Saturday 17 March 2012

ஜெனீவாவில் இந்தியா திரைமறைவுச் சதி: எல்லாம் தட்சணை செய்கிற வேலை

தென் அமெரிக்க நாடுகளில் இருந்து பாக்கிஸ்த்தான் மற்றும் தூரகிழக்கு நாடுகளில் உள்ள மனிதாபிமானமுள்ள பத்திரிகைகள் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஆசிரியத் தலையங்கங்கள் தீட்டிக் கொண்டிருக்க, சனல் - 4 தொலைக்காட்சி அதிக அக்கறை எடுத்து இலங்கையின் போர்க்குற்றங்களை வெளிக்கொண்டுவந்து கொண்டிருக்க அல்ஜசீராத் தொலைக்கட்சி இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியமா என்று கேள்வி எழுப்ப தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பார்ப்பனர்களால் நடத்தப்படும் இந்துப் பத்திரிகையான இலங்கைக்கு எதிரான கட்டுப்பாடுகள் சிங்களத் தேசியவாதத்தைத் தீவிரப்படுத்திவிடும் என்று எச்சரித்து சிங்களவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறது. எல்லாம் தட்சணை செய்கிற வேலை. இந்திய என்.டி.ரிவி தொலைக்காட்சியில் ஜெனீவாவில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானம் தொடர்பான கலந்துரையாடல் வந்த போது அதில் இருவர் இலங்கைக்கு வக்காலத்து வாங்கினர். சுப்பிரமணிய சுவாமி, ஜி. பார்த்தசாரதி ஆகிய இரு பார்ப்பனர்கள் அவர்கள். எல்லாம் தட்சணை செய்கிற வேலை.

என்.டி.ரிவி தொலைக்காட்சியில் 12 வயதுச் சிறுவன் கொல்லப்பட்ட படம் காட்டியபோது அதை சிரித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார் சுப்பிரமணிய சுவாமி. இதைப் பற்றி பிரித்தானியாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த பி ஏ காதர் என்னும் அரசியல் ஆய்வாளர் தனக்கு அதைப்பார்க்கும் போது சுப்பிரமணிய சுவாமியை அறைய வேண்டும் போல் இருந்தது என்றார். எல்லாம் தட்சணை செய்கின்ற வேலை.

துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பேசிய இன்னொரு பார்ப்பனரான சோ என்ற தமிழின விரோதி ராஜபக்சவைப் பாராட்டினார். சுவாமி இன்னும் ஒருபடி மேலே போய் மஹிந்த ராஜபக்சவிற்கு பாரத் ரத்னா பட்டம் வழங்க வேண்டும் என்றார். எல்லாம் தட்சணை செய்கிறவேலை.

தமிழ்நாட்டில் இந்தியா ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படக் கூடாது என்ற குரல் வலுவாகவும் பரவலாகவும் ஒலிப்பதைப் பார்த்தவுடன் இந்திய பாதுகாப்புச் ஆலோசகர் சிவ் சங்கர மேனன் தமிழ்நாடு சென்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க முயல்கிறார். எல்லாம் தட்சணை செய்கின்ற வேலை.

பத்தாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட 1983-ம் இலங்கை இனக்கலவரத்தை அப்போதைய பாரதப் பிரதமர் ஒரு இனக்கொலை என்றார். இந்திய சட்டவாளர் அமைப்பும்(Bar Association of India) அதையே சொன்னது. 2008-2009 இலங்கையும் இந்தியாவும் இணைந்து நடத்திய இன அழிப்புப் போரின் போது மூன்று இலட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அதை இந்தியப் பாராளமன்றத்தில் ஒரு உறுப்பினர் இனக்கொலை எனக் கூறிய போது அது கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி அவர் சொன்ன வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. எல்லாம் தட்சணை செய்கிற வேலை.

