Tuesday 21 May 2013

சீன வேலைப்பசிக்கு இரையாகும் இந்தியப் பொருளாதாரம்.

அரசியலில் வேறு வேறு திசைகள். பொருளாதார ஒற்றுமை.
ஒவ்வொர் ஆண்டும் ஏழு மில்லியன்களுக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் சீன ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். இதுவரை இந்தப் பிரச்சனையை தனது மலிவான உற்பத்திப் பொருட்களை வட அமெரிக்க நாடுகளுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதன் மூலமும் அந்த நாட்டு முதலாளிகள் தமது  உற்பத்திப் பொருட்களைச் சீனத் தொழிற்சாலைகள் குறைந்த ஊதியத்தில் வேலை செய்வதன் மூலமும் சமாளித்து வந்தது சீனா.  இனி இந்த நாடுகளில் அதிகம் தங்கியிருக்க முடியாது என்பதை உணர்ந்த சீனா தனது கவனத்தை ஆசிய நாடுகளில் திருப்பியுள்ளது.

ஆசிய பசுபிக் நாடுகளைச் சுரண்ட முயலும் சீனா
வட அமெரிக்க நாடுகளுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் தனது மலிவான உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதியைத் தொடர்ந்து செய்த சீனா தனது நாணயத்தின் மதிப்பை உயரவிடாமல் தடுத்து வைத்திருந்தது.  சீன இறக்குமதியால் தமது நாட்டு மக்களின் வேலைவாய்ப்புக்களை இழந்த இந்த நாடுகள் இப்போது பல பொருளாதாரப் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றன. இதனா சீன தனது கவனத்தை ஆசிய பசுபிக் நாடுகள் மீது திருப்பியுள்ளது. Regional Comprehensive Economic Partnership என்ற அமைப்பில் ஜப்பான் தென் கொரியா, இந்தியா, நியூசிலாந்து ஆகியவற்றுடன் மேலும் பல நாடுகளை இணைத்து அவற்றுடனான தனது வர்த்தகத்தை மேம்படுத்த முனைகிறது. 

லீ க சியாக்
ஆசிய நாடுகளைச் சுரண்டும் சீனாவின் முயற்ச்சியின் ஒரு அம்சமாக சீனத் தலைமை அமைச்சர்  லீ க சியாக் 18-05-2013-ம் திகதி மேற்கொண்ட இந்தியப் பயணம் அமைந்துள்ளது. சீனாவின் அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்று இந்தியா மீது சீனா குற்றம் சாட்டுகிறது. தனது காஷ்மீரின் ஒரு பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று இந்தியா குற்றம் சாட்டுகிறது. இந்தப் பிரதேசத்தில் பல பகுதிகளை சீனா அவ்வப் போது ஊடுருவி தனது படைகளை நிலை கொள்ளச் செய்வதுண்டு.இது இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் நிலையில் சீனத் தலைமை அமைச்சர் லீ க சியாக் இந்தியா சென்றுள்ளார். இரு நாட்டு ஆட்சியாளர்களிடையான பேச்சு வார்த்தையில் முக்கியமாக இடம் பெறவேண்டியது எல்லைப் பிரச்சனையே.

எல்லைப் பிரச்சனையிலும் பார்க்க எருமை இறைச்சி முக்கியத்துவம் பெற்றது. 
லீ க சியாக்கின் இந்தியப் பயணத்தின் போது இந்தியாவும் சீனாவும் தமக்கிடையே எட்டு புரிந்துணர்வு குறிப்புக்களில் கைச்சாத்திட்டன:
  1.  எருமை இறைச்சி வர்த்தகம்.
  2. பிரம்ம புத்திரா அணை தொடர்பாக தகவல் வழங்குதல்
  3. புனிதப் பயணம்
  4. கழிவு நீர்
  5. பொருளாதாரம் வர்த்தகம் தொடர்பான செயற்குழு
  6. நீர்த் தொழில்நுட்பம்
  7. புத்தகங்களை மொழிபெயர்த்தல்
  8. நகரங்களை இரட்டைச் சகோதரியாக்குதல்
இதில் எல்லைப் பிரச்சனை தொடர்பான உடன்படிக்கை ஏதும் இல்லை. இரு நாடுகளும் எல்லைப் பிரச்சனையைப் புறம் தள்ளியது ஏன்? இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது ஏன்?  எல்லைப் பிரச்சனையிலும் பார்க்க எருமை இறைச்சி வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு புரிந்துணர்வு குறிப்புக் கைச்சாத்திட்டது ஏன்?
இந்திய சீன வர்த்தகம் சீனாவிற்குச் சாதகமாகவே அமைந்துள்ளது. இந்தியாவின் வர்த்தகதில் சீனாவுடன் செய்யும் வர்த்தகம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகப் பெரியதாகும். இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனா முதலாமிடம் வகிக்கிறது. இந்தியா சீனாவிற்கு தாதுப் பொருட்கள், பருத்தி போன்ற மூலப் பொருட்களை மட்டுமே சீனாவிற்கு ஏற்றுமதி செய்கின்றது. இந்திய மருந்துப் பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் சீனா தடை செய்துள்ளது. இந்தியப் பொருட்களின் ஏற்றுமதிக்கு இது போன்ற பல நியாயமற்ற தடைகளை சீன செய்துள்ளது. சீன இறக்குமதியால் இந்திய உற்பத்தித் துறை பாதிப்படைந்துள்ளது. சீனாவிற்கான இந்திய ஏற்றுமதி அங்கிருந்து செய்யும் இறக்குமதியிலும்  அதிகமாக இருந்து வருகிறது. 2001-02இல் இது (The trade deficit )  $1.08 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2012-13இல் அது 40.77 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 2012இல் 66.4 பில்லிய அமெரிக்க டாலர்களாக இருந்தது. இதை இரு நாடுகளும் 2015இல் நூறு பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க முயல்கின்றன. ஏற்வே சியான் மைப்பைச் சேர்ந்நாடுகள் சீனாவுடன் 2010இல் செய்த ஒப்ந்ங்கள் சீனாவிற்குச் சாமாக அமைந்துள்து என்று சொல்லி அதை மீவும் பேச்சு வார்த்தைக்கு உட்டுத்வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ன. ஒப்ந்ங்ளைத் மக்கு சாமாதாபோட்டு ற்நாடுளை மாற்றுதில் சீனாவிற்கு நிறைய அனுவம் உண்டு.

