Tuesday 10 July 2012

நகைச்சுவை: சொர்க்கத்திற்கு அகதிகளை அனுப்பிய ராஜபக்ச

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ம் திகதி தன் மீது போர்க்குற்றம் சுமத்தப் பட்டு பிடி ஆணை பன்னாட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது என்ற செய்தி கேட்டவுடன் மஹிந்த ராஜபக்ச மாரடைப்பால் இறந்தார். அவர் சொர்க்கத்திற்குச் சென்று அங்கு கதவைத் தட்டிய போது அவருக்கு அங்கு காவலாளியால் அங்கு இடமில்லை என்று சொல்லப்பட்டது. அவரால் நியமிக்கப்பட இலங்கையின் உச்ச நீதிமன்ற நீதிபதியின் சிபாரிசுக் கடிதத்தை மஹிந்த காட்டினார். அக்கடிதத்தை வாங்கி கிழித்து வீசிவிட்டு உடனடியாக நரகத்துக்குப் போகும்படி பணிக்கும் படி சொர்க்கத்தின் காவலாளியின் கைத் தொலைபேசிக்கு கௌதம புத்தரிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. ராஜபக்ச நரகத்திற்கு விரட்டப்பட்டார்.

நரகத்தில் ராஜபக்சவை சோனியா காந்தி, கருணாநிதி, சோ, இந்து ராம், சுப்பிரமணிய சுவாமி, சிவ் சங்கர மேனன், எம் கே நாராயணன் போன்ற அவரது சகாக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அங்கு போனபின்னர்தான் ராஜபக்ச தனது பயணப்பையை சொர்க்கத்தில் மறந்து போய் விட்டுவிட்டு வந்தது நினைவிற்கு வந்தது. தனது பயணப்பையை மறந்து விட்டதை நரகத்து அதிகாரிகளிடம் சொன்னார் ராஜபக்ச. உடனேயே நரகத்து அதிகாரிகள் அங்கிருந்து இருவரை சொர்க்கத்திற்கு சென்று ராஜபக்சவின் பயணப்பையை எடுத்து வரும்படி அனுப்பினார்கள்.

சொர்க்கத்திற்கு ராஜபக்சவின் பயணப்பையை எடுக்கச் சென்ற இருவரும் அங்கு கதவு பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தங்கள் கைப்பேசி மூலம் நரகத்து அதிகாரிகளைத் தொடர்பு கொண்டனர். சுவர் வழியாக ஏறி உள்ளே குதித்து பயணப்பையை எடுத்து வரும்படி கோபத்துடன் உத்தரவிடப்பட்டது. பயணப்பை எடுக்கச் சென்ற இருவரும் சுவர்வழியாக ஏறி உள்ளே குதித்தனர். அவர்களைக் கண்ட கௌதம புத்தர் "சற்று முன்னர் தான் ராஜபக்சவை நரகத்திற்கு அனுப்பினேன். அதற்குள் அங்கிருந்து அகதிகள் இங்கு வரத் தொடங்கிவிட்டனர். போன உடனேயே தனது அடக்கு முறையை அங்கு ஆரம்பித்து விட்டான்." என்றார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...