ஜெனிவாவில் இருந்து வரும் செய்திகளின்படி இந்தியா திரைமறைவில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் இந்தியாவின் அதிகார மையமான தென்மண்டலத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் தமிழின விரோதிகளாகவும் சிங்கள சார்பானவர்களாகவும் இருப்பதுதான். எல்லாம் தட்சணை செய்கிற வேலை.

ராஜபக்ச! தொடர்ந்து தட்சணையை வழங்கிக் கொண்டிருங்கள். ஷேமமாய் இருபீர். எல்லாவற்றையும் அவாள் பார்த்துக்குவா.....

Friday 16 March 2012

தமிழினத்தின் போராட்டத்தின் முக்கிய அம்சமே புலிகளின் போராட்டம்


வெற்றிகள் என்றும் வெற்றிகளாவதில்லை
உண்மைகள் சிதைக்கப்படும் போது
வெற்றிகள் என்றும் நிலைப்பதில்லை
நீதி உதைக்கப்படும்போது

உண்மையும் நீதியும் கண்களாக
உழைப்பு எங்கள் கைகளாக
விடுதலைக்காக உழைத்தவர் நாம்
உண்மையும் நீதியும் விழுவதில்லை
நாமும் விழவில்லை
என்றும் நிமிர்ந்தே நிற்போம்


எதிரி ஜெனீவாவில் பயந்து நிற்கிறான்
நாம் நிமிர்ந்து நிற்கின்றோம்.

புலிகளின் போராட்டத்தின்
ஓர் அம்சம் தமிழினமல்ல
தமிழினத்தின் போராட்டத்தின்
முக்கிய அம்சமே
புலிகளின் போராட்டம்

புலிகள் பதுங்கலாம்
புலிகள் மௌனிக்கலாம்
புலிகள் ஓய்வதில்லை
நாமும் ஓய்வதில்லை
எம் போராட்டம் தொடரும்

நேரங்கள் நீளலாம்
பாதைகள் தொலைவாகலாம்
உண்மையும் நீதியும் தொலைவதில்லை
எம் போராட்டம் விழவில்லை
நாமும் விழவில்லை
வடிவங்கள் வேறாக
மீண்டும் வீறு கொள்வோம்

Thursday 15 March 2012

சனல் 4 காட்டியது பிரபாகரனின் உடல் அல்ல.

பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 மீண்டும் இலங்கைப் போர்க்குற்றம் பற்றிய ஒரு ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் தலைப்பில் சுமார் ஒரு மணிதியாலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. கொடூரமான காட்சிகள் நிறைந்த நிகழ்ச்சி என்பதால் இது இரவு 10.55இல் ஒளிபரப்பப்பட்டது. இதில் பிரபாகரன் கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் காண்பிக்கப்படலாம் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர். பல வதந்திகளும் அடிபட்டன.

சனல் 4 இன் நிகழ்ச்சியில் பன்னாட்டு மன்னிப்புச் சபையின்  Sam Zarifi, சட்டத்துறைப் பேராசிரியர் WILLIAM SCHABAS, Derrick Pounder (Professor of Forensic Medicine, University of Dundee), முன்னாள் பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட், 2010 வரை ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானச் செயற்பாடுகளுக்கான பிரதிச் செயலர்  David Holmes ஆகியோர் கலந்து கொண்டனர்.


வெளிநாடுகளினதும் ஐக்கிய நாடுகளினதும் மனித உரிமை அமைப்புக்களினதும் வேண்டுகோளிற்கு இணங்க இலங்கை அரசாங்கம் அறிவித்த சமாதான வலயத்துக்குள் தொடர்ந்து கனரக எறிகணைகள் வீசப்பட்டதை சனல் 4 ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியது. தற்காலிக மருத்துவ மனைகள் மீது எறிகணைகள் வீசப்பட்டதையும் சனல் 4 சுட்டிக்காட்டியது. போர் நடந்த இடத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள் விடுத்த மருந்துகளுக்கான வேண்டுகோள்களை இலங்கை அரசு வேண்டுமென்றே தட்டிக் கழித்ததையும் சனல் 4 அம்பலப்படுத்தியது. போர்முனையில் அகப்பட்டிருக்கும் மக்கள் தொகையை இலங்கை அரசு வேண்டுமென்றே  குறைத்துக் கூறியதையும் அதிலும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச போர் முனையில் ஒரு ஐயாயிரம் அல்லது ஆகக் கூடியது பத்தாயிரம் பேர்தான் அகப்பட்டுள்ளனர் என்று கூறியதையும் சனல் 4 காணொளி ஆதாரத்துடன் வெளிப்படுத்தியது. பின்னர் உண்மையில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருந்தனர் என்றும் சனல் 4 கூறியது. 


