Monday 20 February 2012

விஞ்ஞானிகள்: உபவாசம் ஆரோக்கியத்திற்கு நல்லது

பல்டிமோரில் உள்ள ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் neuro science பிரிவிவினர் பேராசிரியர் மார்க் வற்சன் தலைமயின் நடாத்திய ஆய்வுகளின் படி ஒன்று விட்டு ஒருநாள் உணவருந்தாமல் பட்டினி இருந்தால் உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகள் கிட்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வின்போது சில எலிகளை இரு குழுக்களாகப் பிரித்து ஒரு குழுவில் தினசரி உணவும் மறு குழுவில் உணவு ஒன்றுவிட்ட ஒரு நாளும் வழங்கப்பட்டது. இரு குழுவிலும் உள்ள எலிகளின் சமமான அளவு கலோரிப் பெறுமானமுள்ள உணவு வழங்கப்பட்டது.

இரு குழுக்களையும் சேர்ந்த எலிகளின் மூளைச் செயற்பாட்டையும் ஆரோக்கியத்தையும் பின்னர் பரிசோத்தித்துப் பார்த்து எடுத்த முடிவுகள்:
  • பட்டினி இருந்த எலிகளின் மூளைகள் சக்தி மிகுந்தனவாகக் காணப்பட்டன.
  • பட்டினி இருந்த எலிகள் நீண்ட காலம் உயிர் வாழ்ந்தன.
பின்னர் இது மனிதர்களில் பரிசோதிக்கப்பட்டது. பட்டினி இருப்பதால் மூளையின் செயற்பாடுகள் அதிகரிக்கின்றன, இருதயம் பலம் பெறுகிறது, ஆயுளை நீடிக்கின்றது, வயது போவதால் ஏற்படும் நோய்கள் தடுக்கப்படுகின்றன என்று முடிவு செய்யப்பட்டது.


பிளாஸ்ரிக் பாத்திரங்களில் உண்ணுவது மிகவும் ஆபத்து
பிளாஸ்ரிக் பாத்திரங்களின் உண்ணுவது புற்று நோய் வரும் வாய்ப்பை அதிகரிக்கலாம் என்று ஏற்கனவே கண்டறியப்பட்டது. இப்போது  பிளாஸ்ரிக் பாத்திரங்களின் உண்ணுவது உடல் எடை அதிகரிப்பிற்கும் நீரழிவு நோய்(diabetes) வருவதற்கும் வழிவகுக்கின்றது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். A report published last week in PLoS ONE shows that the chemical bisphenol A (BPA) - used in everything from fertilisers to plastic water bottles - can 'fool' the body into creating more fat.Furthermore, it can lead to the increased production of insulin, the body's way to regulate fat and carbohydrates.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...