Wednesday 11 July 2012

இந்தியாவிடம் கடும்தொனியில் நடந்து கொண்ட இலங்கை

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் கொழும்பு செல்கிறார் என்றவுடன் இந்தியாவின் வால் பிடிப் பத்திரிகைகள் இந்தியா இலங்கை இனப்பிரச்சனைக்கு  தீர்வு காண்பது தொடர்ப்பாக காட்டிவரும் அசமந்தப் போக்கிற்கு தனது அதிருப்தியை கடும் தொனியில் தெரிவிக்கப் போகிறது என்று ஊளையிட்டன. ஆனால் உண்மையில் நடந்தது வேறு.


சிவ் சங்கர மேனன் வழமை போல் இலங்கையின் ஒரு கைக்கூலி போல்தான் கொழும்பில் பேச்சு வார்த்தை நடாத்தினார். ஆனால் மஹிந்த ராஜப்க்சவோ இலங்கையின் அனைத்துக் கட்சிகளும் ஒத்துக் கொண்டால் மாத்திரமே இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என்று மேனனின் முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டார் என கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வே இல்லை என்பது அதன் பொருளாகும். ஏனெனில் ஜாதிக ஹெல உருமய போன்ற சிங்கள் பௌத்த பேரினவாதக் கட்சிகள் இந்திய அரசு தமிழர்களை 25 ஆண்டுகளாக ஏமாற்றும் கிலுகிலுப்பையான 13வது திருத்தத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கை இனப் பிரச்சனை தொடர்பாக ஏதாவது காலவரையறையை மேனன் இலங்கைக்கு வழங்கினாரா என்ற கேள்விக்கு பதிலளித்த மேனன் அப்படி இலங்கையை நிர்ப்பந்திப்பது சரியான முறையல்ல என்றார். அது மட்டுமல்ல ராஜ்பக்ச சகோதரர்கள் தமது எந்த ஒரு நடவடிக்கைக்கும் எந்த ஒரு கால வரையறையையும் தெரிவிக்கவில்லை. அத்துடன் அவர்கள் எந்த ஒரு உறுதி மொழியையும் மேனனிற்கு வழங்கவில்லை.


சிவ் சங்கர் மேனனும் அவரது சகாக்களும் ஏற்கனவே இந்திய எதிர்க்கட்சியை சேர்ந்த சுஸ்மா சுவராஜை இலங்கைக்கு அனுப்பி 2014 நடக்க விருக்கும் பாராளமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தாலும் இந்தியா தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறைக்கு உதவி செய்யும் என்பதை உறுதிப்படுத்தினர்.


பாலக்காட்டு மலையாளி சிவ் சங்கர மேனனின் கையாலாகாத் தனத்தை ஒரு இந்திய ஊடகம் இப்படி நாகரீகமாகச் சுட்டிக் காட்டுகிறது:


  • India, it appears, adopted the role of the big brother rather than big bully during national security advisor (NSA) Shivshankar Menon’s recent visit to Sri Lanka to discuss the reconciliation process involving Sri Lankan Tamils.
  • While it was widely expected that there would be some tough talking by the NSA during the visit with regard to the reconciliation process, it’s learnt that the Indian approach was guarded. Yet, Mr Menon did convey to the Sri Lankan leadership, including President Mahinda Rajapakse, New Delhi’s “concern” over the “slow progress” in devolution of powers to the Sri Lankan Tamils which would lead to their permanent reconciliation.


இந்தியாவின் சில்லறைக் கைக்கூலியாகக் கருதப்படும் சிவ் சங்கர் மேனன் இனி வரும் காலங்களில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பன்னாட்டு அரங்குகளில் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக பல ஆலோசனைகளையும் வழங்கியுள்ளாராம். ஆனால் இலங்கை ஆட்சியாளர்களான ராஜபக்ச சகோதரர்கள் தமக்குப் பின்னால் மக்கள் இருக்கும்வரை தம்மை எந்த பன்னாட்டு அமைப்புக்களாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று கருதுகின்றனர். வரவிருக்கும் மாகாணசபைத் தேர்தல்களை அதற்கான களமாகப் பயன்படுத்தவிருக்கின்றனர்.


மஹிந்த ராஜபக்ச தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அதிகரித்து வரும் செயற்பாடுக்களை உடன் நிறுத்தும் படி மேனனிடம் கட்டளையிட்டதாகவும் கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத உறுதி செய்யும் முகமாக மேனன் இந்தியா திரும்பிய சில நாட்களுள் இந்திய மத்திய அரசிடம் இருந்து தமிழினச் செயற்ப்பாட்டாளர்களை அடக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கை இப்படி எல்லாம் நடந்து கொண்டும் இலங்கைப் படையினருக்கு இந்தியா தொடர்ந்து பயிற்ச்சி அளித்து வருகிறது. அது மட்டுமல்ல இலங்கைக்கு நிதி உதவி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் பெறுகிறது. இலங்கையில் தமிழர் போராட்டம் மீள் எழுச்சி பெறாமல் இருக்க இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கிக் கொண்டே இருக்கும். இந்திய விமானப் படையினருக்கு தாம்பரத்தில் பயிற்ச்சி வழங்கியமையை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போட்டி போட்டுக் கொண்டே எதிர்த்தனர். ஆனால் இலங்கையில் தமிழின அழிப்புப் போர் 2008-09 காலப் பகுதியில் நடந்த போது இலங்கைப் போர் விமானங்கள் எரிபொருள் நிரப்பவும் பொறியியல் சேவைகள் செய்யவும் தாம்பரம் விமான நிலையம் பயன்படுத்தப் பட்டது. அப்போது இந்த அரசியல்வாதிகள் எங்கிருந்தனர்?

2 comments:

Anonymous said...

It is rather regretting to note the role that India okayes in our case.
Yet Tamil people both living in Sri Lanka should think cleaqrly the steps that they should take in their activities in regrd to the country and should see whether their action would give an adverse effect in our struggle.

Anonymous said...

நாய் வாலை ஒரு போதும் நிமிர்த்த மு டியாது என்பது தெரிந்த விடயம். சிங்களவனுக்கு கால் நக்கும் அரசுகள் இந்திய அரசியலில் இருக்கும் வரை கொலைவெறியர் எதற்கும் அஞ்சமாட்டார்கள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...