Tuesday 29 October 2013

பொதுநலவாய மாநாடும் வேற்று வடிவ ஊழலும்

வர்த்தகர்கள் தமக்கு தேவையானவை நடக்க ஆளும் கட்சியினருக்கு பணம் கொடுப்பார்கள் அது ஆளும் கட்சியினரின் குடும்பச் செல்வத்தை அதிகரிக்கும். இப்படித் திரண்ட செல்வத்தை வைத்து அவர்கள் அடுத்த தேர்தலில் வெற்றிவாய்ப்பை அதிகரித்துக் கொள்வார்கள். இது நம்ம ஊரில் நடப்பது ஆனால் பல மேற்கு நாடுகளில் நடப்பது வித்தியாசமானது.


மேற்கு நாடுகளில் கட்சிகள் வர்த்தக நிறுவனங்களுக்கு இலாபமீட்டக் கூடிய வகையில் செயற்பட்டால் கட்சிக்கு அந்த வர்த்தக நிறுவனங்கள் நன்கொடை வழங்கும். அல்லது இப்படிச் செய்யும் அரசியல்வாதியின் அடுத்த தேர்தல் பரப்புரையை அந்த வர்த்தக் நிறுவங்கள் பின்னால் நின்று பார்த்துக் கொள்ளும்.

இலங்கையில் நடக்கும் பொதுநலவாய நாடுகளில் பங்கேற்பது என்று உறுதியாக நிற்கும் நாடு ஒஸ்ரேலியா. இலங்கையில் நடந்த எல்லா மனித உரிமை மீறலகளையும் நன்கு அறிந்து வைத்திருக்கும் பிரித்தானிய அரசு பிரித்தானியா. அதன் தலைமை அமைச்சரும் இளவரசர் சார்ல்ஸும் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டில் பங்கு பற்றவிருக்கின்றனர்.
இவற்றின் பின்னணியில் இருப்பது என்ன?

ஒஸ்ரேலியாவின் James Packerஇல் சூதாட்டக் கிளையானCrown Ltd நிறுவனம் இலங்கையுடன் இணைந்து தனது சூதாட்ட நிலையத்தை இலங்கையில் உருவாக்கவிருக்கிறது. நானூறு மில்லியன் டொலர்கள் பெறுமதியான Crown Sri Lankaஎன்னும் பெயர் கொண்ட இந்த சூதாட்ட நிலையம் 450 அறைகளைக் கொண்டது. இதில் உணவகங்களும் களியாட்ட நிலையங்களும் உள்ளடக்கம். சீனர்களிடையே சூதாட்ட ஆசை பெருகி வருகின்றது. சீனாவில் இருந்து இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளை பிரதான இலக்காகக் கொண்டே இந்த சூதாட்ட நிலையம் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த செய்தி வெளிவந்தவுடன் Crown Ltdஇன் பங்கு விலைகள் பெருமளவு அதிகரித்தது.

இலங்கை பொதுநலவாய மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டுப் பிரமுகர்களின் போக்கு வரத்துக்கு பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான Rolls Royce ஆடம்பர மகிழூர்ந்திகளை இலங்கை இறக்குமதி செய்ய இருக்கிறது.

இந்தியாவுடன் சீபா ஒப்பந்தத்தை செய்ய இலங்கை மறுத்து வருகிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...