Friday 21 June 2013

கிரிக்கெட்டில் சிங்களத்தைத் தோற்கடித்த தமிழீழம்

2011இல் இந்திய மண்ணில் இந்தியாவிற்கு எதிராக ஐம்பது ஓவர்களில் 274 ஓட்டங்களைக் குவித்த இலங்கைத் துடுப்பாட்ட அணி 2013இல் இலண்டன் ஓவலில் 253 ஓட்டங்களைக் குவித்து காலிறுதிப் போட்டியில் ஒஸ்ரேலியாவை மண்கவ்வ வைத்தது. ஓவலில் ஈட்டிய வெற்றி மமதையில் மைதானத்தை விட்டு வெளியில் வந்த சிங்களக் காடையர்கள் அங்கு அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த தமிழர்களை எதிர்பாரவிதமாகத் தாக்கினர். அது அவர்கள் தமக்குத் தாமே வெட்டிய குழியாக அமைந்தது.

ஒவலில் ஜூன் 17 ஒஸ்ரேலியாவைத் தோற்கடித்த இலங்கைத் துடுப்பாட்ட அணி அடுத்து வேல்ஸின் கார்டிஃப் நகர Sophia Gardens மைதானத்தில் தனது இனக்கொலைப் பங்காளியான இந்தியாவை அரை இறுதிப் போட்டியில் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. 

பெண் பிள்ளையைக் கூடப் பின்னால் இருந்து தாக்கிய சிங்களக் கோழைகள்

இடறப்பட்ட புலிகள்
தமிழ்ப்பிள்ளைகளைத் தாக்கியது பிரித்தானியா வாழ் தமிழர்களை ஆத்திரமடைய வைத்தது. இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் பெரும் ஆர்ப்பாட்டத்திற்கு  ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பல நூறு மைல்கள் தாண்டி தமிழர்கள் இலண்டனிலிருந்தும் மற்றும் பல நகரங்களில் இருந்தும் தமிழர்கள் வேல்ஸின் கார்டிஃப் நகர மைதானத்தை நோக்கி விரைந்தனர். இலண்டனில் இருக்கும் எட்டப்பத் தமிழர்களும் சிங்கள் உள்வாளிகளும் விரைந்து செயற்பட்டனர். இலங்கை வெளியுறவுத் துறைக்கு ஆபத்து பற்றி அறிவுறுத்தல்கள் பறந்தன. இலண்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் தமது அணிக்கும் இரசிகர்களுக்கும் அதிகரித்த பாதுகாப்பு வேண்டினார். ஸ்கொட்லண்ட்யார்ட்டும் கார்டிஃபில் பாதுகாப்பை அதிகரித்தது. ஆனாலும் இலங்கை வீரர்கள் வந்த வண்டியை தமிழர்கள் சூழ்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்து சில நிமிடங்கள் தடுத்து வைத்திருந்தனர். காவற்துறையினர் பேச்சு வார்த்தை நடாத்தி நிலமையைச் சமாளித்தனர்.
மைதானத்திற்குள்ளும் அதிக புலிக்கொடிகள்

பல சிங்கள் இரசிகர்கள் Sophia Gardens மைதானத்திற்கான தமது  பயணத்தையும் இரத்துச் செய்தனர். மைதானத்திற்கு உள்ளும் புலிக்கொடிகள் பறந்த வண்ணமே இருந்தன. அச்சமடைந்த சிங்கள இரசிகர்கள் சிங்கள வீரர்கள் மைதானத்திற்குள் இறங்கும்  போது கைதட்டவும் தயங்கினர்.
Sophia Gardens மைதானத்தைச் சுற்றிலும் புலிக்கொடிகள் பல பறந்தன. சிங்கக் கொடிகளிலும் பார்க்க அசோகச் சக்கரக் கொடிகளிலும் பார்க்க புலிக்கொடிகளே அதிகமாகவும் உயரமாகவும் பறந்தன. புலிக் கொடியைத் தாங்கிக் கொண்டிருந்த பலர் தமது கால்களின் கீழ் சிங்கக் கொடியைப் போட்டு மிதி மிதி என்று மிதித்துக் கொண்டிருந்தனர்.