 
நன்றி இந்துஸ்த்தான் ரைம்ஸ்

இந்தியாவின் இரட்டை அமைச்சரவை
 சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் பல இந்தியப் பண முதைலைகள் பெரும் இலாபம் ஈட்டுகின்றன. இவர்களின் இலாபம் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். இந்தியாவில் ஒரு இரட்டை அமைச்சரவை இயங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஒன்று மன்மோகன் சிங் தலைமையில் இயங்கும் அரசியல்வாதிகளைக் கொண்டது. மற்றது சோனியா காந்தி தலைமையில் பல பண முதலைகளையும் ஆலோசகர்களையும் கொண்டது. இந்த இரண்டாம் அமைச்சரவை இந்திய மக்களின் நலங்களைக் கருத்தில் கொள்ளாமல் பண முதலைகளின் இலாபத்தைக் கருத்தில் கொண்டு செயற்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் இந்தியப் பொருளாதாரத்திற்குப் பாதகமான சீன வர்த்தகம் தொடர்ந்தும் பேணுவதில் இந்தியா ஆட்சியாளர்கள் அக்கறை காட்டுகின்றனர்.  இந்திய சீன எல்லைப் பிரச்சனை பற்றி இரு நாட்டுத் தலைமை அமைச்சர்களும் பேச்சு வார்த்தை நடாத்தியதாகச் சொல்கிறார்கள். ஆனால் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.


 புது டில்லியைச் சேர்ந்த கேந்திரோபயக் கற்கைகளுக்கான பேராசிரியர் பிரம்மா செல்லனி (Brahma Chellaney, professor of strategic studies at the Centre for Policy Research) இந்தியா சீனாவுடனான வர்த்தகத்தைப் பெருக்கினால் அதனால் இரு நாடுகளின் பொருளாதாரம் மேம்படும் என்றும் சீனாவுடனான முறுகல்களை தவிர்ப்பதற்கு அது உதவும் என்றும் இந்திய ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள் ஆனால் இந்த நம்பிக்கை சரிவரவில்லை. இப்போது அரசியலும் பொருளாதாரமும் எதிர் எதிர்த் திசையில் செல்கின்றன  என்கிறார்.  ஆனால் பன்னாட்டு உறவு நிபுணரான கரெத் பிரைஸ் (Gareth Price, a senior research fellow at Chatham House, a London-based foreign-affairs think tank) ஒரு படி மேலே போய் இந்திய வர்த்தகர்களைக் குற்றம் சாட்டுகிறார். இரு நாடுகளிற்கிடையிலான வர்த்தகம் பெருகும் போது ஒரு வியாபார் பெரும் இலாபம் ஈட்டுவான். அவனுக்கு எல்லையில் நடக்கும் மோதலைப் பற்றிக் கவலையில்லை. "If you are a businessman doing big business with China, then you don't care about an incursion somewhere up in Ladakh," 
இந்தியர்கள் மீண்டும் அந்நியர் ஆட்சிக்கு எதிராகப் போராட வேண்டும்.

1 comment:

Anonymous said...

உங்கள் கருத்து உமையே..ஆனால் உண்மை நிலை என்பது கவலைக்குரியதாகவே உள்ளது....இந்திய தொழிலாளி இன்று உழைப்பதற்க்கு தயாராக இல்லை...out put is very less when compare to pay: quality of workmanship also decreasing day by day; தமிழகத்தில் இன்று குறைந்தபட்ச்ச கூலி ரூ500/- இதனால் பல தொழில்களில் வட மாநிலத்தவர்களின் இறக்குமதி...உணவு விடுதி , பார்,கட்டிட தொழில், என எல்லா தொழில்களிலும் வந்து விட்டனர்...இங்கு உள்ளவர்கள் வாரம் 1 அல்லது 2 நாள் வேலை பார்த்தால் போதும் என்ற மனநிலை, காரணம் இலவச அரிசி & மதுக்கடை...100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யமல் ஊதியம் கிடைக்கும் என்று நினைத்தால இப்போது அனைவரும் சோம்பேரிகள் ..இதை தீர்க்கவில்லை என்றால் நாம் அபாயம் நோக்கி பயணிக்கிறோம் என்றே அர்த்தம்....jokin.jey

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...