டேவிட் மில்லிபாண்ட் அறுபது தொன் உணவு மட்டுமே அனுப்பப்பட்டது என்றும் அவை முப்பதினாயிரம் மக்களுக்கு ஒரு சில தினங்கள் மட்டுமே போதும் என்றும் ஆனால் மூன்று இலட்சத்திற்கு மேல்பட்ட மக்களுக்கு 25 நாட்களுக்கு மேல் அறுபது தொன் உணவு மட்டுமே வழ்ங்கப்பட்டது என்றும் தெரிவித்தார். மக்களுக்கு உணவு மறுத்து மருந்து மறுத்து வைத்திருங்தமை போர்க்குற்றம் என்றார் இதில் பன்னாட்டு மன்னிப்புச் சபையின்  Sam Zarifi, 
மேலும் டேவிட் மில்லிபாண்ட் இலங்கை ஆட்சியாளர்கள் பொய்யர்கள் என்றும் கூறினார்.
  போரின்போது இலங்கை அரசு கனரகப் படைக் கலன்கள் எதுவும் பாவிக்கப்படவில்லை என இலங்கைப் படைத்துறைப் பேச்சாளர் உதய நாணயக்கார கூறியது உண்மைக்குப் புறம்பானது என்றும் சனல் 4 சொல்லியது.

இலங்கை அரசு சனல் 4 இன் முந்தைய காணொளிகளை பொய்யானது என்று இலங்கை அரசு கூறியது. இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவினர் சனல் 4 இன் காணொளிகளை ஆய்வு செய்தனர் ஆனால் அவை சனல் 4 இன் காணொளிகள் நம்பகத்தன்மை பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதை சனல் 4 அம்பலப்படுத்தியது.

பாலச்சந்திரன் பிரபாகரன்
தனது ஐந்து மெய்ப்பாது காவலருடன் படையின கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் அவர் கண்முன்னே அவரது மெய்ப்பாது காவலர்கள் கொல்லப்படுவதைப் பார்த்தார் என்கிறது சனல் 4. பின்னர் பாலச்சந்திரன் அவரது கைக்கு எட்டிய தூரத்தில் நின்றவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை Derrick Pounder (Professor of Forensic Medicine, University of Dundee) அவர்கள் உறுதி செய்தார். 

பிரபாகரனின் உடல்
பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும் அவரது உடல் அடங்கிய புகைப்படங்களும் காணொளிப்பதிவுகளும் காட்டப்பட்டன. அவை யாவும் ஏற்கனவே இலங்கை அரச ஊடகங்களில் வெளிவந்தவையே. பிரபாகரன் ஒரு சண்டையில் கொல்லப்படவில்லை. பலமிக்க சுடுகலனால் மிக அண்மையில் வைத்துச் சுட்டுக் கொல்லப் பட்டார் என சனல் 4 முடிபு கூறுகிறது.
இந்தப்படத்தில் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்


இந்த உடலின் நிறம் மற்ற உடல்களுடன் பார்க்கையில் வித்தியாசமானது

இது சவரம் செய்யப்படாத உடல்

இது சவரம் செய்த முகத்துடன் இருக்கும் உடல்

2004இல் அப்படி இருந்தவர் 2009இல் எப்படி இப்படி ஆனார்?

