Sunday 24 November 2013

நகைச்சுவைக் கதை: பொய் சொன்னதால் உயிருடன் புதைக்கப்பட்ட அரசியல் வாதி

 திருத்த முடியாத கழுதைகளின் கழகத்தைச் சேர்ந்த ஆறு சட்ட மன்ற உறுப்பினர்களும் மூன்று மாவட்டச் செயலாளர்களும் ஒரு கிராமத்தினூடாக ஒரு வண்டியில் விரைவாகச் சென்று கொண்டிருந்த போது பயங்கர விபத்தில் சிக்கி பள்ளத்தில் விழுந்து விட்டனர்.

அவர்கள் எல்லோரையும் ஒரு விவசாயி புதைத்து விட்டார். அங்கு இரண்டு நாட்கள் கழித்துச் சென்ற காவற்துறையினர் விவசாயியை  விசாரித்தனர். எல்லோரும் படுகாயமடைந்திருந்ததாக விவசாயி சொன்னார். எல்லோரும் இறந்திருந்தார்களா என காவற்துறையினர் விவசாயியைக் கேட்டனர். அதற்கு விவசாயி இருவர் மட்டும் தாம் உயிருடன் இருப்பதாகச் சொன்னார்கள்; இவங்கள் ஒரு நாளும் உண்மை பேசியதில்லை என்பதால் அவர்களும் இறந்திருக்க வேண்டும் என நினைத்துப் புதைத்து விட்டேன் என்றார்.

நீதி மன்றம் போன குழாயடிச் சண்டை
ஒரு குழாயடியில் ஏழு பெண்கள் கடுமையாகச் சண்டை போட்டு அது மோசமான அடிதடியில் முடிந்தது. நீதிமன்றத்திற்கு ஏழு பேரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிச் சத்தமிட்டனர். அப்போது நீதியரசர் உங்களில் மூத்தவள் முதலில் பேசுங்கள் என உத்தரவிட்டார். வழக்குகள் திரும்ப்பப் பெறப்பட்டன.

மாவீரர் நினைவு
பலமிழந்து நிலமிழந்து
பொருளழிந்து நிலையிழந்து
உரமிழந்து உயிரிழிந்து
பரிதவிக்கும் எம் இனத்தை
காக்கவந்து உயிர் கொடுத்த எம் மாவீர்களே
உங்கள் கனவே எங்கள் இலக்காகும்

பரிதவித்து பதை பதைத்து
உதைபட்டு வதைபட்டு
உயிரோடு புதைபட்டு
துணையற்ற என் இனத்தை
காத்திட வந்து உயிர் கொடுத்த எம் மாவீர்களே
உங்கள் கனவே எங்கள் இலக்காகும்


துணையற்று துயருற்று
துடிதுடித்து அடிபட்டு
கலைபட்டு எரியுற்று
கதியற்ற என் இனத்தை
காத்திட வந்து உயிர் கொடுத்த எம் மாவீர்களே
உங்கள் கனவே எங்கள் இலக்காகும்

கதியற்று உணவற்று
தெருவுழன்று கருவழிந்து
உருக்குலைந்து செருக்கழிந்து
பலவுமிழந்த என் இனத்தை
காத்திட வந்து உயிர் கொடுத்த எம் மாவீர்களே
உங்கள் கனவே எங்கள் இலக்காகும்.

இத்தனை அழிவுகள் செய்தபின்
இந்தியாதான் ஒரே கதியாம்
எமது திறவுகோல் இந்தியாவின்
கையில் இருக்கிறதாம்
பிதற்றுகின்றன எருமைகள்
நாயகம் இந்தியம் சனி ஆட்சியல்ல
தாயகம் தேசியம் தன்னாட்சியே உம் கனவு
புனிதர்களே உங்கள் புனிதக் கனவே
எம் இலக்காகும்.

சாட்சியமில்லா வதைகள்
சரணடையவந்தோர் கொலைகள்
போரில் தப்பியோர் உயிருடன் புதையல்
தப்பிக்கும் தப்புக்கள்
மருத்துவ மனைகள்மேல் குண்டுகள்
மருத்துவர்கள் கைதுகள்
தண்ணீருக்கும் தடைகள்
மறைந்து போன உண்மைகள்
மாவீரர்களே மறக்க மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்
உங்கள் கனவை எம் இலக்காக்குவோம்

புனிதர்களே இந்தப் புனித மாதத்தில்
உங்கள் கனவே எங்கள் இலக்கு என
நெஞ்சறைகளில் என்றும் அழியாத
உங்கள் கல்லறைகளில்
உறுதி மொழியெடுத்துக் கொள்கின்றோம் மாவீரரே
உறுதி மொழியெடுத்துக் கொள்கின்றோம்


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...