Saturday 10 November 2012

விகடன் போர்க்குற்றச் சாட்சிகளை பன்னாட்டு அமைப்புகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

நேற்று விடுதலைப் போராளி இன்னாள் பாலியல் தொழிலாளி என ஒரு கட்டுரையை ஆனந்த விகடன் பதிவுசெய்து சர்ச்சையில் மாட்டிக் கொண்டது. குறிப்பிட்ட போராளி ஒரு கற்பனைப்பாத்திரம் என்று கூடப் பலர் அபிப்பிராயப்படுகின்றனர். விகடன் இந்திய உளவுத் துறையில் பரப்புரையை முன்னெடுக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விகடன் ஆசிரியர் களத்தில் இறங்கி தமது சஞ்சிகைகள் ஈழவிடுதலைக்கு ஆதரவானது என்று வாதாடி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார்.


விகடன் பற்றிய முன்னைய பதிவுகளை இங்கு காணலாம்:
1. விகடன் கக்கும் நஞ்சு
2. சரத் பொன்சேக்கா விகடனுக்குப் பேட்டியளித்தது ஏன்?
3. நிருபாமா ராவே இலங்கைப் போர்இந்தியாவின் கை மீறி நடந்ததா? கைங்கரியமா?
4. விகடனின் விவரம் கெட்ட தனமா? விஷமத்தனமா?
5. விகடனின் கபடம் – பிரபாகரனின் மரணம்.

விகடன் ஆசிரியர் தனது கட்டுரையில் இந்தப்படத்தையும் இணைத்துள்ளார்:
 இதில் ஈழப் போராளிப் பெண் வித்தியா ராணி ஈழத்தமிழில் சொல்லுவது போல எழுதப்பட்டிருக்கிறது. அதில் ஒரு முக்கியமான சொல்  "படிச்சுப்பிட்டு" என்பதாகும். படிச்சுப்பிட்டு என்று ஈழத் தமிழர்கள் சொல்லுவது இல்லை. "படிச்சு போட்டு" என்றுதான் சொல்வார்கள். இது விகடனின் உண்மைத் தன்மையில் ஐயப்பட்டை ஏற்படுத்துகிறது. இதை ஒரு அச்சுப் பிழையாக எடுத்துக் கொள்வோம்.

விகடன் ஆசிரியன் தமது சஞ்சிகைகள் நடுநிலையானது என்கிறார்:

  • 'ஈழத்தைப் பார்க்காதே, ஈழம்பற்றிப் பேசாதே, ஈழம்பற்றி எழுதாதே’ என்று அறிவிக்கப்படாத அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட அந்தக் காலத்திலேகூட, துயர் மிகுந்த ஈழத்  தமிழ் மக்களின் கண்ணீரை உலகத் தமிழர்களின் வாசல்களில் கொண்டுவந்து கொட்டியது விகடன் குழுமம்தான்.

இந்த அறிவிக்கப்படாத அவசரநிலைப் பிரகடனத்தை ஏற்படுத்தியது கருணாநிதியின் அரசா அல்லது மைய அரசான காங்கிரசு அரசா என்பதை விகடன் பகிரங்கப்படுத்த வேண்டும். தமிழர்களின் பெரிய பிரச்சனை தமது ஆதரவாளர்கள் யார் எதிரிகள் யார் என அறிய முடியாமல் இருப்பதே.

விகடன்மீது ஏற்பட்டுள்ள ஐயப்பாட்டைச் சரிசெய்யவும் விகடனுக்கு நல்ல விளம்பரம் ஏற்படுத்திக் கொடுத்த வித்தியா ராணிக்கு ஒரு நல்ல விடிவு கிடைக்கவும் விகடன் செய்ய வேண்டியது ஒன்று உள்ளது. குறிப்பிட்ட வித்தியா ராணி என விகடன் பெயரிட்ட முன்னாள் பெண் போராளியின் பெயரையும் இருப்பிடத்தையும் பன்னாட்டு மன்னிப்புச் சபையிடமும்( Amnesty International) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்திடமும் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விமோசனம் செய்ய வழி வகுப்பார்கள். பாதிக்கப்பட்ட பெண் இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்களுக்கு ஒரு நல்ல சாட்சி.  பாதிக்கப்பட்ட பலருக்கு நீதிகிடைக்க இது உதவும். பன்னாட்டு மன்னிப்புச் சபையிடமும்( Amnesty International) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்திடமும் வித்தியா ராணி தொடர்பான விபரங்கள் சமர்ப்பித்தால் அவர்கள் வித்தியா ராணியை சாட்சியாக அவரது பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்கள். விகடனே தயவு செய்து ஐநா பொதுச் செயலாளர் பணிமனைக்கு இது தெரியக் கூடாது. அங்கு இலங்கை அரசின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணிபுரிந்த சதீஷ் நம்பியாரின் உடன் பிறப்பு விஜய் நம்பியார் உயர்பதவியில் இருக்கிறார். இப்படிச் செய்வதால் வித்தியா ராணிபற்றி நீங்கள் எழுதியது உண்மைதான் என்று நிரூபிக்கலாம்.

