Sunday 16 June 2013

என்றும் நீ என்னுடனே

என் மூலம் நீ
என் முதல்வன் நீ
என் முழுதும் நீ
என் மூச்சும் நீ

தேகம் தந்தவன்
தேவைகள் தீர்த்தவன்
நிழல் தந்தவன்
நிழலாய்த் தொடர்ந்தவன்

பாசம் பொழிந்தவன்
பாதைகள் வகுத்தவன்
பார்வையில் வளர்த்தவன்
பாதமாய்ச் சுமந்தவன்

நின்றும் பரிவு
நினைவிலும் பரிவு
நீங்கியும் பரிவு
நிலையான பரிவு
நீ என்றும் என்னுடனே

 அன்று நான் பிறக்கும் போது எனது இணுவில் மருத்துவ மனை வாசலில் நின்று கொண்டு நல்லூர்க் கந்தனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். இன்று என் பிள்ளை பிறக்கும் போது நானும் மருத்துவர்களோடு மருத்துவன் போல் ஆடை அணிந்து நின்று மயங்கி விழுந்தேன்.

அன்று எனக்கு ஆங்கிலம் கற்பிக்க தந்தை மிகவும் சிரமப்பட்டார். இன்று என் பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்க நான் சிரமப்படுகிறேன்.

அன்று தந்தை தந்த வீட்டிலும் கல்வியிலும் நான் திருப்தியடைந்தேன்.
இன்று என் பிள்ளைகளுக்கு வீடு, நீச்சல் குளம், வேறு வேறு நாடுகளுக்கு விடுமுறை ஆளுக்கு ஒரு கார் எல்லாம் கொடுத்தும் திருப்தியில்லை.

அன்று உள்ளுக்கு லேபல் போட்ட தைத்த ஆடைகள் எனக்கு வாங்கி கொடுத்தால் பெரும் மகிழ்ச்சி. இன்று வெளியில் லேபல் போட்ட ஆடைகளுக்கு மிகை விலை கொடுத்து நான் வாங்கிக் கொடுக்க வேண்டும் என் பிள்ளைகளுக்கு

அன்று ஞாயிற்றுக் கிழமைகளில் நான் எழும்பாவிடில் அப்பா வந்து திட்டி எழுப்புவார். இன்று ஞாயிற்றுக் கிழமைகளில் என்னை வந்த் என் பிள்ளை உலுப்பி எழுப்பும் டியூஷனுக்கு போக நேரமாயிட்டுது என்று

அன்று நல்லூர் கோவில் வீதியில் கீ கொடுத்தால் ஓடும் கார் வாங்கினால் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. இன்று இன்று பிறந்த நாளுக்கு என் பிள்ளைக்கு கல்குலேட்டர் வாங்கிக் கொடுத்தால் எக்ஸ் பாக்ஸ் ஏன் வாங்கவில்லை எனப் பெரும் சண்டை.

அன்று என் தந்தை என் அறைக்குள் வந்தால் எழுந்து நின்று என்னப்பா என்பேன். என்று என் பிள்ளையில் அறைக்குள் போனால் ஏன் கதவில் தட்டிப் போட்டு வரவில்லை எனச் சண்டை.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...