இலங்கை அரசு இதுவரை வெளியிட்ட எந்தப் படமும் பிரபாகரனின் உண்மையான உடலை ஒத்திருக்க வில்லை. பிரபாகரனின் முக்கிய அடையாளங்கள் அவரது நடுவில் பிளவுபட்ட நாடி, இரட்டை நாடி, மேல் பகுதி அகன்று வெளித்தள்ளி நிற்கும் காதுகள். இவற்றை வைத்துப் பார்க்கும் போது இதுவரை வெளிவந்த பிரபாகரனின் இறந்த உடல் என்று சொல்லப்படும் எந்தப் படமும் அவரது உண்மையான தோற்றத்தை ஒத்திருக்கவில்லை. சனல் 4 இன் பிரபாகரனின் இறந்த உடலின் படம் என்று பிரித்தானிய டெய்லி மெயில் ஒரு படத்தை இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது.


சனல் 4 இன் புதிய ஒளிபரப்பு தமிழின விரோதிகளுக்கு இரண்டு ஏமாற்றங்களைக் கொடுத்துள்ளன. 1. மேலும் போர்க்குற்றம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. 2. பிரபாகரன் இறந்தமைக்கான புதிய ஆதாரம் எதையும் சனல் 4 வெளிவிடவில்லை.

பிரபாகரனின் இறப்புத் தொடர்பான சர்ச்சைகள் தொடரும்.


2009இல் இலங்கையில் போர் முடிந்த பின்னர் சில இந்தியப்ப் பார்ப்பன ஆய்வாளர்கள் இனி தமிழர்களின் நிலை பிச்சைக்கார நிலைதான் அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான் என்று எழுதினர். அவர்களுக்கு போர்க்குற்றம் என்ற ஒரு பிடியைக் கொடுத்தது சனல் 4. அந்தப் பிடியை வைத்துக் கொண்டுதான் தமிழ்ர்கள் தங்கள் அடுத்த கட்டத்திற்கு நகரப் போகிறார்கள். அதற்கு தமிழர்களுக்கு உதவி செய்த சனல் 4 இற்கு நன்றிகள்.

