Saturday 21 January 2012

கல்லூரி நகைச்சுவைகள்

தேர்வில் நன்கு சித்தியடைந்த ஒவ்வொரு மாணவனுக்குப் பின்னரும் ஒரு சிறந்த ஆசிரியர் இருப்பார். 
தேர்வில் நன்கு தோல்வியடைந்த ஒவ்வொரு மாணவனுக்குப் பின்னரும் ஒரு அழகிய ஆசிரியை இருப்பாள்.

மாணவன் வடிவேலு
வடிவேலு தேர்வு மண்டபத்துள் நுழைந்ததும் என்ன சொல்லுவார்?
ஸ்ஸ்ஸ்......பாபாபா.......இப்பவே கண்ணைக் கட்டுதே....

வினாத்தாளைப் பார்த்ததும் என்ன சொல்லுவார்?
என்னை வைச்சு காமெடி கீமெடி பண்ணுறியா....

தேர்வு முடிவைப் பார்த்ததும் என்ன சொல்வார்?
மாப்பு.......வைச்சிண்டான்யா ஆப்பு....

அரியேர்ஸில் மீண்டும் பெயில் ஆனால் என்ன சொல்லுவார்?
எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது....... வேணாம்... வலிக்குது......... அழுதுடுவன்...

பிட் அடிக்கும் போது பிடிபட்டால் என்ன சொல்லுவார்?
ஒரு மனிசன் எதையாவது பண்ணி முன்னுக்கு வருவம் என்று பார்த்தால் கண்ட இடமெல்லாம் கண்ணி வைக்கிறாங்களே.....

தேர்விற்க்கு விண்ணப்பிக்கும் போது என்ன சொல்லுவார்?
ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி..

பக்கத்தில் இருக்கும் மாணவன் வடிவேலுவைப் பார்த்துக் காப்பி அடித்தால் என்ன சொல்லுவார்?
இன்னுமாடா இந்த உலகம் என்னை நம்புது....

Question:What is the full form of maths.
Anwser:
Mentaly
Affected
Teachers
Harrasing
Students

புவியீர்ப்பு விசையை முதலில் கண்டுபிடித்த யாழ்ப்பாண மாணவன்
ஒரு நாள் அச்சுவேலியில் ஒரு மாணவன் தனது வீட்டுக்குப் பின்புறம் உள்ள பனந்தோப்பில் மல்லாக்கப் படுத்திருந்த படி யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு பனம் பழம் மரத்தில் இருந்து விழத் தொடங்கியது. உடனே அவன் யோசித்து புவியின் ஈர்ப்பு விசையால்தான் பனம் பழம் கீழே விழுகிறது என்று கண்டு பிடித்து விட்டான். அந்த உற்சாகத்தில் அவன் திடீரென எழும்ப பனம்பழம் அவன் தலையில் விழுந்து அவனுக்கு சித்தப் பிரமை பிடித்து விட்டது. அதனால் அவனது கண்டு பிடிப்பு வெளியில் வரவில்லை. அவருக்கு ஏன் இப்படி நடந்தது என்று ஆராய்ந்த அவரது உறவினர்கள் பனம்பழத்தில் காகம் இருந்ததால் அது அவரது தலையில் விழுந்தது என்று அறிந்து "காகம் இருக்கப் பனம் பழம் விழுந்தது போல்" என்ற  உவமையை உருவாக்கினர். இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்து விட்டார்.

மகாத்மா காந்தியும் மொக்கை காந்தியும்
கேள்வி: மகாத்மா காந்தி இந்திய மக்களுக்காக என்ன நன்மை செய்தார்?
மொக்கை காந்தியின் பதில்: ஆகஸ்ட் 15-ம் திகதியை விடுமுறை நாளாக்கினார்.

தந்தை மகற்காற்றும் உதவி
கல்லூரியில் பயின்று கொண்டிருந்த ஜோர்ஜ் புஸ் தன் தந்தைக்கு எழுதிய கடிதம்:
Dear Dad,
$chool i$ really great. I am making lot$ of friend$ and $tudying very hard. With all my $tuff, I $imply can`t think of anything I need. $o if you would like, you can ju$t $end me a card, a$ I would love to hear from you.
Love,
Your $on
தந்தை புஷ்சின் பதில்:

Dear Son,
I kNOw that astroNOmy, ecoNOmics, and oceaNOgraphy are eNOugh to keep even an hoNOr student busy. Do NOt forget that the pursuit of kNOwledge is a NOble task, and you can never study eNOugh.
Love,
Dad

A young man studying in a college abroad sent this SMS to his father: Dear dad, no mon, no fun, your son. The father replied: Dear son, too bad, so sad, your dad.


எரிப் பொருள் பிரச்சனைக்கு மஹிந்தவின் மகனின் தீர்வு
இலங்கையில் உள்ள ஒரு கல்லூரியில் எரிபொருள் இறக்குமதியால் நாட்டுக்குப் பல கோடி அன்னியச் செலவாணி வீணாகிறது அதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்று ஆராயப் பட்டது. அதற்கு மஹிந்தவின் மகன் ரோகித ராஜபக்ச ஈரானில் இருந்து 5 கப்பல் மண் இறக்குமதி செய்து அதை அம்பாந்தோட்டையில் கொட்டிப் பரவி விட்டு பின்னர் நாங்கள் பெற்றோல் கிணறு தோண்டி பெற்றோல் பெறலாம் என்றான்.

மொக்கை காந்தி
Why Sperrm Donation Is More Expensive Than Blood Donation? என்ற கேள்விக்கு மொக்கை காந்தியின் பதில்: Because Hand-Made Things Are Always Costly.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...