விகடன் வித்தியா ராணி எனப்படும் முன்னாள் விடுதலைப் போராளியின் விபரங்களை பன்னாட்டு மகளிர் உரிமை அமைப்புக்களிடம் கையளிக்க வேண்டும். அவர்கள் வித்தியா ராணி எனப்படுபவருக்கு உரியன செய்வார்கள். கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தவுடன் கொல்லும் நாட்டின் மகளிர் உரிமை அமைப்புக்களுக்கோ இரண்டாவது வரதட்சணைக்காக மருமகளை உயிருடன் கொழுத்தும் நாட்டு மகளின் உரிமை அமைப்பினருக்கோ வித்தியா ராணி எனப்படுபவருக்கு எந்த வித நன்மையும் கிடைக்காது என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

விகடனின் கட்டுரைக்குப் பின்னூட்டமிட்டவர்கள் பாதிக்கப்பட்ட வித்தியா ராணிக்கு நிவாரணம் கிடைக்க ஏதாவது செய்யும் படி கேட்டிருந்தார்கள். இதுவரை அப்படி ஏதும் செய்ததாகத் தெரியவில்லை.



Friday 9 November 2012

ஒபாமாவின் வெற்றிக்கு பின்னர்...

சரியும் உலகப் பொருளாதாரம் பெருகும், சீன படை வலிமை, எரியும் சிரியா, கொதிக்கும் ஈரான், போர் ஓயாத ஆப்கானிஸ்த்தான், நலிவடையும் உள்ளூர் பொருளாதார்ம், ஆகியவற்றின் மத்தியில் தன்னை உலகில் சிறந்த மக்களாட்சி நாடென்று சொல்லிக் கொள்ளுவதும், தன்னை உலகின் காவற்துறை அதிகாரியென கருதிக் கொள்வதுமான அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பராக் ஒபாமா வெற்றியீட்டியுள்ளார். என்றும் இல்லாத அளவு பெரும் பணச்செலவை வேட்பாளர்கள் செய்துள்ளனர்.

இனப்பிரச்சனை மையமாகக் கொண்ட வெற்றி
பராக் ஒபாமா ஆபிரிக்கர்களையும் ஹிஸ்பனிக்கர்களையும் (ஸ்பானிய வம்சா வழியினர்) பலமாகக் களமிறக்கி தனது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தினார். இவர்களை வாக்களிக்காமல் பண்ண எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர் தமது கட்டுப்பாடில் உள்ள மாநிலங்களில் பல நடவடிக்கைகளை எடுத்தனர். இனி ஒபாமாவின் ஆட்சியில் குடிவரவுக் கொள்கையில் ஒபாமாவின் மக்களாட்சிக் கட்சியும் மக்களவையில் பெரும்பானமையைக் கொண்ட குடியரசுக் கட்சிக்கும் இடையில் பெரும் மோதல் இடம்பெறும்.குடியரசுக் கட்சியினர் அமெரிக்காவின் குடிமக்களின் இன வீதாசாரத்தைச் சரியாக எடை போடாமை அவர்களின் தோல்விக்குக் காரணம் எனப்படுகிறது.

அரச நிதிப் படுகுழி - Fiscal Cliff
ஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தில் செல்வந்தர்கள் மீதான வரியை அதிகரித்து தனது பாதிட்டின் துண்டு விழு தொகையைச் சரி செய்யப்போவதாக அறிவித்தார். இதனால் மக்களவை அரச செலவீனத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை இயற்றி ஒபாமா நிர்வாகத்தை பெரும் அரச நிதி நெருக்கடிக்குள் தள்ளலாம். அமெரிக்காவில் அரச செலவீனங்களைக் குறைத்து வரிவிதிப்பைக் குறைக்க வேண்டும் என்னும் கொள்கையுடைய பழமைவாதிகள் தம் கொள்கைகளை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்தத் பழமைவாதிகளுக்கு அரசு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் தலையிடுவது பிடிக்காது. ஆனால் ஒபாமா கிற்ஸ்லர், ஜெனரம் மோட்டெர்ஸ் ஆகிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படுவதில் இருந்து காப்பாற்றினார். இது அவரின் தேர்தல் வெற்றிக்கும் உதவியது. குறிப்பாக தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் மாநிலங்களில் ஒன்றான ஒஹையோ மாநிலத்தில் ஒபாமாவின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியது. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த வெள்ளை இனத்தவர்களும் ஒபாமாவை இம்மாநிலத்தில் ஆதரித்தனர்.

