billion years after the Big Bang, Hawking claimed.

He said: 'General relativity on its own cannot answer the central question in cosmology: Why is the universe the way it is?

'However, if general relativity is combined with quantum theory, it may be possible to predict how the universe would start.'

Small fluctuations in the initial state of the Universe would lead to the formation of 'galaxies, stars, and all the other structure in the universe,' he said.

His theory could be tested when science develops the ability to detect gravitational waves by accurately measuring the distance between spacecraft.

These waves, he said, originated in the earliest times of the universe and have not been altered by their interactions by 'intervening material'.









Thursday 18 April 2013

Jokes about Margaret Thatcher

It is sad that lot of jokes going around regarding the death of former British prime minister Margaret Thatcher. Most of the jokes refer to her ill-treatment of mine workers. She was first described as "Iron Lady" by a Soviet journalist. But it remained as a honorable title to her.

I never got why Margaret Thatcher was nicknamed 'The Iron Lady'.
I mean aren't all women supposed to iron?

Tragic news this morning regarding Margaret Thatcher as doctors say she is expected to make a full recovery.


Margaret Thatcher film 'The Iron Lady' has been classed as a 12A.
It is unsuitable for miners.


There's a debate going on at the moment in the House of Commons as to whether or not Margaret Thatcher should be given a state Funeral when she dies. I think the only debate we should be having is whether or not she should actually be dead before we bury her.



I'm happy to see that after a successful minor operation, Margaret Thatcher will be staying in hospital for a few more days to recuperate.
These days, that's as good as a fucking death sentence.
David Cameron on Facebook: We're announcing drastic cuts to the welfare state.



"Margaret Thatcher in hospital recovering from having a growth removed from her bladder"
It was probably her cock

I see there is a new film about Margaret Thatcher
Would of been better to bring it out after she Died.
That way atleast we'd know there was a happy ending


A sequel to The Iron Lady in which Margaret Thatcher is haunted by the ghost of her husband is currently being filmed.
The Phantom Denis will be released this summer.


What's the difference between Margaret Thatcher and Michael Jackson?
Margaret Thatcher didn't like miners.

I do love the irony.
It's Margaret Thatcher's birthday, and the whole world is focused on a mine.


"There is no such thing as society" - Margaret Thatcher, 1988
"There is no such thing as Margaret Thatcher" - Society, 2013


Margaret Thatcher's final wish was to be cremated.
Unfortunately, we've no coal left

Just like Margaret Thatcher, I refer to my wife as "The Iron Lady"
She is also known as "The Cook Lady", "The Cleaning Lady", "The Wash Lady"...

Plans have begun for Margaret Thatcher's state funeral.
It'll be the first time ever the 21 gun salute is fired into the coffin.

After Margaret Thatcher's funeral, you will be able to download Tony Blair's eulogy to her from the BBC iPlayer.
Just look for it under 'The Blair/Witch Project'.

April 2013 - Margaret Thatcher dies.
May 2013 - Hell privatised.


Wednesday 17 April 2013

நகைச்சுவை: கோழிக்குஞ்சும் கோத்தபாயவும்

தனது நோயாளியை அழைத்த மனோதத்துவ நிபுணர் உன்னை என்னால் விரைவில் குணப்படுத்த முடியும் ஆறு மாதத்துக்குள் நீ நல்ல முன்னேற்றம் அடைந்துவிட்டாய் என்றார்.

அதற்கு அந்த நோயாளி ஆறு மாததிற்கு முன்னர் நான் இந்த நாட்டின் பிரதம மந்திரியாய் இருந்தேன். இப்போது வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறேன். இதைப் போய் முன்னேற்றம் என்கிறீர்களே என்றான்.

