Thursday 27 September 2012

கலையும் நாழிகையில் கலையாவண்ணமாக


என்னருகில் நீ இருந்தால்
என் நினைவில் நீ இருந்தால்
என் கனவில் நீ இருந்தால்
கற்பனைகள் சிற்கடிக்கும்
கவி வரிகள் வழிந்தோடும்

பார்வை மேகங்களின் மோதல்
இதயத்தில் இடியும் மின்னலும்
காதல்

அந்திச் சாரலில் கைகோர்த்து
நடக்கும் நாள் என்னாளோ
காதோரக் குழல் காற்றோடும
ஆடும் அழகு பார்க்கும் நாள் என்னாளோ
கலையும் நாழிகையில்
கலையாவண்ணமாக
உன்னோடு நானாக
இக் கவி கலையாக் கலையாக
நெஞ்சில் அழகுச் சிலையாகப்
 படிந்தது உன் அழகு முகம்



உடலெங்கும் பெரும் கிளர்ச்சி செய்வதால்
உணர்விலே கொடும் தீப்பற்ற வைத்ததால்
இதயத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியதால்
உன் முத்தமும் அரபு வசந்தம் போலடி

2 comments:

தமிழ் காமெடி உலகம் said...

மிக அருமையான கவிதை..பகிர்வுக்கு நன்றி...

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Easy (EZ) Editorial Calendar said...

மிக அருமையான கவிதை வரிகள்.....உங்கள் பகிர்வுக்கு நன்றி.....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...