Saturday 28 April 2012

மீளக்கலந்த நகைச்சுவைகள்


மாமியாரைப் பிடிக்காத மருமகன்
மாமியாருக்கு வாங்கிய
பிறந்தநாள் பரிசு
கல்லறை கட்டுவதற்கான நிலம்
ஓராண்டு கழிந்தது
மாமியாரின் அடுத்த
பிறந்த தினமும் வந்தது
இம்முறை மருமகன்
பரிசு எதுவும் வாங்கவில்லை
கவலையுடன் மாமி கேட்டாள்
எனது இந்தப் பிறந்த நாளை
மறந்து விட்டீர்களா
பரிசாக எதையும் தரவில்லை
மருமகனின் பதில்
சென்ற பிறந்த நாளுக்கு
வாங்கித் தந்த பரிசையே
நீங்கள் இன்னும் பாவிக்கவில்லையே

Teacher: What should be in a book to make it a bestseller?
Student: A girl on the cover and no cover on the girl.

திருமணம்
வாழ்வில் சுவையூட்டும்
சுகம் தரும்
கண்ணீரையும் வரவழைக்கும்
வெங்காயமும் அப்படியே

கூகிள் சிறந்த தேடுபொறியாம்
கோவிலுக்கு வெளியே
கழற்றி வைத்த காலணிகளைத்
அதில் தேட முடியுமா?

ஒவ்வொரு மனிதனும்
சுதந்திரத்திற்கான
விடுதலைப் போராளியாக
மாறிவிடுகிறான்
திருமணத்தின் பின்னர்

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் இருவரிக் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற கவிதைகள்:

1. My darling, my lover, my beautiful wife:
Marrying you has screwed up my life.

2. I see your face when I am dreaming.
That’s why I always wake up screaming.

3. Kind, intelligent, loving and hot;
This describes everything you are not.

4. Love may be beautiful, love may be bliss,
But I only slept with you ’cause I was pissed.

5. I thought that I could love no other
– that is until I met your brother.


6. Roses are red, violets are blue, sugar is sweet, and so are you.
But the roses are wilting, the violets are dead, the sugar bowl’s empty and so is your head.

7. I want to feel your sweet embrace;
But don’t take that paper bag off your face.

8. I love your smile, your face, and your eyes
Damn, I’m good at telling lies!

9. My love, you take my breath away.
What have you stepped in to smell this way?

1 0. My feelings for you no words can tell,
Except for maybe ‘Go to hell.’

Friday 27 April 2012

தேவை ஓர் ஒளிவருடி(scanner)

உன் விழி சொல்லும் மொழிக்குத்
தேவை எனக்கு ஒரு
மொழி பெயர்ப்பாளன்

உன் இதயத்தில்
இருப்பதை அறிய
தேவை ஓர் ஒளிவருடி(scanner)

என் முன் நின்கின்றாயா
சென்றுவிட்டாயா
கண்ணுக்குத் தெரியவில்லை

நினைக்கின்றாயா
மறந்துவிட்டாயா
நெஞ்சுக்குத் தெரியவிலல்லை

விரும்புகின்றாயா
வெறுத்துவிட்டாயா
இதயத்திற்குத் தெரியவில்லை


Thursday 26 April 2012

அடுத்த ஈழப் போரையும் அழிக்கத்தயாராகும் இந்தியா

இந்தியாவிலலஆட்சி மாறினாலும் காட்சி மாறாது
 இந்தியாவின் மீள்கலவை (ரீமிக்ஸ்) நாடகம்.
நாள் - 1 செய்தி: இலங்கை சென்று திரும்பிய........................................அவர்கள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்திற்கு மேல் சென்று இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக தன்னிடம் உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.

நாள் - 2 செய்தி: இலங்கை வந்த ..............................................அவர்களுடன் தான் 13வது திருத்தம் பற்றிக் கலந்துரையாடவில்லை என இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்தியாவில் இருந்து ஒவ்வொருதடவையும் அரசியல்வாதிகள் வரும்போது மேலுள்ள செய்திகள் வந்து கொண்டு இருக்கும். வருபவர் பெயர்களை கோடிட்ட இடத்தில் நிரப்பிக் கொள்ளலாம். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா வந்த போதும் இதே நாடகம். சுஸ்மா சுவராஜ் வந்தபோது அதே நாடகம் மீள்கலவை செய்து அரங்கேற்றப்பட்டது.