xxxxxxxxxx

டேவிட் ஒரு அப்பாவி எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்காதவன். அவன் ஒரு நாள் காரை வேகமாக ஓட்டிச் செல்லும் போது குறுக்கே வந்த ஒரு முயலை மோதிவிட்டான். திடீரென காரை நிறுத்தி இறங்கிப் பார்த்தபோது அந்த முயல் இறந்து கிடந்தது. டேவிட் உடனே நிலத்தில் விழுந்து அழத் தொடங்கி விட்டான். அந்த வழியே வந்த் இன்னொரு கார் அங்கு நிறுத்தப்பட்டு அதில் இருந்து ஒரு பெண் இறங்கி வந்தாள். நடந்ததை விசாரித்த அவள் இதற்குக் கவலைப்படாதே எனச் சொல்லி தனது கைப்பையைத் திறந்து அதனுள் இருந்து ஒரு spray can ஐ எடுத்து அந்த முயலின் மீது spray பண்ணினாள் உடனே முயல் (hare) எழுந்து பாய்ந்து கொண்டு சிறிது தூரம் சென்று பின்னர் நின்று அவர்களைப்பார்த்து கை அசைத்தது(wave). மீண்டும் சிறிது தூரம் சென்று பின்னர் நின்று அவர்களைப்பார்த்துக் கையசைத்தது. இப்படி தொடர்ந்து செய்து கொண்டே இருந்தது. ஆச்சரியப்பட்ட டேவிட் அந்தப் பெண்ணைப்பார்த்து என்ன spray பண்ணினாய் என ஆச்சரியத்துடன் கேட்டாள். அதற்கு அந்தப்பெண் அந்த spray canஇல் எழுதி இருந்ததை வாசித்தாள்: "Hair spray. Restores life to dead hair(hare). Adds permanent wave."


xxxxxxxxx

 கோழிக்குஞ்சு ஏன் தெருவைக் கடந்து சென்றது என்ற கேள்விக்கு இவர்கள் அளித்த பதில்:

இந்திய வெளியுறவுத்துறை: தெருவைக் கோழிக்குஞ்சு கடக்காவிடின் சீனா கடந்துவிடும்.

அமெரிக்க வெளியுறவுத்துறை: கோழிக்குஞ்சை பாதுகாப்பாக தெருவைக் கடக்க இரண்டு பக்கமும் வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும் என ஒரு தீர்மானத்தை நாம் ஐநா மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவர இருந்தோம். இந்தியாவுடனான கேந்திரோபாய நட்புறவைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் நிர்ப்பந்தத்தின் பேரில் "வாகனங்களை நிறுத்த வேண்டும்" என்றபதம் நீக்கப்பட்டுவிட்டது.

கருணாநிதி: அந்தப் பக்கம் டெசோ மாநாடு நடப்பதால் அது கோழிக்குஞ்சுக்குப் பாதுகாப்பான இடம். தேர்தலுக்குப் பின்னர் கழகக் கண்மணிகளுக்கு கோழி சூப் இலவசமாக வழங்கப்படும்.

ஞானதேசிகன்: தேர்தலில் காங்கிரசு தனித்துப் போட்டியிடமுடிவு செய்துள்ளது அதனால் கோழிக்குஞ்சு தெருவைக்கடந்தது.

சூனா சுவாமி: இந்தப் பக்கம் porkis இருக்கிறாள். 

ப சிதம்பரம்: காங்கிரசை யாரும் தனிமைப்படுத்த முடியாது என்பதை கோழிக்குஞ்சு உணர்ந்து கொண்டதால் அது தெருவைக் கடந்து செல்கின்றது.

கோத்தபாய ராஜபக்ச: அது ஒரு ஆயுதமேந்திய பயங்கரவாதி. It is a legitimate target to be attacked and destroyed. அதனால் கோழிக்குஞ்சு தெருவைக்கடக்க முன்னர் கொல்லப்படவேண்டும்.


Tuesday 16 April 2013

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடும் அசிங்க டீல்களும்

ஐம்பத்தி நான்கு நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பு ஒரு பன்னாட்டு அரசியல் கூட்டமைப்பு அல்ல. இதன் தலைவர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் ராணி. 1965-ம் ஆண்டு இலண்டனில் நடந்த பொதுநலவாய நாடுகளின் அரசுத் தலைவர்களின் மாநாட்டில் பொதுநலவாய நாடுகளிற்கு என ஒரு பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. தற்போதைய பொதுச் செயலாளராக கமலேஷ் சர்மா என்பவர் இருக்கிறார். இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை அறிந்தவர்கள் இந்தப் பெயரைப் படித்தவுடன் இவர் ஒரு தமிழின விரோதியாக இருக்க வேண்டும் எனச் சிந்திக்கலாம்.

