Saturday 24 March 2012

ஜெனீவாத் தீர்மானம்: அடுத்துக் கெடுக்க வந்த இந்தியா

ஜெனீவாவில் பெப்ரவரி 27 முதல் மார்ச் 23 வரை நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வாசகங்கள் தொடர்பாக கடைசிவரை இழுபறியாகவே இருந்தது.  தீர்மானத்தின் வாசகங்களைக் கடுமையாக்க வேண்டும் என நோர்வே உடபடச் சில ஐரோப்பிய நாடுகள் கருதின. வாசகங்கள் கடுமையானால் பரவலான ஆதரவு கிடைப்பது கடினம் என்று அமெரிக்கா கருதியது. இந்தியா உடபட வாக்களிக்கும் உரிமை கொண்ட பல நாடுகள் எந்த நாட்டுக்கு எதிராக எந்த தீர்மானம் ஐநா மனித உரிமைக்கழகத்தில் வந்தாலும் அதை எதிர்ப்பது என்ற கொள்கை தம்மிடம் இருப்பதாக பகிரங்காமாக அறிவித்திருந்தன.  வேறு சில நாடுகள் அமெரிக்கா எந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தாலும் அவற்றை எதிர்க்கும் கொள்கை கொண்டவை. அவற்றில் சில இலங்கையுடன் நெருங்கியா உறவு கொண்டவை.

தீர்மான வாசகம் தொடர்பாக  அமெரிக்கா இந்தியாவுடன் தொடர் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது. இதனால் தீர்மான வாசகங்களில் பல மாற்றங்கள் சிங்களவர்களுக்குச் சாதகமாக இந்தியாவைத் திருப்திப்படுத்த மாற்றப்பட்டன. இந்தப் பின்னணியில் அமெரிக்கா தனது தீர்மானம் நிறைவேற்றுப்பட தனது பெரும் செல்வாக்கைப் பயன்படுத்தியது. தேவை ஏற்பட்டால் வெள்ளை மாளிகையில் இருந்து பராக் ஒபாமாவே நேரடியாக மற்ற அரச தலைவர்களுடன் தொடர்பு கொண்டு தீர்மானத்திற்கு ஆதரவு தேடத் தயாரான நிலையில் இருந்தார். ஆனால் ஹிலரி கிளிண்டன் களமிறங்கி தீர்மானம் நிறைவேறத் தேவையான வாக்குகளை பெறுவதை உறுதி செய்து கொண்டார்.

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றிய நிலைப்பாட்டை ஆரம்பத்தில் இந்தியா வெளியில் தெரிவிக்காமல் இருந்தது. தனது நாட்டில் தமிழர்கள் தான் இலங்கைக்கு ஆதரவாகவும் தீர்மானத்திற்கு எதிராகவும் வாக்களித்தால் எப்படி அதை எதிர்ப்பார்கள் என்பதை நாடி பிடித்துப் பார்க்க இந்திய நிதியமைச்சர் பிரணாப் முஹர்ஜீ மூலமாக இந்தியா இலங்கைக்கு சாதகமான நிலைப்பட்டை எடுத்து தீர்மானத்தை எதிர்க்கும் என்ற கருத்தை வெளிவிட்டது. அப்படி இந்தியா வாக்களித்தால் தமக்கு அரசியல் எதிர்காலமே இல்லை என்பதை தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் உணர்ந்து இருந்தனர். அவர்களின் எதிர்ப்புக் கடுமையாக இருந்தது. சிங்களவர்களுக்கு வால்பிடிப்பவர்களில் முக்கியமான சுதர்சன நாச்சியப்பனே எதிர்த்தார். தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் ஞானதேசிகனை சேலை அணிந்த முசோலினி தொலைபேசியில் மிரட்டியும் அவர் பணியவில்லை. வேண்டுமானால் என்னைப் பதவியில் இருந்து நீக்குங்கள் என்றார் ஞானதேசிகன்.