சுஸ்மாவின் கண்டு பிடிப்பு
தமிழர்கள் பகுதியில் ஒரு வீட்டில் பிறந்த நாள் விழா நடந்தாலும் இலங்கைப் படையினர் பங்கு அத்து மீறி நுழைந்து பற்ற வந்து விடுவார்கள்; கோவில்களுக்குள் படையினர் நுழைகின்றனர் என்றெல்லாம் சுஸ்மா சுவராஜ் அம்மையார் கண்டு பிடித்துள்ளார். இது ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்ட செய்தி. இலங்கையில் நடக்கும் அநியாயங்கள் யாவும் இந்தியாவிற்கு தன் உளவுத்துறை மூலம் தெரியும். அப்படி மக்கள் ஒன்று கூடுவதை படையினர் நெருக்கமாகக் கண்காணித்தால்தான் அடுத்த விடுதலைப் போராட்டத்தத்தைத் தடுக்க முடியும் என்று ஆலோசனையை இலங்கைக்கு கூறியது யார் என்பது எமக்குத் தெரியும். அதனால்தான் தமிழர்களின் ஒவ்வோரு வாழ்க்கை அம்சங்களிலும் சிங்களப் படையினரின் தலையீடு இருக்கிறது. இந்த நிலையை இலங்கையில் உருவாக்கியது யார்? இந்தியா இலங்கையில் படை ரீதியாகத் 1987இல் தலையிட முன்னர் தமிழர் பிரதேசங்களில் படையினர் எப்படி இருந்தனர்? ஒவ்வொரு படையினரும் தமது முகாம்களை விட்டு வெளியேறாத நிலை இருந்தது. வெளியே வந்தாலும் பாரிய கவசவாகனக்கள் டாங்கிகள் முன் செல்ல வான்கலங்கள் மேல் செல்லத்தான் படையினர் வெளியே வருவர். வந்தவர்களில் எத்தனை பேர் உயிருடன் திரும்புவார்கள் என்ற நிலை இருந்தது. இலங்கையின் எப்பாகத்திலும் தமிழ்ப் போராளிகள் தாக்குதல் நடத்தும் திறனுடன் இருந்தனர். அப்போது இலங்கையில் திருக்கோணமலைத் துறை முகத்தில் அமைய இருந்த அமெரிக்க கடற்படையினருக்கான எரிபொருள் மீள் நிரப்பு வசதிகளையும் சிலாபத்தில் அமைய இருந்த அமெரிக்க நீர் மூழ்கிக் கப்பல்களுக்கான அதி தாழ் அலைவரிசை(ultra-law wave) தொடர்பாடல் நிலையத்தையும் தடுக்கவும் அதற்குக் கைக்கூலியாக தமிழர்களின் ஆயுத போராட்டத்தை ஒழிக்கவும் இந்தியா அமைதிப் படை என்ற போர்வையில் இலங்கை வந்தது. வீடுகளிற்குள் புகுந்து பாவித்த வெளிநாட்டு உள்ளாடைகளையும் திருடும் படையினரைத் தமிழர்கள் கண்டு ஆச்சரியப்பட்டனர். இனி உங்களை நாம் பாதுகாக்கிறோம் உங்கள் ஆயுதங்களை எம்மிடம் ஒப்படையுங்கள் என்றது. அதன் பிறகு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட இந்தியா சிங்களவர்களுக்கு உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவால்தான அப்படி இருந்த தமிழர்கள் இன்று இப்படி ஆனார்கள் என்று சுஸ்மா குழுவினரால் கண்டறிய முடியவில்லை. இலங்கை தொடர்பாக இந்தியாவின் கொள்கையில் தலை கீழ் மாற்றம் தேவை என சுஸ்மா பரிந்துரைகவில்லை. மாறாக இப்போது எதிர்க்கட்சியில் இருக்கும் சுஸ்மா 2014இல் ஆளும் கட்சியாக வந்தாலும் இபோதுள்ள கொள்கைதான் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே சுஸ்மாவை இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளாக இருக்கு தமிழின விரோதிகள் இலங்கைக்கு அனுப்பினார்கள்.

