Sunday 24 March 2013

சோனியா காந்திக்கு நாய் விடு தூது

நாய் விடு தூது சோனியா காந்திக்கு

நாயே நாயே நாலுகால் நாயே
நெடுகம்பங் காணில் காலது
தூக்கி சிறுநீர்கழி நாயே
நீயும் நின் பெட்டையும்
கீழ்த்திசை சென்று
புது டில்லி நகரேகி
ஜன்பத் தெருவில்
பத்தாம் இலக்கம்
மோப்பம் பிடித்துச் சென்று
சோனியா காந்தி என்றொரு
தமிழின விரோதி கண்டு
விரைந்து வரும்
பொதுத் தேர்ந்தலில்
அவளது கட்சி
கடும் தோல்வியுற்று
ஊழ்வினையால்
ஊழல் வழக்கு பல கண்டு
பெற்ற பேமானி மகனுடன்
நாடுவிட்டோடுவீர் என்றுரைப்பீரே


நரிவிடு தூது - கருணாநிதி

நரியே நரியே
நெஞ்சகம் நிறை
வஞ்சக நரியே
நீயும் நின் காதலியும்
கோபாலபுரமோ
சிஐடி காலனியோ
நானறியேன்
உண்மையாய் நானறியேன்
விசாரித்தறிந்து
நின்னிலும் அதிக
வஞ்சனை நெஞ்டுடை
கருணாநிதியைப் பார்த்து
கறங்கு போல் கிளர்ந்தெழுந்த
மாணவர் எழுச்சியில்
அவர்தம் அரசியல் வாழ்வு
முடிகின்றதென்றுரைப்பீர்

பேய் விடுதூது - ராஜபக்சே

பேயே பேயே
நிலமதில் கால் படாப் பேயே
நீயும் நின் குழாமும்
கொழும்பு நகரேகி
அலரி மாளிகை தேடிப் பிடித்து
ஆங்கே வசிக்கும்
நின்னிலும் கேவலமாய் ஒருத்தன்
மஹிந்த ராஜபக்ச என்போனை
தேடிப் பிடித்து சேதி ஒன்று சொல்லாய்
அவனுக்கு ஆப்பு தயாரகின்றது
பன்னாட்டுச் சட்டத்தின் முன்
அவன் தண்டனை பெறும் நாள்
விரைவில் வருமென்றுரைப்பீர்

1 comment:

கும்மாச்சி said...

ஆஹா அருமையான கவிதைகள். சத்திமுத்தப்புலவர் வியந்திருப்பார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...