சந்திவிக்கிரகம் என்னும் பகைவரை அடுத்துக் கெடுத்தல்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிச்சயம் வெற்றி பெறும் என்று அறிந்தவுடன் பஞ்சதந்திரத்தில் ஒன்றான சந்திவிகிரகம் என்னும் அடுத்துக் கெடுத்தலை இந்தியா கையில் எடுத்தது. அமெரிக்காவின் நண்பனாக இணைந்து தமிழர்களைக் கெடுக்கவும் சிங்களவர்களுக்கு கொடுக்கவும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் முடிவு செய்தனர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் திடீரென அமெரிக்காவின் தீர்மானத்தை இட்னியா ஆதரிக்கும் என்று அறிக்கைவிட்டார். 2009இல் ஐநா மனித உரிமைக் கழகத்தி இலங்கையை கண்டிக்க கொண்டுவரப் பட்ட தீர்மானத்தை கடுப் பிரயத்தனம் செய்து இலங்கையைப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக்கி தனது தமிழின விரோதச் செயலை அம்பலப்படுத்திய இந்தியா 2012இல் தனது நயவஞ்சகத்தை வெறுவிதைமாக வெளிக் கொண்டுவந்தது. அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா தீர்மான வாசகத்தில் கொடுக்கப்பட்ட ஆறு மாத கால அவகாசத்தை ஒன்றரை வருடமாக்கியது. இப்படிப் பல வாசகங்கள் இந்தியாவால் மாற்றப்பட்டன. இந்தியா தனது அடுத்துக் கெடுக்கும் செயலை இப்படி வெளிவிட்டது:
“India believes that the primary responsibility for the promotion and protection of human rights lies with the states. Consequently, resolutions of this nature should fully respect the sovereign rights of states and contribute to Sri Lanka’s own efforts in this regard,” the Indian foreign ministry said in a release.

“While we subscribe to the broader message of this resolution and the objectives it promotes, we also underline that any assistance from the office of the high commissioner on human rights...should be in consultation with and with the concurrence of the Sri Lankan government,” the ministry said, making it clear that India was against the sovereignty of Sri Lanka being violated, according to people familiar with the developments.

“These are norms which all of us in the council subscribe to. A democratic country like Sri Lanka has to be provided time and space to achieve the objectives of reconciliation and peace. In this council, we have the responsibility to ensure that our conclusions do contribute to this objective rather than hinder it,” the Indian statement added.

ஐநா மனித உரிமைக்கழகத்திற்கான இந்தியப் பிரதிநிதி திலிப் சின்ஹா தாம் இலங்கையி இறைமையைப் பாதுகாத்ததாக அறிவித்துள்ளார்.

ஜெனீவாத் தீர்மானத்திற்காக இந்தியா செய்த திரைமறைவுச் சதிகளை அறியாத பல சிங்களவர்கள் இந்திய எதிர்ப்புக் கருத்துக்களை வெளிவிடத் தொடங்கிவிட்டனர்.
 இலங்கையில் இருந்து ஜெனீவாத் தீர்மானத்தில் இலங்கைக்கு சாதகமான வாசகங்களை தணித்தமைக்காக இந்தியாவிற்கு இலங்கையில் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன.

Thursday 22 March 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்களிப்பு விபரம்:
ஆதரவு: 24
எதிர்ப்பு: 15
கலந்துகொள்ளாதவை: 8

 ஆதரித்த நாடுகள்:
Benin
Cameroon
Libya
Mauritius
Nigeria
India
Chile
Costa Rica
Guatemala
Mexico
Peru
Uruguay
Austria
Belgium
Italy
Norway
Spain
Switzerland
USA
Czech Republic
Hungary
Poland
Moldova
Romania
 
எதிர்த்த நாடுகள்:
Congo (Brazzaville)
Mauritania
Uganda
Bangladesh
China
Indonesia
Kuwait
Maldives
Philippines
Qatar
Saudi Arabia
Thailand
Cuba
Ecuador
Russia
 வாக்களிக்காதவை:
Angola
Botswana
Burkina Faso
Djibouti
Senegal
Jordan
Kyrgyzstan
Malaysia
 
ஏற்கனவே இலங்கை இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானம் ஆஸ்திரேலிய செனட் சபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.


 L2 எனப்பட்ட தீர்மானம்:
1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துமாறு இலங்கை அரசைக் கோரும் அதே வேளை பொருத்தமான சட்டரீதியான கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து இலங்கையருக்கும் நீதி,சமத்துவம்,என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல் வேண்டும்.

2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் சர்வதேசச் சட்டம் மீறப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நடவடிக்ககைகளை துரிதமாக மேற்கொள்வதோடு ஒட்டுமொத்தமான நடவடிக்கைத் திட்டத்தை இலங்கை அரசு சமர்ப்பிக்க வேண்டும்.


