Wednesday 16 May 2012

அம்பலமாகும் இந்தியாவின் சதிகள்

இலங்கையில் இந்தியா செய்த சதிகளின் ஒரு பகுதியை இலங்கை அதிபர் மஹிந்த ராஜ்பக்சவின் செயலாளார் லலித் வீரதுங்க கோத்தபாய ராஜபக்ச எழுதிய கோத்தாவின் போர் என்னும் நூல் வெளியீட்டின் போது அம்பலப்படுத்தினார். கோத்தாவின் போர் கறை படிந்த போர் என்பதனால் பல நாடுகளின் கொழும்பிற்கான தூதுவர்கள் இந்த நூல் வெளியீட்டு விழாவைப் புறக்கணித்தனர். தமிழர்கள் போர்க்குற்றம் இழைக்கப்பட்டதாக நம்பும் போரிற்கு  பேருதவி புரிந்த இந்தியாவின் தூதுவர் இந்த விழாவில் பங்கு பற்றியிருந்தார். பாவம் அவர் முன்னிலையிலேயே இந்தியாவை ஒரு வாங்கு வாங்கி விட்டார் லலித் வீரதுங்க.

இந்தியா பயங்கரவாதத்திற்கு உதவிய நாடு
The Indian intelligence agencies had a hand in planning and executing terrorist strikes in Colombo in the mid-eighties. எண்பதுகளின் நடுப்பகுதிகளில் கொழும்பில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிடுவதிலும் நிறைவேற்றுவதிலும் இந்திய உளவு முகவர்களின் கைக்கள் இருந்தன என்று கோத்தாவின் போர் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை லலித் வீரதுங்க சுட்டிக் காட்டினார். ஒரு நாட்டை இன்னொரு நாடு பயங்கரவாதத்திற்கு உதவிய நாடு என்று சொல்வது ஒன்றும் சாதாரணமானதல்ல. 1987இல் ராஜிவ் காந்திக்கு தோளில் ஒரு போடு போட்டார்கள் சிங்களவர்கள். 2012இல் இந்தியாவின் உச்சந்தலையில் ஒரு போடு போட்டார் லலித் வீரதுங்க.

பலவற்றை திருத்துக் கூறவும் செய்தார் லலித்.
2008இற்குப் பின்னர் இந்தியா இலங்கையில் தமிழர்கள் போராட்டத்தை ஒழித்துக் கட்ட எல்ல உதவிகளையும் இந்தியா இலங்கைக்கு வழங்கியது. அதுபற்றி லலித் வீரதுங்க அம்பலப் படுத்தவில்லை. எண்பதுகளின் நடுப்பகுதியில் இந்தியா செய்த சதிகள் இப்போது அம்பலப்படுத்தப்பட்டன. 2008இலும் 2009இலும் செய்த சதிகள் வெளிவர இன்னும் சில காலம் எடுக்கலாம்.

இந்தியா என்றும் தமிழர்களின் எதிரியே
விடுதலைப் புலிகளை ஆரம்பத்தில் இருந்தே ஒழித்துக் கட்ட இந்தியா திட்டமிட்டிருந்தது. ராஜிவ் கொலைக்குப் பின்னர்தான் இந்தியா தமிழர்களுக்கு எதிராக திரும்பியது என்பது உண்மைக்குப் புறம்பானது. ராஜிவ் கொலைக்கு முன்னரே தமிழர்கள் போராட்டம் வலுவடைவதைத் தடுக்க இந்தியாவே தமிழர்கள் மத்தியில் பல போராட்டக் குழுக்களை உருவாக்கியது. அத்துடன் அவர்களிடை மோதல்களையும் உருவாக்கியது. ஒரு கட்டத்தில் இந்தியா டெலோ இயக்கத்துடன் இணைந்து விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டவும் திட்டமிட்டிருந்தது. விடுதலைப்புலிகள் விழித்துக் கொண்டனர். தமிழர்கள் போராட்டம் வலுவடைவதை ஒரு நாளும் இந்தியா அனுமதித்தில்லை. பல கட்டங்களில் தமிழ் போராட்டக் குழுக்களின் படைக் கலன்களை பறிமுதல் செய்ததுமுண்டு. விடுதலைப் புலிகள் கையில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கிடைக்காமல் இருப்பதை இந்தியா உறுதி செய்து கொண்டது.

யாழ்ப்பாணத்திலும் இந்தியாவின் சதி அம்பலமானது.
கொழும்பில் லலித் வீரதுங்க இந்தியாவின் சதிகளில் சிலவற்றை அம்பலமாக்க யாழ்ப்பாணத்திலும் இந்தியாவின் சதி அம்பலமாக்கப்பட்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சனைக்கு "சர்வரோக நிவாரணி" என்று இந்தியா கூறும் இலங்கை அரசியல் அமைப்பிற்கான 13வது திருத்தம் ஒரு அதிகாரமற்ற நிர்வாக அலகை மட்டுமே உருவாக்குகியது என்று யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் 13வது திருத்தத்தில் உள்ள வாசகங்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து விளக்கியுள்ளார். அது மட்டுமல்ல அவர் 13வது திருத்தம் வரும் ஆனால் வராது என்றும் நகைச்சுவையாகக் கூறியுள்ளார். இந்தப் பதின்முன்றாவது திருத்தத்தை இந்தியா 25 ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறது. 13வது திருத்தம் அமூலாக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்பதை யார் அம்பலமாக்குவார்களோ? இந்தியாவின் நிலைப்பாடானது வடக்கில் கிழக்கில் வாழும் தமிழர்கள் மலையகத்தில் வாழும் தமிழர்கள் போல அடக்கப்பட வேண்டும் என்று இந்தியா நினைப்பதை யார் அம்பலப்படுத்துவது?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...