அமெரிக்காவின் எதிரிகளுக்கு மகிழ்ச்சி
அமெரிக்காவின் எதிரிகளாகக் கருதப்படும் ஈரானும் சீனாவும் பராக் ஒபாமாவின் வெற்றியில் பெரிதும் நிம்மதி அடைந்துள்ளன. குடியரசுக் கட்சியின் ரும்னி ஆட்சிக்கு வந்திருந்தால் அவர் இவர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக அமெரிக்க-சீன நாணயப் போர் ஆரம்பித்திருக்கலாம்.

மஹிந்தவிற்கு நிம்மதியில்லை
குடியரசுக் கட்சியின் நிர்வாகம் வாஷிங்டனில் அமைந்து அங்கு புதிய-பழமைவாதிகள் (neoconservatives) ஆதிக்கம் செலுத்தினால் மஹிந்த ராஜபக்சவிற்குச் சாதகமான நிலை ஏற்பட்டிருக்கலாம். புதிய-தாராண்மைவாதிகள் ஒரு நாட்டின் அரசு உலகமயமாதலுக்கு ஒத்திசைவாக இருக்கும் வரை அவர்கள் எப்படி ஆட்சி நடாத்தினாலும் பரவாயில்லை என்று கருதுபவர்கள்.

பாவம் இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாஹூ
இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாஹூ பராக் ஒபாமா மீண்டும் தெரிவு செய்யப்படமாட்டார் என எதிர்பார்த்து பிழையான குதிரையில் தனது பணத்தைக் கட்டியவர் போலாகிவிட்டார். ஏற்கனவே ஒபாமாவின் ஈரான் தொடர்பான கொள்கைக்காக அவருடன் பகிரங்கமாகக் கருத்து மோதலிலும் நெத்தன்யாஹூ ஈடுபட்டிருந்தார். இதனால் அவர் எதிர்க்கட்சிகளின்  பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார். 2013ஜனவரியில் இஸ்ரேலின் பாராளமன்றத் தேர்தலில் அவருக்குப்பாதிப்பு ஏற்படலாம்.

சிரியாவின் அசாத்திற்கு நிம்மதியில்லை
தேர்தல் முடியும் வரை சிரியா தொடர்ப்பாக கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதை பராக் ஒபாமா தள்ளி வைத்திருந்தார். இனி சிரியாவில் அமெரிக்காவின் மோசமான தலையீட்டை எதிர்பார்க்கலாம்.

சரிந்த சந்தை
ஒபாமாவின் வெற்றியை அடுத்து அமெரிக்கப் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சியக் கண்டது. ஒபாமாவின் வரி அதிகரிப்பு செல்வந்தர்களுக்குச் சாதகமானதல்ல. ஒபாமாவின் வெற்றிக்கு தொழிற் சங்க அமைப்புக்கள் வரவேற்புத் தெரிவித்தன. அரச நிதிப் படுகுழி - Fiscal Cliff ஐ எதிர்ப்பார்த்து முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர். ஆனால் நீண்ட கால அடிப்படையில் ஒபாமாவின் பொருளாதாரக் கொள்கை வேலை வாய்ப்புக்களை அதிகரித்து பங்கு விலைகளை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் பாதீட்டுத் துண்டுவிழும் தொகை மிகவும் பாரியதானதாக இருப்பதால் யார் வெற்றி பெற்றாலும் முதலீட்டாளர்கள் சிரமத்தைச் சந்தித்தே ஆகவேண்டும் எனச் சிலர் கருதுகின்றனர். அமெரிக்காவின் தற்போதைய பாதீட்டுத் துண்டுவிழு தொகை ஒரு ரில்லியன் டாலர்களுக்கு மேல்.

பாவம் டாலர்! மின்னும் தங்கம்
ஒபாமாவின் வெற்றி அமெரிக்க நாணயமான டாலரைப் பலவீனப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. quantitative easing எனப்படும் பணப்புழக்க அதிகரிப்பு ஒபாமாவின் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசேர்வின் தலைவரான Ben Bernankeரும் இதே கொள்கை கொண்டவர். குடியரசுக் கட்சி வேட்பாளர் ரும்னி வெற்றி பெற்றிருந்தால் இவரது பதவி பறி போயிருந்திருக்கும். டாலர் பலவீனமடைய தங்கத்தின் விலை அதிகரிக்கலாம்.

