Monday 24 December 2012

நகைச்சுவை: யேசுநாதர் ஏன் மீண்டும் வரவில்லை?

நாம் எல்லோரும் யேசு நாதரையும் புனித மேரியையும் வெள்ளையர்களாக மனதில் உருவகப் படுத்தியுள்ளோம். நாம் பார்த்த படங்கள் உருருவச் சிலைகள் யாவும் அவர்க்ளை ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்களாகச் சித்தரிக்கின்றன. ஜேசுநாதர் பிறந்த இடமான பெத்தேலெகம் நகர் மத்திய கிழக்கில் இருக்கிறது. அது வட ஆபிரிக்க அல்லது மேற்கசியப் பிரதேசமாகும். யேசுவோ புனித மேரியோ நிச்சயமாக ஐரோப்பியர்கள் அல்லர்.

கடவுள் தமது தூதுவரும் ஒரே ஒரு குமாரனுமான யேசுவை மீண்டும் பூமிக்கு அனுப்புவார் என பலரும் நம்புகிறார்கள். கிபி 1000இல் யேசு மீண்டும் வருவார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் வரவில்லை. கிபி 2000இல் மீண்டும் வருவார் என எதிர்பர்த்தார்கள் ஆனால் வரவில்லை. பாவிகள் உலகில் பெருகிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களை இரட்சிக்க யேசு வரவில்லை.

யேசு ஏன் வரவில்லை? யேசு ஏற்கனவே ஐரோப்பியராகச் சித்தரிக்கபட்டு விட்டார். அவர் உண்மையில் ஆசியர் அல்லது ஆபிரிக்கர். போன தடவை போல் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறக்கச் செய்யாமல் ஒரு நல்ல வசதியா மருத்துவ மனையில் பிறக்கச் செய்வது கடவுளின் எண்ணமாகவும் இருந்தது. அதனால் கடவுள் அடுத்ததாக தனது குமாரனை அமெரிக்காவில் பிறக்கச் செய்ய நினைத்தார். கடவுள் தனது பரிசுத்த ஆவியை அமெரிக்காவிற்கு அனுப்பினார். அந்த ஆவி அமெரிக்கா முழுதவும் ஒரு கன்னியைத் தேடி அலையோ அலை என்று அலைந்தது. ஒருத்தி கூடக் கிடைக்கவில்லை. அதனால் பரிசுத்த ஆவி ஏமாற்றமடைந்து பரலோகம் திரும்பிவிட்டது. அதானால் யேசு மீண்டும் வரவில்லை.

1 comment:

Anonymous said...

:
Osho talks

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...