Saturday 16 November 2013

சகோதரக் கொலைக்கு மன்னிப்புக் கேட்ட அல் கெய்தா

சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக தீரமாகப் போராடிவரும் குழுவான ஈராக்கிற்கும் அல்-ஷாமிற்குமான இசுலாமிய அரசு (Islamic State of Iraq and al-Sham (ISIS)) என்னும் குழு தமது உறுப்பினர் ஒருவரை பொதுமக்கள் முன் கழுத்து வெட்டிக் கொன்றதுடன் அவரது தலையை பலரும் பார்க்கக் கூடியதாகத் தொங்கவிட்டது.

அலேப்பே நகரில் செய்யப்பட்ட இந்தக் கொலை ஆள் மாறட்டாத்தால் செய்யப்பட்டது எனப் பின்னர் ஈராக்கிற்கும் அல்-ஷாமிற்குமான இசுலாமிய அரசு அமைப்பினர் உணர்ந்து கொண்டனர். இவர்கள் அதிபர் அல் அசாத்தின் படையினருடன் இணைந்து செயற்படுபவர் எனக் கருது தமது அமைப்பின் ஒரு உறுப்பினரை தலை வெட்டிக் கொன்று விட்டனர். அத்துடன் இந்தக் கொலையை கணொளிப்பதிவு செய்து யூடியூப்பிலும் பதிவேற்றி விட்டனர். பின்னர் தமது தவற்றிற்கு ஈராக்கிற்கும் அல்-ஷாமிற்குமான இசுலாமிய அரசு அமைப்பினர் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.

 வெட்டிய தலையை கையில் வைத்துக் கொண்டு கடவுளைத் தொழுகின்றனர். இந்தக் காணொளி இணைப்பு கொடூரமானது. பார்க்காமல் இருப்பது நல்லது.: http://www.youtube.com/watch?v=alCsFKyAZR8&bpctr=1384611504


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...