Thursday 19 January 2012

ஆவியாகக் கலந்தன இருவர் ஆவிகள்


இளங்காலைக் குளிராக
இளவேனில் தளிராக
புதிதாக ஒரு உறவு
புரியாத ஒரு உணர்வு

உன் இதயத்தை மெல்ல வருட
ஒரு சில வரிகள் தொடுத்தேன் இனிய தோழியே
உன் நீள் குழலில் ஒரு வண்டாக நான் அமர வேண்டும்

பூவிலும் மேலான மாதவிப் பூவிது
நல்ல மாதவப் பேறிது
நான் சொல்பவை யாவும்
நிழல்களின் நிதர்சனங்கள் 
நிழலாக தொடர்வதில் தனி சுகம்

பொய் முகங்களிடை வாழும்
போலியான வாழ்க்கையிலே
பொய்களுக்குள் இனிய
உண்மையைத் தேடி எடுப்பது தனி சுகம்

உன் நினைவோடு என் நினைவை
இணைய விடுவதும் ஒரு புதிய சுகம்
அன்பில் ஊற்றேடுத்து
ஆசையில் கொதித்து
பாசம் என்னும் ஆவியாகி
அவை கலந்து பெறட்டும் தனியின்பம்
ஆவியாகக் கலந்தன இருவர் ஆவிகள்
ஆசையாகத் தழுவிக் கொண்டன
இணைய வெளியில் இனந்தெரியா ஒரு தவிப்பு
நெஞ்சைத் துளைக்கயில் நீ வந்தாய் இதமாக
பாலை வனத்திடை ஒரு பசுஞ்சோலையாக

துள்ளியலைந்த கன்று
தாயைக் கண்டது போல் ஓர் உனர்வு
வளரத் துடித்த கொடிக்கு
படரக் கிடைத்த துணைபோல்
 கரை தேடிய ஓடத்திற்கு
கலங்கரை விளக்கம்மானாய் நீ

கொங்கிறிற் காட்டிடை
வழி தொலைத்த ஓட்டுனர்
முன் வந்த Sat Nav நீயடி தோழி
ஒரு பாதை ஒரு பயணம்
ஒரு இனிய துணை
கை கோர்த்து நடப்பதில் தனி சுகம்
ஐந்து விரல்களை ஐந்து விரல்கள் வருட
காதோரம் காற்று வந்து
சொல்லும் இரகசியம் கேட்டு
அல்லாரிப்பில் ஆடும் குழல்

இப்படியே நீளட்டும் இப்பாதை
முடிவில்லாமல் தொடரட்டும் இப்பயணம்
என்றும் காணாத தனி சுகம்
நீளும் பாதை அகலத்தில் குறையாதோ
நெருக்கத்தை அதிகரிக்காதோ
நெருக்கத்தில் கேட்கிறது
நீ விடும் மூச்சொலி
இனிய இசையாக
காந்த விழியின் ஓரப்பார்வையால்
என்னை ஒளிப்பதிவு செய்ய

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...