3. மேற்படி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாராய்ந்தும் இணக்கப்பாட்டின் அடிப்படையிலும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தையும் தொடர்புபட்ட விசேட நடைமுறை ஆணையைக்கொண்ட தரப்பினரையும் ஊக்குவிப்பதுடன் மனித உரிமைகள் பேரவையின் 22வது அமர்விற்கு மேற்படி ஏற்பாடுகளைப் பற்றிய ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை வேண்டுகின்றோம்.

Human Rights Council
Nineteenth session
Agenda item 2
Annual report of the United Nations High Commissioner
for Human Rights and reports of the Office of the
High Commissioner and the Secretary-General
                         United States of America: draft resolution
                   19/…  Promoting reconciliation and accountability in Sri Lanka
       The Human Rights Council,
       Guided by the Charter of the United Nations, the Universal Declaration of Human Rights, the International Covenants on Human Rights and other relevant instruments,
       Reaffirming that States must ensure that any measure taken to combat terrorism complies with their obligations under international law, in particular international human rights, refugee and humanitarian law, as applicable,
       Taking note of the report of the Lessons Learnt and Reconciliation Commission of Sri Lanka and its findings and recommendations, and acknowledging its possible contribution to the process of national reconciliation in Sri Lanka,
       Welcoming the constructive recommendations contained in the Commission’s report, including the need to credibly investigate widespread allegations of extra-judicial killings and enforced disappearances, demilitarize the north of Sri Lanka, implement impartial land dispute resolution mechanisms, re-evaluate detention policies, strengthen formerly independent civil institutions, reach a political settlement on the devolution of power to the provinces, promote and protect the right of freedom of expression for all and enact rule of law reforms,
       Noting with concern that the report does not adequately address serious allegations of violations of international law,
       1.  Calls upon the Government of Sri Lanka to implement the constructive recommendations made in the report of the Lessons Learnt and Reconciliation Commission and to take all necessary additional steps to fulfil its relevant legal obligations and commitment to initiate credible and independent actions to ensure justice, equity, accountability and reconciliation for all Sri Lankans;
       2.   Requests the Government of Sri Lanka to present, as expeditiously as possible, a comprehensive action plan detailing the steps that the Government has taken and will take to implement the recommendations made in the Commission’s report, and also to address alleged violations of international law;
3.    Encourages the Office of the United Nations High Commissioner for Human Rights and relevant special procedures mandate holders to provide, and the Government of Sri Lanka to accept, advice and technical assistance on implementing the above-mentioned steps, and requests the Office of the High Commissioner to present a report on the provision of such assistance to the Human Rights Council at its twenty-second session.

Wednesday 21 March 2012

Mere thought of you Suffocates me

You are the most precious thing
I have in this world
You are the one
My reason for living
My reason for being
Between you and me
The distance is widening
Sound of your laughter
Still echo in my heart
I am here! Where are you?
I have none in this world
But you dear baby
Mere thought of you
Suffocates me; strangle me
The best days with you
Came to an abrupt end
for no reason, baby
Come back baby come back
And fill the vacuum

Tuesday 20 March 2012

ஜெனீவா தீர்மானம்: மீண்டும் கோபாலபுரம்-கொழும்பு-டில்லி சதி.

2009 மே மாதம் இந்தியப் பாராளமன்றத்திற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்க இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் பெரும் இன அழிப்புப் போர் நடந்து கொண்டிருக்கின்றது. இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி தோற்றால் காங்கிரசுத் தலைகளிற்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து ஏற்படலாம் என்ற பயம் காங்கிரசின் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டு விட்டது. இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை அப்பாவித் தமிழர்களின் உயிரிழப்பைக் கருத்தில் கொள்ளாமல் முடிக்க வேண்டும் என்று இலங்கை மீது நிர்ப்பந்தம் பிரயோகிக்கப்பட்டது. இலங்கைப் படைத்துறை ஆகஸ்ட் மாதம் முடிக்க திட்டமிட்டு இருந்த போர் மே மாதம் முடிக்க தமிழர்கள் மீது நடந்து கொண்டிருந்த தாக்குதல் மேலும் உக்கிரப்படுத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் தமிழர்கள் மீது ஏவப்பட்டன. இலங்கையில் தமிழர்கள் பெரிய அளவில் அழிக்கப்படுவது தேர்தலில் தமது வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்று கருணாநிதியும் ப சிதம்பரமும் அதிக அக்கறை கொண்டனர்.

