Saturday 15 September 2012

எமது நிலம் எமக்கு வேண்டும்


யாழிசைக்குப் பரிசாகி மீனிசைக்கு வசமாகி
தமிழிசைக்குக் களமாகி மழலையிசை தேனாகி
புள்ளிசை காதினிக்க இல்லற நெறியிசைக்க
நாம் வாழ்ந்த எமது நிலம் எமக்கு வேண்டும்


ஆழ்கடல் முத்தெடுத்து சூழ்கடல் உப்பெடுத்து
மீன் வளச் சொத்தெடுத்து பாய்மரக் கப்பலெடுத்து
திரைகடல் கடந்து சென்று செல்வஞ் சேர்த்தெடுத்து

நாம் வாழ்ந்த எமது நிலம் எமக்கு வேண்டும்

கால்நடைகள் உறவாக களனியது தாயாக
மழைத் துளிகள் பரிசாக வியர்வைத்துளிகள் வித்தாக
நீர்வளங்கள் தெய்வங்களாக வளர்த்த பயிர் விருந்தாக
நாம் வாழ்ந்த எமது நிலம் எமக்கு வேண்டும்

அற வழி பொருளீட்டி அன்பு வழி ஆனந்தம் கூட்டி
மழலையர்க்கு மரபு காட்டி பண்பார்ந்த வாழ்வு காட்டி
நற்றமிழ் மொழி பேசி நானிலத்திற்கு வழிகாட்டி

நாம் வாழ்ந்த எமது நிலம் எமக்கு வேண்டும்

கதிரது நாளை உதிக்க கீரி மலையோடு திருமலை
எரிமலையாய் வெடிக்க விடுதலைத் தீ எரிய
படுவான்கரையும் எழுவான் கரையாய் மாற
ஈழ நிலமெங்கும் எதிரி விழுவான் நிரையாக - அன்று
நாம் வாழ்ந்த எமது நிலம் எமக்கே ஆகும்

2 comments:

Anonymous said...

அருமை. நிச்சயாமாய் எமது நிலம் எமக்கு வேண்டும். சத்தியமாய் நாம் வாழ்ந்த நிலம் எமக்கே ஆகும். நம்பிக்கையுடன் வாழ்கின்றோம்.

Kumaran said...

தமிழன் வாழ்ந்த நிலம், ஆண்ட நிலம் ஈழம். இதில் தமிழன் மீண்டும் வாழவேண்டும், ஆளவேண்டும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...