Sunday 29 April 2012

போர்க்குற்றம்: விசாரிக்காத விசாரணைக் குழுக்கள்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரின் போது நிகழ்ந்த அத்துமீறல்கள் பற்றி ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவும் இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவும் விசாரித்தன.  இதில் ஐக்கிய நாடுகள் சபையின் ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவை இலங்கைக்குள் இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. இதன் விசாரணையையும் அறிக்கையையும் இலங்கை அரசு கடுமையாக எதிர்த்தது. இந்த ஆணைக்குழு அமைப்பதையும் விசாரணை அறிக்கையை வெளிவிடுவதையும்  ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கும் வில்லங்கம் பிடித்த ஒரு வில்லன் மூலமாக இழுத்தடிப்பதில் ஒரு தமிழின விரோத நாடு வெற்றிகண்டது.

இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக் குழு ஒரு கண்துடைப்பு அறிக்கையை வெளிவிட்டது. இப்போது அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற மாட்டேன் என்றும் ஆணைக்குழு தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீறிச் செயற்பட்டது என்றும் இலங்கை அரசு அடம் பிடிக்கிறது.

ஐநா மனித உரிமைக்கழகம்
2009இல் இலங்கை அரசுக்கு எதிராக ஒரு கண்டனத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் கொண்டுவந்தபோது அதை இந்தியா இலங்கைக்கு பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக இந்தியா மாற்றி இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் படி இலங்கை தனது நாட்டின் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும் என்று சதி செய்தது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை தொடர்பான கதை வரும்போதெல்லாம் இந்திய 13வது திருத்தம் என்னும் கிலுகிலுப்பையை கிலுக்க மறப்பதில்லை. அத்தீர்மானம் நிறைவேற்றி மூன்று ஆண்டுகளாகியும் 13வது திருத்தம் மேற்கொண்டு 25 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது, இலங்கையில் பல்லாயிரம் மக்களைக் கொன்றும் ஆயிரக்கணக்கான பெண்களின் மானத்தைப் பறித்தும் பல இலட்சக் கணக்கனவர்களை வீடற்றவர்களாக்கியும் உருவாக்கப்பட்ட 13வது திருத்தம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்தத் திருத்தம் நிறைவேற்றப்படும் போது இதை நிறைவேற்றத்தேவையில்லை என இந்திய அதிகாரிகள் இலங்கை அரசுக்குத் தெரிவித்திருந்தனர் என்று கொழ்ம்பில் பரவிய வதந்தி இப்போது உண்மையாகிவிட்டது.

இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பான செய்மதிப் பதிவுகள் இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இரு நாடுகளும் அவற்றை இதுவரை வெளிவிடவில்லை. இலங்கைப் படைகள் போரின் போது கொத்தணிக் குண்டுகள் பாவித்தன என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உண்டு. அதனால் காயமடைந்தவர்களின்  சாட்சியங்கள் உண்டு. கடந்தவாரம் தமிழர்களுக்கு எதிரான போர் உக்கிரமாக நடந்த இடமான புதுக்குடியிருப்பில் வெடிக்காத் கொத்தணிக் குண்டுகள் ஐக்கிய நாடுகள் சபையின் கண்ணி வெடி அகற்றும் பிரிவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது அது கொத்தணிக் குண்டு என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இலங்கைப் போரில் தமிழர்களுக்கு எதிராக தடை செய்யப் பட்ட குண்டுகள் பாவிக்கப் பட்டது என்பதை ஐநா நிபுணர்குழுவோ இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவோ தமது அறிக்கையில் தெரிவிக்க்கவில்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னர் கொத்தணிக் குண்டுகளால் காயமடைந்தவர்கள் சாட்சியமளித்தனர். இந்த இரு விசாரணைக் குழுக்களாலும் இலங்கைப் போர் தொடர்பாக சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது இங்கு உறுதியாகிறது. இன்னும் பல தகவல்கள் மறைந்திருக்கின்றன. இலங்கைக்கு தடைசெய்யப்பட்ட குண்டுகளைக் கொடுத்தவர்கள் யார்?

கொத்தணிக் குண்டுகள் பற்றி விக்கிபீடியா:
A cluster munition is a form of air-dropped or ground-launched explosive weapon that releases or ejects smaller sub-munitions. Commonly, this is a cluster bomb that ejects explosive bomblets that are designed to kill enemy personnel and destroy vehicles. Other cluster munitions are designed to destroy runways, electric power transmission lines, disperse chemical or biological weapons, or to scatter land mines. Some submunition-based weapons can disperse non-munitions, such as leaflets.

Because cluster bombs release many small bomblets over a wide area they pose risks to civilians both during attacks and afterwards. During attacks the weapons are prone to indiscriminate effects, especially in populated areas. Unexploded bomblets can kill or maim civilians long after a conflict has ended, and are costly to locate and remove.

Cluster munitions are prohibited for those nations that ratify the Convention on Cluster Munitions, adopted in Dublin, Ireland in May 2008. The Convention entered into force and became binding international law upon ratifying states on 1 August 2010, six months after being ratified by 30 states;[1] as of February 2012, a total of 111 states had signed the Convention and 68 of those have ratified it

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...