பொதுநலவாய நாடுகள் சபை உருவாக்க வேண்டும் என்ற கருத்து 1884இல் உருவானது. அதற்கான சட்டபூர்வ அங்கீகாரம் 1921இல் செய்யப்பட்ட ஆங்கிலோ - ஐரிஸ் ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டது. பொதுநலவாய நாடுகளில் மொசாம்பிக் ருவண்டா ஆகிய இரு நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் பிரித்தானியக் குடியேற்ற ஆட்சிக்குக் கீழ் இருந்த நாடுகளாகும். இவை 22-01-1971இல் செய்யப்பட்ட சிங்கப்பூர் பிரகடனத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டுச் செயற்படுகின்றன.  அப்பிரகடனத்தில்:

These relationships we intend to foster and extend, for we believe that our multi-national association can expand human understanding and understanding among nations, assist in the elimination of discrimination based on differences of race, colour or creed, maintain and strengthen personal liberty, contribute to the enrichment of life for all, and provide a powerful influence for peace among nations.

பிரித்தானிய அரசி முடி சூடி 60வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி கமலேஷ் சர்மா ஒரு பொருளாதார மாநாட்டை ஒழுங்கு செய்தார். அந்த மாநாட்டை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே தொடக்கி வைக்க கமலேஷ் சர்மா ஏற்பாடு செய்திருந்தார். மஹிந்த ராஜபக்சே ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றவிருந்த உரை தமிழர்களின் எதிர்ப்பால் இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் எங்காவது ஓர் இடத்தில் உரையாற்றியே தீருவேன் என்ற மஹிந்தவின் உறுதிமொழியை இந்தியரான கமலேஷ் சர்மா நிறைவேற்ற முயன்றதாகக் கருதப்பட்டது. தமிழர்கள் இதற்கும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் மஹிந்த ராஜபக்சே ஆரம்பித்து வைக்க இருந்த மாநாட்டில் "பங்குபற்றுவதற்கு" ஐம்பது தமிழர்கள் பெரும் தொகைப்பணம் செலுத்தி நுழைவுச் சீட்டும் பெற்றிருந்தனர். இவர் மாநாட்டில் எதைத் தூக்கி மஹிந்த மேல் வீசுவார்கள் என்று தெரியாமல் விழித்த கமலேஷ் சர்மா கடைசி நேரத்தில் மாநாட்டின் அரைப்பகுதியை இரத்துச் செய்துவிட்டார்.

பொதுநலவாய நாடுகள் சபை மனித உரிமை விவகாரத்தில் காட்டும் கரிசனை போதாது என்ற குற்றச் சாட்டு நெடுநாளாக இருந்து வருகிறது. மனித உரிமை மீறல்களைக் கையில் எடுத்தால் எல்லா நாடுகளுமே குற்றவாளிகள் தான். 2010 வெளியில் கசிந்த ஓர் இரகசிய அறிக்கையின் படி பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா தனது அதிகாரிகளுக்கு மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசவேண்டாம் என உத்தரவிட்டிருந்தது தெரிய வந்தது.  பொதுநலவாயா நாடுகளின் குடிமக்களான தமிழர்களில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதை பொதுநலவாய நாடுகள் கண்டு கொள்ளவில்லை.

உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் பங்கு பெறும் பொதுநலவாய மாநாட்டின் அடுத்த உச்சி மாநாடு இலங்கையில் 2013 நவெம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இலங்கையின் மனித உரிமை மீறலகளைக் காரணம் காட்டி கனடியப் பிரதமர்  ஸ் ரீபன் ஹார்ப்பர் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான மேம்பாட்டை ஏற்படுத்தாவிடில் தான் இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாயநாடுகளின் மாநாட்டைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்து விட்டார்.

