Monday 10 June 2013

சரியும் இந்திய ரூபாவின் மதிப்பு காங்கிரசை விரட்டுமா?

இந்திய ரூபாவின் மதிப்பு தொடர்ந்து ஒரு வாரமாக சரிந்து வருகிறது. இன்று(10-06-20130 இந்திய ரூபாவின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக என்றுமில்லாத தாழ் நிலையாக 1$=Rs57.5450ஆகக் குறைந்துள்ளது. இதனால் இந்தியக் கடன் முறிகளின்(Bonds) விலையும் குறைந்துள்ளது.

சரியும் இந்திய ரூபாவின் மதிப்பை சமாளிக்க இந்திய அரசு Steel Authority இல் தனக்கிருந்து பங்குகளை 15 பில்லியன்களுக்கு விற்றும் பயனளிக்கவில்லை. இந்த விற்பனையால் தனது நிதிக்கையிருப்பை அதிகரிக்கலாம் அது ரூபாவின் மதிப்பை உயர்த்தும் என் இந்திய மைய வங்கியான ரிசேர்வ் வங்கி கணக்கிட்டிருந்தது. ஆனால் அது சரிவரவில்லை. முன்னதாக இந்திய வட்டி வீதம் குறைக்கப்படலாம் என்பது போல் ரிசேர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டிருந்தது. வட்டி வீதத்தைக் குறைத்து நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்து பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என இந்திய அரசு எண்ணியது. ஆனால் வட்டி வீதக் குறைப்பு நாணய வர்த்தகர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. அமெரிக்காவில் வேலைக்கு புதிதாக ஆட்சேர்பது அதிகரித்ததாக புள்ளிவிபரங்கள் வெளிவந்தமை அதன் பொருளாதாரம் தேறும் நிலையை அடைந்து விட்டதாக பொருளாதார நிபுணர்கள் க்ருதினர். இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு உலக நிதிச் சந்தையில் உயர்ந்தது. இந்திய ரிசேர்வ் வங்கியின் வட்டி வீதக் குறைப்புத் திட்டம் பிழையான தருணத்தில் மேற்கொள்ளப்பட்டது. நிலைமை தலைகீழாக மாறி வட்டி வீதத்தை உயர்த்த வேண்டிய அல்லது குறைக்காமல் இருக்க வேண்டிய நிலைக்கு இந்திய ரிசேர்வ் வங்கி தள்ளப்பட்டுள்ளது.

விலைகள் அதிகரிக்க்ப் போகிறது
சரியும் ரூபாவின் மதிப்பும் அதிகரிக்கு அமெரிக்க டாலரின் மதிப்பும் இந்திய இறக்குமதிப் பொருள்களின் விலைகளை அதிகரிக்கப் போகிறது. முக்கியமாக எரிபொருள்களின் விலை அதிகரிக்கும். எரிபொருள் விலை அதிகரிக்கும் போது போக்குவரத்துக் கட்டணம், உள்ளூர் பொருள்களுக்கான உற்பத்திச் செலவு, விநியோகச் செலவு போன்றவை உயர்ந்து பொருள்களின் விலைகள் பரவலாக அதிகரிக்கும். இது ஆளும் காங்கிரசுக் கட்சியின் செல்வாக்குக்கு உகந்ததல்ல.

பல முனைப் பிரச்சனைகள்
இந்திய அரச நிதிப்பற்றாக்குறையும் வெளிநாட்டுச் செலவாணிப் பற்றாக் குறையும் அதிகமாக இருக்கிறது. பொருளாதாரம் வேகமாக வளரவில்லை. வளர்ச்சி வீதம் குறைகிறது. ஆனால் விலைவாசி அதிகரிப்பு கட்டுக்கடங்காமல் இருக்கிறது. 

எந்திரவியல் பிரச்சனைகள்
இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி Economy Watchஇல் Indian Economy: Engineering
Weakness Serious Problem என்னும் தலைப்பில் இப்படி எழுதப்பட்டிருந்தது:
  • Despite this nation’s rise as a technology titan with some of the world’s best engineering minds, India’s full economic potential is stifled by potholed roadways, collapsing bridges, rickety railroads
அரச நிர்மாணத் துறையில் ஊழல்கள் நிறைந்திருப்பதால் பல கட்டுமானங்கள் பலவீனமாக இருக்கின்றன. போக்கு வரத்து, நீர் விநியோகம், மின் விநியோகம் போன்றவற்றின் திறமையின்மையும் ஊழல்களும் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை.

ஊழல் நிறைந்த ஆட்சி
சீனா உடபட முன்னணி நாடுகள் எல்லாம் வயது முதிர்ந்தவர்க்ள் தொகை அதிகரிப்பால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கையில் இந்தியா மட்டும் மக்கள் தொடையைப் பொறுத்தவரை அதிக அளவிலான இளைஞர்களைக் கொண்டுள்ளது அத்துடன் பொருளாதார அபிவிருத்திக்கு உகந்த அதிக நடுத்தர வர்க்க மக்களையும் கொண்டுள்ளது. இந்தியாவின் நடுத்தர மக்கள் மக்கள் தொகை ஒஸ்ரேலியாவின் மொத்த மக்கள் தொகையிலும் அதிகமானதாகும். அத்துடன் திறன் மிக்க தொழிலாளர்களையும் இந்தியா கொண்டுள்ளது. இத்தனை இருந்தும் ஊழல் மிக்க அரசும் அரச ஊழியர்களும் இந்தியப் பொருளாதாரத்தை முன்னேறவிடாமல் செய்கின்றனர்.

செல்வாக்கிழந்த தேசியத் தலைமை
இந்தியாவின் சிறந்த தேசியத்  தலைவர் என்று சொல்லும் படியாக ஒருவரும் இப்போது இல்லை. அரசியலில் மாநிலக் கட்சிகள் அதிக செல்வாக்குப் பெற்று வருகின்றன. தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை ஆளும் காங்கிரசுக் கட்சிக்கு அடுத்த தேர்தலில் தோல்வியடையச் செய்யும். பல கட்சிகள் கொண்ட கூட்டணி அரசு அமையும் போது அரசியல் திடநிலை கிடைக்குமா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...