Thursday 8 November 2012

இலண்டனில் நடக்கும் தமிழர்களின் மாநாட்டுத் தீர்மானம்

பிரித்தானியப் பாராளமன்றக் கட்டிடத் தொகுதியில் பிரித்தானியத் தமிழர் பேரவையும் தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சிப் பாராKளமன்ற உறுப்பினர் குழுவும் இணைந்து ஒழுங்கு செய்த உலக மாநாட்டில் இலங்கையில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் மற்றும் பல நாடுகளில் இருந்தும் அரசியல்வாதிகளும் சமூக அமைபுக்களைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் இந்தியக் காங்கிரசுக் கட்சியினதும் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. கூடாங்குளத்தில் இணைந்தது போல ஈழப் பிரச்சனையிலும் காங்கிரசும் அதிமுகாவும் இணைந்துவிடுவார்களா?

சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமது கட்சிகளைப் பற்றி அதிகம் பேசுகின்றனர். தா. பாண்டியனின் உரையில் இருபது தடவைக்கு மேல் எனது கட்சி என்ற வாசகம் பாவிக்கப்பட்டிருந்தது. மு க ஸ்டாலின் தனது தந்தையின் டெசோ மாநாட்டைப் பெரிதுபடுத்தியும் மற்றும் தனது தந்தை ஈழத் தமிழர்களுக்கு செய்தவை பற்றியும் பேசினார். ஆனால் தனது தந்தை மூன்று மணித்தியால உண்ணாவிரதத்தால் இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவந்தார் என்று சொல்லவில்லை. ஒரு கட்சியை மற்றக் கட்சியினர் இதுவரை தாக்கிப் பேசவில்லை என்பது சற்று ஆறுதலளிக்கிறது.

 மாநாட்டில் முன்மொழியப்படவிருக்கும் தீர்மானம்: 
 எமது பாராட்டை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் அமைத்த நிபுணர் குழுவினருக்கு அவர்களின் அறிக்கைக்காக, முக்கியமாக அவர்கள் தமிழர்கள் அரசியல் இனக்குழுமக் காரணங்களுக்கா ஒறுக்கப்பட்டமையையும் அழிக்கப்பட்டமையும் ஏற்றுக் கொண்ட்மைக்காகவும் தெரிவிக்கிறோம்.

எமது பாராட்டை டப்ளினில் கூடிய இலங்கைக்கான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தினருக்கு அவர்களின் பரிந்துரைகளுக்கும் காணல்களுக்கும் தெரிவிக்கிறோம்.

2009 மேமாதம் போர் முடிந்த போதிலும இலங்கையின் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் தொடர்ந்து அழிக்கப்படுவதையும் தமிழர்கள் இப்போது தொடர்ந்து ஒறுக்கப்படுவதைத் தடுப்பதற்கான தேவையையும் கரிசனையுடன் கருத்தில் கொள்கிறோம்.

பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றிற்கான ரோம் சட்டங்களையும் காக்கும் பொறுப்புக் கோட்பாட்டின் அடிப்படையிலான பொறுப்பையும் பன்னாட்டுச் சமூகத்திற்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

தமிழினத்திற்கு எதிராக இலங்கை அரசின் முழுச் செயற்பாடுகளையும் முக்கியமாக போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம், இனக்கொலைக் குற்றம் போன்றவற்றையும் சுயாதின விசாரணை செய்ய உடன் நடவடிக்கை எடுக்கும் படி ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை வேண்டிக் கொள்கிறோம்.

1. இலங்கைத் தீவின் வடக்கிலும் கிழக்கிலும் நடப்பவை தொடர்பான உண்மையை அறியும் முகமாக அங்கிருந்து தகவல்கள் சுதந்திரமாக வருவதை உறுதிசெய்ய உடன் நடவடிக்கை எடுக்கும் படியும், 2. இலங்கை அரசின் தமிழினப் பேரழிப்பை நிறுத்தும் படியும், 3 தமிழர் பாரம்பரிய தாயகம் சிங்கள மயப்படுத்துவதைத் தடுக்கும் படியும், 4. தமிழ்மக்கள் தமது தாயகத்தில் ஒறுத்தல் பயமின்றி தமது மக்களாட்சி உரிமைகளச் செயற்படுத்த தமிழர்கள் நிலத்தில் படைத்துறை அகற்றலைச் செய்யும் படியும் பன்னாட்டு சமூகத்தினதும் பன்னாட்டு குடிசார் அமைப்புக்களின் தலைவர்களை வலியுறுத்துகிறோம்.

Wednesday 7 November 2012

ஜெனிவாவில் தமிழர்களின் காலை இந்தியா ஏன் வாரியது?

இலங்கைத் தமிழர்களின் காலை இந்தியா வாருவது, இலங்கைத் தமிழர்களுக்கு அள்ளி வைப்பது, கொள்ளி வைப்பது இன்று நேற்றல்ல தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2012 மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்காவுடன் சேர்ந்து இலங்கை மீதான தீர்மானத்தின் கடுமையைக் குறைத்தது. அண்மைக் காலங்களில் இந்தியா இலங்கையின் சில்லறைக் கைக்கூலி போல காவல் நாய் போலச் செயற்படுகிறது.

