Friday 29 March 2013

நகைச்சுவை: பாவத்தின் கூலியாக ராகுல் காந்தி

பனிப்பாறையைப் பார்த்து டைட்டானிக் சொன்னது
நீ செய்த பாவத்தின் கூலி உலக வெப்ப மயமாதல்

இந்தியாவைப் பார்த்து பாக்கிஸ்த்தான் சொன்னது
நீ காஷ்மீரில் செய்யும் பாவத்தின் கூலி ராகுல் காந்தி

அமெரிக்க அரசைப் பார்த்து பூர்விக அமெரிக்கர் சொன்னது
நீ எனக்கு செய்த பாவத்தின் கூலி கள்ளக் குடியேற்றவாசிகளின் பிரச்சனை.


ராகுல் காந்தி ஒரு நாள் பதினைந்து இலட்சம் ரூபா காசோலை(cheque) உடன் வங்கிக்குச் சென்று அதைக் காசாக்கித் தரும்படி கேட்டார். அதற்கு வங்கிக்காசாளர் உங்கள் அடையாள அட்டையைக் காட்டுங்கள் என்றார். ராகுல் கோபத்துடன் நான் வருங்கால இந்தியப் பிரதமர் என்னிடமே அடையாள அட்டை கேட்கிறாயா என்றார் கடும் கோபத்துடன். அந்தக் கசாளர் தற்போது நாட்டில் நடக்கும் அடையாளத் திருட்டு, காசோலை மோசடி போன்றவற்றை விளக்கி தங்கள் வங்கி விதி முறைகள் அப்படி இறுக்கமானதாக்கப்பட்டுள்ளது என்றார். ராகுல் காந்தி அடம் பிடிக்க காசாளர் தன் மேலாளரை அழைத்தார். அந்த மேலாளர் வங்கி நடைமுறைகளை ராகுலுக்கு விளக்கியதுடன் ஒரு முறை அமிதாப் பச்சன் இப்படித்தான் அடையாள் அட்டையின்றி வந்தார் அவர் தனது நடிப்புத் திறமையை எமக்கு தனது ஷோலே படத்தில் ஒரு காட்சியை நடித்துக் காட்டினார். அதனால் அவர்தான் அமிதாப் என நாம் உறுதி செய்து கொண்டோம். ஒருமுறை சச்சின் தெண்டுல்கர் அடையாள அட்டையின்றி வந்தார் அவர் தனது துடுப்பாட்ட மட்டையை(cricket bat) எடுத்து இரண்டுதடவை விசுக்கிக் காட்டினதால் அவர்தான் சச்சின் என அறிந்து கொண்டோம். அப்படி நீங்கள் உங்களின் திறமை ஏதாவதைக்காட்டி நீங்கள்தான் ராகுல் காந்தி என நிரூபியுங்கள் என்றார். அதற்கு ராகுல் காந்தி திருதிருவென் விழி பிதுங்க முழித்து தலையைச் சொறி சொறி என் சொறிந்து அப்படி ஒன்றும் இல்லையே நான் எனது மம்மிக்கு தொலபேசி அழைப்பு விடுக்கிறேன் அவங்க சொல்லுவாங்க என்று சொல்லிக் கொண்டு தன் கைப்பேசியைத் தேடினார். அப்போது வங்கி மேலாளர் அவரை நிறுத்தி மன்னிக்கவும் சார் இப்போது நீங்கள்தான் ராகுல் காந்தி என உறுதி செய்யப்பட்டுவிட்டது. உங்கள் காசோலைக்கான பணத்தைத் தருகிறோம் என்றார்.

ராகுல் காந்தி ஏன் திருமணம் செய்யவில்லை?
தன் தந்தை விட்ட பிழையைத் தானும் செய்யக்கூடாது என்ற நல்லெண்ணத்தால்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...