சுஸ்மா மஹிந்த தனிப்பட்ட சந்திப்பு
இலங்கையிலும் இந்தியாவிலும் கொள்கைகள் முரண்பட்டாலும் இந்தியாவின் சாதியத்தையும் பேரினவாததத்தையும் எப்படி எதிர்காலத்தில் முன்னெடுப்பது, தமிழர்களை எப்படி அடக்கி ஆள்வது என்பது பற்றியா சுஸ்மாவும் மஹிந்தாவும் தங்கள் தனிப்பட்ட சந்திப்பில் ஆராய்ந்தார்கள்?


நிறைவேற்றத் தேவையில்லாத 13வது திருத்தம்
ராஜீவ் - ஜே ஆர் ஒப்பந்தத்தின் படி உருவாக்கிய இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தம் கையொப்பமிட்ட போதே இதை அமூல்படுத்தத் தேவையில்லை என இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் இலங்கை அரசிடம் அப்போதே தெரிவித்திருந்ததாக ஒரு வதந்தி கொழும்பில் இருந்தது. அது வதந்தி அல்ல உண்மை என்பது இப்போது 24 ஆண்டுகளுக்கு மேலாகிய பின்பு உறுதியாகிவிட்டது. அவர் என்னிடம் 13வது திருத்தம் அமூல்படுத்துவேன் என்றார் என்பது அவர் தான் அதுபற்றிக் கதைக்கவில்லை என்பதும் இந்தியாவும் இலங்கையும் இணைந்துஆடும் கபட நாடகம்.

ஆளில்லாத் தமிழர்களுக்கு ஆள் கிடைப்பதைத் தடுக்க ஆளில்லா விமானங்கள்
இலங்கைத் தமிழர்களுக்கு உதவ யாருமில்லை அவர்கள் நிலை பிச்சைக் காரர்கள் நிலை போன்றது. அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும் என பூனூல் போட்ட இந்திய ஆயவாளர்கள் 2009 மே மாதத்திற்குப் பின்னர் எழுதி மகிழ்ந்தார்கள். ஆனால் 2012மார்ச் ஜெனிவாவில் நிலைமை மாறி இருந்தது. ஜெனீவாத் தீர்மானத்தின் பின்னர் ஐரோப்பாவில் வாழும் தமிழர்களிடையே ஒரு வந்ததி பரவியது. ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு நாம் இனி ஆயுத உதவி வழங்குவோம் என ஒரு முக்கிய மேற்குலக நாடு ஒன்று கூறியது என்பதே அந்த வதந்தி. இந்த வந்தி அடிபட்ட ஓரிரு தினங்களுக்குள் இந்தியாவில் இருந்து இன்னொரு செய்தி வந்தது. பாக்குநீரிணையைக் கண்காணிக்க இந்திய ஆளில்லாப் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்படும் என்று. அதைத் தொடர்ந்து இந்திய, இலங்கை, மாலை தீவு இணைந்து ஒரு கடற்போர் ஒத்திகை பார்த்தன. ஒரு படைக்கலன்கள் ஏதிய போராட்டம் ஒடுக்கப்பட்டு அந்தப் போராட்டத்திற்கான காரணி தீர்க்கப்படாமல் இருந்தால் ஐந்து ஆண்டுகளுக்குள் மீண்டும் போராடம் தொடங்கும் என்கின்றனர் அரசறிவியலாளர்கள். அடுத்த தமிழர்களின் போராட்டத்தையும் ஒழித்துக் கட்ட இந்தியா தயாராகிறது.