தமிழர்களின் சுதந்திரப் போரை வேரோடு அறுப்போம் என இந்தியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் நாராயணனும் வெளியுறவுத் துறைச் செயலர் சிவ சங்கர மேனனும் திட சங்கற்பம் பூண்டு கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்தனர். ப. சிதம்பரம், மு கருணாநிதி ஆகியோரின் தேர்தல் கவலையை நீக்கப் பெரிய சதி ஒன்று உருவாக்கப்பட்டது. போரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் மிகவும் சுருங்கிவிட்டது. இதை வாய்ப்பாக வைத்துச் சதி தீட்டப்பட்டது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் மிகவும் சிறியதாகையாலும் அதை நாலு புறமும் சிங்களப்படைகளும் அதற்குப் பின்பலமாக ஈழத்துக்குள் பின்கதவால் நுழைந்த்த ஆரியப் படைகளும் நின்று கொண்டிருந்தமையாலும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்த முடியாத சூழல் உருவாகி விட்டது. ஒரு சிங்களப் படையணி ஏவு கணைகளை வீசினால் அது விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை மற்றப் பக்கத்தில் சூழ்ந்திருக்கும் சிங்களப்படையணி மீதுதான் விழும். உடனே கருணாநிதி ஒரு உண்ணாவிரத் நாடகத்தை ஆரம்பித்தார். அவர் உண்ணாவிரதம் செய்யும் போது இலங்கை அரசு தாம் இனி கனரக ஆயுதத்தைப் பிரயோகிக்க மாட்டோம் என்று அறிவித்தது. அது உடனே திரித்து இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவித்து விட்டது என்று தமிழ்நாட்டில் பொய்யாக ஊடகங்களிலும் தேர்தல் பிரச்சார மேடைகளிலும் பரப்புரை செய்யப்பட்டது. கருணாநிதி தனது நாலரை மணித்தியால உண்ணா விரதத்தால் போரை நிறுத்தி விட்டார் அங்கு இப்போது அமைதி நிலவுகிறது என்ற பொய்ப்பிரச் சாரத்தால் 2009 மே 13-ம் திகதி நடந்த இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ்-திமுக கூட்டணை வெற்றி பெற்றது. இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற மஹிந்த ராஜபக்சே உதவினார் என்று இலங்கை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்தார்.

பெப்ரவரி மாதம் 27-ம் திகதி தொடங்கி ஜெனீவாவில் நடந்து கொண்டிருக்கும்  மனித உரிமைக்கழகத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்மொழியப்பட்ட தீர்மானத்தை எதிர்ப்பது என்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் ஏற்கனவே முடிவு செய்ந்திருந்தனர். அதை இந்தியாவின் தற்போதைய  நிதியமைச்சர் பிரணாப் முஹர்ஜீ(இவர் 2009இல் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்து சிங்களவர்களுடன் பெரிதும் ஒத்துழைத்தவர்)  ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்து விட்டார். இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்டால் 2012இல் நடக்க இருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் ப சிதம்பரம் சிவகங்கைத் தொகுதியில் தில்லு முல்லு செய்தாலும் வெல்ல முடியாத நிலை ஏற்படும். காங்கிரசுடன் சேர்ந்தால் திமுக ஒரு தொகுதியில் தன்னும் வெல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால் ப சிதம்பரம் அவசரமாக சோனியா காந்தியைத் தேடி ஓடினார். ஆனால் சோனியாவோ ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவால் கடுமையாக மிரட்டப்பட்டுள்ளார். இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரில் இந்தியா செய்த பங்களிப்புக்களை பகிரங்கப் படுத்துவேன் என்பதே மஹிந்த விடுக்கும் மிரட்டல். ஆதரித்தால் இன அழிப்புக்கு செய்த பங்களிப்பு அம்பலமாகும் ஆதரிக்காவிட்டால் தமிழ்நாட்டில் 2014 நடக்கவிருக்கும் தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்க வேண்டும்.

