Monday 16 September 2013

இந்தியாவின் அக்னி - 5 ஏவுகணை சீனாவிற்கு சவாலாகுமா?

இந்தியா தனது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையான அக்னி - 5 ஐ வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவி பரிசோதித்துள்ளது. 5000கிலோ மீட்டர்கள் பாய்ந்து தாக்க கூடியதும் கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய இந்த ஏவுகணையால் சீனாவின் எப்பாகத்திலும் அணுக்குண்டுகளால் தாக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது.

இந்தியாவின் அக்னி - 5 ஏவுகணை 17மீட்டர் நீளமும் 50 தொன் எடையும் கொண்டது. இது ஒரு தொன் எடையுள்ள அணுக்குண்டை எடுத்துச் செல்லக்கூடியது. நகரக்கூடிய கனரக வண்டி ஒன்றில் இருந்து இதை ஏவலாம்.

அக்னி -  5 இந்தியப படைத்துறைத் தொழில்நுட்பத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாகும். ஏற்கனவே இந்தியா கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை வீசும் தொழில்நுட்பத்தையும் பெற்றுள்ளது.

அக்னி - 5 இன் பாய்ச்சல் பாதையைப் பதிவு செய்தபார்த்த போது அது திட்டமிட்ட படி சரியாகச் செய்ற்பட்டது உறுதியாக்கப்பட்டுள்ளது.

சினாவிடம் தற்போது 250 அணு ஏவுகணைகளும், பாக்கிஸ்த்தானிடம் 120 அணு ஏவுகணைகளும் இந்தியாவிடம் 110 ஏவுகணைகளும் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சவால் இல்லை சமாளிப்புத்தான்
சீனாவின் DF-5A ஏவுகணைகள்13000 கிலோ மீட்டர் பாயக் கூடியவை, 3200கிலோ எடையுள்ள அணுக் குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியவை. இந்தச் சாவாலை ஓரளவாவது சமாளிக்கும் திறனை இந்தியாவின் அக்னி - 5 இந்தியாவிற்கு வழங்கும். சீன ஊடகமான குளோபல் ரைம்ஸ் இந்தியா சீனாவின் எப்பாகத்திலும் அணுக் குண்டால் தாக்குதல் நடத்தும் திறனைப் பெற்றதை வைத்துக் கொண்டு தனது வலுவை உயர்த்தி மதிப்பிடக் கூடாது, சீனாவின் அணுக்குண்டால் தாக்கும் திறன் இந்தியாவினதிலும் பார்க்க மேன்மையானதும் நம்பகரமானதும் என்கிறது. சீனாவுடனான முரன்பாடுகளில் இந்தியா அக்னி - 5 வைத்துக் கொண்டு அடம் பிடிக்க முடியாது என்றும் சொல்கிறது சீனாவின் குளோபல் ரைம்ஸ்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...