மும்முனைப் போட்டி
தமிழர்களின் ஆர்ப்பாட்டமும் ஆராவாரமும் சிங்களத் துடுப்பாட்ட வீரர்களின் கவனத்தைப் பெரிதும் சிதறடித்தது. சில இந்திய இரசிகர்களும் தமிழர்களுடன் இணைந்து சிங்கள வீரர்களுக்கு எதிராகக் கூச்சலிட்டனர். அது சிங்கள வீரர்களின் கவனத்தை மேலும் சிதறடித்தது. இலங்கைவீரர்கள் அவர்களின் வரலாற்றில் இல்லாத அளவு மோசமான சூழலில் ஆடவேண்டிய நிலை!!! 2011இல் இந்தியாவிலேயே இந்தியாவிற்கு எதிராக 274 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணியினரால், இலாண்டன் ஓவலில் ஒஸ்ரேலியாவிற்கு எதிராக 253 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணியினரால் Sophia Gardensஇல் 181 ஒட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மூன்றாவது ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து ஆறு ஓட்டங்களை மட்டுமே இலங்கை பெற்றது இலங்கையின் ஒரு மோசமான தொடக்க ஆட்டமாக அமைந்தது. 26வது ஓவர்வரை இலங்கையில் சராசரி ஓட்டம் ஓவர் ஒன்றிற்கு மூன்றிற்கு குறைவாகவே இருந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இருந்த இலங்கை அணியினரால் பின்னால் வந்த சுழல் பந்து வீச்சாளர்களையும் சமாளிக்க முடியாமல் போனது. விக்கெட் காப்பாளராக இருந்த தோனியும் பந்து வீசி ஒரு விக்கெட்டை இலகுவாகக் கைப்பற்றினார். இலங்கை வீரர்களின் நோக்கம் 45வது ஓவரில் 50 ஓவர் வரை தாக்குப் பிடிப்பதாக மட்டுமே இருந்தது.  பொதுவாக 50 ஓவர் போட்டியில் பல சிக்சர்களை விளாசும் இலங்கைத் துடுப்பாட்ட வீரர்களால் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது. இலங்கை அணியினர் துடுப்பாட்டம் செய்யும் போது கடைசி ஓவரில் சரியான தருணம் பார்த்து முதல் மைதான ஆக்கிரமிப்பு இரு தமிழ் இளைஞர்களால் செய்யப்பட்டது. கையில் 40,000 பொதுநலவாய நாட்டு மக்களை இராஜபக்ச கொன்றார் என்ற வாசகம் பதித்த பெரிய அட்டை அவர் கையில் இருந்தது. மைதானம் துடுப்பாட்டத்திற்கு சாதகமானதாக இல்லை பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே சாதகமானதாக இருந்தது என இலங்கை இரசிகர்கள் கருதினார்கள். ஆனால் இந்திய அணி துடுப்பாடத் தொடங்கிய போது முதலாவது விக்கெட்டை 77 ஓட்டங்கள் வரை இழக்காமல் இருந்தமை அந்த விவாதத்தைப் பொய்யாக்கியது.
போட்டி தொடங்கமுன் சிங்களவர்கள் சொன்னது.

சிறிதாகிய சிங்கமும் இரண்டாம் ஆக்கிரமிப்பும்
இந்திய அணியினர் துடுப்பாட்டக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கவால் ஒரு விக்கட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை. பாவம் 8 ஓவர்களில் 54 ஓட்டங்களைக் கொடுத்து அவரது வாழ்விலேயே ஒரு மோசமான களமாக Sophia Gardens அமைந்தது அவருக்கு. பொதுவாக Sophia Gardens மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்த மைதானமாகக் கருதப்படுகிறது. இந்திய அணியினர் துடுப்பாடும் போது மைதானத்தில் திரும்பத் திரும்ப அத்து மீறு உள் நுழைபவர்கள் ஆயிரம் பவுண்ட்ஸ் அபராதம் செலுத்த வேண்டும் என் விடுக்கப்பட்ட எச்சரிக்கைளையும் பொருட்படுத்தாமல் ஆறு தமிழ் இளைஞர்கள் புலிக்கொடிகளை உயர்த்திப் பிடித்தபடி ஆறு வேறு வேறு முனைகளில் இருந்து மைத்தானத்தை ஆக்கிரமித்தனர். பாவம் குசால் பெரேரா அவரது முகத்திற்கு நேரே முன்னே புலிக்கொடியை உயர்த்திப் பிடித்த படி ஒரு தமிழ் இளைஞர். குசால் பெரேரா தனது இரு கைகளையும் உயர்த்திப் பிடித்தபடி புத்தம் சரணம் கச்சாமி என்பது போல் நின்றார். இந்தியா இலகுவாக 8 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

மடிக்கப்பட்ட சிங்கக் கொடியும் மீண்டும் இலங்கையைக் காப்பாற்றிய இந்தியாவும்
சிங்களவனுக்கு பிரச்சனை என்றால் கைகொடுப்பது இந்தியாவின் தலையாய கடமை அன்றோ. போட்டி முடிந்தவுடன் சிங்கள இரசிகர்கள் தமது கருநீலச் சட்டையுடன் வெளியில் செல்ல அஞ்சி நின்றனர். பலர் தமது சட்டையைக் கழற்றி உள்ளிருந்த பெனியனுடன் வெளியேறினர். ஒருவர் கூடச் சிங்கக் கொடி பிடித்தபடி காணப்படவில்லை. இந்திய இரசிகர்களிடமிருந்து அவர்களின் தேசியக் கொடியை வாங்கி அதனால் தமது நீலச் சட்டையை மறைத்தபடி சில சிங்கள இரசிகர்கள் வெளியேறினர். காவற் துறையினர் பின்கதவால் பல சிங்கள இரசிகர்களை வெளியேற்றினர். மீண்டும் சிங்கக் கொடியை மிதித்தபடி தமிழர்கள் புலிக்கொடியைத் தூக்கிப் பிடித்தபடி நின்றனர்.

நன்றி கெட்ட இலங்கையும் மானம் கெட்ட இந்தியாவும்
சிங்கள இரசிகர்கள் இந்தியக் கொடிக்குள் மறைந்து தப்பியதையும் மறந்து சிங்களக் கிரிக்கெட் விமர்சகர்கள் இந்தியா திட்டமிட்டு தமிழர்களைத் தூண்டிவிட்டு தமது வீரர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வைத்தனர் என்கின்றனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...