Thursday 1 November 2012

தனியான ஒரு தீவில் இரு ஆண்களும் ஒரு பெண்ணும்

ஒரு தனியான அழகிய சிறு  தீவில் இரு ஆண்களையும் ஒரு பெண்ணையும் விட்டால் என்ன நடக்கும் என்பதை அறியும் முயற்ச்சி ஒன்று நடந்தது. இதற்காக பல தீவுகள் தெரிந்தெடுக்கப்பட்டு அங்கு வேறு வேறு நாட்டைச் சேர்ந்த ஒரு ஆணையும் இரு பெண்களையும் தனியாக வாழும் படி சொல்லி விட்டு ஒரு மாதம் கழித்து அங்கு சென்று பார்த்தனர். அவர்கள் கண்டவை:

1. இத்தாலியர்கள் இருந்த தீவில் ஒரு ஆண் மற்ற ஆணைக் கொன்று விட்டு பெண்ணுடன் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.

2. பிரெஞ்சு நாட்டவர்கள் இருந்த தீவில் Ménage à trois மூவர் குடித்தன உடன்பாட்டின் படி குடும்பம் நடத்திக் கொண்டிருந்தனர்.

3. பிரித்தானியர்கள் இருந்த தீவில் யாரை யாருக்கு யார் அறிமுகம் செய்வது என்ற தயக்கத்தில் மூவரும் தனியாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

4. கிரேக்கர்கள் இருந்த தீவில் இரு ஆண்களும் ஒன்றாக "குடித்தனம்" நடத்தினார்கள். பெண் அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தாள்.

5. ஜேர்மனியர்கள் தங்களுக்குள் ஒரு கால அட்டவணையைத் தயாரித்து அதன்படி பெண்ணுடன் மாறி மாறி "வாழ்ந்து" கொண்டிருந்தனர்.

6. அரபு நாட்டு ஆண்களில் ஒருவன்மற்றவனுக்குப் பெரும் பணம் கொடுத்து பெண்ணைத் தனதாக்கி "வாழ்ந்து" கொண்டிருந்தான்.

7. அமெரிக்கர்கள் மூவரும் அந்தத் தீவில் என்ன என்ன கனிம வளங்கள் இருக்கின்றன அதை எங்கு எப்படி ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அவ்வப்போது யாரு "மூட்" வருகிறதோ அவர்கள் "அனுபவித்தனர்".

8. இந்தியர்கள் தமது பெற்றோர்கள் வந்து வரதட்சணை மற்றும் சாதி பற்றி பேசி முடிவு செய்ய வேண்டும் என்று காத்திருந்தனர்.

9. இலங்கைத் தமிழன் தனது தங்கையின் திருமணத்திற்கு எப்படி காசு சேர்ப்பது என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.

2 comments:

Anonymous said...

nagachuya irundalum, sindikka vaikakudiyatha irukku

Karunakaran

Riyas said...

hmm Good!!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...