அடுத்த சிதம்பரச் சதி
இலங்கையிடம் இந்தியா தான் இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் வரவிருக்கும் பிரேரணையை எதிர்ப்பதாயின் இலங்கை ராஜிவ்-ஜேஆர் ஒப்பந்தம் மூலம் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசியல் அமைப்பிற்கு செய்யப் பட்ட 13வது திருத்தத்தை அமூலாக்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது என்ற ஒரு பொய்யான செய்தி இந்தியத் தரப்பால் ஏற்கனவே பரப்பப்பட்டுள்ளது. ப. சிதம்பரம் சோனியாவைச் சந்தித்தார் என்ற செய்தியும் வெளிவந்தது.

மீண்டும் பொய்! மீண்டும் உண்ணாவிரத நாடகம்.
இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கப் போகிறது என்று இந்தியப் பிரதமர் அறிவித்து விட்டார் என்ற செய்தி நேற்று (மார்ச் 19-ம்திகதி) பொய்யாகப் பரப்பப்பட்டுவிட்டது. இந்தியப் பிரதமர் சொன்ன திருவாசகம் இதுதான்:
  • “We are inclined to vote in favour of a resolution that, we hope, will advance our objective, namely, the achievement of the future for the Tamil community in Sri Lanka that is marked by equality, dignity, justice and self-respect.”
எமது நோக்கமான இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தை சமத்துவம், தன்மானம், நீதி, சுய மரியாதை அடிப்படையில் நிறைவேற்றக் கூடிய ஒரு தீர்மானத்திற்குச் சார்பாக நாம் வாக்களிக்கும் சார்பு நிலையில் இருக்கிறோம். கருணாநிதி இந்த அறிக்கை மன்மோகன் சிங் வெளிவிடப்போகிறார் என்று அறிந்து கொண்டு தனது உண்ணாவிரத நாடகத்தை ஆரம்பித்தார். அவரைப் பாராட்டும் படங்களும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டன.
மன்மோகன் சிங் அறிக்கைவிட்டவுடன் திமுக வெளிவிட்ட படம். முன் கூட்டியே தயாரிக்கப்பட்டதா?
இங்கு சில சந்தேகங்கள் எழுகின்றன:
மன்மோகன் சிங் We will vote என்று சொல்லாமல் ஏன் We are inclined to voteஎன்று சொன்னார்?
இலங்கையில் நடந்ததாகக் கருதப்படும் போர்க்குற்றம் தொடர்பாக ஒரு பன்னாட்டு விசாரணை தேவை என்ற தீர்மானம் வந்தால் இந்தியா ஆதரிக்குமா? இதற்கான பதில் மன்மோகன் சிங்கின் பதிலில் இல்லை.
கைது செய்து வைக்கப்பட்டிருக்கும் பாத்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களின் கதி என்ன?
பல இலட்சம் சிங்களப் படைகளால் தமிழர்களின் நிலத்தில் ஆக்கிரமித்துள்ளனர். தமிழர்கள் துப்பாக்கி முனையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழர்களின் நிலங்களில் இருந்து சிங்களப்படைகள் வெளியேற்றப்படும் என்ற தீர்மானம் வந்தால் இந்தியா என்ன செய்யும்? முன்பு செய்தது போல் மீண்டும் சதீஸ் நம்பியாரை இலங்கைக்கு அனுப்பு சிங்களப்படையினர் தமிழர்கள் வாழும் பகுதியில் இருந்து சிங்களப்படையினர் வெளியேறக் கூடாது என்று சொல்லுமா?
மன் மோகன் சிங்கின் அறிக்கையில் அதிகாரப் பரவலாக்கம் என்ற சொற்தொடர் உள்ளடக்கப் படாதது ஏன்? அது சிங்களவர்களை ஆத்திரப்படுத்தும் என்றா அல்லது டில்லித் தென்மண்டல அதிகார மையத்தில் இருக்கும் பார்ப்பனர்களுக்கு அது பிடிக்காது என்றா?
ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கும்  மனித உரிமைக்கழகத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்மொழியப்பட்ட தீர்மானத்தில் என்ன உள்ளடக்கப்படவேண்டும் என்பது பற்றி அமெரிக்க-இந்திய அதிகாரிகள் தொடார்ந்து விவாதித்துக் கொண்டிருக்கையில் வரவிருக்கும் தீர்மான முன்மொழிவில் என்ன இடம்பெறப்போகிறது என்று தனக்குத் தெரியாது என மன்மோகன் சிங் பொய் சொல்வது ஏன்?