Wednesday 25 April 2012

ந கைச்சுவைக்கதை: சோனியா கேட்ட பலகை

பிரதம மந்திரியின் பணிமனையில் வேலை செய்பவர்கள் ஒருவரும் தன்னை மதிப்பதில்லை என்று மன் மோகன் சிங்கிற்குப் பெரிய கவலை. அது பற்றி பலரிடமும் சொல்லிப் பார்த்தார். கலந்து ஆலோசனை செய்து பார்த்தார். பலனில்லை. மிகவும் கவலை தேய்ந்த முகத்துடன் வீடு சென்றார். அவரது கவலையான முகத்தைக் கண்ட அவரது மனைவி நடந்தது என்ன என்று கேட்டார். யாரும் தன்னை தனது பணிமனையில் மதித்து நடப்பதில்லை என்றார். அதற்கு மனைவி மலையாளிகள்தான் ஆலோசனை வழங்குவதில் கெட்டிக்காரர்கள். சிவ் சங்கர மேனனைக் கேட்டால் அவன் உங்களுக்கு நல்ல ஆலோசனை வழங்குவான் என்றார்.

அடுத்த நாள் மன்மோகன் சிங் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவ் சங்கர மேனனை அழைத்து எனது பணிமனையில் என்னை ஒருவனும் மதிக்கிறார்கள் இல்லை. எல்லோரும் என்னை மதிக்க என்ன செய்யலாம் என்று கேட்டார் மன்மோகன் சிங். சிங்கின் நிலையை நன்கு உணர்ந்தவரான மேனன் அது உன் தலைவிதி என்றார்.. விரக்தியடைந்த சிங் உடனே அமெரிக்கப் பாதுகாப்புத் துறைப் பணிமனையான பெண்டகனுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது பிரச்சனையை எடுத்துக் கூறினார். அவர்கள் தாம் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயுடன் தொடர்பு கொண்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள் ஆவன செய்வதாகக் கூறினார்கள். பின்னர் சிங் தனது பணிமனைக்குச் சென்றபோது அவரது அறை வாசலில் "I am the boss here" என்று ஆங்கிலத்திலும்  मु३ो यहां की देखभाल करना என்று இந்தியிலும் எழுதப்பட்ட அழகிய பலகை ஒன்று தொங்கியது. அதைப் பார்த்து அமெரிக்காக்காரன் அமெரிக்காக்காரந்தான் எனத் தனக்குள் மகிழ்ந்து கொண்டு தனது பணியைத் தொடங்கினார். அதாவது சோனியா காந்தி தொலைபேசியில் போடும் உத்தரவுகளுக்கு தலையாட்டிக் கொண்டே இருந்தார். தனது உத்தரவுகளை அடுக்கிக் கொண்டே போன  சோனியா கடைசியில் உன்னை யாரய்யா எனது அறை வாசலில் தொங்கிய "I am the boss here" பலகையை திருடிக் கொண்டு போய் உன அறைவாசலில் மாட்டச் சொன்னது என்றார்.

