Friday 19 October 2012

தளர்வறியா மனம் தமிழினத்தின் மனம்

ஆபிரிக்காக் கண்டத்தில் ஆதி மனிதனாய்த் தோன்றி
சிந்து நதிக்கரையில் சீரான நாகரீக வளர்ச்சியுற்று
ஆப்கான் முதல் நியூசிலாந்துவரை பரவிப் பெருகி
ஆரியச்சதியால் பொதிகையோடு வேங்கடமும் கடந்தாலும்
தளர்வறியா மனம் தமிழினத்தின் மனம்

வேங்கடம் அம்பாறை ஆயிடைக் குறுகினாலும்
கதிரமலையில் கயவர் குடி கொண்டாலும்
உலகமே எமக்கெதிராய் திரும்பினாலும்
ஆரியமும் சிங்களமும் இணைந்தழித்தாலும்

தளர்வறியா மனம் தமிழினத்தின் மனம்

பொங்கி வந்த கடற்கோளால் அடுத்தடுத்து
அழிவுகள் பல கண்டாலும் செல்வங்கள் இழந்தாலும்
கன்னடமும் தெலுங்கும் துளுவும் மலையாளமும்
பிரிந்து சென்று பகையாளிகளாய் மாறினாலும்

தளர்வறியா மனம் தமிழினத்தின் மனம்

செருப்பாய் இங்கு இருப்பாய் தமிழா என
இந்தியாவும் நோர்வேயும் கூடிக் கூவினாலும்
சிங்களவர்க்குக் கைகொடுது எம் கழுத்தறுத்தாலும்
நெருப்பாய் எழுந்து மீண்டும் போராடும்
தளர்வறியா மனம் தமிழினத்தின் மனம்


எம்மைப் பிரிக்க இங்கு வந்த சிங்களக் கைக்கூலிகள்
பிரித்து  வைத்து பிரச்சனைகள் கொடுத்தாலும்

ஒற்றுமையாய் செய்வோம் ஓரிடத்தில் செய்வோம்
எனக் கூவிக் கொண்டே துரோகங்கள் செய்தாலும்
தளர்வறியா மனம் தமிழினத்தின் மனம்


எப்படி அழித்தாலும் எப்படிக் கெடுத்தாலும்
தளர்வறியா மனம் எம் சொத்தாக இருக்கும் வரை
தொடர்ந்து போராடுவோம் விழ விழ எழுவோம்
நாளை நமதாகும் நானிலம் நம்மைப் போற்றும்

3 comments:

Unknown said...

Tamilan entru sollada thalai nemirnthu nillada

Anonymous said...

அருமை. விழ விழ எழுவான் தமிழன். நன்றி

Anonymous said...

Open the gate for " Information war"

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...