இன்னும் ஓரிரு தினங்களில் பல உண்மைகள் வெளிவரும்.

Monday 19 March 2012

இந்தியா தோற்றுவிட்டது: இலங்கையில் சீனாவுடனான போட்டியில்

1977இற்குப் பின்னர் இலங்கையில் அமெரிக்கா திருக்கோணமலைத் துறை முகத்திலும் சிலாபத்திலும் காலூன்றத் திட்டமிட்டபோது அதை தடுக்க தமிழர்களுக்கு உதவுவது போல் இந்தியா பாசாங்கு செய்து கொண்டு இலங்கை இனப்பிரச்சனையில் தலையிட்டது. இலங்கையில் தமிழர்களின் போராட்டத்திற்கு உதவுவது போல் இந்தியா நடித்தது. இலங்கையில் ஏற்கனவே இருந்த ஆயுதப் போராட்டக் குழுக்களுக்குள் பிளவுகள் ஏற்படுத்தியும் புதிய ஆயுதக் குழுக்களை ஏற்படுத்தியும் இந்தியா சதி செய்தது. அப்போது இந்திய அரசின் சார்பாக தமிழ் ஆயுதக் குழுக்களுடனான தொடர்பாடல் ஒருங்கிணைப்பு இந்துப் பத்திரிகை ஆசிரியர் ராம் ஊடாக மேற்கொள்ளப்பட்டது. ஆயுதக் குழுக்களுடனும் அரசியல் கட்சிகளுடனும் தொடர்பை ஏற்படுத்திய பார்ப்பனர் ராமிற்குப் பெரும் அதிர்ச்சி. அங்கு அவாளுடைய ஆளுவள் யாரும் முக்கிய பதவியில் இல்லை. இலங்கைத் தமிழர்கள் மத்தியில் அவாள் ஒரு இரண்டாந்தர "சாதியாகவே" காணப்பட்டா. யாழ் மேட்டுக் குடியினரின் நிலை அப்படி இருந்தது.

ஈழத் தமிழர்களின் அவாளுக்கு முக்கியமில்லாத நிலைப்பாடு தமிழகத்திலும் பரவினால் என்ன செய்வது என்று அவாள் யோசிக்கத் தொடங்கினாள். விளைவு ஈழத் தமிழர்கள் விடுதலைப் போராட்டம் எப்பாடு பட்டாவது ஒடுக்கப்பட வேண்டியது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் சகல சதிகளையும் மீறி ஈழத் தமிழர்கள் ஆயுத ரீதியில் பலம் பெற்று வருவது அவாளையும் டில்லி அதிகார மையமான தென்மண்டலத்தில் இருக்கும் அவாள் ஆட்களையும் கடுமையாகச் சிந்திக்க வைத்தது. தனிய இந்தியாவின் உதவியுடன் ஈழத் தமிழர்கள் போராட்டத்தை சிங்களவர்களால் அடக்க முடியாது என்று டில்லி அதிகார மையமான தென்மண்டலத்தில் இருக்கும் அவாள் ஆட்களால் உணரப்பட்டது. இலங்கைக்கான உதவிகளைச் சீனாவில் இருந்து பெறலாம் என்று இலங்கைக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்தியாவின் எதிர்ப்பைச் சம்பாதிப்பதைத் தவிர்க்க சீனாவிடம் இருந்து பகிரங்க உதவிகளைப் பெறத் தயங்கி இருந்த இலங்கை சீனாவிடமிருந்து ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்குப் பெரும் உதவிகள் பெறத்தொடங்கியது.  பின்னர் இந்தியா ஒரு பெரும் பொய்யைச் சொன்னது: "இலங்கைக்கு ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் தான் உதவாவிடில் சீனா இலங்கைக்கு உதவி சீனா இலங்கையைத் தன்வசமாக்கிவிடும்." விளைவு ஈழத் தமிழ்ர்கள் வகை தொகையின்றிக் கொல்லப்பட்டனர். இதனால்தான் அம்பாந்தோட்டையில் சீனா துறைமுகம் அமைக்க இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியவில்லை. பல படைத்துறை ஆய்வாளர்கள் இது பற்றி பல எச்சரிக்கைகளை இந்தியாவிற்கு விடுத்த போதும் தமிழர்களின் போராட்டத்தை ஒழித்துக் கட்டுவதே சிவ் சங்கர் மேனன் எம் கே நாராயணன், சோனியா காந்தி ஆகியோரின் ஒரே நோக்கமாக இருந்தது. இதற்காக அவர்கள் இந்தியாவின் பிராந்திய நலன்களையும் பலியிட்டனர்.