ஒஸ்ரேலிய அரசிற்கும் இலங்கை அரசிற்கும் இடையில் டீலா நோ டீலா?
இலங்கையில் இருந்து உயிருக்குப் பயந்து தப்பி ஓடும் தமிழர்களைத் தனது நாட்டுக்கு வராமல் இலங்கை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக இலங்கையின் மனித உரிமை மீறல்களை ஒஸ்ரேலியா கண்டுக்காமல் இருக்கும் என ஒஸ்ரேலியா இலங்கையுடன் ஒரு டீல் செய்துள்ளதாகக் கருதப்படுகிறது.  ஒஸ்ரேலியாவிற்கு தப்பி ஓடுவதற்கு இலங்கையில் ஒரு தமிழ் குடும்பம் தனது வீட்டையும் காணியையும் விற்று வரும் பணத்தை ஒரு முகவரிடம் கொடுக்கும். ஆனால் அந்தத் தமிழ் குடும்பத்திற்கு தெரியாது தமது காணியை வாங்குவதே அந்த முகவர் கும்பல்தான் என்று. பின்னர் அந்த தமிழ் குடும்பத்தை மேலும் பல குடும்பங்களுடன் சேர்ந்து கப்பல் ஏற்றி ஒஸ்ரேலியாவிற்கு அனுப்பும். பின்னர் அதே முகவர் கொடுக்கும் தகவலை வைத்து இலங்கைக் கடற்படை அவர்களைக் கைது செய்துவிடும். இப்படிச் செய்வதால் இலங்கையில் இருந்து ஒஸ்ரேலியாவிற்கு செல்பவர்களைத் தடுக்கலாம். இந்த கைங்கரியத்தைப் புரியும் முகவர்கள் இலங்கையில் மிக முக்கியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. ஆனால் இலங்கையில் நடக்கும் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என ஒஸ்ரேலியப் பிரதமர் மீது அழுத்தங்கள் பலதரப்பில் இருந்தும் பிரயோகிக்கப்படுகின்றன. ஒஸ்ரேலியப் பிரதமரும் கனடியப் பிரதமரைப் பின்பற்றி ஒஸ்ரேலிய பிரதமரும் இலங்கை மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என ஒஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் மல்கம் ஃபிரேசர், ஒஸ்ரேலிய தமிழ் காங்கிரசைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ ராஜேஸ்வரன், ஒஸ்ரேலிய பசுமைக் கட்சியைச் சேர்ந்த லீ ரியனன் உட்பட பல பாராளமன்ற உறுப்பினர்கள், மூதவை உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் ஒஸ்ரேலியப் பிரதமர் ஜூலியா ஜில்லார்ட்டிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. ஒஸ்ரேலியா இலங்கைக்கு சாதகமாக நடந்து கொள்ளாவிடில் இலங்கையில் இருந்து பல அகதிகள் ஒஸ்ரேலியாவிற்கு செல்வார்கள் என்ற அச்சத்தில் ஒஸ்ரேலிய அரசு இருக்கிறது. இது ஒருவகையான கருப்பு மிரட்டல் எனச் சொல்லாம். ஒஸ்ரேலிய வெளிநாட்டு அமைச்சர் பொப் கார் 2012 டிசம்பரில் இலங்கை சென்று இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்குப் பாதுகாப்பான நாடு என்றார். ஆனால் பல மனித உரிமை அமைப்புக்கள் இதனை மறுத்தன.

பிரித்தானியாவும் கடும் அதிருப்தி
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு நடந்தால் அதில் பிரித்தானிய மகராணி இரண்டாம் எலிசபெத், பிரித்தானியப் பிரதமர் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என செய்திகள் வெளிவந்துள்ளன.  அரச குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாராவது பங்கு பற்றுவார்களா என்பதுபற்றி சரியாகத் தெரியவில்லை. நியூசிலாந்தும் பிரித்தானியாவின் நிலைப்பாட்டிலேயே உள்ளது. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பிரித்தானியா கடும் அதிருப்தியில் உள்ளது. கனடாவைப் போலவே பிரித்தானியாவும் தமது நாடுகளில் வாழும் தமிழர்களின் உணர்வுகளைக் கருத்தில் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கபப்டுகிறது.பிரித்தானியாவின் இரு பெரும் கட்சிகளான தொழிற்கட்சியினதும் பழமைவாதக் கட்சியினதும் முன்னாள் வெளிநாட்டமைச்சர்களான டேவிட் மில்லி பாண்டும் மல்கம் ரிஃப்கிண்டும் பிரித்தானிய மகாராணியார் இலங்கை செல்லக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.2012 நவம்பர் 14-ம் திகதி பிரித்தானியப் பாராளமன்றத்தின் வெளிவிவகாரத் தெரிவுக் குழு பிரித்தானியப் பிரதமர் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது எனத் தெரிவித்தது.

இலங்கையின் இராசதந்திரக் கைக்கூலியாக இந்தியா
அண்மைக்காலங்களாக இலங்கையின் ஒரு இராசதந்திரக் கைக்கூலி போல் இந்தியா செயற்பட்டு வருகிறது. இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மநாட்டைப்பற்றி இந்தியா பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிக்காத போதிலும் திரைமறைவில் அது இலங்கையில் மாநாடு நடப்பதைத் தீவிரமாக ஆதரிக்கிறது. சீனா பொதுநலவாய நாடுகள் சபையில் இல்லை. இந்தியா உதவாவிட்டால் சீனா உதவும் என்ற நொண்டிச் சாட்டை இங்கு இந்தியா முன்வைக்க முடியாது. இலங்கையின் மனித உரிமைகளைத் தூக்கிப்பிடித்தால் காஷ்மீரில் இந்தியா செய்யும் மனித உரிமை மீறல்களை பாக்கிஸ்த்தான் தூக்கிப் பிடிக்கும் என்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போன்றது.

