Thursday 23 August 2012

இந்தியாவில் தொடரும் மெகா ஊழல்கள்

ஊழல் பெருஞ்சாளிகளின் குகையாகிவிட்டது இந்திய அரசியல். ஊழல் புரிவதில் இந்தியாவில் அரசியல்வாதிகள் சாதனைமேல் சாதனை புரிந்து வருகின்றனர். எந்த ஒரு வல்லரசு நாட்டின் வரலாற்றிலும் இந்த அளவு ஊழல்கள் நடந்திருக்கவில்லை. சேலை அணிந்த முசோலினியின் கையில் நாடு இருந்தால் வேறு என்ன நடக்கும்?
ஊழல் நாடுகளில் இந்தியா

மாமூலாகிவிட்ட மாமூல்
இந்தியாவில் எதுவும் நடக்க வேண்டுமென்றால் கையூட்டு(மாமூல்) கொடுத்தால்தான் நடக்கும். இது இந்திய வாழ்க்கை முறையின் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்டது. Transparency International தயாரித்த உலக ஊழல் நாடுகள் பட்டியலில் ஊழலற்ற நாடாக நியூசிலாந்து முதலாம் இடத்தில் இருக்கிறது. மற்ற ஊழலற்ற நாடுகளான டென்மார்க், ஃபின்லாந்து, சுவீடன், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முறையே இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் இடங்களில் இருக்கின்றன. இந்தியத் தாலி அறுத்த இத்தாலி மாஃபியாவின் கையில் நாடு இருந்தால் வேறு என்ன நடக்கும்!

வளரும் ஊழல்கள்
2010-ம் ஆண்டு 2G அலைக்கற்றை ஊழல், பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி ஆகியன உலகின் மிகப்பெரிய ஊழல்களாக அறிவிக்கப்பட்டன. 2011இல்
Uttar Pradesh NRHM scam -   INR10,000 crore      (US$1.81 billion)
ISRO's S-band scam  -           INR200,000 crore       (US$36.2 billion)
NTRO scam -                            INR800 crore        (US$144.8 million) ஆகியவை பெரும் ஊழல்கள். இது தவிரப் பல ஊழல்கள் 2010இல் நடந்தன. 2012இல் இதுவரை நடந்த ஊழல்கள்:
Andhra Pradesh land scam - ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,INR100,000 crore (US$18.1 billion)
Forex derivates scam - ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,INR32,000 crore (US$5.79 billion)
Service Tax and Central Excise Duty fraud - INR19,159 crore (US$3.47 billion)
Gujarat PSU financial irregularities - .................INR17,000 crore (US$3.08 billion)
Maharashtra stamp duty scam - ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,INR640 crore (US$115.84 million)
MHADA repair scam - .............................................INR100 crore (US$18.1 million)
Highway scam - ..........................................................INR70 crore (US$12.67 million)
Flying Club fraud - ...................................................INR190 crore (US$34.39 million)
Jammu and Kashmir Cricket Association scam .......INR50 crore (US$9.05 million)
Punjab paddy scam - .................................................INR18 crore (US$3.26 million)
Uttar Pradesh stamp duty scam - .......................INR1,200 crore (US$217.2 million)
Uttar Pradesh horticulture scam -............................. INR70 crore (US$12.67 million)
Uttar Pradesh palm tree plantation scam - ..............INR55 crore (US$9.96 million)
Uttar Pradesh seed scam -..........................................INR50 crore (US$9.05 million)
Patiala land scam - ...................................................INR250 crore (US$45.25 million)
Tax refund scam - ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,INR3 crore (US$543,000) million