இந்தியாவின் அதர்ம சங்கட நிலை
பெப்ரவரி மாதம் 27-ம் திகதி தொடங்கி ஜெனீவாவில் நடந்து கொண்டிருக்கும்  மனித உரிமைக்கழகத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்மொழியப்பட்ட தீர்மானத்தை எதிர்ப்பது என்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டனர். இதை இந்தியாவின் தற்போதைய  நிதியமைச்சர் பிரணாப் முஹர்ஜீ (இவர் 2009இல் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது சிங்களவர்களுடன் பெரிதும் ஒத்துழைத்தவர்)  ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்து விட்டார். இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்டால் 2012இல் நடக்க இருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் ப சிதம்பரம் சிவகங்கைத் தொகுதியில் தில்லு முல்லு செய்தாலும் வெல்ல முடியாத நிலை ஏற்படும். காங்கிரசுடன் சேர்ந்தால் திமுக ஒரு தொகுதியில் தன்னும் வெல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால் ப சிதம்பரம் அவசரமாக சோனியா காந்தியைத் தேடி ஓடினார். ஆனால் சோனியாவோ ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவால் கடுமையாக மிரட்டப்பட்டுள்ளார். இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரில் இந்தியா செய்த பங்களிப்புக்களை பகிரங்கப் படுத்துவேன் என்பதே மஹிந்த விடுக்கும் மிரட்டல். ஆதரித்தால் இன அழிப்புக்கு செய்த பங்களிப்பு அம்பலமாகும் ஆதரிக்காவிட்டால் தமிழ்நாட்டில் 2014 நடக்கவிருக்கும் தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்க வேண்டும்.

இந்தியாவின் மூன்றாம் பிரச்சனை
ஜெனீவாவில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டால் அது மேற்கு நாடுகளின் வெறுப்பையும் சம்பாதிக்க வேண்டி வரும். இலங்கையில் ஏற்பட்டுள்ள சீன ஆதிக்கத்தை விலக்கவே அமெரிக்கா இலங்கைப் போரின் போது நடந்த அத்து மீறல்களுக்கான பொறுப்புக் கூறல் என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.

 இந்தியாவின் தோல்வி
ஜெனீவாவில் சீனா திவிரமாக இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறது. இதியா இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படாவிடில் சினாவுடனான சிங்களவர்களுக்கு உதவும் போட்டியில் இந்தியா படு தோல்வியடைந்து விட்டது என்பது உறுதி செய்யப்படும்.

இந்தியா மீண்டும் சதி செய்யுமா?
பாரதப் போரில் கண்ணன் தான் கையில் ஆயுதமின்றி பாண்டவர்களுடனும் தனது யாதவப் படை கௌரவர்களுடனும் இருப்பதாகக் கூறிக் கொண்டு எல்லோரையும் அழித்தான். இந்தியாவும் அந்த மாதிரியான சதியை பெப்ரவரி மாதம் 27-ம் திகதி தொடங்கி ஜெனீவாவில் நடந்து கொண்டிருக்கும்  மனித உரிமைக்கழகத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்மொழியப்படும் தீர்மானத்திலும் செய்யலாம்.இந்தியா செய்யக் கூடிய சதிகள்:
  • முன்மொழியப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு சாதகமான மாற்றங்களைச் செய்யும் படி அமெரிக்காவை வேண்டலாம். 
  • இந்தியா தனக்கு ஆதரவான நாடுகளை இலங்கைக்கு சாதகமாக வக்களிக்கத் தூண்டலாம்.
ஈழத் தமிழர்களின் சுதந்திரப் போரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற வெறி இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் தூர நோக்குப் பார்வையை மறைத்து விட்டது. சீனாவிடம் தோல்வியடைந்த இந்தியா இனி இலங்கையில் மேற்குலகத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டியை எப்படிக் கையாளப் போகிறது?

    Featured post

    உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

    விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...