பொதுநலவாய நாடுகளின் பட்டயத்தை(charter) மீறும் செயல்
பொதுநலவாய நாடுகளுக்கு என்று ஒரு பட்டயத்தை பிரபலங்களின் குழுவினரின் (Eminent Persons Group - EPG) ஆலோசனையின் பேரில் அங்கீகரித்தது. அதன்படி உறுப்பு நாடுகள்:
 "We are committed to equality and respect for the protection and promotion of civil, political, economic, social and cultural rights including the right to development, for all without discrimination on any grounds as the foundations of peaceful, just and stable societies".

பிரபலங்களின் குழுவைச் சேர்ந்தவர்களே இப்போது இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதால் அங்கு மாநாடு நடைபெறக் கூடாது எனச் சொல்கின்றனர்.


ஆனால் இந்தியரான கமலேஷ் சர்மா இலங்கையில் இருந்து மாநாட்டை வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை என்கிறார். எல்லாம் தட்சணை செய்யும் வேலையா? ஏப்ரில் மாத இறுதியில் பொதுநலவாய நாடுகளின் அமைச்சு செயற் குழுவின் (Commonwealth Ministerial Action Group) கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் இலங்கையில் இருந்து மொரீஸியஸ் தீவிற்கு மாநாட்டை இடமாற்றம் செய்யும் முன்மொழிவு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் போர்குற்றம் நடந்தமைக்கான போதிய ஆதரங்கள் இருப்பதாமா ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அமைத்த நிபுணர்குழு அறிக்கை சுட்டிக்காட்டிய நிலையில் மஹிந்த ராஜபக்ச அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலைமப் பொறுப்பில் இருப்பதை இந்தியா போன்ற மானம் கெட்ட நாடுகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளும். கனடாவும் பிரித்தானியாவும் தமது நட்டில் வாழும் மக்களின் கருத்துக் கொடுக்கும் மதிப்பை இந்தியா தனது நாட்டில் வாழும் மக்களின் கருத்துக்கு கொடுக்க மாட்டாது.

Monday 15 April 2013

எரியும் சிரியாவில் சரியாத அசாத்தை அமெரிக்கா சரிக்கட்டுமா?

ஐக்கிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகம் தொடர்ச்சியாக ஒழுங்கு செய்து வரும் இராசதந்திர மட்டக் கூட்டங்கள் சிரிய உள்நாட்டுப் போரில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

சியா முசுலிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனக் குழுமத்தினர் சிரியாவில் சிறுபான்மையினராகவும் சியா முசுலிம்கள் பெரும்பான்மையினராகவும் இருக்கும் சிரியாவில் அலவைற் இனக்குழுமத்தினரின் கைகளிலேயே ஆட்சி இருக்கிறது. சிரியாவில் அடக்குமுறை மூலம் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருந்த பஷார் அல் அசாதிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களாக 2011இன் ஆரம்பப்பகுதியில் உருவானது. 2012-ம் ஆண்டு முடியமுன்னர் கவிழ்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சி இன்று வரை தொடர்கிறது.

சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு விசுவாசமான ஐம்பதினாயிரம் படையினர் இருக்கின்றனர். இவர்களிடம் சிறந்த படைக்கலன்கள் இருக்கின்றன. இரசியா அமைத்துக் கொடுத்த புதிய விமான எதிர்ப்பு முறைமை அசாத்தின் கைவசம் இருக்கிறது. பாரிய வேதியியல் குண்டுகள் அசாத்திடம் இருக்கின்றன. இதனால் அசாத்திற்கும் ஈரானிற்கும் நெருங்கிய நட்புண்டு. அசாத் பதவியில் இருந்து விலக்கப்பட்டு சிரியாவில் சுனி முஸ்லிம்கள் ஆட்சியைக் கைப்பற்றினால் அது மேற்காசிய மற்றும் வட ஆபிரிக்கப் பிராந்தியத்தில் தந்திரோபாய சமநிலை ஈரானுக்குப் பெரும் பாதகமாக அமையும் என ஈரான் உறுதியாக நம்புகிறது. ஈரானுடன் நட்புறவைப் பேணும் சீனாவும் ஈரானின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறது. இரசிய கடற்படைத் தளம் ஒன்று சிரியாவில் இருக்கிறது. சிரியாவானது ஈராக், துருக்கி, லெபனான். இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய சாதகமற்ற நாடுகளிடை இருக்கும் ஒரு நாடு. அசாத் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவதை சவுதி அரேபியாவும் காட்டாரும் பெரிதும் விரும்புகின்றன.