Wednesday 14 March 2012

ஜெனீவாத் தீர்மானம்: பூநூல்களின் புரட்டும் கதர் வேட்டியின் பொய்யும்

என்.டி.ரீ.வி தொலைக்காட்சிச் சேவை சுவிஸ் நகர் ஜெனீவாவில் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைக்கழகத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா எப்படிப்பட்ட நிலை எடுக்கப்படவேண்டும் என்பது தொடர்பாக ஒரு கலந்துரையாடல் நடாத்தப்பட்டது. பலரும் ஒரே நேரத்தில் உரையாடியதால் அது ஒரு உண்மையான "கலந்துரையாடல்" ஆகத்தான் இருந்தது. இந்தியப் பிரதமர் பணிமனைத் துணை அமைச்சர் நாராயணசாமி,  மஹிந்த ராஜபக்சவிற்கு பாரத்ரத்னா என்ற பட்டம் கொடுக்க வேண்டும் என்று பரப்புரை செய்யும் பார்ப்பனர் சுப்பிரமணிய சுவாமி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் டி. ராஜா, பன்னாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி, தமிழீழ விடுதலைச் செயற்பாட்டாளர் மீனா கந்தசாமி, பார்ப்பனர் பார்த்தசாரதி மற்றும் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்பட தயாரிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பன்னிரண்டு வயதான பாலச்சந்திரன் பிரபாகரன் சட்டத்திற்குப் புறம்பாகக் கொல்லப்பட்டதை மையப்படுத்திக் கலந்துரையாடல் ஆரம்பமானது. இப்பின்னணியில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்தில் இந்தியாவின் நிலை என்ன என காங்கிரஸ் கதர் வேட்டி அமைச்சர் நாராயணசாமியிடம் வினவப்பட்டது. கொண்டுவரப்படும் தீர்மானம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனவும் அதனால் தன்னால் அதுபற்றி கருத்துத் தெரிவிக்கக் முடியாது எனவும் நாராயணசாமி கூறினார். இந்த ஆண்டின் ஆரமப்பகுதியில் இருந்தே வாஷிங்டனிலும் டில்லியிலும் ஐக்கிய அமெரிக்காவினது இந்தியாவினதும் அதிகாரிகள் மனித உரிமைக் கழக கூட்டத் தொடரில் கொண்டு வரப் படவிருக்கும் தீர்மானம் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன. சென்ற வாரத்திலும் அமெரிக்க அதிகாரிகள் டில்லி சென்று கலந்துரையாடல்கள் நடாத்தினர். தீர்மானம் கொண்டு வருவதை ஒத்தி வைக்க இந்தியத் தரப்பில் பகீரதப் பிரயத்தனம் இலங்கையின் கட்டளைக்கு அமைய இந்தியா மேற் கொண்டது. தீர்மானத்தை ஐக்கிய அமெரிக்கா நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு மட்டுப் படுத்தியது இந்தியாவின் சம்மதம் பெறவே. அல்லாவிடின் தீர்மான முன்மொழிவு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கையை ஒட்டியதாக அமைந்திருக்கும். இப்படி இருக்கையில் மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானம் பற்றி தமக்கு ஒன்றும் தெரியாது என கதர் வேட்டி அமைச்சர் நராயணசாமி பெரும் பொய்யை அவிழ்த்து விட்டார். தமிழ்நாட்டுக் கதர் வேட்டிகள் இனி தமக்கு அரசியல் எதிர்காலமே இல்லை என்பதை நன்கு அறிவர். ஈழத் தமிழர் பிரச்சனையில் தமக்கு அக்கறை இருப்பதுபோல் பாசாங்கு செய்ய

கொல்லப்பட்ட பதின்மூன்று வயதுச் சிறுவனின் உடல் காண்பிக்க்கப்பட்ட போது சிரித்து மகிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணிய சுவாமி இலங்கை அரசால இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களைப் பற்றி கேட்டபோது ராஜீவ் காந்தியின் கொலையை அதற்கு கொண்டு வந்து புரட்டிப் பேசினார். பொதுவுடமைக் கட்சி ராஜா தமிழ்நாட்டில் 100% மக்கள் இலங்கைப் போர்க் குற்றம் விசாரிக்கப்பட வேண்டியது என்று சொல்ல அதை சுப்பிரமணிய சுவாமி வன்மையாக எதிர்த்தார். தமிழ்நாட்டில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி, பார்த்தசாரதி போன்ற தமிழரல்லாதவர்கள் எப்போதும் சிங்களவர்களிற்கு ஆதரவாகவே கூச்சலிடுவர் என்பதை ராஜா மறந்துவிட்டார். மேலும் சுப்பிரமணிய சுவாமி விடுதலைப் புலிகள் இந்தியாவின் எதிரிகள் என்றும் அவர்கள் இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் கொண்டுவந்தவர்கள் என்றும் உ(கு)ரைத்தார். அத்துடன் மணிப்பூர், கஷ்மீர் போன்ற இடங்களில் நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கொண்டுவது புரட்டிப் பேசினார். புலிகள் இந்தியாவிற்கு வந்து தமது முன்னாள் பிரதமரைக் கொன்றதாகக் கூறிய பார்ப்பன சுப்பிரமணிய சுவாமி ராஜிவ் காந்தியின் கொலைவெறிப்படை அமைதிப் படை என்ற பெயரில் செய்த அட்டூழியங்களை மறைத்துவிட்டார்.