இந்தியா தமிழர்களுக்குச் செய்த துரோகங்களைப் பற்றி கீழுள்ள இணைப்புக்களில் காணவும்:
இந்தியத் துரோகம் - 1
இந்தியத் துரோகம் - 2

இலங்கையின் மனித உரிமை நிலை தொடர்பாக ஜெனிவாவில்உள்ள ஐநா மனித உரிமைக் கழக்த்தில் நவம்பர் முதலாம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை நடந்த அகில காலந்தர மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இதில் இலங்கையின் மனித உரிமை தொடர்பாக ஆய்வு செய்யும் மூவர் குழுவில் ஸ்பெயின் பெனின் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இடம்பெற்றிருந்தது. நவம்பர் முதலாம் திகதி இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக ஒவ்வொரு நாடுகளும் தமது கருத்துக்களைத் தெரிவித்தன.கலாந்தர மீளாய்வு என்றால் என்ன என்பது பற்றி அறிய கீழ்க் காணும் இணைப்பைச் சொடுக்கவும்:
http://veltharma.blogspot.co.uk/2012/09/universal-periodic-review.html


நவம்பர் முதலாம் திகதி உரையாற்றிய இந்தியா இலங்கையின் அரசியலமைப்பிற்கான 13வது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும், வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் நடாத்தப்படவேண்டும், வடக்குக் கிழக்கில் படைகளை அகற்றுதல், உயர்பாதுகாப்பு வலயங்களைக் குறைத்தல், காணிப்பிரச்சனை தீர்த்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நம்பகரமான விசாரணை, மீளிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுதல் போன்ற பரிந்துரைகளைச் செய்தது. இந்தியப் பிரதிநிதியின் உரையை கீழுள்ள காணொளியின் 2மணி 6நிமிடமளவில் உள்ளது:



நவம்பர் முதலாம் திகதி இலங்கைக்குப் பரிந்துரைகளைச் செய்த இந்தியா நவம்பர் 5-ம் திகதி சமர்ப்பித்த இறுதி அறிக்கையில் தனது பரிந்துரைகளை நீக்கிவிட்டது. இது ஜெனிவா மனித உரிமைக் கழகத்தில் இருந்தவர்களை உலுக்கிவிட்டது. அங்கிருந்த பலரும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும்  இடையில் ஏதோ ஒரு இரகசிய உடன்பாடு ஏற்பட்டிருக்க வேண்டும் என்றே நம்புகின்றனர். கொழும்பில் உள்ள சிங்கள ஆய்வாளர்களையும் இது ஆச்சரியப்படுத்தியது. அமெரிக்கா சுவிஸ்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சில நாடுகள் முன்னுக்குப் பின்னர் முரணாக நடந்து கொள்கின்றன என்று இந்தியாவை மறைமுகமாகச் சாடின. இந்தியாவிற்கு இலங்கை என்ன செய்தது இப்படி இந்தியா குத்துக்கரணம் அடிக்க என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போது வந்த செய்தி:

  • இந்தியப் படைத் தளபதி விக்ரம சிங் இலங்கை பயணம். அவருடைய பயண தேதியை இரு நாட்டு அதிகாரிகளும் கலந்து பேசி முடிவு செய்வார்கள். இந்தியா-இலங்கை ராணுவத்துக்கு இடையே ராணுவ உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்த சுற்றுப் பயணத்தின்போது முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
மீண்டும் தமிழர்கள் முதுகில் இந்தியா குத்தியது

மற்ற நாடுகள் இலங்கைக்குச் செய்த பரிந்துரை:



பிரான்ஸ்



Monday 5 November 2012

காதல் கிறுக்கனின் காமக் கிறுக்கல்கள்

சிலையொன்றின் கொலைப் புன்னகை
மலையையும் சாய்க்கும் நிலைகுலைக்கும்
போதை தலைக்கேறும் உடல் தட்டுத் தடுமாறும்
கட்டியணைக்கத் கைகள் அங்கு துடிதுடிக்கும்
ஒட்டி உறவாடி உதட்டோடு உதடிணைத்து
ஆனந்தத் தேன் பருக உள்ளம் தவிக்கும்
நீளும் நாவோடு நாவுரசி விளையாடும்
கைவிரல்கள் உடலெங்கும் மரதனோடும்
உன் உடலெங்கும் என் உதடு போகும் ஊர்கோலம்
அதிர்வலையும் எதிர்வினையும்
முனகல் வார்த்தைகளாய் வடியும்
உன் உச்சி முதல் உள்ளங்கால் வரை
உதடுகள் போடும் காமக் கோலங்கள்
ஆங்காங்கே போடும் பற்குறிகள்
தாங்கா உணர்வலைகள் பொங்கிவழியும்
தூங்கா இரவொன்று குறுகும்
கட்டியணைது இணைந்த கைகள்
நாணத்தின் அணையுடைக்கும்
காமத்தின் வெள்ளம் கரை புரண்டோடும்