விலகி நிற்கும் மேற்குலகமும் கையாலாகாத ஐநாவும்
நேட்டோப் படைகள் ஒருதலைப் பட்சமான விமானத் தாக்குதலில் ஈடுபடாமல் இருக்க இரசியா தனது புதிய ரக விமான எதிர்ப்பு முறைமையை சிரியத் தலைநகர் டமஸ்கசில் நிறுவியுள்ளது. தாம் அசாத் ஆட்சியை அகற்றி அங்கு ஒரு இசுலாமியவாதிகளின் ஆட்சியை நிறுவ உதவி செய்வதா என்பது அவர்கள் முன் இருக்கும் கேள்வி. எகிப்தில் இசுலாமிய மதவாதிகளின் கை ஓங்குவதை அவர்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது இருக்கும் பொருளாதாரப் பிரச்சனையில் இன்னொரு போர் முனையத் திறக்க முடியாது.  எண்பதினாயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்ட சிரிய உள்நாட்டுப் போரில் ஏதும் செய்ய முடியாமல் ஐக்கிய நாடுகள் சபை இருக்கிறது.

சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தமக்கு விமான எதிர்ப்பு ஏவுகணை போன்ற படைக்கலன்களைத் தந்து உதவு மாறு பல நாடுகளிற்கு வேண்டுகோள்களைத் தொடர்ந்து விடுத்து வருகின்றனர். ஆனால் வலிமை மிக்க படைக்கலன்கள் இசுலாமியத் தீவிரவாதிகள் கைகளுக்குப் செல்வதையோ அவற்றை இயக்கும் திறனை அவர்கள் பெறுவதையோ மேற்கு நாடுகள் விரும்பவில்லை.

இனிவரும் வாரங்களில் யுனைரெட் அரப் எமிரேட்ஸ், துருக்கி, காட்டார், ஜோர்டன் ஆகிய நாட்டு இராசதந்திரிகளை ஐக்கிய அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமாவின் நிர்வாகத்தினர் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தவிருகின்றனர். இவர்கள் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் வழங்கப்பட்டு சிரியப்படைத்துறை சமநிலையை கிளர்ச்சிக்காரர்களுக்கு சாதகமாக மாற்ற வேண்டும் என ஐக்கிய அமெரிக்காவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக தீவிரவாதத் தாக்குதலை நடாத்திய அல் கெய்தா இயக்கத்தின் ஒரு அங்கமான ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர் ஈராக்கில் இருந்து சிரியா சென்று அங்குள்ள கிளர்ச்சிக் காரர்களுடன் இணைந்து போராடுகின்றனர். இவர்கள் பல தற்கொலைத் தாக்குதல்களையும் நடாத்தியுள்ளனர் எனப்படுகிறது. மேலும் ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர் பல கிருத்தவர்களைக் கொடூரமாகக் கொன்றுள்ளனர் என்றும் கிருத்தவத் தேவாலயங்களை இடித்துத் தள்ளியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவுவதில் தாமதம் காட்டுகிரது. ஆனால் ஜோர்டான் சிரியப் போர் அகதிகளைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறது. தற்போது ஜோர்டானில் ஐந்து இலட்சம் சிரியர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தத் தொகை இந்த ஆண்டு இறுதியல் பன்னிரண்டு இலட்சமாகலாம் என ஜோர்டான் அஞ்சுகிறது. ஏப்ரல் மாத இறுதியில் அமெரிக்க அரசுத் துறை செயலர் துருக்கிக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணம் சிரியப் போரைப் பொறுத்தவரை முக்கியத்துவமானதாகக் கருதப்படுகிறது.