நிலக்கரி ஊழல் - காங்கிரசு ஆட்சி இந்தியாவின் கரிகாலம்
2005-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்க உரிமைகளை ஏலம் விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு இந்திய அரசு வழங்கியதில் ஒரு இலட்சத்து எண்பத்தாறாயிரம் கோடி ரூபாய்(Rs1,860,000,000,000) இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரச கணக்காய்வாளரும் கட்டுப்பாடாளாரும்(Controller & Auditor General) சமர்ப்பித்த அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த ஊழலில் பிரதம மந்திரி மன்மோகன் சிங் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதாக இந்திய எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. 2005இலும் 2006இலும் இந்திய நிலகரித் துறை மன்மோகன் சிங்கின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. மன் மோகன் சிங் பதவி விலகும் வரை பாராளமன்றத்தை கூட விடாமல் தடுப்போம் என பிஜேபி எனப்படும் பாரதிய மக்கள் கட்சி கூறுகிறது. இதற்குப் பதில் கூறும் புரிந்த காங்கிரசுக் கட்சியின் அரசு நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் போட்டு விற்றிருந்தால் இந்தியாவில் நிலக்கரி எரிபொருள் விலை அதிகரித்திருக்கும் என்பதால் நிலக்கரியைப் பாவித்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு (முக்கியமாக சீமெந்து)அவை விற்கப்பட்டன என்கின்றது. ஏலத்தின் மூலம் விற்பதை பிஜேபியின் ஆட்சியில் இருந்த மாநில அரசுகளும் எதிர்த்தன என்கிறது காங்கிரசு அரசு. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு குறுத்து மத்திய தலைமை கணக்குத் தணிக்கைக் குழு சமர்ப்பித்த அறிக்கை மீது விவாதிக்கத் தயார் என்று காங்கிரசு அரசு கூறியுள்ளது. 23-ம் திகதி இந்தியப் பாராளமன்றத்தின் இருஅவைகளும் எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பங்களால் ஒத்தி வைக்கப்பட்டன. காங்கிரசு என்னும் கட்சி ஆட்சியில் இருக்கும் வரை இந்தியாவிற்கு விமோசனமில்லை. தமிழினக் கொலைக்கு துணைபோனவர்கள் இந்தியாவை ஆள்வது இந்தியாவின் கரிகாலமே!

Coalgate
இந்தியப் பாராளமன்றம் தொடர்ந்து மூன்று தடவைகள் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளும் காங்கிரசு கட்சியின் தலைவி(தி) சோனியா காந்தி தனது கட்சிப் பாராளமன்ற உறுப்பினர்களுக்கு தற்காப்பை விடத் தாக்குதல் மேலானது என்று அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் எந்தவிதமான "தாக்குதல்" நடாத்த தன் கட்சியினருக்கு உத்தரவிடுகிறார் என்று தெரியவில்லை. காந்தியின் பெயரைத் திருடியவர்கள் "இம்சையை" ஆதரிக்கிறார்கள்.கோபாலபுரத்தில் இருந்து ஒருவர் ஏன் எனது கட்சியினருக்கு நிலக்கரித் துறை மந்திரிப்பதவி எடுக்காம்ல் விட்டேன் என்று தலையில் அடித்துக் கொள்கிறார் போல் இருக்கிறது.

ஊழலை ஒழிக்கிறேன் பேர்வழி என்று வந்த அன்ன ஹசாரே கும்பல் பிரதம மந்திரியின் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறதாம். அவனவன் அரபு வசந்தம் அது இது என்று ஊழல் ஆட்சியாளர்களை விரட்டும் போது இந்திய இளைஞர்கள் சினிமா மற்றும் கிரிக்கெட் மோகத்தில் ஆழந்து கொண்டு யார் காலில் விழுந்து வேலை தேடுவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

2 comments:

கும்மாச்சி said...

நல்ல பதிவு, உண்மையை எழுதி இருக்கிறீர்கள், நம்ம நாட்டுல புரட்சி பற்றி சிந்திப்பதற்கு இளைஞர்களுக்கு நேரம் ஏது?

Easy (EZ) Editorial Calendar said...

எனக்கு என்ன சந்தேம்ன யாரு அந்த 2 லச்சம் ஊழல் பண்ணினது

நல்ல விமர்சனம்.சினிமா பார்ப்பது போல இருந்தது

நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...