Tuesday 24 April 2012

நகைச்சுவைக்கதை: படக்கூடாத இடத்தில் பட்ட மீன்

தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் மீனவர் சிலர் பாக்குநீரிணையில் இந்திய இலங்கை எல்லையின் இந்தியப் பகுதிக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த சிங்களக் கடற்படையினர் அவர்கள் மீது சுடத் தொடங்கினர். தமிழ் மீனவர்களில் இருவர் அந்த இடத்திலேயே செத்து விழுந்தனர். இருவர் காயமடைந்தனர். அப்போது கடற்படைத் தளபதி அவர்களைத் தடுத்து இப்பொது முன்னர் மாதிரி நிலமை இல்லை. பிரச்சனை ஜெனீவாவரைக்கும் போகலாம் அவர்களை முன்பு போலச் சுட்டுக் கொல்லாமல் கைது செய்வோம் என்றான். அவர்கள் தமிழ் மீனவர்களின் படகை அண்மித்த வேளையில் இந்தியக் கடலோரப் பாதுகாப்புக் கப்பல் ஒன்று அந்த இடத்திற்கு வழி மாறி வந்துவிட்டது. இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படை தமிழ் மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுடப்படும் பக்கம் போகவே கூடாது என்று அவர்களுக்கு கடுமையான உத்தரவு மேலிடத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. பிழையான இடத்தில் பிழையான நேரம் தாம் வந்துவிட்டதை உணர்ந்த இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படையினர் ஒருவாறு நிலைமையை சமாளிக்க எஞ்சியிருந்த இரு தமிழ் மீனவர்களிடம் என்ன நடந்தது என்று முதலில் இந்தியிலும் பின்னர் மலையாளத்திலும் கேட்டனர். கேள்வியை ஒருவாறு புரிந்து கொண்ட தமிழ் மீனவன் நடந்ததைச் சொன்னான்.  சிங்களக் கடற்படைத் தளபதி இந்தியாவில் படைப் பயிற்ச்சி பெற்றவனாதனால் இந்தியில் கதைக்கத் தொடங்கினான். இவர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் கடத்துபவர்கள் எங்கள் பிரதேசத்துக்குள் வந்து மீன் பிடித்தார்கள். அவர்களை நாம் கைது செய்யச் சென்றபோது அவர்களிடம் இருந்த கைக்குண்டு வெடித்து இருவர் இறந்துவிட்டனர் இருவர் காயமடைந்து விட்டனர். அப்போது இந்தியக் கரையோரக் காவல்படையினர் காயப்பட்டவர்களுக்கு எந்த வித உதவியும் செய்யாமல் தமிழ் மீனவர்கள் இருவரையும் பார்த்து  நீங்கள் அவர்கள் கடலில் பிடித்த மீன்களை அவர்களிடமே கொடுத்து விடு என்றனர். தமிழ் மீனவர்கள் இருவரும் இல்லை அது எங்கள் கடலுக்குள் பிடித்த மீன்கள் என்றனர். அப்போது இந்தியக் கடலோரக் காவல் படையினர் இரு நாடுகளின் ராஜதந்திரப் பிரச்சனை என்றபடியால் இதை சாணக்கிய தந்திரப்படியும் மனுதர்ம சாஸ்த்திரப்படியும் தீர்க்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் மீன் எறியும் போட்டியால் தீர்த்துக் கொள்ளுவோம். முதலில் சிங்களக் கடற்படை உன் மீது ஒரு மீனை வீசட்டும் பின்னர் நீ சிங்களவன் மீது ஒரு மீனை வீசு யாருடைய எறி அதிக காயத்தை ஏற்படுத்துகிறதோ அவன் வென்றவன் ஆவான் என்றானர் இந்தியக் கடலோரக் காவற்படையினர். இருதரப்பினரும் சம்மதித்தனர். முதலில் சிங்களவன் ஒரு பெரிய மீனை எடுத்து அதன் வயிற்றுக்குள் ஒரு சங்கைத் திணித்து தமிழ் மீனவர் இருவரில் ஒருவர் மீது வீசினான். அவர் எதிர்பார்த்தபடியே அது தமிழ் மீனவன் மீது படாத இடத்தில் பட தமிழ் மீனவன் துடித்து விழுந்து இறந்தான். கொதிப்படைந்த எஞ்சிய கடைசித் தமிழ் மீனவன் தானும் ஒரு பெரிய மீனை எடுக்க இந்தியக் கடலோரக் காவற்படையினர் இது என்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு மீனால் எறிந்து கொண்டு....சரி உனது மீன் யாவற்றையும் நீயே எடுத்துக் கொண்டு போய்விடு என்று தீர்ப்பளித்தான்.

கதையின் நீதி: அதிக அளவு தமிழர்கள் கொல்லப்படவேண்டும் என்பதே ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் நோக்கம்.

ஒரு பொருத்தமான கருத்துப்படம்:
படம் வரைந்தவருக்கு நன்றியும் பாராட்டுக்களும்


Monday 23 April 2012

உன் இதயத் துடிப்பொலி

ஆயிரம் மைல்கள் தாண்டியும்
என் காதில் கேட்கும்
உன் இதயத் துடிப்பொலி

எல்லோர்க்கும் விடிவது
சூரியன் உதிக்கையில்
எனக்கு விடிவது
நீ சிரிக்கையில்

யாருக்கும் தெரியாமல்
என் நெஞ்சில்
கொதிக்கும் உன் நினைவு

காதல் பலாப்பழம் போல்
முட்கள் தாண்டினால்தான்
சுவையுண்டு

என் கண் முன்
என்றும் தெரியும்
உன் உருவம்
என் இதயத் துடிப்பியல்
உன் சிரிப்பொலி
என் புன்னகைக்குள்
மறைந்திருக்கும்
உன் பிரிவின் துயரம்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...