சிரியக் கிளர்ச்சிக்காரர்களில் அமெரிக்க செல்லப்பிள்ளை
ஆளும் அலவைற், பெரும்பான்மையினரான. சுனி முசுலிம்கள், சியா முசுலிம்கள், கிருத்தவர்கள், குர்திஷ்கள், துருக்கியர்கள், துருசுக்கள் எனப் பலதரப்பட்ட இனக்குழுமங்கள் சிரியாவில் இருக்கின்றன. நாற்பது ஆண்டுகால அடக்கு முறை ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில் இருக்கையில் இந்த இனக் குழுமங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்ற நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை சிரியா தொடர்ப்பாக 2012 டிசம்பர் 20ம் திகதி வெளியிட்ட இடைக்கால 10 பக்க அறிக்கையில் சிரியாவில் பல வேறுபட்ட இனக்குழுமங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி முற்றாக அழியும் நிலையில் அல்லது நாட்டை விட்டு முற்றாக வெளியேறும் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. சிரியாவில் அதிபர் பஷார் எதிரான கிளர்ச்சிக்காரர்கள் மத்தியில் பல தரப்பட்ட இயக்கங்கள் இருக்கின்றன. அதில் சுதந்திர சிரியா படையினர் ஐக்கிய அமெரிக்க ஆதரவு இயக்கமாகக் கருதப் படுகிறது. அமெரிக்காவும் வேறும் பல மேற்கு நாடுகளும் ஜபத் அல் நஸ்ரா உட்பட சில சிரிய இயக்கங்களை பயங்கரவாத அமைப்புக்களாக அறிவித்துள்ளன. சிரிய விடுதலைப் படை, சுதந்திர சிரியப்படை, சிரியத் தேசிய சபை, தேசிய ஒருங்கிணைப்புக் குழு, சிரியத் தேசப் பற்றாளர் குழு எனப் பல குழுக்களாக சிரியக் கிளர்ச்சியாளர்கள் பிரிந்து நிற்கின்றனர். அலேப்பே பிராந்தியத்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு சார் போராளிகளும் ஜபத் அல் நஸ்ரா போராளிகளும் அண்மையில் கடுமையாக மோதிக் கொண்டனர். இவற்றில் ஜெனரல் சலிம் ஐட்ரிஸ் தலைமையிலான Free Syrian Army எனப்படும் சுதந்திர சிரியப்படையினர் அமெரிக்காவிற்குப் பிடித்தவர்களாக இருக்கின்றனர். இவர்களின் தலைமையில் வேறும் சில கிளர்ச்சி இயக்கங்களையும் இணைத்து supreme military council என்னும் உச்ச படைத்துறைப் பேரவையை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இவர்களுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் பல படைக்கலன்களல்லாத (non-lethal)உபகரணங்களை வழங்கின. அல் கெய்தா போன்ற இசுலாமியப் போராளி இயக்கங்கள் தாம் துனிசியா, எகிப்து, லிபியாவில் விட்ட பிழைகளை இனி விடுவதில்லை என உணர்ந்து கொண்டு சிரியப் உள்நாட்டுப் போரில் கிளர்ச்சிக்காரர்களுக்குள் தமது கையாட்களை ஊடுருவச் செய்துள்ளனர். இது சிரியப் பிரச்சனையை கடுமையானதாக்கி அது இழுபட்டுச் செல்கிறது. லெபனானில் செயற்படும் ஈரானிய ஆதரவு போராளி இயக்கமான ஹிஸ்புல்லா சிரிய அதிபரின் படையினருடன் இணைந்து செயற்படுகின்றனர். 

அசாத் தாக்குப் பிடிப்பது எப்படி?
ஈரான், சீனா, இரசியா ஆகிய நாடுகளின் ஆதரவு சிரிய அதிபர் பஷார் அல் அசாத் இரண்டு ஆண்டுகளாக பதவியில் நீடிப்பதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. ஈரானில் இருந்து ஈராக்கினூடாக அசாத்திற்கு படைக்கலன்கள் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஈராக்கின் வான்பரப்பை ஈரான் பாவிப்பதைத் தடுக்கும் படி அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு இதுவரை செவி சாய்க்கப்படவில்லை. அசாத்திடமிருந்து இதுவரை பல பிரதேசங்களை கிளர்ச்சிக்க்காரர்கள் விடுவித்தாலும் எந்த ஒரு முக்கிய நகரத்தையும் கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றவில்லை. தேவையற்ற பிரதேசங்களை கிளர்ச்சிக்க்காரர்களுக்கு விட்டுக் கொடுத்து அவர்களின் படைகளை அப்பிரதேசக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வைக்கிறார் அசாத். அசாத் தன்னிடம் இருக்கும் எல்லா படைப்பலத்தையும் பாவிக்கிறார். அதில் முக்கியமாக அவரின் விமானப்படை கிளர்ச்சிக்காரர்களுக்கு பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. கிளர்ச்சிக்காரர்கள் தாம் கைப்பற்றிய பிரதேசங்களில் சிலசமயம் தமக்குள் முரண்பட்டு மோதிக் கொள்வதுமுண்டு.