 River of Lies

The souls of three hundred thousands
Still wanders around for justice
Drifted by river of lies
Flows from Colombo to New York
Via beautiful Geneva
To submerge the killing fields

Some pressed; some praised
Some paid tribute; some pilloried
Some want accountability
Some commended; some deplored
Some want prosecution; some want reconciliation
But the river of lies flows freely
Coupled with the wind of vague promises

The river of lies keep on flowing
To cover the word devolution
With a new word called reconciliation
A new word will emerge
To submerge that too

குழப்பம் நிறைந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தல் முறைமை

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் எப்போது நடக்கும் என்பதற்கு ஒரு இலகுவான பதில் இல்லை. சரியான பதில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் மாதத்தில் வரும் முதலாவது திங்கட் கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்க் கிழமை நடக்கும். இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் முதலாவது திங்கட் கிழமை 5-ம் திகதி வருவதால் 6-ம் திகதி தேர்தல் நடக்கிறது. குடியரசுத் தலைவரும் துணைத் தலைவரும் இணைந்தே போட்டியிட வேண்டும். வாக்களிக்கும் போது ஒரு கட்சியில் தலைவர் பதவிக்குப் போட்டியிருபவர்க்கும் மற்றக் கட்சியில்  துணத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவருக்கும் வாக்களிக்க முடியாது.

வேட்பாளர் போட்டி கடும் போட்டி                                                                          குடியரசுத் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பதை கட்சிகள் தீர்மானிக்கின்றன. இரு பெரும் முதலாளித்துவக் கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. யாரை நிறுத்துவது என்பது தொடர்பான போட்டி மிகவும் கடுமையானதாக இருக்கும். தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தப் போட்டி ஆரம்பித்துவிடும்.

எல்லாமே வித்தியாசம்    
                                                                                  இலங்கையில் குடியரசுத் தலைவர் தேர்தல் நேரடியான வாக்களிப்புத் தேர்வு போல் அல்லாமல் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் தேர்தல் சற்று வித்தியாசமானது. அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில்  Electrol College என்ற ஒரு விநோதமான முறைமை உள்ளது. இதன் படி குறைந்த மொத்த வாக்குப் பெற்றவர் தேர்தலில் வெற்றி பெற முடியும். அத்துடன் அமெரிக்க மாநிலங்கள் ஒவ்வொன்று வித்தியாசமான தேர்தல் சட்டங்களைக் கொண்டுள்ளன. வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் தொடர்பான சட்டங்களும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.

என்ன இந்த Electrol College                                                                                             தேர்வுக் கல்லூரி (Electrol College) என்றவுடன் இது வகுப்பறைகளையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்ட ஒரு இடம் என்று சிந்திக்க வேண்டாம், An electoral college is a set of electors who are selected to elect a candidate to a particular office அல்லது ஒரு குறித்த பதவிக்கு உரியவரைத் தேர்ந்தெடுக்கத் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வாளர்கள் குழுமம். ஒன்றுமே புரியவில்லை. என்ன குழப்பம்!!!. இதை இப்படியும் சொல்லலாம்: A body of people representing the states of the US> who formally cast votes for the election of the president and vice president. Electoral College என்பது அமெரிக்க குடியரசுத் தலைவரையும் துணைத் தலைவரையும் வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதற்காக மாநிலங்களை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களின் குழு. தேர்வுக் கல்லூரி முறைமை அறிமுகப் படுத்தியமைக்கு இரு காரணங்கள்சொல்லப்படுகின்றன: 1. சிறிய மாநிலங்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் வழங்குதல் 2. கல்வியறிவில்லாத வாக்காளர்களை சாரிபார்த்துக் கொள்ளல். ஐக்கிய அமெரிக்கா முழுவதும் 538 தேர்வுக் கல்லூரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ( இதை தேர்தல் தொகுதி என்று சொல்லித் தொலைத்தால் என்ன குறைந்துவிடப்போகிறது?) அமெரிக்கப் பாரளமன்றத்தின்  இரு அவைகளிலும் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து இந்த 538 தேர்வுக் கல்லூரியின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில்  100 மூதவை உறுப்பினர்களும் 435 மக்களவை உறுப்பினர்களும் உள்ளனர். அத்துடன் பாராளமன்ற உறுப்பினர் இல்லாத மாநிலமான வாஷிங்டனுக்கு மூன்று உறுப்பினர்கள் என மொத்தம் 538 உறுப்பினர்களுக்குமாக 538 தேர்வுக் கல்லூரிகள் இருக்கின்றன.  கலிபோர்னியாவிற்கு 54, நியூயோர்க்கிற்கு 33, ரெக்ஸசுக்கு 32, புளோரிடாவிற்கு 25 இவை பெரிய மாநிலங்களின் தேர்வுக் கல்லூரிகள். ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு 270 தேர்வுக் கல்லூரி வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். ஒரு தேர்வுக் கல்லூரிக்கு உள்ளூரைச் சேர்ந்த கட்சி உண்மையானவர்கள் அல்லது குடிசார் செயற்பாட்டாளர்கள் நிறுத்தப்படுவர். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒவ்வொரு தேர்வுக் கல்லூரியிலும் யார் வெற்றி பெற்றார் என்று தீர்மானிக்கபப்டும். பின்பு இந்த தேர்வுக் கல்லூரிகளிலும் வெற்றி பெற்றவர்கள் தங்கள் வாக்குக்களை தமக்குப் பிடித்த வேட்பாளர்களுக்கு அளித்து யார் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதைத் தீர்மானிப்பர். 1787-ம் ஆண்டு எழுதப்பட்ட அமெரிக்க அரசமைப்பு யாப்பு இப்படிக் குழப்பி விட்டது. அதை மாற்றி நேரடியாக குடியரசுத் தலைவர் தேர்ந்த் தெடுக்கப் படவேண்டும் என்ற வாதம் நீண்ட காலமாகத் தொடர்கிறது. அமெரிக்க அரசியல் யாப்பு வரையும் போது குடியரசுத் தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதா அல்லது பாராளமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதா என்ற இருதரப்பு விவாதங்களின் உடன்பாடுதான் தேர்வுக் கல்லூரி முறைமை.