மற்றப் பார்ப்பனரான பார்த்தசாரதி அய்யங்கர் விடுதலைப் புலிகள் பொது மக்களை மனிதக் கேடயமகப் பாவித்தனர் என்ற கருத்தை முன்னிலைப்படுத்தினார். அவர் வேறு விதமான தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும் என்றும். இலங்கையை கோபப் படுத்தினால் இந்தியா இலங்கையில் செய்து கொண்டிருக்கும் முதலீடுகளுக்கு ஆபத்து என்று புரட்டினார். அத்துடன் அந்த முதலீடுகள் தமிழர்களுக்கு நலன் புரியக் கொண்டுவந்தவை என்றும் புரட்டிப் பேசினார். மொத்தத்தில் அவர் சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்மானம்தான் ஜெனீவாவில் கொண்டு வரப்படவேண்டும் என்றார். பார்ப்பனப் பார்த்தசாரதி இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த போது விடுதலைப் புலிகள் யாழ் மருத்துவ மனையில் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியதை தான் கண்ணால் கண்டதாகக் கூறினார். இந்திய அமைதிப்படை யாழ் மருத்துவமனை மருத்துவர்களயும் தாதிகளையும் நோயாளிகளையும் கும்பிடக் கும்பிடச் சுட்டுக் கொன்றதை மறைத்து விட்டார்.

பன்னாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி 2006ஆம் ஆண்டு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் நிர்ப்பந்தத்தின் பேரில் அமைக்கப்பட்ட பகவதி ஆணைக்குழுவிற்கு பெரும் முட்டுக்கட்டை போட்டவரே இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவிற்குத் தலைமை தாங்கியதைச் சுட்டிக்காட்டினார்.

இலங்கையும் இந்தியாவும் தமிழர்களுக்கு எதிராக நடாத்திய இறுதிப் போரின்போது பிறந்த 13 நிமிடங்களுக்குள் கொல்லப்பட்ட குழந்தைகள் எத்தனை என்பதை யாரும் கணக்கெடுக்கவும் இல்லை கணக்கில் எடுக்கவும் இல்லை.

Monday 12 March 2012

மொழி பெயர்த்த SMS கவிதைகள்

வாழ்வதற்கு காரணம் உண்டு
அழுவதற்கு காரணம் உண்டு
இறப்பதற்கும் காரணம் உண்டு
உன் புன்னகைக் காரணம்
என்றும் நானாக வேண்டும்.

காதல் வாழ்க்கையைக்
குழப்பும்
காதல் இன்றி
வாழ்க்கையே
இல்லை
குழப்பம் இன்றி
வாழ்க்கை இல்லை

காதல் திருமணத்திலும்
பெற்றோர் பார்க்கும் திருமணத்தைப்
பெண்கள் விரும்புகின்றனர்.
தெரிந்த வடிவேலுவிலும் பார்க்க
தெரியாத சூரியா மேல்
என நினைப்பதால்.

என்றும் தொடங்கும்
எங்கும் தொடங்கும்
என்றும் தொடரும்
என்றும் முடியாது
உண்மைக் காதல்

நேற்று நீ அழகாய் இருந்தாய்
இன்று நீ அழகாயிருக்கிறாய்
நாளை நீ அழகாயிருப்பாய்
என்றும் நீ அழகாகவே இருப்பாய்
உண்மைக் காதலன் கண்களுக்கு

துரோகிகளைக் காதலிப்பவர்களுக்கு
வயோதிபம் வருவதில்லை
இளமையிலேயே இறந்துவிடுவர்.

காதல் என்பது
இதயமும் மனமும்
மோதிக் கொள்வது
உண்மைக்காதல்
இரண்டும் இணங்கும் போது

Sunday 11 March 2012

When I hear your voice I long for your look

Do you feel the feeling of my heart
As I do of yours
Do think of the feeling in my thought
As I do of yours

Do you miss me as I miss you
Do you need me as I need you
Is your dreams filled with me
As mine is filled with yours

Can you see the tear drops in my eyes
Whenever I do not see you.
Can you see the storm in my heart
Whenever you ignore me

If I see your photo I long for your voice
When I hear your voice I long for your look
When you are away from me
I think of nothing but you
When you are near me I forget everything

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...