இழுபறி நிலை தொடரலாம்.
வெளியில் இருந்து படைக்கலன்கள் கிடைக்காமல் கிளர்ச்சிக்காரர்களால் போரில் வெல்ல முடியாது. சிரியா தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட இரு தீர்மானங்கள் இரசியாவாலும் சீனாவாலும் கூட்டாக நிராகரிக்கப்பட்டன. பராக் ஒபாமா நிர்வாகம் அசாத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் சிரியா புனிதப் போராளிகள் கைக்களுக்குப் போய் அது ஒரு தீவிர இசுலாமிய நாடாகிவிடும் என அஞ்சுகிறது. தனது நட்பு நாடுகளான யுனைரெட் அரப் எமிரேட்ஸ், துருக்கி, காட்டார், ஜோர்டன் போன்றவற்றுடன் அமெரிக்கா நடத்த விருக்கும் தொடர் பேச்சு வார்ததைகளின் பின்னர் அமெரிக்கா கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்களைக் கொடுக்குமென்று நம்ப முடியாது. இந்நிலையில் சிரியப் போர் தொடர்ந்த் இழுபறி நிலையில் இருக்கலாம்.

Sunday 14 April 2013

தமிழ்மொழியை வளர்க்கும் திரைப்பட நகைச்சுவை எழுத்தாளர்கள்

வடிவேலு தன் நகைச்சுவைக் காட்சியில் பாவிக்கும் வசனங்கள் பல தமிழ்மொழியில் அன்றாடம் பாவிக்கும் சொற்தொடர்களாகிவிட்டன. இந்த வகையில் தமிழ்த் திரைப்படங்களிற்கு பாடல் எழுதுபவர்களை விட, வசனம் எழுதுபவர்களை விட தமிழ்ப்படங்களிற்கு நகைச்சுவை எழுதுபவர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்கின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தம் தொடர்பாக நடந்த ஒரு மாநாட்டில் உரையாற்றிய சட்டத்துறை விரிவுரையாளர் 13வது திருத்தம் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பதைப்பற்றிக் குறிப்பிடும் போது " அது வரும் ஆனால் வராது" என்றார். 13வது திருத்தம் நிறைவேற்றும்படுமா என்ற கேள்விக்குச் சரியான பதிலைக் கொடுப்பதற்கு வடிவேலுவிற்கு நகைச்சுவை எழுதுபவர் உருவாக்கிய சொற்தொடர் அவருக்கு பெரிதும் உதவியது.  ஒரு மொழியின் நோக்கம் சிந்தனைப் பரிமாற்றம். ஒருவனின் சிந்தனைப்பரிமாற்றத் திறன் அவனது மொழியறிவிலும் அவன் பாவிக்கும் மொழியின் வளத்திலும் இருக்கிறது. மொழியின் வளத்திற்க்கு அதில் உள்ள சொற்களும் சொற்தொடர்களும் முக்கியமானவையாகும். ஒரு சாதாராண சொல்லாக இருந்த "கிளம்பீட்டான்யா"  என்ற சொல்லை ஒரு பெரும் செயலைச் செய்யப் போகிறான என்ற அர்த்தமுள்ளதாக மாற்றப்பட்டது தமிழ்த் திரைப்படத்தில்தான். இன்று பல முகவேட்டு நிலைக்கூற்றுக்களும் டுவிட்டுகளும் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை வசங்கள் நிறைய அடிபடுகின்றன. அரசியல் மேடைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

  • யாருமே இல்லாத கடையில் யாருக்கு ரீ ஆத்துறாய்
  •  அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
  • உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கிவிட்டாங்க
  • வரும் ஆனால் வராது
  • பார்க்கிற இடமெல்லாம் கண்ணி வெடி
  • பில்டிங் வீக் பேஸ்மென்ற் ஸ்ராங்
  • ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுறமாதிரி
  • எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்
இவை மாதிரிப்பல சொற்தொடர்களை மக்கள் அன்றாடம் பாவிக்க வைத்த நகைச்சுவை எழுத்தாளர்கள் அவர்களின் வசனங்களைப் பேசிப் புகழ் பெற்றவர்கள் போல் புகழ் பெறவில்லை என்பது வருந்தத்தக்கது. அவர்களில் ஒருவரின் பெயர் கூட எனக்குத் தெரியாது!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...