மேலும் குழப்பம்                                                                                                                 தேர்வுக் கல்லூரி முறைமைக்கு மாநிலத்திற்கு மாநிலம் வேறு வேறு சட்டங்கள் உள்ளன. சில மாநிலங்களில் உதாரணத்திற்கு ஒரு மாநிலத்தில் 21 தேர்வுக் கல்லூரிகள் இருந்து அதில் ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக 15 தேர்வுக் கல்லூரிகளும் மற்றவருக்கு 6தேர்வுக் கல்லூரிகளும் கிடைத்தல்  ஒரு வேட்பாளருக்கு 15 வாக்குக்களும் மற்ற வேட்பாளருக்கு 6 வாக்குக்களும் கிடைத்தன என்று அறிவிக்கப்படும். ஆனால் எல்லா மாநிலங்களிலும் இந்த முறைமை இல்லை. சில மாநிலங்களின் சட்டப்படி அதிகப்படியான தேர்வுக் கல்லூரிகளில் வெற்றி பெற்றவருக்கு எல்லாத் தேர்வுக் கல்லூரி வாக்குகளும் கிடைத்ததாகக் சட்டம் உள்ளது. அதன் படி முழு 21 வாக்குகளும் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும். இதை ''winner-take-all' system" என்பர். Maine and Nebraskaஆகிய இரு மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் "winner-take-all' system" நடைமுறையில் உள்ளது. சிலதருணங்களில் இந்த தேர்வுக் கல்லூரியில் வெற்றி பெற்றவர்கள் கட்சி மாறியமையும் உண்டு. இரு வேட்பாளரும் ஒரே அளவான தேர்வுக் கல்லூரிகளின் வாக்குகளைப் பெற்றிருந்தால் யார் வெற்றி பெற்றார் என்பதை அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவை தீர்மானிக்கும். நாடளாவிய ரீதியில் குறைந்த வாக்குகள் பெற்றவர்  இந்த தேர்வுக் கல்லூரி முறைமையால் தேர்தலில் வெற்றி பெறும் சாத்தியம் உண்டு. நவம்பரில் வரும் தேர்தலை அடுத்து டிசம்பர் மாதத்தில் வரும் முதலாவது புதன் கிழமையை அடுத்து வரும் திங்கட் கிழமை ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் அந்த மாநில தேர்வுக் கல்லூரிகள் கூடி யார் குடியரசுத் தலைவர் என்று வாக்களித்து அதை தேர்தல் அதிகாரியான மூதவைத் தலைவருக்கு அறிவிப்பர். தொடர்ந்து வரும் ஜனவரி 6-ம் திகதி முறைப்படி யார் வென்றார் என்று அறிவிக்கப்படும். அதற்கு முதல் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் யார் அடுத்த குடியரசுத் தலைவர் என்பதை பத்திரிகைகள் அறிவித்து விடும்.

