Friday 27 July 2012

கலையும் நாழிகையில் கலையாவண்ணம்

உன் நினைவிலாவது
நான் இருக்க வேண்டும்
என்பதே என் நினைவு

என் கனவிலாவது
உன்னைக் காணவேண்டும்
என்பதே என் கனவு

இந்தப் பிறவியிலாவது
உன்னுடன் வாழவே
நான் எடுத்தது இப்பிறவி

உன் ஓர விழிப்பார்வை
சொல்லும் மொழியறியாமல்
தவிக்கும் என் இதயம்

அந்திச் சாரலில் கைகோர்த்து
 உடல்கள் இதமாய் உரச
நடக்கும் நாள் என்னாளோ

காதோரக் குழலாடும் ஆடும்
அழகு பார்க்கும்
நாள் என்னாளோ

கலையும் நாழிகையில்
கலையாவண்ணம்
இதமாய் நினைவுகள்

 கலையாக் கலையாக
நெஞ்சில் அழகுச் சிலையாகப்
படிந்தது உன் அழகு முகம்

பஞ்சணையில் நெஞ்சிணைக்க
நெருங்கியணைக்க
மிஞ்சும் சுகம் கோடி

1 comment:

Anonymous said...

Very nice....

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...