Thursday 9 February 2012

கவிதை: துயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்

வெங்காயம் பார்த்து
பெருங்காமப்பட்டு
என்ன்னகம் பறிகொடுத்து
நிம்மதியை இதயத்திற்பலிகொடுத்தேன்

துயரலை மோதகமாய் 
ஆனதென் சீரகம்
உன்விழியின்னிலைக்கஞ்சி
நிற்குமென்னிலைக்காய்
என்றுமிளகு முன் மனம்.

சுக்கு நூறாயுடைந்த உள்ளம்
பக்குவப்பட ஒருவார்த்தை
மல்லிகையெடுத்த
வாய்திறந்து சொல்லாயோ

கூட்டுத்தானில்லை
குலவல்தானில்லை
பிரியானீ என்றால்
இன்பம்வருமன்றோ

இல்லை இனிச்சா தம்மடி
புகைக்கிறது நெஞ்சம்போல்
பாரொட்டா கால்கள்
பதறித்தவிக்கிறது

ரவா நான் தேடி
ஊறுவாய் உலர்த்த
சேமியா நினைவுகள்
பூமியோடு புதைய


வெங்காயம் - வெறும் உடம்பு அல்லது வெள்ளை நிற உடம்பு
மோதகம் - மோதும் இடம்
சீரகம் - சீரான உள்ளம்
பாரொட்டா - பாரில் தொடாத
சேமியா - சேமிக்காத

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...