முதலாளித்துவத்தை விட வேறு தெரிவு இல்லை
                                                  இந்த தேர்வுக் கல்லூரி முறைமையால் அமெரிக்காவில் ஒரு மூன்றாவது கட்சி தொடங்க முடியாத நிலை உள்ளது. இரு முதலாளித்துவக் கட்சிகளைத் தவிர மாற்றுக் கொள்கை கொண்டவர்களின் பிரதிநிதித்துவம் அங்கு அடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மக்களில் 62 வீதமானோர் தேர்வுக் கல்லூரி முறைமையை எதிர்க்கின்றனர்.

சிறு மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அவசியமில்லை                              California, New York,  Texas,  Florida,  Pennsylvania,  Ohio,  Illinois,  Michigan,  New Jersey, North Carolina and Virginia  ஆகிய மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்று ஒருவர் குடியரசுத் தலைவராக முடியும். இம்முறை பராக் ஒபாமாவிற்கும் மிற் ரும்னிக்கும் இடையில் போட்டி நிலவுவதால் இருவரும் ஒரே அளவான தேர்வுக் கல்லூரி வாக்குகள் பெறுவதற்குச் சாத்தியம் உள்ளது.

குடியரசுக் கட்சியினரின் சதி 
                                                                                                இம் முறை தேர்தலில் கடும் போட்டி நிலவுவதால் குடியரசுக் கட்சியின ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தேர்தல் வாக்களிப்பில் கடுமையான அடையாள உறுதிப்படுத்தல் விதிகளை உருவாக்கப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதனால் வறிய மக்கள் தேர்தலில் வாக்களிக்காமல் போகலாம். பொதுவாக வறிய மக்கள் பராக் ஒபாமாவின் மக்களாட்சி(ஜனநாயக) கட்சிக்கே வாக்களிப்பதுண்டு.

ஊசலாடும் மாநிலங்களும் பணநாயகமும்
                                                       அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒஹியோ, புளோரிடா ஆகிய இரு மாநிலங்களும் ஊசலாடும் மாநிலங்களாகக் கருதப்படுகிறது. இந்த இரு மாநிலங்களை தமக்கு சாதகமாக்கினால் தங்களது வெற்றி உறுதி என்று வேட்பாளர்கள் கருதி தங்கள் கவனத்தில் பெரும் பகுதியை இவற்றில் செலுத்துகின்றனர். ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைக்கும் நிதி வெற்றிக்குக் காரணமாக அமைகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக அமெரிக்கத் தேர்தலில் பண முதலைகள் கட்சிகளுக்குக் கொடுக்கும் சன்மானம் தேர்தலில் கணிசமான பங்கு வகிக்கிறது. தீவிரமான விளம்பரங்களுக்கு இந்த நிதி பெரிதும் உதவும். பல பிரபலங்களை குறிப்பாக நடிகர்கள் பாடகர்களை தம் பக்கம் இழுக்க பணம் பெரிதும் உதவும். அமெரிக்காவை ஆளப் போகிறவர் யார் என்பதை பெரிதும் தீர்மானிப்பதில் தொலைக்காட்சி விவாதம் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும் பணக்காரர்கள் ஊடகங்கள் மூலம் மக்களின் கருத்தை மாற்றி அமைப்பார்கள். இரு வேட்பாளர்களில் யார் சிறப்பாக தொலைக்காட்சி விவாதம் செய்கிறாரோ அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். பராக் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிடும் மிற் றும்னியின் மகனுக்கும் வாக்குச் சீட்டுக்கள் எண்ணும் கணனி நிறுவனத்திற்கும் வர்த்தகத் தொடர்பு உண்டு என்ற குற்றச் சாட்டும் உண்டு. மற்ற நாடுகளுக்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்புவதில் மும்மரமாக நிற்கும் அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய ஐரோப்பிய நிறுவனமொன்றின் கண்காணிப்பாளர்களை அனுப்பும் கோரிக்கையை நிராகரித்து விட்டது. ரெக்ஸஸ் மாநில சட்டவாளர் நாயகம் தேர்தல் சாவடிகளின் 100 அடிக்குள் கண்காணிப்பாளர்கள் வருவது தண்டனைக்குரிய குற்றம் என்றார்.

கேலி கூத்தான மக்களாட்சி                                       
உலகின் சிறந்த மக்களாட்சி என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஐக்கிய அமெரிக்காவின் தேர்தல் முறைமையிலேயே பெரிய குறைபாடுகள். மக்களாட்சி ஸ்ரீ முதலாளிகளின் ஆட்சி.

Sunday 4 November 2012

A wingless bird has its claws

Why this night is so long
After these losses
Why the chain of disaster
Is not coming to an end

Is the height of your sacrifice
Not enough to end the suffering
Of the people you loved
And to stop atrocities

For some your nothing
But a bunch of terrorists
But in the temples of our hearts
You remain forever as deities

We will not let your holy sacrifice
To go astray and to be seen as waste
A wingless bird may be grounded
Still it can sing and has its claws

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...